பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அமெரிக்க அதிபர் டிரம்பினை இன்று சந்திக்கின்றார் இம்ரான்கான்

ஒருவிதமான இறுக்கமான சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்பினை இன்று சந்திக்கின்றார் இம்ரான்கான். பாகிஸ்தானுக்கு சொந்தமான அரசு விமானத்தில் செல்லாமல் கத்தார் ஏர்வேஸில் சாதாரண பயணிபோல் சென்றிருகின்றார் இம்ரான்கான், அவ்வளவு பொருளாதார சிக்கலாம். நொடிந்திருக்கும் பாகிஸ்தானிய பொருளாதாரம், சீனபிடி, அமெரிக்கா நிறுத்திவிட்ட நிதியுதவி என பாகிஸ்தான் சிக்கி தவிக்கும் நேரம் இந்த சந்திப்பு பல கோணங்களில் பார்க்கபடுகின்றது பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவிடமும் உலகவங்கியிடமும் கடன் வாங்க போகின்றாரா? என சில கேள்விகள் அமெரிக்காவுடனான இந்த சந்திப்பு சீனாவுக்கு எப்படி […]

ஆளுக்கொரு குரல்

வாக்கு கேட்டு வரும்பொழுது எல்லோரும் ஒரு கூட்டு பறவையாக வருவார்கள் தேர்தல் முடிந்தபின் அந்திநேரத்து பறவை கூட்டம் போல ஆளுக்கொரு குரலில் கத்திகொண்டிருப்பார்கள்

அந்தM.Aரூபன் எனும் விளையாட்டு வீரன் இன்று காலமாகிவிட்டார்

அந்த மனிதர் அப்பழுக்கற்ற காங்கிரஸ்காரர், அதை தவிர ஏதும் அறியாதவர் மிக சிறந்த விளையாட்டு வீரரும் கூட 1970களில் மிகபெரும் விளையாட்டு முகமாக அவர் அறியபட்டார். கபடியிலும் அவ கொடி உயர பறந்தது அவர் நெல்லை கிழக்கு கடற்கரையின் மீணவ குடும்பம், போக்குவரத்து பெருகிய காலங்களில் வள்ளியூருக்கு பெயர்ந்த குடும்பத்தின் வாரிசு அவர் இன்று பெருநகரமாக வெடித்து பெருகிவிட்ட வள்ளியூர் அன்று சிறு கிராமம் போலத்தான் இருந்தது, எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருந்தது அக்காலங்களில் அவர் எல்லோருக்கும் அறிமுகமான […]

சரவணபவன் ராஜகோபாலை மறக்க முடியல அண்ணாச்சி

ஒரு மாதிரி சோகமாக வந்தான் அறை நண்பன், முக ஸ்டாலின் தலைவர் பதவியினை விட்டு ஓடிவிட்டது போலவோ இல்லை உதயநிதி ஸ்டாலின் தலைமறைவானது போலவோ அவன் முகத்தில் அவ்வளவு சோகம் மனிதன் முதலில் பேசவில்லை, மெதுவாக பேசினான் அண்ணாச்சி, என்ன இருந்தாலும் அந்த சரவணபவன் ராஜகோபாலை மறக்க முடியல அண்ணாச்சி ஏண்டா? உமக்கென்ன நீரு என்ன தின்னுட்டு போனாலும் வேளாங்கண்ணி மாதா வருத்தபடாது, எங்களுக்கு அப்படியா சபரிமலை, உள்ளூர் கோவில்னு எவ்வளவு விரதம் தெரியுமா? அதுக்கென்னடா? அண்ணாச்சி, […]

அச்சமூட்டும் நிகழ்வுகள் நடக்க தொடங்கியிருக்கின்றன

வளைகுடா நிலமைகள் அவ்வளவு நன்றாக இல்லை, லைபீரியா கப்பலை ஈரான் விடுவித்தாலும் பிரிட்டன் கப்பலை விடுவதாக இல்லை பிரிட்டன் தன் 3ம் போர்கப்பலை அனுப்பியிருக்கின்றது, அது பெரும் விமானம்தாங்கி கப்பல் அல்ல, நாசகாரி கப்பல் பெரும் கப்பல்கள் வந்தால் பிரிட்டன் படைகுவிப்பு என்ற பெயர் வந்துவிடு என்பதால் பிரிட்டன் மிக எச்சரிக்கையாக இது ஈரானுக்கு எதிராக அல்ல என திரும்ப திரும்ப சொல்கின்றது பின்பு ஏன் 3ம் கப்பல் வருகின்றது? பேரீட்சம் பழம் சுமக்கவா என கேட்டால் […]

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

திராவிடத்தை காக்க வந்தவரும், இந்தியா என ஒன்று இல்லை என ஒருகாலத்தில் சொன்னவரும், இந்து மதம் ஒழிக்கபடவேண்டியது என சொன்னவருமான அண்ணா எழுதிய நாடகம் “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” அதனை காண சென்றது இந்தியாவில் திராவிடன் இணையமுடியாது என சொன்ன பெரியார், இந்து மதத்தின் விரோதியான பெரியார் அந்த கணேசனின் நடிப்பில் சிவாஜியினை கண்டதாக அவனுக்கு சிவாஜி என்றே பெயரிட்டாராம் அந்த பெரியார். திராவிட நாடு மதமற்றது, இந்துக்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்றவர்களும் அந்த […]

நகத்தை கூட நடிக்க வைத்த உன்னத நடிகன்

முகத்தை காட்டி நடிக்க தெரியாத நடிகர்கள் மத்தியில் தன் நகத்தை கூட நடிக்க வைத்த உன்னத நடிகன் நாடகத்தமிழுக்கு சர்வதேச புகழ்பெற்றுகொடுத்த பெரும் கலைஞன் அவர். நவரசம் மட்டுமல்ல ஆய கலைகள் 64க்கும் உருவம் கொடுத்து கண்ணில் நிறுத்திய நடிகன் அவர். 64 கலைகளையும் முகத்திலே காட்டினார். அவரின் காந்த பார்வையும், புன்னகைத்த வசீகர முகமும் எத்தனை எத்தனை மனிதர்களை உணர்வோடு காட்டிற்று, தெய்வத்தின் கருணையினையும் அம்முகமே அப்பழுக்கற்று காட்டியது. எந்த மன்னனும் கொடுக்காத கம்பீரத்தையும் அவன் […]

அதற்கு அழிவே இல்லை

கடல் கடந்து கிடப்பவர்களுக்கு ஒரிஜினல் சாம்பாரை கொடுத்தவர் அண்ணாச்சி ராஜகோபால். அந்த சரவணபவன் இல்லை என்றால் வெளிநாட்டுவாசிகள் பலருக்கு சாம்பார் என்பதே காணல் நீராக போயிருக்கும் அசைவ உணவினை கொடுக்க ஆயிரம் உணவங்கங்கள் உண்டு , ஆனால் பாரம்பரிய சுவையில் சைவ உணவினை கொடுக்க அவர்களை தவிர யாருமில்லை ராஜகோபால் என்பவரின் அருமை கடல் கடந்து நல்ல உணவுக்கு ஏங்கினால் தவிர புரியாது ருசிமிக்க சைவ உணவு வேண்டுமென்றால் அவர்களை தவிர‌யாருமில்லை. அந்த சாம்பாரும் இதர வகைகளும் […]

மானிட நலனுக்கானது அல்ல

ஒரு விஷயத்தை எம்மால் உணரமுடிகின்றது, அது இந்தியாவின் மொபைல் போன் கோபுரங்களுக்கானது இங்கே 8 மணிநேரம் சார்ஜ் நிற்கும் அதே போன் இந்தியாவில் 3 மணிநேரம் கூட தாக்குபிடிப்பதில்லை. இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் மின் கட்டமைப்பு வசதிகள் ஒன்றே, அமெரிக்கா போன்ற சில நாடுகள் வித்தியாசம் இந்தியாவில் இணைய வசதியினை தடுத்துவிட்டால் சார்ஜ் அதன் போக்கில் நிற்கின்றது, இணையத்தை இழுத்தால் சட்டென குறைகின்றது விஷயம் சொல்வது ஒன்றுதான் சக்திவாய்ந்த அலைகள் இந்தியாவில் பயன்படுத்தபடுகின்றன, அது செல்பேசியின் சக்தியினை சட்டென […]

சமையலும் சுவையாண உணவும் – யூ டியூப் சேனல்

சங்கத்திற்கு முதலில் பிடித்த விஷயம் குஷ்பு படம், அதன் பின்பு வாசிப்பும் உலக விஷயங்களை தேடி பிடித்தலும். வாசிப்பு அவ்வளவு சுகமான விஷயம், எவ்வளவும் வாசிக்கலாம். எழுத்து என்பது அந்த அளவு சுவாரஸ்யம் அல்ல‌ இதற்கு அடுத்து சங்கம் விரும்பும் விஷயம் சமையலும் சுவையாண உணவும் மானிட பிறவியில் அது கூட இல்லை என்றால் எப்படி? மனிதனுக்கும் விலங்குக்கும் என்ன வித்தியாசம், அட தெய்வங்களுக்கும் மனிதனுக்கும்தான் என்ன வித்தியாசம்? நல்ல புத்தகம் போல, சுகமான சிந்தனை போல, […]