பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அடித்து ஆட ஆர்மபித்துவிட்டது ஈரான்

அடித்து ஆட ஆர்மபித்துவிட்டது ஈரான், உண்மையில் அவர்கள் அதிரடிக்காரர்கள் ஈரானின் கப்பல் ஒன்றை பிரிட்டன் பிடித்துவைத்திருப்பது உலகறிந்தது, பனாமாவில் பதிவு செய்யபட்ட ஈரானிய கப்பல் அது. அதை பிடித்து வைத்து ஈரானை மிரட்டிகொண்டிருந்தது பிரிட்டன் பேசிபார்த்தது ஈரான், சமாதானத்துக்கு முழங்காலிடு என்றது ஈரான் சமாதானமா? உங்களுடனா? என முறைத்துவிட்டு சென்ற ஈரான் மிக துணிச்சலாக பிரிட்டனின் கப்பலை பிடித்து சென்றாயிற்று அமீரகத்திலிருந்து சவுதி கிளம்பிய பிரிட்டன் கப்பலை குறிவைத்து தூக்கிய ஈரான் நேற்று உலகை அதிர வைத்தது […]

பொய் ஒன்றே மூலதனம்

திமுகவினருக்கு அன்றிலிருந்தே பொய் ஒன்றே மூலதனம், ஆனால் அக்கால திமுகவினர் பொய்யினை பொருந்த சொல்வார்கள் அவர்கள் திறமை அப்படி இருந்தது இந்நாளைய திமுகவின் தலமையே உளறுகின்றது என்றால் அடிபொடிகள் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் கொஞ்சமும் வெட்கமின்றி ஒரு தரவும் உருப்படியின்றி அளந்துவிடுகின்றோமே, சிலர் மறித்துசொன்னால் என்னாகும் என்ற மான உணர்வெல்லாம் கொஞ்சமும் இல்லை இனமானம், அறிவு இன்னும் என்னவெல்லாம் சொல்வார்களோ அதை எல்லாம் கழற்றி வைத்துவிட்டுத்தான் பதிவிட வருவார்கள் போல, அல்லது நாம் என்ன சொன்னாலும் […]

நிலாவில் இதே ஜூலை 20ல் கால் வைத்தார்கள்

அதுவரை மானிட குலம் விண்வெளிக்கு பறந்ததில்லை, மனிதன் பறக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் வளிமண்டலத்தை கூட அவனால் எட்டமுடியவில்லை ஹிட்லரின் உத்தரவுபடி ஏவுகனைகளுக்கான‌ இன்சினை வார்ன் பிரவுண் தயாரித்து அதனை சோதித்து கொண்டிருக்குந்த பொழுதே ஹிட்லரின் காலம் முடிந்தது ஹிட்லரின் விஞ்ஞானிகளை பங்குபோட்டு கொண்டனர் அமெரிக்காவும் ரஷ்யாவும், அதாவது பொது எதிரியினை ஒழித்தபின் அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிரியாயிருந்தன‌ இந்த விஞ்ஞானிகள் எல்லாம் போர்குற்றவாளிகள், சதாமின் கெமிக்கல் அலி தூக்கில் தொங்கியதை போல தொங்கியிருக்கவேண்டியவர்கள், ஆனால் வல்லரசுகள் […]

மாபெரும் கொடைவிழா “உலக மாதா” குஷ்புவிற்கு

இது ஆடி மாதமாம் திரும்பும் இடமெல்லாம் அம்மனுக்கு கொடை விழா, சுடலை மாட சாமிக்கு விழா இன்னும் தென்னக மாதா கோவில்கள் உட்பட ஏகபட்ட தெய்வங்களுக்கு விழா அவைகளுக்கென்ன சாதாரண தெய்வங்கள், எளிதாக விழா நடத்திவிடலாம் ஆனால் எங்கள் “உலக மாதா” குஷ்பு தேவதைக்கு திருவிழா நடத்துவது என்பது சாதாரணமா? நிலாவுக்கே சென்று பொங்கல் வைப்பது வரை ஏராளமான சம்பிரதாயங்கள் உண்டு. அதற்கு பல பில்லியன் டாலர்கள் தேவைபடும் பிரமாண்ட நிதி வேண்டும் இதனால் பில்கேட்ஸ், வாரன் […]

மிக சிறப்பாகத்தான் பேசி கொண்டிருக்கின்றார்

40 வருடத்திற்கொரு முறை நடக்கும் அத்திவரதர் விழா ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது : முக ஸ்டாலின் 40 வருடத்திற்கொருமுறையான விழா ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்றதா? என பலர் கலாய்க்கின்றார்கள். பொறாமையும் கயமையும் கொண்ட ஆரிய பார்ப்பானிய விஷ செடிகள் அவர்கள். தமிழில்தான் தமிழின தலைமகன் பேசுகின்றார், தமிழருக்குத்தான் அதை புரிந்துகொள்ளும் அளவு அறிவே இல்லை, அந்த அளவு ஆரிய பார்ப்பானியம் தமிழர் அறிவினை மழுங்கடித்துவிட்டது. தொல்காப்பிய பூங்காவினை 10 தடவை படித்தால் இதற்கு உரை […]

சைக்கிளோடு செல்லும் அங்கிள் இனி ஈழத்தோடு வருவார்

இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் தெரியாமல் மிக ரகசியமாக இருசக்கர வாகனத்தில் அங்கிள் ஈழம் மீட்க கிளம்பிய தருணமிது… அது சாதாரண சைக்கிள் அல்ல, பிரபாகரன் கொடுத்த ஸ்பெஷல் தயாரிப்பு அது பறக்கும், நீந்தும். அதை மடித்து துப்பாக்கியாக சுடலாம் ஒரு ராணுவத்தையே சமாளிக்கலாம், இன்னும் ஏக வசதிகள் உண்டு. தமிழன் கண்டுபிடித்த சைக்கிள் என்றால் சும்மாவா? சைக்கிளோடு செல்லும் அங்கிள் இனி ஈழத்தோடு வருவார்.

பிடித்தமான மாதம் ஆடிதான்

மாதங்களில் நான் மார்கழி என அர்ஜுனனிடம் பகவான் சொன்னாலும் அதெல்லாம் இருந்துவிட்டு போங்கள் எங்களுக்கு பிடித்தமான மாதம் ஆடிதான் என்பது தமிழர் முடிவு ஆனி ஆடி மாதங்களில் தமிழகத்தின் கொண்டாட்ட மாதங்கள், திரும்பும் பக்கமெல்லாம் ஒலிபெருக்கியில் “ஆத்தாடி மாரியம்மா” என எல்.ஆர் ஈஸ்வரி அம்மனை அழைப்பார், மண்கட்டை சுவரிலும் கோயில் கொடை விளம்பரங்கள் இருக்கும் இரவில் 9 மணிக்கு மேல் வில்லுபாட்டு கேட்கும்,திடீர் கடைகள், ஒளிவெள்ளம், இன்னும் ஏராளம். பொதுவாக சுபகாரியங்கள் ஏதும் செய்யமாட்டார்கள், சுத்தமாக தெய்வத்திற்கு […]

மதநிந்தனை சட்டம் இதுவரை பாயாமல் இருப்பது பெரும் ஆச்சரியம்…

பகுத்தறியின் உச்சத்தில் அவர்கள் இருந்தால் பெரியாரையோ அண்ணாவையோ தோண்டி எடுத்து வைத்து பகுத்தறிவினை பரப்பட்டும் அதை விடுத்து அத்திவரதரை ஏதாவது குறை சொல்ல பெரியார் கோஷ்டிக்கு என்ன இருக்கின்றது? இந்நாட்டில் ஒரு சாதியினை பழித்தால் சாதிய வன்கொடுமை என சிறையில் தள்ளுவார்களாம் இன்னொரு மதத்தை பழித்தால் சட்டம் பாயுமாம் ஆனால் இந்த அழிச்சாட்டிய திராவிட கடவுள்மறுப்பு கும்பல் மேல் மதநிந்தனை சட்டம் இதுவரை பாயாமல் இருப்பது பெரும் ஆச்சரியம்…

கொடுத்துவைத்த முதல்வர்

தமிழக சட்டசபை கூட்டம் நடக்கின்றது சென்னை குடிநீர் தட்டுப்பாடு, ஹைட்ரோ கார்பன் சிக்கல், அணுகழிவு மையம், இன்னும் திறக்கபடாத காவேரி, நீட் உட்பட இதற பிரச்சினைகள் எதுவுமே அங்கு எதிரொலிக்கவில்லை அணல் காற்று வீசும் என எதிர்பார்க்கபட்ட சட்டமன்றத்தில் பூங்காற்று வீசுகின்றது அதில் பொன் ஊஞ்சலாடிகொண்டிருக்கின்றார் பழனிச்சாமி. அவருக்கு கேள்வி கேட்கவோ, நெருக்கடி கொடுக்கவோ யாருமில்லை அவர் போக்கில் கேக் வெட்டுவது போல மாவட்டங்களை வெட்டி வெட்டி விளையாடுகின்றார், இன்னும் என்னவெல்லாமோ அறிவிகின்றார். சிக்க வைக்கும் விவாதமில்லை, […]

பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள்

பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் அப்படி சீறினார்கள், இப்படி சீறினார்கள் என உணர்ச்சிவசபட்டு கண்களை துடைத்து கொள்கின்றன உடன்பிறப்புக்கள் தமிழகத்தில் கிட்டதட்ட 90க்கு மேல் எம்.எல்.ஏக்கள் உள்ளனர், சட்டமன்ற கூட்டமும் நடக்கின்றது. ஆனால் பழனிச்சாமிக்கு எதிராக திமுகவிடமிருந்து உருப்படியாக ஒரு எதிர்குரலும் வரவில்லையே ஏன்? என கேட்டால் உபிக்கள் ஓடிவிடுகின்றன‌ தமிழக சட்டமன்றம் என ஒன்று இருப்பதையோ அங்கு அவர்களுக்கு கணிசமான எம்.எல்.ஏக்கள் இருப்பதையும் உபிக்களும் திமுகவும் சுத்தமாக மறந்தே விட்டன. என்ன நடந்திருக்கும்? ஏதோ ஒரு இருதரப்பு புரிதலில் […]