பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

Happy Birthday தங்க மகனே

அன்றொரு நாள் அவர் தந்தையின் நினைவுகளில் மூழ்கியிருந்தார் அப்பா, அவரென்றால் அவருக்கு பாசம் அதிகம். “அவரை ரொம்ப பிடிக்குமாப்பா? ஆமா, நான் கடைசி பையன்லா அதனால ரொம்ப பாசமா இருப்பாரு அவர் இல்லண்ணதும் எப்படி தாங்கிட்டீங்க? அவர் இல்லாத உலகத்துல எதுக்கு வாழனும்னுதான் தோணிச்சி, ஆனா உங்க அம்மாவும் அவ கையில நீனும் இருந்தியா, அதனாலதான் இவ்வளவு நாள் இருக்கேன். .” மகனை நோக்கும் பொழுதெல்லாம் அவர் சொன்ன வார்த்தைகள் மனதுக்குள் ஒலித்துவிட்டே செல்லும் இன்று அவனுக்கு […]

புனித அந்தோணியார்

இன்று கத்தோலிக்க திருச்சபை ஒரு பெரும் புனிதரின் திருவிழாவினை கொண்டாடுகின்றது, புனிதர்கள் என்றால் இயேசுவின் பெயரில் சம்பாதித்து கல்லூரியும், பங்களாவும், எஸ்டேட்டும் சேர்த்தவர்கள் அல்ல‌ மாறாக கிறிஸ்துவிற்காக துறவு வாழ்க்கை வாழ்ந்து அவருக்காக உயிரையும் விட்டவர்களை, புனிதர்கள் என திருச்சபை ஏற்றிருக்கின்றது. அப்படி கிட்டதட்ட 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து புனிதரானவர் புனித அந்தோணியார், ஐரோப்பாவில் ஏகபட்ட அந்தோணி உண்டு, காட்டில் இருந்த அந்தோணி, எகிப்தில் இருந்த அந்தோணி என ஏராளம், இவர் இத்தாலியின் பதுவாவில் வசித்ததால் […]

தென்கிழக்கு ஆசியாவினை ஆண்ட கடல்ராசனும் அந்த ராஜராஜ சோழனே

எங்கோ பாய்ந்துகொண்டிருந்தது காவேரி, அதனை தஞ்சைக்கு திருப்பினான் கரிகாலன் கரிகாலன் செய்து கொடுத்த அந்த பெரும் காரியத்தில் சோழநாடு செழித்தது, நிரந்தர செழிப்பு அது. அந்த செழுமை கல்வி, கலை, வீரம் என எல்லாவற்றிலும் தஞ்சையினை முன்னுறுத்தியது அதனால் எழுந்த செழிப்பான சோழ நாட்டில் பிறந்தவன் தான் ராஜராஜ சோழன் ஒரு நாட்டின் செழுமை எப்படி நல்ல விஷயமோ, அதன் ஆபத்தும் அதுவேதான். எப்பொழுதும் எதிரிகள் தனியாகவோ, கூட்டமாகவோ பாய கூடும். அந்த ராஜ ராஜன் இதில்தான் […]

போங்கடா நீங்களும் உங்க புரட்சி புண்ணாக்கும்

அமெரிக்க பண்ணைகளுக்கு உழைக்க சென்றதுதான் கருப்பு ஆப்ரிக்க இனம், அவர்பட்ட அடிமைதனமும் கொடுமையும் ஏராளம் பின்னாளில் கருப்பர் சந்ததி ஒபாமா அங்கு அதிபரானார், இன்று கருப்பருக்கு வாழ்வியல் வசதிக்கு அங்கு குறைவில்லை மலேசிய ரப்பர் தோட்டங்களுக்கு உழைக்கத்தான் சென்றனர் தமிழர், இன்று ஆட்சியில் பங்குவரை கிடைத்திருக்கின்றது பிஜூ, தென்னாப்ரிக்கா, மொரிஷியஸ், ரியூனியன் ஐலண்ட், கயானா, மேற்கு இந்திய தீவு என ஏகபட்ட நாடுகளுக்கு அடிமையாகவும் ஒடுக்கபட்டவனாகவும் கொண்டு செல்லபட்ட இனங்களில் தமிழ் இனமும் ஒன்று அது அங்கெல்லாம் […]

மங்கம்மாள்

தென் தமிழகத்தை பாண்டிய மன்னனின் வீழ்ச்சிக்கு பின் ஆளவந்தது நாயக்கம் வம்சம் அதில் விஸ்வநாத நாயக்கன் தொடங்கி, திருமலை நாயக்கன் மஹாலை எல்லாம் கட்டிய பின் அந்த தலைமுறையில் வந்தவன் சொக்கநாத நாயக்கன், அவன் மனைவிதான் மங்கம்மா அவள் ராணுவதளபதியின் மகளாய் இருந்ததால் வீரம் இயல்பாய் இருந்தது. அரசகுடும்பத்தை சாராதவளாயினும் மங்கம்மாளை திருமணம் செய்தான் மன்னன் சொக்கநாத நாயக்கன் இறக்கும்பொழுது அவன் மகனுக்கு சிறிய வயது என்பதால் மங்கம்மா ஆட்சிபொறுப்பாளர் ஆனார் ராணி அல்ல மாறாக ஆட்சி […]

ராஜராஜ சோழன் நான்

ஆளாளுக்கு “ராஜராஜ சோழன் நான்” என பாட ஆரம்பித்தாயிற்று இந்த ரஞ்சித் என்பவனுக்கு சொந்தமாக யோசிக்க தெரியாது, யாராவது கொளுத்தி போட்டால் அதை நம்பி கத்துவான் அப்படி அவனுக்கு முன்பே ராஜராஜனின் பிம்பத்தை உடைக்க கிளம்பியது பெரியார் கோஷ்டி, குறிப்பாக அந்த தோசை மதிமாறன் ஏன் இவர்களுக்கு ராஜராஜன் மேல் குறி? கடவுள் பக்தி மிக்க, கடவுளுக்கு பெரும் ஆலயம் அமைத்து வழிபட்ட தமிழ் மன்னனை இவர்களுக்கு பிடித்தால்தான் ஆச்சரியம், பிடிக்காவிட்டால் ஒன்றுமில்லை மதிமாறன் எனும் மடையன் […]

நாட்டிய தாரகை பத்மினி

அந்த கேரள‌ சகோதரிகள் மூவருமே பரதநாட்டியத்தை கசடற ஆட கற்றவர்கள், கேரளம் அன்று திருவிதாங்கூர் சமஸ்தானம், அந்த திருவனந்தபுரத்தில் மன்னரின் மாளிகை உட்பட பல முக்கிய இடங்களில் அவர்கள் நடனம் அரங்கேறியது அதில் பத்மினி செல்லமாக பப்பி, அவரின் மாமா ஒருவர் அவரை தத்தெடுத்திருந்தார், அவர் பெரும் பணக்காரர் என்பதால் அன்றே மும்பை சென்னை என அவர்கள் சுற்றி கொண்டிருந்ததால் மும்பையில் 14 வயதில் இந்தி சினிமாவிலும் அந்த பெண் நடித்திருந்தாள் அந்த சகோதரிகளின் நடன நிகழ்ச்சி […]

அவர்கள் தமிழர்கள் என கிளம்புவர்கள் என்ன ரகம்?

இந்தியாவில் பயிற்சி பெற்ற போராளிகுழுக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒருவித சிறப்பு பயிற்சிக்களை அளித்திருந்தது இந்தியா, அதாவது டாங்கி படை எதிர்ப்பு ஒன்றிற்கு, கப்பல் படை எதிர்ப்பு ஒன்றிற்கு, கண்ணிவெடி நடவடிக்கைகளுக்கு ஒன்று என கொடுத்திருந்தது எல்லா குழுக்களும் களத்தில் இருந்தவரை சிங்கள ராணுவம் வடக்கில் நடமாட கூட முடியவில்லை, காரணம் பல குழுக்கள் பலமுனை தாக்குதல்கள், சிங்களம் சுத்தமாக தளர்ந்திருந்தது. இனி தமிழருக்கு ஏதும் உரிமை கொடுக்காமல் சாத்தியமில்லை என சிங்கள உச்சபீடம் கதறிகொண்டிருந்தது. ஆனால் சக குழுக்களை, […]

முழுக்க முழுக்க அரசியல்

முன்பு கிறிஸ்தவ ஆலயங்களில் லத்தீன் ஆங்கிலம் தமிழ் பிரெஞ்சு டச்சு என பலமொழிகள் இருந்தன, திராவிட சிகாமணிகள் பார்த்து கொண்டே இருந்தன‌ இஸ்லாமிய சமூகத்தில் உருது, அரபி, தமிழ், ஆங்கிலம் என பல மொழிகள் இருந்தது, திராவிட கும்பல் மவுனமாக ரசித்தது ஏன் திமுகவிலே தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் என மும்மொழி கொள்கை இருந்தது வெளியே தமிழும் வீட்டுக்குள் தெலுங்கும் பத்திரிகைகளுக்கு ஆங்கிலமுமாக அவர்கள் எழுதிகொண்டிருந்தார்கள் சென்னை பகுதி திமுக பிரபலங்களுக்கு தமிழ் தெலுங்கு ஆங்கிலம் என […]

திமுக என்பது நல்ல சிந்தனையாளர்களின் சிறைகூடம்

ஏன் நீ திராவிடவாதி ஆகவில்லை, முன்பு ஏன் எழுதினாய் என்றால் விஷயம் இதுதான் நாம் புலிகளின் அட்டகாசத்தையும் முன்பு திமுக அவர்களுக்கு செய்த உதவியினையுமே சொன்னோம் திராவிட திமுக சித்தாந்தம் மிக குறுகியது, அதில் கலந்துவிட்டால் தமிழ், தமிழகம் தமிழக அரசியல் திராவிடம் இந்த குறுகிய வட்டத்தில் சிக்கி கொள்வீர்கள் அது மலைமேல் ஏறி உலகத்தை பார் என காட்டாது, மாறாக அய்யகோ ஆபத்து வளையில் பதுங்கு என்றுதான் பயமுறுத்தும் யாரையாவது பார்த்து சினேகமாக புன்னகைத்தால் அய்யகோ […]