பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெயமோகன் சர்ச்சை

ஏற்கனவே தன் கதைகளில் நாடார்களை மிக கேவலமாக சித்தரித்தார் என்ற சர்ச்சை ஜெயமோகன் மேல் உண்டு மேலாண்மை பொன்னுச்சாமி அதை மிக பகிரங்கமாகவே சொல்லியிருந்தார்,சுஜாதா அதை பட்டும் படாமலும் சொன்னார் இப்பொழுது நாடார் கடையில் வம்பிழுத்து சிக்கியிருன்றார் ஆசான் ஆசானுக்கு அடி மிக நன்றாக விழுந்திருக்கலாம், மிக சாதுர்யமாக “இது திமுகவின் அடி அல்ல, அல்ல அவர்கள் இப்படி எல்லாம் அடிக்கமாட்டார்கள், நல்லவர்கள் இது குடிகாரன் ஒருவனின் அடி..” என சொல்லி தப்புகின்றார். திமுகவினரிடமும் அடிவாங்க அவர் […]

திராவிட பலூன்

இதோ திராவிட பலூன் பெரியார் ஊதி, அண்ணா ஊதி உருவாக்கபட்ட திராவிட, தமிழர் மூச்சு பலூன் தனி தமிழ் மூச்சு பலூன், சுயாட்சி பலூன் அம்மையார் துர்கா வைத்திருக்கும் பலூன் கலைஞரின் மூச்சு காற்றினால் ஊதபட்டது, கடைசி இரு வருடமாக தலைவர் அவர்கள் மூச்சினை இப்படித்தான் பாதுகாத்தோம். ஆக அதை ஏலம் விடுகின்றோம்.. தமிழுக்காக தமிழருக்காக வாழ்ந்த தலைவர் டாக்டர் கலைஞரின் மூச்சு நிரம்பிய பலூன்.. ஒரு பலூன் 2 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்… ஏலம் ஒருதரம்.. […]

மருத்துவ உலகம் போராட வந்திருக்கின்றது

கல்கத்தாவில் நடந்திருப்பது நிச்சயம் மாபெரும் கொடுமை, காட்டுமிராண்டிதனம் 82 முதியவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றார்கள், அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் உள்ளே புகுந்து மருத்துவர்களின் மண்டையினை அடித்து உடைத்திருக்கின்றது ஒரு இளம் மருத்துவர் இறந்தே விட்டார், இன்னும் சில மருத்துவருக்கும் செவிலியருக்கும் படுகாயம், சிலர் பிழைப்பது சிரமம் என்கின்றார்கள் அது போக ஏக கலவரங்களை செய்திருக்கின்றது, காவல்துறையும் அதை தடுக்கவில்லை மேற்குவங்கம் குண்டர்களின் கூடாரமாக ஆகிவருகின்றது என்பது சோகம் எனினும் இந்த மருத்துவர் உயிரிழந்திருப்பது […]

வரலாறு அதைத்தான் சொல்கின்றது

வாஞ்சிநாதன் சாதி வெறியன், ஆஷ் துரை தலித்துக்களுக்காக நல்லாட்சி செய்த ஆங்கிலேயன். பிராமணர் எல்லோரும் சாதிவெறி பிடித்தவர்கள் ஆங்கிலேயன் சமத்துவமும் கல்வியும் கொடுத்த உத்தமன் என சிலர் கிளம்பியாயிற்று அந்த உத்தமன் ஆங்கிலேயன் ஏன் தலித்துக்களை லண்டனில் மொத்தமாக குடியேற்றி வாழவைக்கவில்லை அட லண்டன் வேண்டாம், அவன் ஆட்சியில் இருந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா எல்லாம் அழைத்து சென்று “இதோ நீங்கள் கண்ட சமத்துவ தேசம், சாதிவெறி பிடித்த இந்தியா உங்களுக்கு வேண்டாம், இங்கு நீவீர் வாழ்வாங்கு […]

எதுவுமே எழுதமாட்டோம்

பேருந்து ஓட்டுநர் தாக்கபட்டால் மொத்த பேருந்து ஓட்டுநரும் வேலை நிறுத்தம் செய்கின்றாகள் இந்த டாக்டர்களில் ஒருவர் தாக்கபட்டால் நாடெல்லாம் டாக்டர்கள் போராட்டம் செய்கின்றார்கள் எல்லா உழைக்கும் இனங்களிலும் இந்த ஒற்றுமை உண்டு ஆனால் இரு “உழைக்கும்” இனங்கள் மட்டும் அப்படி அல்லவே அல்ல‌ முதலாவது எழுத்தாளர் இனம், சக தொழிலாளன் தாக்கபட்டால் அதை கண்டித்து இனி நாங்கள் எழுதவே மாட்டோம் என வேலை நிறுத்தம் செய்வார்களா? மாட்டார்கள், மாறாக கூடுதலாக உழைத்து எழுதி தள்ளுவார்கள். அவர்கள் வேலை […]

உங்கள் தரத்திலே நின்று கொள்ளுங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கபட்டிருப்பது கண்டிக்கதக்கது, கற்றவர்கள் நிரம்பிய ஊர் என மார்தட்டும் நாகர்கோவிலில் இப்படி நடந்திருப்பது வருத்ததிற்குரியது சல்லி பயல்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள் என்பது பொது விதி.. நிச்சயம் ஜெயமோகன் மாபெரும் எழுத்தாளன் , அவரின் நாவல்களும் எழுத்தும் பயணகட்டுரையும் வரலாற்று எழுத்தும் கொண்டாடபடவேண்டியவை பொதுவாக எழுத்தாளர்கள் விஞ்ஞானிகள் உலகம் வேறு, அவர்கள் வழக்கமான உலகில் இருந்து விலகித்தான் இருப்பார்கள், அப்படியாக சில குணாதிசயங்கள் அவருக்கு இருக்கலாம் ஆனால் தமிழுலகின் மிகசிறந்த எழுத்தாளர் என்பது ஒப்புகொள்ள […]

ரகசிய டீல் ?

ஆளும் கட்சியாக இருப்பதை விட எதிர்கட்சியாக இருக்கும் பொழுது நெருப்பாக இருப்பார் கலைஞர்.. ஒரு பிரச்சினை சிக்காதா? அட இல்லாவிட்டாலும் ஒரு பிடி கிடைக்காதா? என காத்திருப்பார். சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் இறங்கி சிக்சர் அடிப்பார் அது காமராஜர், ராமசந்திரன், ஜெயா என யாராக இருந்தாலும் சரி, வாய்ப்பு கிடைத்தாலும் அவர் வீணாக்கியதில்லை அப்படிபட்ட கலைஞர் இருந்த திமுகவுக்கு சென்னை குடிநீர் பஞ்சம் அட்டகாசமான வாய்ப்பு ஆனால் திமுக ஏதோ அதிமுக பங்காளி போல் அமைதி காப்பதும், […]

எல்லாம் தமிழக சாபம்

“காத்திருந்த கண்கள் ” என்றொரு படம் உண்டு, ஜெமினியும் சாவித்திரியும் வாழ்ந்திருப்பார்கள் கதைபடி சாவித்திரி இரட்டை வேடம், ஜெமினிகணேசனுகு தங்கையினை காட்டிவிட்டு அக்காவினை மணம் செய்துவைத்துவிடுவார்கள் பின் உண்மை தெரியும் ஜெமினி “வளர்ந்த கதை மறந்துவிட்டாள்” என பாடல் எல்லாம் பாடுவார், படம் எப்படியோ முடியும் “பாலும் பழ”த்தில் கூட அப்படி இரண்டு சரோஜாதேவி உண்டு இந்த இருபடங்களையும் பார்த்து காப்பி அடித்து கரு.பழனியப்பன் எடுத்த படமே “பார்த்திபன் கனவு” சொந்தமாக சினிமா சரக்கு கூட இல்லாமல் […]

இதன் பெயர்தான் பெரியாரின் திராவிட புரட்சி

நீ சொல்வது தவறு அன்று தொழிலதிபர்களையும், நிலச்சுவாந்தாரையும் பிராமணன் ஆட்டிவைத்தான் பெரியார் அதை உடைக்கத்தான் பிராமணனை விரட்டினார் உனக்கு புரியாது அடேய் அன்றே வெள்ளையன் ஆட்சிதானே, வெள்ளையனிடம் பிராமணணை விரட்ட சொல்லி அவர் கேட்க வேண்டியதுதானே ஏன் அவன் அவனிடம் சொல்லவில்லை அது..ம்ம்.. ஆங் பிராமணனை பகைத்தால் வெள்ளையனால் ஆள முடியாது ஏண்டா இது ஓவராக இல்லை? பிராமணனா நாட்டை வாள்முனையில் வெள்ளையனுக்கு கொடுத்தான், நாட்டை ஆளத்தான் பிராமணணை வெள்ளையன் வேலைக்கு வைத்திருந்தான், அவனுக்கு ஏதடா அதிகாரம்? […]

காலமே உன்னை இணைத்தது, காலமே பிரித்தது

இந்த வாழ்வு எவ்வளவுக்கு எவ்வளவு ரசனையானதோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிர்ச்சிகளையும் வழங்க கூடியது, ஒரே ஒரு செய்தி மொத்தமாக புரட்டி போட்டுவிடும் ஏன் உலகிற்கு வந்தோம், பலநூறு கோடி மக்கள் கொண்ட உலகில் ஏன் இந்த பகுதிக்கு வந்து இவர்களை எல்லாம் சந்திக்கின்றோம்?, நம்மை நடத்தும் விதி எது என நமக்கு தெரியாது அது முதலாம் வகுப்பில் அப்பா அம்மாவினை தாண்டி காலடி எடுத்து வைப்பதில் தொடங்குகின்றது, வாழ்வு முடிவது வரை அப்பயணம் தொடரின்றது அப்படி சரியாக […]