பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எசமான் சொல்லுங்க..

யாரு மோடியா? ஆமாம்ஜி , டிரம்ப்ஜியா? டிரம்ப்ஜி இல்ல டிரம் D.. Donalad Trump எசமான் சொல்லுங்க.. யாருய்யா அது அத்திவரதர், ஒரே பரபரப்பா இருக்கு? அய்யா அவர் சக்தியுள்ள தெய்வமுங்க, 40 வருஷத்துக்கு ஒருவாட்டிதான் அவர் சிலைய பார்க்கமுடியுமுங்க, நினைச்சி வந்து வணங்கினா நல்லதுநடக்குமுங்க‌ இஸ் இட்? எனக்கும் ஒரே பிரச்சினை. வடகொரிய அதிபர் சீன அதிபரோட சேர்ந்து சிரிக்குறான். ஈரான பக்கமே போகமுடியல ஒரு பயலும் கூட வரமாட்டேங்குறான், சிரியாவுல தோல்வி, வென்சுலாவிலும் புட்டீன் […]

தொல்காப்பியன்

தொல்காப்பியன் என்பவர் காந்தியோடு தென்னாப்ரிக்க சிறையில் இருந்தவர் என்பதும் பின்பு சுதந்திர போராட்டத்தில் காமராஜரோடு 11 வருடம் சிறையில் இருந்தவர் என்பதும் இவ்வளவு நாளும் தெரியாமலே மறைக்கபட்டிருக்கின்றது. கக்கன் போலவே காமராஜருக்கு வலது கரத்தின் வலதுகரமாக அவர் உழைத்ததும் மறைக்கபட்டிருகின்றது இம்மானுவேல் சேகரன் கொலையும் முதுகுளத்தூர் கலவரமும் காமராஜருக்கு சிக்கலை ஏற்படுத்திய காலங்களில் , இந்த தொல்காப்பியனே தனி மனிதனாக சென்று எல்லா கலவரங்களையும் அடக்கியிருக்கின்றார் அந்த மாமனிதனின் புகழ் அவர் ஒரு தலித் என்பதால் மறைக்கபட்டிருக்கின்றது, […]

தேசவிரோத சக்திகள் நாகை வழியாக ஊடுருவுகின்றன‌

கோவைக்கு அடுத்தபடியாக நாகை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிகொண்டிருப்பது சோகம் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் நாகையில் நடத்தும் கைதுகளும், அதை தொடர்ந்து வரும் செய்திகள் சரியானவை அல்ல‌ முன்பு இதே கிழக்கு கடற்கரைக்கும் புலிகளுக்குமான கடத்தல் போக்குவரத்தில்தான் இந்நாட்டு பிரதமரையே இழந்தோம் இப்பொழுது வேறுவடிவில் தேசவிரோத சக்திகள் நாகை வழியாக ஊடுருவுகின்றன‌ மிகபெரும் நடவடிக்கை எடுத்து இந்த களைகளை முளையிலே பிடுங்காவிட்டால் பின்னொரு நாளில் மாபெரும் விலையினை கொடுக்க நேரிடும்..

கலைஞர் மனம் வெறுத்திருந்தார்

கடைசி காலங்களில் ராமதாஸ் போன்றோருடன் எல்லாம் அரசியல் செய்த கலைஞர் மனம் வெறுத்திருந்தார் அந்த மைனாரிட்டி திமுக அரசு எனும் வார்த்தை அவரை ஈட்டியாக குத்தியெடுத்த நேரமது , காங்கிரஸின் தயவில் அவரின் ஆட்சி ஓடிகொண்டிருந்தது “நேரு, இந்திரா என பெரும் ஜாம்பவான்களோடு அரசியல் செய்த நான் இந்த ராமதாஸ் , விஜயகாந்த் போன்றோரோடு அரசியல் செய்ய வேண்டுமா?” என தன்னை மீறி கட்சியில் நெருக்கமானவர்களோடு மனம் விட்டு பேசியதாக செய்திகள் வந்தன‌ அந்த காலகட்டத்தில் கலைஞர் […]

இதிலென்ன ஆச்சரியம்?

கோப்பையினை வென்ற இங்கிலாந்து அணியில் பலர் வெளிநாட்டு வீரர்கள் : செய்தி இதிலென்ன ஆச்சரியம்? வெறும் 200 பேரோடு இந்தியா வந்த கிளைவ் இங்கேதான் கூலிக்கு ஆள்பிடித்து போர் நடத்தி இந்தியாவினை அடிமைபடுத்தினான் 1930களில் 1 லட்சம் பேரே இருந்த பிரிட்டன் படை உள்ளூர் இந்தியர்களை வளைத்து போட்டு 30 கோடி மக்களை இந்தியாவில் ஆண்டது அவர்கள் வரலாறே அப்படித்தான், இதில் அவர்களின் கிரிக்கெட் அணிமட்டும் விதிவிலக்கா?

நில உச்சவரம்பு சட்டம்

நில உச்சவரம்பு சட்டத்தில் மூப்பனார் செய்த காரியம் தெரியுமா?, உக்கடை தேவர் செய்த சாதுர்யம் தெரியுமா? விஸ்வநாத தேவர் செய்த அட்டகாசம் தெரியுமா? இதெல்லாம் 1960களிலே சட்டமன்றத்தில் கேள்வியாக எழுப்பியவர் கலைஞர் நில சுவாந்தார்களின் பினாமியான டிரஸ்டுகளையும் இன்னபிற அறகட்டளைகளையின் உண்மை முகத்தையும் சட்டசபையில் கிழித்தெறிந்தவர் கலைஞர் என உபிக்கள் கடும் அழிச்சாட்டியம் செய்துகொண்டிருக்கின்றன‌ இதே காலகட்டத்தில் பசும்பொன் தேவரும் தனக்கு சொந்தமான நிலங்களை பலவாறு பிரித்து கொடுத்து நில சீர்திருத்த காலங்களில் சிக்கல் வராதவாறு காத்துகொண்டார் […]

அடக்கி வாசிக்கின்றது அமெரிக்கா.

அமெரிக்க தூதரகம் என்றாலே எப்பொழுதும் வலுகவனமாக இருக்கும் ஈரான் இப்பொழுது ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்துவிட்டது. அமெரிக்க தூதரகம் எப்பொழுதும் உளவு தகவல்களை திரட்டும் சி.ஐ.ஏவின் மையம் என்பது அவர்களின் கருத்து, அதில் உண்மையும் இல்லாமல் இல்லை இப்பொழுது ஒருபடி மேலே போய் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் இஸ்ரேலிய மொசாத் ஏஜென்டுகள் அமர்ந்து பல விஷம காரியங்களை செய்கின்றார்கள் என சொல்கின்றது ஈராக் கவனியுங்கள் ஈரான் அல்ல, சொல்வது ஈராக் ஐ.எஸ் அமைப்பின் ஆட்டத்துக்கு […]

புள்ளியே இல்லாத அழகிய தமிழ்பெயர்

புள்ளியே இல்லாத அழகிய தமிழ்பெயர் இம்சையினை தொடக்கிவைத்தது யாரென தெரியவில்லை. ஆனால் இக்கால திமுகவினருக்கு கொஞ்சமும் புத்தியே இல்லாததால் வழக்கம் போல அமைதி இதே பழைய திமுகவினர் என்றால் இதோ புள்ளி இல்லா அழகான பெயர்கள் என “ஈ.வெ ராமசாமி,கல்லகுடி, திமுக‌,கருணாநிதி, தயாளு, திருகுவளை, முரசொலி, உதயநிதி, அறிவுநிதி, தயாநிதி, கலாநிதி ,தமிழரசு, அழகிரி, கனிமொழி..” என வரிசையாக அடுக்கிகொண்டே சென்றிருப்பார்கள் இப்போதுள்ள திமுகவினரிடம் அதெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதுதான் சோகம்.. நம் பங்குக்கு நாமும் சொல்லலாம், […]

குரு பூர்ணிமா

ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள குருகுலங்களில் காலையில் வகுப்புகள் தொடங்கும் பொழுது ஒலித்துகொண்டிருந்த வார்த்தை, நமஹ என்றால் போற்றுகிறோம் அல்லது வணங்குகிறோம் என பொருள், அப்படித்தான் வணங்கினார்கள், குரு என்றால் இருளை நீக்குபவர், அறிவினை தருபவர் என பொருள், கிரகங்களில் கூட அறிவினை தரும் கிரகத்திற்கு குரு என பெயரிட்டு கொண்டாடியது பாரதம். “குருவில்லாத வித்தை பாழ்”, “குருவில்லாத கல்வி கருஇல்லாத முட்டை” என்றெல்லாம் குருவின் பெருமையை உயர்த்தி பிடித்தனர், அவ்வளவு ஏன் எல்லா அரசுகளிலும் […]

ஏன் இப்படி அலைகின்றது சீனா?

தலாய்லாமா விவகாரம் மறுபடியும் விஸ்வரூபமாகின்றது அதாவது திபெத்தில் தலாய்லாமா என்றால் லாமாக்களுக்கு தலையானவர் என்று பொருள் , லாமா என்றால் மதகுரு தலாய் லாமா என்றால் தலமை குரு அவர் எப்படி தேர்ந்தெடுக்கபடுவார் என்றால் ஒரு தலாய்லாமா மறித்ததும் திபெத்தில் அடுத்து பிறக்கும் ஆண்குழந்தை தலாய்லாமாக குறிக்கபட்டு வளர்க்கபடும் இப்பொழுது இருக்கும் தலாய்லாமா 83 வயது நெருங்குவதால் அடுத்து யார் என்பதில் சிக்கல் அது அவர் காலத்திற்கு பின்புதான் என்றாலும், என் காலத்திற்கு பின் இந்தியாவில் இருக்கும் […]