பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தொழுகை கூடத்தில் தாக்குதல்

ஈஸ்டர் தினத்தில் கிறிஸ்தவர்களை தாக்கினாலும் அதை ஒட்டி வரும் யூதரின் பாஸ்கா திருவிழா எனும் பாஸ் ஓவர் பண்டிகையினையும் கவனிக்க தீவிரவாதிகள் மறப்பதில்லை பாஸ் ஓவர் அல்லது பாஸ்கா என்பது யூதரின் முக்கியமான கொண்டாட்டம், பாஸ் என்றால் கடந்து செல்லுதல் அதாவது எகிப்தில் அடிமையாய் இருந்த அந்த கூட்டம் அந்த நாளில்தான் மீண்டு வந்தார்களாம் அந்நாளில் அவர்கள் கடும் உற்சாகமாய் இருப்பார்கள் அப்படி ஒரு நாளில்தான் இயேசுவும் கொல்லபட்டார் கிட்டதட்ட 10 நாளில் கொண்டாடுவார்கள், இப்பொழுதெல்லாம் ஒரு […]

சைனா கையினை பிசைந்து நிற்கின்றது

பசிபிக் கடலில் அமெரிக்கா நுழைந்தால் சும்மா விடமாட்டோம் என முதலில் சொன்னது சைனா தென் சீன கடலுக்கு வந்தால் விடவே மாட்டோம் என்றதும் அதுவே தைவான் விஷயத்தில் அமெரிக்கா தலையிட்டால் சும்மா விடமாட்டோம் என சவுடால் விட்டதும் அதுவே ஏய் தைவானே ஒழுங்காக என்னுடன் இணையாவிட்டால் மாபெரும் போர் என மிரட்டியதும் அவர்களே மிரட்டல் என்றால் கடுமையான மிரட்டல் ஆனால் தைவான் எங்களின் கூட்டாளி, நிறைய ஆயுதங்களை வாங்குகின்றது ஆனால் பாவம் அவற்றை இயக்க தெரியவில்லை அதனால் […]

மிகபெரிய‌ ஹீரோ மற்றும் கொடூர‌ வில்லன்

இந்த நூற்றாண்டின் மிகபெரிய‌ ஹீரோ மற்றும் கொடூர‌ வில்லன் யாரென கேட்டால் கண்களை மூடிகொண்டு சொல்லலாம் அவன் அடால்ப் ஹிட்லர் இந்த உலகம் கடந்த 70 ஆண்டுகளில் இவ்வளவு வளர்ச்சிபெற்றிருக்கின்றது என்றால் அதன் மூலகாரணம் அவனே சாதரண சிப்பாய், நல்ல ஓவியனும் கூட முதல் உலகப்போர் ஏன் ஏற்பட்டது என கண் கூடாக கண்டவன், அதாவது கிட்டதட்ட எல்லா ஐரோப்பிய நாடுகளுக்கும் அன்று காலணிகள் இருந்தன ஜெர்மனிக்கு இல்லை வல்லரசு என்றால் வியாபாரம் தான் அடிப்படை, ஜெர்மன் […]

ஆய்வுகுரிய விஷயம்

நெல்லை மாவட்டம் கூந்தன் குளத்தில் இடிதாக்கி பறவை கூட்டம் கொத்தாக மடிந்திருக்கின்றது இது ஆச்சரியமான விஷயம் பொதுவாக பறவைகள் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்பவை, இயற்கையின் எல்லா சீற்றமும் அவைகளுக்கு அத்துபடி, மிக முன்னெச்செரிக்கையாக தங்களை காத்துகொள்ளும் புயலாலும் மழையாலும் இல்லை கடும் வெயிலாலும் அவை பாதிக்காபடுவதில்லை எப்படியாவது தன்னை தற்காத்துகொள்ளும் எல்லா இயற்கை நுண்ணறிவும் அவைகளுக்கு உண்டு, இயற்கைக்கும் அவற்றிற்குமான தொடர்பு அப்படி சுனாமி வருவதற்கு முன்பும் இன்னும் பல இயற்கை சீற்றத்திற்கு முன்னும் பறவை […]

கோமதி வெளிச்சத்தில் இருந்து விலகி இருப்பதே நல்லது

கோமதி சாதித்திருக்கின்றார் சந்தேகமில்லை ஆனால் இது போதாது ஒலிம்பிக் எனும் பெரும் சவால் அவர் முன்னால் உள்ளது, அவர் என்பதை விட தேசத்தின் மிக பெரும் சவால் அது, தகுதி உள்ளவர் என்ற முறையில் அவர் அதில் சாதிக்க முழு முயற்சி எடுக்க வேண்டும் இந்த வீண் விளம்பரம், பத்திரிகைகளின் செய்தி பசி, அரசியல்வாதிகளின் அரசியல் ஆட்டம் இதிலிருந்து அந்த அம்மணி ஒதுங்கி ஒலிம்பிக்கில் கவனம் செலுத்தலாம் இல்லாவிடில் இங்கு கொடுக்கபடும் வீணான வெளிச்சமும் போலி பிம்பமும் […]

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் -உளவுத்துறை எச்சரிக்கை விஷயம் எளிது பாகிஸ்தானில் இந்திய குண்டுவீச்சில் கொல்லபட்டவருக்காக மிக பெரும் பதிலடியினை அந்த கோஷ்டி நிச்சயம் கொடுக்க முயற்சிக்கும், இது எதிர்பார்த்தது காரணம் அவர்கள் அங்கு இழந்திருக்கும் இழப்பு மிக கடுமையானது அவர்களால் அதை வெளிப்படையாக சொல்லமுடியாது அதனால் அதே மாதிரி இழப்பினை இங்கும் ஏற்படுத்த முயற்சிப்பார்கள் இந்தியா முழுக்க பாதுகாப்பு இன்னும் பலபடுத்தபட வேண்டும் அதைவிட முக்கியம் உளவு தகவல்களும் உளவு தகவல்களும் இன்னும் […]

புருஷா கமிஷன்

இந்த புருஷா கமிஷன் எந்த கட்சியின் ஆட்சி அமைக்குமோ அக்கட்சி ரஷ்ய புட்டீன் போல, சீனாவின் ஜின்பெங் போல நிரந்தர ஆட்சியில் அமரும் ஏன் மு.க ஸ்டாலினே அந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பார் ஆனால் நம் துரதிருஷ்டம் பாருங்கள் இந்த மோடி என்பவருக்கும் மனைவி கொடுக்கும் கஷ்டம் என்னவென்றே தெரியாது இந்த ராகுல்காந்தி என்பவருக்கும் சுத்தமாக தெரிய வாய்ப்பே இல்லை ஒன்று காவி சன்னியாசி இன்னொன்று வெள்ளை சன்னியாசி இந்த இருவரையும் வைத்துகொண்டு புருஷன்கள் இந்தியாவில் யாரிடம் புலம்ப […]

அந்த வார்த்தை அவனுக்கு மட்டும் சொந்தமா?

இங்கிருந்துகொண்டு இலங்கை குண்டுவெடிப்பினை பார்த்து இஸ்லாமிய பயங்கரவாதம் அது இது என சொன்னாலும் அங்கிருந்து கிடைக்கும் சில கோணங்களும் அவற்றின் தகவல்களும் இச்சம்பவத்தை வேறு மாதிரி அலசுகின்றன‌ அதாவது கடந்த ஆண்டுதான் புத்த சிலை உடைப்பு சர்ச்சையும் இன்னும் பலவும் இந்த கோஷ்டி செய்திருக்கின்றது, ஒரு புத்த பேரினவாத நாட்டில் பெரும்பான்மை மதமான சிங்களனின் புத்தமத ஆலயத்தை குறிவைக்காமல் ஏன் தமிழர் வாழும் அதுவும் கிறிஸ்தவ பகுதியினை தாக்கினார்கள் என்பதுதான் பலருக்கு கேள்வி நிச்சயம் இலங்கையில் இஸ்லாமியருக்கும் […]

அந்த வீணை போன்ற குரல்

மிக மிக திறமையானவர்கள், ரசிகர்களை கட்டி போட்ட கலைஞர்களில் பெரும்பான்மையானோர் நெடுநாள் இருப்பதில்லை திறமையினையும் ரசிக கூட்டத்தையும் அபூர்வ வரங்களையும் கொடுத்த இறைவன் சிலருக்கு ஆயுளை கொடுப்பதில்லை மிக சிறு வயதிலே பாடவந்து 37 வயதிலே மரித்தும் போன சொர்னலாதாவும் அதில் ஒருவர் மிக சிறந்த பாடகி, அதனைவிட சிறந்தது அந்த வீணை போன்ற குரல் 90களில் இருந்து 2008 வரை அவரின் காலம் இருந்தது, இளையராஜாவின் உச்ச காலம் அப்படியே ரகுமானின் தொடக்க காலத்தில் அற்புதமான […]

இதுதான் அவர் நம்பாத கடவுளின் விளையாட்டு

கலைஞரின் அரசியலை விமர்சியுங்கள், அவர் மதுகொள்கை இன்னபிற கொள்கைகளை விமர்சியுங்கள், ஆனால் இலங்கை போரை ஏன் நிறுத்தவில்லை என விமர்சிப்பதற்கு முன் கொஞ்சம் யோசிக்கலாம் ஆனால் செய்யமாட்டார்கள் 1983 கலவரத்தையொட்டி இந்தியா களமிறங்கியதும், போராளிகளை ஆதரித்ததும் இன்னும் பிற உதவிகளும் உலகறிந்தவை விட்டுவிடலாம். 1986ல் வடமராட்சியில் பிரபாகரன் சுற்றி வளைக்கபட்டதும் ராஜிவ் தலையிட்டு, இனி உங்களால் மக்கள்தான் சாவர்கள், போதும் விளையாட்டு, இனி அமைதியாக வாழுங்கள் என ஒப்பந்தம் செய்ததும், அந்த அமைதிகாக்கும் படையினை புலிகள் சீண்டியதும், […]