பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆனால் இல்லை

இந்த தேர்தலில் ஒரு விஷயம் கவனிக்கபடுகின்றது அந்த பிராமண எதிர்ப்பு கோஷம் இப்பொழுது இல்லை, வழக்கமாக ” பார்ப்பான் பார்ப்பான்” என பொங்கி தீர்ப்பார்கள் பாஜகவினை மூர்க்கமாக எதிர்க்கும் இந்நேரம் நிச்சயம் பார்ப்பன எதிர்ப்பு எனும் கோஷம் வரவேண்டும் ஆனால் இல்லை ஆக திக திராவிட கும்பலுக்கு பார்ப்பன எதிர்ப்பு இனி எடுபடாது என தெரிந்துவிட்டது மவுனமாக அதை கைவிடுகின்றார்கள் இப்படி இந்துமத எதிர்ப்பையும் விரைவில் விடுவார்கள் என எதிர்பார்ப்போம்.. ஆக கலைஞர் எப்பொழுது காலாவதியாவார்? பிராமண […]

தேர்தல் அறிக்கை – டிடிவி

டிடிவி தினகரனும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார் விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்குழாய் கிணறே அமைத்து தருவோம் என்பதில் இருந்து வெளிநாட்டு வாழ் தமிழருக்கு தனி வாரியம் அமைப்போம் என்பது வரை முழங்கியிருக்கின்றார் அது எப்படி மத்திய அரசில் வெளிநாட்டு வாழ் தமிழருக்கு தனி வாரியம் அமைப்பார்கள்? மதுபான ஆலையினை மூடுவார்களாம், ஏன் மிடாஸை இபொழுதே மூடினால் என்ன என்றால் மூடமாட்டார்கள் இருக்கட்டும் இது மக்களுக்கு வாசிக்கபட்ட அறிக்கை ஆனால் கட்சிக்குள் வாசிக்கபட்ட அறிக்கை என்னவாக இருக்கும்? தேர்தல் முடிவில் […]

தேர்தல் துளிகள் 22/03/19

தேனியில் பன்னீர்செல்வம் மகனுக்கு எதிராக தினகரன் களமிறங்குவாரா? ஆமாம், சிட்டி ரோபாவினை அழிக்க அதை உருவாக்கிய டாக்டர் வசீகரன் வந்தால்தான் முடியும் *************** இப்பொழுது மிக சரியாக பேசிகொண்டிருக்கும் ஒரே நபர் சுப்பிரமணியன் சாமி ஒருவர்தான் திமுக அதிமுக தேர்தல் அறிக்கைகள் விஷயம் , 7 பேர் விடுதலை சாத்தியமே இல்லை என உண்மையினை சொல்லும் ஒரே நபர் அவர்தான் ************ ஹலோ.. சத்தியமூர்த்தி பவனுங்களா? கடைய எப்ப சார் திறப்பீங்க?… (கடந்த ஒருவாரமாக சங்கத்திற்கும் அவர்களுக்கும் […]

எம் தந்தை

“அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.” அதாவது அன்றொரு நாள் இதே நிலாவின் ஒளியில் எம் தந்தையோடிருந்தோம், இன்று அதே நிலா இருக்கின்றது, நாம் எங்கோ இருக்கின்றோம் ஆனால் எம் தந்தை இல்லை இது தன் தந்தையினை இழந்த பாரியின் மகள் கபிலரிடம் புலம்பும் புலம்பல் அந்த பங்குனி உத்திர நிலாவும் அந்த பாரியின் மகள்களை […]

என்ன கொள்கை?

எம்ஜிஆர் கொள்கைகளை விட்டுத்தர மாட்டோம் : அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம் முதலில் என்ன கொள்கை அது என விளக்கும் அய்யா? 40 வருட அந்தேகம் அது, இன்னும் யாருக்கும் உங்கள் கட்சியின் கொள்கை என்னவென்றே தெரியாது என்னதான் அவர் கொள்கை? “அண்ணாயிசம்” என்றால் என்ன? கலைஞர் எதிர்ப்பு எம்ஜிஆர் கொள்கை என்றால் கலைஞருக்கு பின் யாரை எதிர்ப்பீர்கள்? கட்சியினை கலைப்பதுதானே முறை?

விடுவாரா அக்கா

நாடார் என நிரூபிக்க என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கின்றது? விடுவாரா அக்கா தமிழிசை? அடுத்து தமிழிசை கருப்பு கட்டி காய்ச்சும் படம் விரைவில் வரும், தாமரை வடிவில் அக்கா கருப்பட்டி தயாரிப்பார்

விசித்திர காட்சிகள்

தொடக்கத்தில் பரிசுத்த நாடார் எனும் ஒரு நாடாரை எதிர்த்து வென்றவர் கலைஞர், காமராஜருக்கும் கலைஞருக்குமான பெரும் போர் உலகறிந்தது விருதுநகரில் காமராஜரை கலைஞர் கோஷ்டி தோற்கடித்தபொழுதுதான் கனிமொழி பிறந்தார் நாகர்கோவில் வரை அவரை விரட்டியடித்தார் கலைஞர் நாகர்கோவிலில் “இது நாடாளுமன்ற தேர்தலா? நாடார் மன்ற தேர்தலா?” என முழங்கியவர் கலைஞர் நாகர்கோவிலில் காமராஜர் வென்றபின் அந்த தோல்வியில் காமராஜருக்கு பக்கபலமாக இருந்த நாடார் தொழிலதிபர்களை எல்லாம் ஓட ஓட அடித்தவர் கருணாநிதி அப்பொழுது கனிமொழிக்கு வயது 5 […]

அவ்வளவு நல்லவர்கள் நீங்கள்

போங்கடா டேய் அந்த வைகோவினையே சேர்த்து கொண்டீர்கள், கலைஞர் மேல் சீறிபாய்ந்த பாய்ந்த அந்த கலைராஜனையும் நேற்று சேர்த்து கொண்டீர்கள் உங்களை மிக மிக கொச்சைபடுத்துபவர்களை எல்லாம் தேர்தல் உடனே அணைத்து கொள்கின்றீர்கள். யாரெல்லாம் கடந்த காலங்களில் உங்களுக்கு குழிபறித்தார்களோ அவர்களை எல்லாம் தயக்கின்றி இப்பொழுது மேலே ஏற்றிவிட அரும்பாடுபடுகின்றீர்கள் எவ்வளவு நல்லவர்கள் நீங்கள்? எப்படி எல்லாம் இந்த நபர் நம்மை அவமானபடுத்தினார், தோற்கடித்தார் இம்சைபடுத்தினார் என்றெல்லாம் கொஞ்சமும் உங்களுக்கு கவலையே இல்லை உங்கள் மறதியும் பெருந்தன்மையும் […]

திரைப்படம் என்பது விளம்பரத்துக்கான ஒரு கருவி

“ஒமுங் குமார் இயக்கியுள்ள ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற திரைப்படம், கட்சி சார்ந்த கதையைக் கொண்டது. அதில் தற்போதைய பிரதமரின் அரசியல் வாழ்க்கை இடம்பெறுகிறது. திரைப்படம் என்பது விளம்பரத்துக்கான ஒரு கருவி. அது தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்” இப்படி சொல்லி நீதிமன்றம் செல்கின்றது திமுக‌ அந்த வரியினை கவனியுங்கள் //திரைப்படம் என்பது விளம்பரத்துக்கான ஒரு கருவி// எந்த திமுக? வேலைக்காரி, பராசக்தி தொடங்கி சினிமாவினை தன் கட்சி விளம்பரத்திற்காக பயன்படுத்திய அந்த திமுக‌ கொஞ்சமா திரைபடத்தில் ஆடினார்கள்? […]

ஆயிரம் மடங்கு அழகு

எங்கு போனாலும் உயர்ந்த பட்டுடுத்தி, கவனமாக ஒப்பனையிட்டு, தலையெல்லாம் பூச்சூடி , நகையெல்லாம் பூட்டி கிட்டதட்ட கிளியோபாட்ரா தோரணையில் வருபவர் அவர் பெரும் போராட்டமோ இல்லை நாட்டுக்காக சில கருத்துக்களோ சொன்னதே இல்லை அவர், தந்தை வழியில் அவரால் மட்டுமே அரசியலுக்கு வந்தவர் நாகரீகமான மேடைகள், மேலிடத்தோர் வீற்றிருக்கும் அவைகள் தவிர அவரை காணமுடியாது ஆனால் டாக்டராயினும் எங்கு சென்றாலும் பரட்டை தலையுடனும், வயலுக்கு செல்லும் பெண்ணின் பாமர தோற்றத்துடனும் மனதில் பட்டதை மிக தைரியமாக சொல்லியும் […]