பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஹாங்காங் போராட்டம்

ஹாங்காங் போராட்டம் சூடுபிடித்து 20 லட்சம் மக்கள் களத்தில் இருக்கின்றனர், உலகம் உன்னிப்பாக கவனிக்கின்றது இப்போது ஹாங்காங் சீனாவின் பகுதி என்றாலும் அது தன்னாட்சி பகுதி அங்கு அரசு ஒரு சட்டத்திருத்தம் செய்கின்றது அது என்னவென்றால் ஹாங்காங் வாசிகள் வெளிநாடுகளில் குற்றம் செய்தால் அவர்கள் எந்த நாட்டில் குற்றம் புரிந்தார்களோ அந்த நாட்டு சட்டபடி தண்டிக்கபட ஒப்புவிக்கபடுவார்கள். இதுதான் ஹாங்காங் வாசிகளின் கோபத்துக்கு காரணம், இச்சட்டம் தங்களை கைவிடுவதாகவும், இனி வெளிநாடுகளில் வரி விவகாரம் கூட தங்களை […]

அது பாராளுமன்றம்

அது பாராளுமன்றம், அது மதங்களை கொள்கைகளை மக்களின் சில நம்பிக்கைகளை கடந்து நாட்டு நலன் ஒன்றே, மக்களின் முன்னேற்றம் ஒன்றே பற்றி சிந்திக்க கூடியிருக்கும் இடம் இவர்கள் அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் என கத்தியதும் பெரும் தவறு அவர்கள் அங்கு ஸ்ரீராம் என கத்தியதும் தவறு, புனிதமான பாராளுமன்றத்தை சில‌அடையாளமாக‌ கூடமாக மாற்ற முயல்வது தவறு,கண்டிக்க வேண்டியது. அது போராட வேண்டிய களம் அல்ல, அது நாட்டுக்கான விவாத கூடம். அவர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என கத்தினால் […]

பெரும் அழிச்சாட்டியம் செய்கின்றது ஊடகங்கள்

தமிழ்நாட்டிக்கு ஒரு சோகமான நேரமிது. என்கின்றன ஊடகங்கள். தமிழ்நாட்டின் தலைவிதியே 23ம் தேதிதான் தெரியுமாம் தமிழக மாபெரும் கொள்கைவாதிகளும், சிந்தனையாளர்களும் நாட்டையும் மக்களையும் பற்றி மட்டுமே சிந்திக்கும் அந்த கூட்டம் இரு பிரிவாக மோதிகொள்வது உலகையே வருத்ததிற்குள்ளாக்கிவிட்டது ஆம் மகாத்மா காந்தி வழி இந்திய தேசிய தியாகிகளான ராதாரவி,சரத், பாக்யராஜ் போன்றவர்களுக்கும், நேதாஜி வழியில் நாட்டிற்காய் போராடிய இந்த விஷால் என்பவருக்குமான கோஷ்டி சண்டை அது அந்த ஏழை தியாகிகளுக்கு ஒரு சங்கம் உண்டாம், அதில் தேர்தலும் […]

பெற்ற தாயே பிள்ளைகளை கொல்லும் சம்பவம்

பெற்ற தாயே பிள்ளைகளை கொல்லும் சம்பவம் தமிழ்நாட்டில் அதிகரித்துவருவது சோகம் அது நல்லதங்காள் காலத்திலே இருந்தது எனினும் அன்றெல்லாம் அதற்கு கொடும் வறுமை அன்றி வேறுகாரணமில்லை இன்றோ கள்ளக்காதல் விவகாரங்களே பெரும் சிக்கலாகின்றன‌ எதனையோ தேடி யாரிடமோ வகையாக சிக்கிவிடும் பெண்களுக்கு தாய்பாசம் விடைபெற்றுவிடுகின்றது தாங்கள் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டதாக கருதி முன் பெற்ற பிள்ளை இனி தேவையில்லை என நினைத்து கொன்றுவிடும் கலாச்சாரம் பெருகுகின்றது ஏதோ மயக்கத்திலும், அவன் மீது வந்த நம்பிக்கையிலும், புதுவாழ்வு பூரிப்பிலும் தாய்பாசம் […]

வாழ்க நீ எம்மான், இத்தேசத்தின் கோமான்

நாம் இந்தியர், எந்த விஷயத்தையுமே நாட்டு நலன் என்ற கோணத்தில் அன்றி வேறு கோணத்தில் பார்ப்பதில்லை எமக்கு நேரு, சாஸ்திரி, இந்திரா, ராஜிவ், மோடி என எல்லோரும் ஒரே வரிசையே அதாவது இத்தேசத்திற்கு தனிபெரும் தலைவனாக ஒருவன் வர வேண்டும், தேசம் முழுக்க அறியபட்ட தலைவனாக இத்தேசத்தின் ஒருமைபாட்டை காக்க வேண்டும் என்பது எம் எண்ணம் நாட்டுபற்று கொண்டோரின் எண்ணமும் அதுவே அவ்வகையில் காங்கிரஸ் பின்னடைவது நாட்டுக்கு நல்லது அல்ல, மோடி எதிரியே இல்லா பிரதமராக அமர்வதும் […]

பூராவும் நடிப்பு

ராகுல்காந்தி நல்லவர் வல்லவர் என ஆளாளுக்கு உருகி உருகி கண்ணீர் விடுகின்றனர் அதில் முக்கால்வாசி யாரென்றால் திமுகவினர் சரி அந்த நல்லவர், வல்லவர் ராகுல்காந்தி இப்பொழுது சும்மாதான் இருக்கின்றார். அவரை அழைத்து வந்து தமிழக முதல்வராக ஆக்கிவிடுவோமா? என கேட்டால் ஒரு பயலையும் காணவே இல்லை ஏன் ராகுல் தமிழக முதல்வராக ஆக கூடாதா? மோடியே குஜராத்தின் முதல்வராக இருந்தவர் அல்லவா? ராகுலும் தமிழக முதல்வராக இருந்துவிட்டு பிரதமராகட்டும் இதை சொன்னால் திமுகவினர் பின்னங்கால் பிடறியில் அடிபடும் […]

ஈழத்து சே குவேரா : 03

ஈழத்து சே குவேரா : 03 சென்னையில் கலைஞர் அரசு பாதுகாப்பு கொடுக்காத நிலையிலும் இந்தியாவில் தலைமறைவாக‌ இருந்தாலும் தமிழகம் வந்த அகதிகளுடனும், தமிழக அரசியல்வாதிகளினுடம், நல்ல தொடர்பில் இருந்தார் பத்மநாபா. அகதிகள் பிரச்சினையில் முன்னின்று குறைகேட்டு களைய முயற்சிப்பார். கலைஞர் அப்பொழுதுதான் முதல்வராக கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம், ஆனால் பத்மநாபா அவருக்கு நண்பர் என்றாலும், புலிகளை தமிழகத்தில் சுதந்திரமாக உலவவிட்டுருந்தார் அதற்கு அந்த கட்சியில் அப்போது பலமாக இருந்தபலபேர் […]

ஈழத்து சே குவேரா : 02

ஈழத்து சே குவேரா : 02 அப்பொழுதெல்லாம் புலிகளின் பலம் குறைவு, எல்லா குழுக்களும் இலங்கை ராணுவத்தை எதிர்த்து போராடின‌ ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு முகாமை தாக்க சிங்கள ராணுவம் திணறியது, இந்நிலையில்தான் நாங்கள் பெரியவர்கள் என சொல்ல தொடங்கினார்கள் புலிகள், சபாரத்னம் அவர்கள் எதிரியானார் அவரை கொல்லதேடும் பொழுது காப்பாற்ற நினைத்தவர் பத்மநாபா, வைக்க்கோல் லாரியில் அவரை காப்பாற்றி இந்தியா அனுப்பும் திட்டம் அவருக்கு இருந்தது, அதற்குள் சபாரத்தினத்தை கொன்றனர் புலிகள் பத்மநாபாவினையும் புலிகள் கொல்லதேட […]

ஈழத்து சே குவேரா : 01

ஈழத்து சே குவேரா : 01 பிரபாகரனுக்காகவும் புலிகளுக்காகவும் செத்தவர்களை மாவீரர்கள் என சொல்லி ஒப்பாரி வைக்கும் கூட்டம் உண்டு, ஆனால் புலிகளால் கொல்லபட்ட தமிழ் போராளிகளுக்கு தியாகிகள் தினம் என அனுசரிக்கபடும் இந்நாளும் உண்டு அப்படியும் ஒரு நாள் அனுசரிக்கபடும், தமிழகத்தில் இதெல்லாம் தெரிவதில்லை, நாம் அனுசரிப்போம் ஜூன் 19ம் நாள் ஒப்பற்ற ஈழபோராளி பத்மநாபாவின் நினைவுநாள், கோடம்பாக்கத்தில் அவர் 1990ல் மரித்தபொழுதே ஈழம் இனி மலராது என அடித்து சொன்ன அனுபவஸ்தவர்கள் உண்டு, தமிழர்களின் […]

தமிழ்நாடு என்று ஒரே நாடாக இருந்தது?

இந்தியாவோடு தமிழ்நாடு இணைந்து இருந்ததே இல்லை, இது அன்றே தனி நாடு : திராவிட இம்சைகள் சரி தமிழ்நாடு என்று ஒரே நாடாக இருந்தது? சேர சோழ பாண்டிய நாடு என மூன்று சரி அதுவாவது ஒன்றாக இருந்ததா என்றால் இல்லை, மேற்கே தொண்டை நாடு, கொங்கு நாடு என உட்பிரிவு இங்கு சிவகங்கை நாடு, கான் நாடு, நெல்லை பாண்டியர், மதுரை பாண்டியர் என ஏகபட்ட பிரிவு கன்னியாகுமரி பக்கம் கேட்கவே வேண்டாம், ஈழநாடு,வள்ளுவன் நாடு […]