பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கில்லாடி கிளைவ் : 03

கில்லாடி கிளைவ் : 03 சென்னை கோட்டைக்கு வந்த கிளைவின் கையில் கால் காசு இல்லை, லண்டனில் அவர் தந்தைக்கு தெரிந்த நபர் ஒருவர் இருப்பதாக நம்பி வந்த கிளைவிற்கு அந்த நபரும் லண்டன் சென்றது பின்னர்தான் தெரிந்தது சென்னை வெயில் அவருக்கு ஒத்துவரவில்லை, உடல் நலம் கெட்டது, அவருக்காக கொடுக்கபட்ட குமாஸ்தா அறையும் அவருக்கு உகந்ததில்லை அக்காலங்களில் அவருக்கு ஆறுதலை கொடுத்த இடம் கடற்கரை, கோட்டையின் மாதா கோவில் , அந்த நூலகம் சென்னை கவர்னர் […]

பாரதியார் கவிதையினை மேற்கோள் காட்டி சுதந்திர தின உரை ஆற்றினார் மோடி

பாரதியார் கவிதையினை மேற்கோள் காட்டி சுதந்திர தின உரை ஆற்றினார் மோடி என்னதான் சர்ச்சை என்றாலும் வாழ்த்தவேண்டிய இடங்களில் வாழ்த்தவேண்டும் பாரதி இத்தேசத்தையும் அதன் விடுதலையினையும் அதன் எதிர்காலத்தையும் பாடி பாடி செத்த கவிஞன் அவனுக்கு இதுகாலம் வரை இத்தேசத்தில் பெரும் அடையாளமில்லை, அதுவும் காங்கிரஸ் பிரதமர்கள் பெரும்பாலும் அவனை கண்டுகொண்டதே இல்லை முதன் முதலாக அந்த சிங்க தமிழனின் வரிகளை பாரத பிரதமர் செங்கோட்டையில் முழங்குகின்றார், அந்த நன்முயற்சிக்கு வாழ்த்துக்கள் அய்யா மோடி எம் பாரதியின் […]

பணமதிப்பு எப்படி சரிந்தது

சில மோடி பக்தர்கள் வந்து உலக பொருளாதாரமே சரிகின்றது, இந்திய பணம் சரியாதா? அவரை சொல்ல ஒன்றுமில்லை என சொல்லிகொண்டிருக்கின்றார்கள் உதாரணம் சொல்லுங்கள் என்றால் துருக்கி பணம் சரிந்துவிட்டதாம் துருக்கி மேல் கடும் வெறுப்பில் இருக்கின்றது அமெரிக்கா, அதன் ராணுவபுரட்சி சதி திட்டத்தை துருக்கி முறியடித்ததிலும் இன்னும் அரபு அரசியலில் அது காட்டும் சில பிடிவாதங்களும் அமெரிக்காவிற்கு கடும் எரிச்சலை கொடுத்தன‌ குறிப்பாக அதிபர் எனும் முரட்டுபதவிக்கு வந்திருக்கும் எர்டோகன் அமெரிக்காவிற்கு பிடித்த நபர் அல்ல‌ இதனால் […]

தமிழன் என்பதற்காக திமுகவிலும் வரமுடியாது

ஏதோ நாம் அண்ணா காலத்தில் இருந்து திமுக போலவும், கலைஞருடன் பாளையங்கோட்டை சிறையில் இருந்தது போலவும், மிசாவில் ஸ்டாலினுடன் அடிவாங்கியவன் போலவும் இப்பொழுது சில விஷயங்களை சொன்னால் ஏய் உன் பதிவு சரி இல்லை , நீ ஆரிய அடிவருடி என பல திமுகவினர் கிளம்புகின்றார்கள் இந்த திமுக அபிமானம் என்ற முத்திரை எப்பொழுது விழுந்ததென்றால் இந்த தும்பிகளை பற்றி எழுதியபொழுது, சைமனை கிழித்தபொழுது ஒரு இந்தியனாகத்தான் புலிகளை சாடினோம், அவர்களுக்கு கலைஞரும் இத்தேசமும் செய்த உதவிகளை […]

பொருளாதாரத்தை மீட்டுள்ளோம்: பிரதமர் சுதந்திர தின உரை

ஆபத்தான நிலையில் இருந்த பொருளாதாரத்தை மீட்டுள்ளோம்: பிரதமர் சுதந்திர தின உரை எந்த நாட்டு பொருளாதாரம் என சொல்லவில்லை,ஒருவேளை அமெரிக்க பொருளாதாரமாக இருக்குமோ? இதெல்லாம் அம்பானி தன் அலுவலத்தில் சொல்ல வேண்டிய விஷயம், இவர் ஏன் செங்கோட்டையில் சொல்லி கொண்டிருகின்றார் நாட்டு பொருளாதாரம் நாசமான நிலையில், உலகளவில் இந்திய பொருளாதார நிலை கீழிறங்கிவிட்ட நிலையில், வளரும் நாடு எனும் அந்தஸ்தை இந்தியா இழந்துவிட்ட நிலையில் எப்படிபட்ட பொய் இது? இதற்கு பதிலாக பாபர் மசூதியினை பாஜகவும் அதன் […]

நமக்கெல்லாம் ஏதுங்க சுதந்திரம்?

“நமக்கெல்லாம் என்னங்க சுதந்திர தின வாழ்த்து சொல்ற உரிமை இருக்கு? அன்றைக்கும் அடிமைகள் தான், இன்றைக்கும் அடிமைகள்தான். நாளையும் கண்டிப்பாக அதே அடிமைகள்தான் நமக்கெல்லாம் ஏதுங்க சுதந்திரம்?”

அழகிரியினை விரட்ட அன்பழகனை தொடர்ந்து வீரமணி வந்திருக்கின்றார்

திமுகவில் கலைஞர் சில விஷயங்களுக்கு பல்ஸ் பார்ப்பதற்காக இந்த அன்பழகன், ஆற்காடு வீராசாமி, வீரமணி மூலம் சில கற்களை வீசுவது அவரின் தந்திரம் இப்பொழுது அதே பாணியில் அழகிரியினை விரட்ட அன்பழகனை தொடர்ந்து வீரமணி வந்திருக்கின்றார் இந்த வித்தை மற்றவருக்கு புரியாவிட்டாலும் திமுக குடும்பமான அழகிரிக்கும் அவர் மகனுக்கும் புரியாதா? பாம்பின் கால் பாம்பறியும், வம்பின் மூலம் வம்பு அறியும் அப்படி அழகிரிக்கு புரிந்திருக்கின்றது, எப்படி திருப்பி அடிக்க வேண்டும் எனவும் தெரிந்திருக்கின்றது, போய்யா எச்சி சோறு […]

ஸ்டாலினின் வலியினை விட ராகுலின் வலி நிச்சயம் பெரிது

“நீங்கள் தலைவனை இழந்திருக்கின்றீர்கள் , நான் தலைவனோடு தந்தையினையும் இழந்திருக்கின்றேன்” : செயற்குழுவில் மு.க ஸ்டாலின் உருக்கம் உருக்கமான வார்த்தைகள், அந்த வலி நிச்சயம் பெரிது ஆனால் இதே வார்த்தைகள் ராகுல் காந்திக்கும் சால பொருந்தும் கலைஞரின் நிறைவாழ்வு மரணத்திற்கும், ராஜிவின் கொடூர மரணத்திற்கும் வித்தியாசம் நிச்சயம் உண்டு ஸ்டாலினின் வலியினை விட ராகுலின் வலி நிச்சயம் பெரிது, காங்கிரசாரின் வலியும் அப்படியே ஆனால் இதே ஸ்டாலின் தான் ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என அடிக்கடி […]

தாயின் மணிக்கொடி பாரீர்…..

“”தாயின் மணிக்கொடி பாரீர்,  அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்” 200 ஆண்டுகால போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, அடி வாங்கி போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனுக்கும் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கபட்டு 2 துண்டுகளாக பிரிக்கபட்டு சிதைக்கபட்டது சுதந்திர இந்தியா பஞ்சத்திலும் வறுமையிலும்தான் இத்தேசம் பிறந்தது, ஒன்றுமில்லாமல்தான் இத்தேசத்தை விட்டு போனான் வெள்ளையன் அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற […]

உட்கட்சி குழப்பத்திற்கும், குடும்ப சண்டைக்குமா மோடி பெயரை இழுக்க வேண்டும்?

ஒரு கும்பல் இந்த மோடியும் அமித்ஷாவும் அழகிரியினை தூண்டி விடுகின்றார்கள் என சொல்லிகொண்டிருக்கின்றன‌ அழகிரி என்பவர் வைகோ பிரிவினை தொடர்ந்து கட்சிக்குள் வந்தவர், மோடியா கொண்டுவந்தார்? தா.கிருட்டினன் கொலையில் மோடியா தப்புவித்தார்? இன்னும் ஏராளமான சர்ச்சைகளில் அழகிரி சிக்கும்பொழுது மோடியா காத்தார்? தினகரன் பத்திரிகை அலுவலகத்தை மோடியா எரிக்க சொன்னார்? அவரா கருத்துகணிப்பு நடந்த்த சொன்னார்? இந்த அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் எல்லாம் டெல்லியிலிருந்தா மதுரைக்கு வந்தார்கள்? கட்சிக்குள் அழகிரியினை இழுத்தது கலைஞர், அவரை வைத்து […]