பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மடியில் கனமில்லை எனின் வழியில் பயமெதற்கு?

NIA மசோதா திருத்தத்துக்கு ஏன் ஆளாளுக்கு அலறுகின்றார்கள் என்பதுதான் புரியவில்லை. நாட்டின் பாதுகாப்புக்காக சில சட்டதிருத்தங்களை செய்கின்றோம், இது கூட செய்ய கூடாது என்றால் எப்படி? NIA சட்டத்தை திருத்தியவுடன் போவோர் வருவோரை எல்லாம் உள்ளே பிடித்துபோட்டு சாத்தபோவதில்லை அப்படி செய்யவும் முடியாது. ஒருவன் மீது பலத்த ஆதாரமும் இன்னும் ஏகபட்ட உளவுதகவல் உட்பட ஏராளமான உறுதிபடுத்தபட்டலும் நிகழ்ந்தபின்பே தூக்குவார்கள் ஆக இப்பொழுது யாரெல்லாம் இந்த சட்டதிருத்ததை எதிர்க்கின்றானோ அவனெல்லாம் உள்ளூர ஏதோ ஆபத்தான வேலையினை செய்துகொண்டிருக்கின்றான் […]

Today’s News 17/07/2019

சப்ரீசன் என்பவருக்கு வேறு பிறந்தநாளாம் ராவணனோடு இருந்ததால் பெரும் வீரர்கள் எல்லாம் அழிந்தனர் ராமனோடு இருந்ததால் குரங்குக்கும் கோவில் தோன்றிற்று எல்லோரும் இருக்கும் இடத்தில் இருக்கவேண்டும், பாம்பெனினும் ஈசனின் கழுத்தில் சுற்றியதால் கருடனும் அதை வணங்க வேண்டும் என்பார்கள். நமக்கு இன்று ஏனோ இதெல்லாம் நினைவுக்கு வருக்கின்றது, இந்த சப்ரீசன் என்பவருக்கு வேறு பிறந்தநாளாம் நீட் தேர்வு சரியான விஷயம் அல்ல, அது நீக்கபட வேண்டும் : சூர்யா என்ன செய்வது சார், சினிமாவுக்கு என்ன தேர்வு […]

இது என்ன நீதி?

நாங்கள் இந்தியினை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பினை எதிர்க்கின்றோம், விரும்பியவர்கள் வாய்ப்பு கிடைத்தால் இந்தி கற்பதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை வாய்ப்பு எங்கே கிடைக்கும்? எங்கே யார் சொல்லி கொடுப்பார்களோ அங்கே அவர்கள் படித்து கொள்ளட்டும் அதைத்தானே, அரசு பள்ளிகளில் இந்தி என வாய்ப்பு கொடுக்கின்றோம் முடியாது முடியாது அது இந்தி திணிப்பு, ஆனால் விரும்பியவர்கள் படிக்கட்டும் எங்கே சென்று படிப்பார்கள்? எங்காவது படிக்கட்டும் அதை பள்ளியில் இலவசமாக படித்தால் என்ன? முடியாது முடியாது நீட் தேர்வினை ஏன் […]

எதற்கும் துர்கா ஸ்டாலின் கனிமொழியின் ஜாதகத்தையும் அலசிவிடுவது நல்லது..

ஏதும் சொன்னால் அண்ணாவின் பகுத்தறிவு, பெரியார் சொன்ன பெண்விடுதலை என பக்கம் பக்கமாக வரிந்து கட்டி வருவார்கள். விரைவில் திமுகவில் ஜோதிடர் அணி என ஒரு அணி உருவானாலும் ஆச்சரியபட ஒன்றுமில்லை எனினும் நம் பங்குக்கு ஒன்றை சொல்லிவிடுவோம் கலைஞர் 45 வயதில் முதல்வரானார், மிக இளம் வயதில் முதல்வரானவர்க‌ள் என்ற வரிசையில் கலைஞரும் உண்டு கனிமொழி பிறந்த ராசிதான் அவரை முதல்வராக்கியது என்ற ஜாதக சென்டிமென்ட் அப்பொழுதே திமுகவினரிடம் இருந்தது எதற்கும் துர்கா ஸ்டாலின் கனிமொழியின் […]

ஆண்டவன் பிரம்படியில் சத்தம் கேட்காது

ஆண்டவன் முன் மாபெரும் ஞானியும், ஓளி பொருந்திய நல்லவனும், கொடும் பாவியும் ஒன்றே ஆலயத்தில் நுழைய நல்லவன் கெட்டவன் என்பதெல்லாம் தகுதி அல்ல, தெய்வத்தை தேடி யார் வேண்டுமானாலும் செல்லலாம் ஆனால் அந்த தெய்வத்தின் கருணை கிடைக்கின்றதா என்பதுதான் முக்கியம். வால்மிகி ஒரு காலத்தில் கொடிய வேடனாய் இருந்திருக்கின்றான், பாவியான துரியோதனுடன் பழக மிக தூயவனான கண்ணனுக்கு தயக்கமே இல்லை இயேசுநாதர் தன் வாழ்நாளெல்லாம் முரடர்கள், பாவிகள் என்பவர்களோடேத்தான் பழகியிருக்கின்றார், ஏன் சாகும் பொழுதும் பரபாஸ் எனும் […]

என்னது? கிறிஸ்தவ மதமா?

என்னது? கிறிஸ்தவ மதமா? சரி கிறிஸ்தவ மதம் என வைத்துகொண்டாலும் நாஸ்டர்டாமஸ் எப்பொழுது பிறந்தார் என்பது கூடவா தெரியாது மெதுவாக இந்த தும்பிகளிடம் காதோரம் சென்று நாஸ்டர்டாமஸ் யார்? எங்கே பிறந்தார்? எப்படி இருந்தார் என கேளுங்கள், ரகசியமாக இப்படி சொல்வார்கள் “அவர் யாழ்பாணம் அருகே வல்வெட்டிதுறை பக்கம் பிறந்தாராம், கட்டையாக குண்டாக இருந்தாராம், சூரியன் எப்பொழுது உதிக்கும் அலை எப்பொழுது வீசும் என்பதை அன்றே சொன்னவர் அவர்தானாம் அவர்தான் இப்படி சைமனை பற்றி சொன்னார், அவர் […]

தமிழிசை கோஷ்டிக்கு எல்லாம் பதில் சொல்லணுமா …

இந்த செல்போனை உடைக்கிறது, ஏதாவது பேசி சிக்கிறது எல்லாம் இப்போதான், இந்த 77 வயசுலத்தான் ஆனா 17 வயசுல பழனிச்சாமி கவுண்டரா படம் வரைய சென்னைக்கு கிளம்புறப்போ அப்படி இல்ல, ரொம்ப பவ்யம், பணிவு, ஒரு வார்த்தை கூட யாரையும் காயபடுத்தமாட்டேன் அந்த குணம்தான் என்ன நடிகனாக்கிச்சி, எனக்குண்ணு ஒரு ஒரு கவுரவத்தை கொடுத்திச்சு ராமசந்திரன், கலைஞர், ஜெயலலிதான்னு எல்லோரும் என்ன மதிச்சாங்க. இப்போ வரைக்கும் ஜெயாவும் கலைஞரும் கலந்துகிட்ட ஒரே கல்யாணம் என் வீட்டு கல்யாணம்தான் […]

தாய்லாந்தில் இனி மக்களாட்சி மலரபோகின்றதாம்

தாய்லாந்தில் இனி மக்களாட்சி மலரபோகின்றதாம், மலரட்டும் கிழக்காசியாவின் விவசாய நாடு தாய்லாந்து, நிச்சயம் வளமான பூமி ஆனால் விவசாயம் மட்டுமா வாழவைக்கும்? இன்னபிற தொழில்கள் இல்லாததால் போதையின் பாதைக்கு அது கொலம்பியா போல திரும்பும் ஆபத்து இருந்தது ஆனால் வியட்நாம் யுத்தமும் இன்னும் சில நிகழ்வுகளும் அதனை மாற்றின‌ சில பல காரியங்களை சேர்த்து சுற்றுலா நாடு என அது அறிவிக்கபட்டபின் அதன் முகம் மாறியது இன்று உலகில் சுற்றுலா மூலம் சம்பாதிக்கும் நாடுகளில் அதுவும் ஒன்று, […]

நிச்சயம் அந்த விளையாட்டும் ஒருபக்கம் நடந்து கொண்டேதான் இருக்கும்

பண்டைய காலங்களில் ஒரு நாட்டின் மேல் படையெடுக்கும் முன் சில காரியங்களை செய்வார்களாம் அதாவது எதிரிநாட்டின் பசுக்கள் எங்கெல்லாம் மேயுமோ அங்கெல்லாம் சென்று அதை கொள்ளையிடுவார்களாம், கொள்ளை போன பசுக்களுக்காக அரசன் சண்டைக்கு செல்வானாம் யுத்தம் தொடங்குமாம் இது கிருஷ்ணபரமாத்மா காலத்தில் இருந்து புறநானூறு காலத்தில் தொடர்ந்து வெள்ளையனுக்கு முந்தைய காலம் வரை இருந்தது அப்படித்தான் இப்பொழுது ஈரானுடன் போரினை தொடங்க அதன் கப்பல்களை சீண்டிகொண்டிருக்கின்றார்கள் வளைகுடா பகுதியில் ஈரானுக்கும் அதன் எதிர் கோஷ்டிக்கும் அறிவிக்கபடாத கப்பல் […]

மறக்க கூடியவரா அந்த பாரதிராஜா..

அவர்மேல் சில சர்ச்சைகள் இருக்கலாம், சில இடங்களில் உணர்ச்சிவசபட்ட பேச்சு இருக்கலாம், இளவயதின் கசப்பான அனுபவங்களும் கிராமவாசிகளுக்கே உரிய சில வைராக்கியங்களும் இருக்கலாம் ஆனால் தமிழின் மிகசிறந்த இயக்குநர், இந்த தமிழக கிராமங்களின் யதார்த்தத்தை அப்படியே கொஞ்சமும் மாற்றாமல் திரையில் முதலில் காட்டியவர் என்ற பெருமை அவரை தவிர யாருக்குமில்லை கிராமத்து மனிதராக கிளம்பி கிராம வாழ்க்கையினை திரையில் காட்டி தனக்கான தனி இடம் தேடிகொண்டவர் அந்த பாரதிராஜா தமிழக சினிமாவின் வரலாற்றை கவனித்தால் புரியும், அது […]