அவரை நினைவுகூர்வதில் பெரும் மகிழ்ச்சி
தமிழுக்கு அவ்வப்போது அற்புத கவிஞர்கள் வருவார்கள், காலம் அந்த கொடையினை வழங்கும் அவர்களிடம் தமிழ் பொங்கும், அருவியாய் கொட்டும், வர்ணணைகளும் உவமையும் வார்த்தைகளும் காவேரி வெள்ளமாய் கொட்டும், குற்றால அருவியாய் வழிந்தோடும் எதையுமே அழகாகவும் உருக்கமாகவும் பொருத்தமாகவும் அவர்களால் பாட முடியும் அப்படி வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின்தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன். முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் பொருந்தும். மூன்று தமிழும் அவரிடம் கொஞ்சியது கடவுள், காதல், இயற்கை, மதம், தத்துவம், அரசியல் பாசம், காதல், கடமை, […]