பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெயக்குமார் நம்மை ஏமாற்றவில்லை

நேற்றே சொன்னோம், ரஜினி எடப்பாடியினை சீண்டுகின்றார், நாளை ஜெயக்குமார் சும்மா பறந்து பறந்து பேட்டி கொடுப்பார் என சொன்னோம் ஜெயக்குமார் நம்மை ஏமாற்றவில்லை, நாம் சொன்னது போலவே லவுடு ஸ்பீக்கரில் வந்து ரஜினியினை கிழித்துகொண்டிருக்கின்றார் கருணாநிதி, ஜெயா இல்லாத இடத்தை நடிகர்களால் நிரப்ப முடியாது : தமிழிசை அக்கா ஒரு விஷயத்தை மறந்து கவலைபடுகின்றார் ஜெயா என்பவர் ஒரு நடிகை, நடிகையின் இடத்தை இன்னொரு நடிகனோ நடிகனோ எளிதாக நிரப்பலாம் கருணாநிதி அட்டகாசமான வசனகர்த்தா, அரசியலுக்கும் மிக […]

ரபேல் ஊழல் தொடர்பாக மோடி விவாதிக்க தயரா? : ராகுல்

ரபேல் ஊழல் தொடர்பாக மோடி என்னிடம் நேருக்கு நேர் விவாதிக்க தயரா? என சவால் விடுகின்றார் ராகுல் பிரதமர் மோடியோ ராகுல் ஏதோ நீரவ் மோடியினை அழைப்பது போல் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார் கோலியின் சவாலை ஏற்று எங்கோ கல் மேல் மல்லாக்க கிடந்த மோடிக்கு ராகுல் சவாலை ஏற்க தயக்கம் இருக்கின்றது இதற்கு மேல் ஏதும் கேட்டால் “ஏழைதாயின் மகன் என்பதால்தானே என்னை பாடாய் படுத்துகின்றீர்கள்?” என அழ ஆரம்பித்துவிடுவார்

ஜின்னாவும், ராமசந்திரனும் பெரும் எடுத்துகாட்டுகள்

இந்த உலகத்தில் இரு குல்லா தலையர்கள் மிக மிக அதிர்ஷ்டசாலிகள், யாரவது போராடியிருப்பார்கள் பலன் இவர்களுக்கு சேர்ந்திருக்கும், வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார்கள் அவர்களில் முதல் அதிர்ஷ்டசாலி ஜின்னா, அவர் இந்திய சுதந்திரத்திற்கு போராடியவரும் அல்ல, பாகிஸ்தான் வேண்டும் என துப்பாக்கி தூக்கியவரும் அல்ல, கட்டபொம்மன் முதல் காந்திவரை போராடிய போராட்டத்தின் முடிவில் தனிநாடு கிடைத்தென்னவோ இவருக்குத்தான்.. வெள்ளையன் தானகவே தூக்கி கொடுத்து சென்றான், அவ்வளவுதான். பாகிஸ்தான் சுதந்திரபோர் என ஏதாவது வரலாற்றில் உண்டா? இல்லை பிரிட்டிஷ் இந்திய தலைவர்களுள் […]

வாரிசு சண்டை என்பது தமிழகத்தில் புதிதல்ல

அரச‌ குடும்பத்தில் வாரிசு சண்டை என்பது தமிழகத்தில் புதிதல்ல, அது அக்காலமுதல் இருந்தது சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ எனும் சேரநாட்டு இளவரசனே சிம்மாசனம் கிடைக்கா சோகத்தில் துறவியானான் என்கின்றது வரலாறு பாண்டியர்களும், சோழர்களும் இதை வேறுமாதிரி கையாண்டிருக்கின்றார்கள் பாண்டியர் வம்சத்தில் மூத்தவன் மதுரையில் இருந்தால் இளைவனை வஞ்சி, கொற்கை என அனுப்பி வைத்து சிக்கலை தீர்த்திருக்கின்றார்கள் சோழ வம்சத்தில் மூத்தவன் தஞ்சையில் இருந்தால் இளையவனை உறையூர் பக்கம் அனுப்பி சிக்கலை தீர்த்திருக்கின்றார்கள் பல்லவர்கள் இதில் விஷேசம், காஞ்சியில் […]

பாகிஸ்தானிய சகோதரர்களுக்கு இன்று சுதந்திர தின‌ நாள்

பாகிஸ்தானிய சகோதரர்களுக்கு இன்று சுதந்திர தின‌ நாள். அந்நண்பர்களை நோக்கி சொல்லலாம், நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், 200 ஆண்டுகாலம் போராடும்பொழுது லாகூரின் , கராச்சியின் உடன்பிறப்புக்களாக போராடும் பொழுது இந்திய விடுதலைக்கு என்றுதானே போராடினீர்கள்? பாகிஸ்தான் என்ற கனவு விளைந்தது சுதந்திரத்தின் சமீபத்தில்தானே? சொல்லிகொடுத்தவன் வெள்ளையந்தானே? இன்று என்ன கண்டுகொண்டீர்கள்? பொருளாதார ரீதியாக தோற்றுவிட்டீர்கள், ஆப்கானிய தீவிரவாதம் உங்களை அரித்துகொண்டிருக்கின்றது. ஒரு மாயவலையில் சிக்கி இருக்கின்றீர்கள். அந்நிய சக்திகளின் ஆயுதங்களில் நீங்கள் அவற்றை மறைக்க முயல்கின்றீர்கள். உங்கள் […]

கலைஞர் அஞ்சலி என ரஜினி எதற்காக உருகினார்

ரஜினி கலைஞர் பற்றி பேசினார், இன்னும் பேசுவார் அது அவரின் விருப்பம் அல்லது கூட்டத்தில் பேச சொன்னால் பேசி ஆகவேண்டிய கட்டாயம், பேசினார் என்ன பேசினார்? காலையில் ராஜாஜி ஹாலில் கூட்டமில்லை எனக்கு தமிழக மக்கள் மேல் கோபம் வந்தது, ஆனால் நேரம் செல்ல செல்ல கூட்டம் கட்டுகடங்காமல் போனது தமிழரின் நன்றியினை பார்த்து கண்ணீர் வந்தது என பேசினார் இது சில ஈழபதர்களுக்கு பிடிக்கவில்லையாம் நீ எப்படி தமிழர் மேல் கோபடலாம் உடனே வெளியேறி கன்னடம் […]

கலைஞர் மேல் சர்சைகளும் விமர்னங்களும் ஏராளம் உண்டு

கலைஞர் மேல் சர்சைகளும் விமர்னங்களும் ஏராளம் உண்டு, தன் மீதான சில தவிர்க்கமுடியா விமர்சனங்களுக்கு கலைஞரே மவுனமாக கடந்து சென்ற காட்சிகளும் வரலாற்றில் உண்டு ஆனால் இந்த உடன்பிறப்புக்கள் ஏதோ கலைஞரை புனிதராக்கும் வேலையில் கடுமையாக இறங்கி இருக்கின்றன‌ இது பிரபாகரனை பற்றி அங்கிள் சைமன் பேசி வாங்கிகட்டி கொள்ளும் கடும் காமெடி காட்சிகள் போல ஆகிவிடும் தும்பிகளுக்கு போட்டியாக இந்த உபிக்களும் தங்கள் பொய்மூட்டைகளை அவிழ்க்காமல் இருந்தால் கலைஞரின் புகழ் நிற்கும் உபிக்கள் கடும் பொய்மூட்டைகளை […]

ராமசந்திரன் இறக்கும்பொழுது கலைஞர் வந்தாரா?

கலைஞருக்கு அஞ்சலி கூட்டம் திரையுலகினரால் நடத்தபட்டிருகின்றது, நிச்சயம் நடத்தவேண்டிய கூட்டம் அது கூத்தாடி கூட்டம் என்றிருந்த அந்த கூட்டத்தை கலைஞர்கள் என மதிப்புமிக்க பெயர் கொடுக்க காரணமாயிருந்தவரே கலைஞர் திரைதுறை அவரால் நிச்சயம் கவுரவம் பெற்றது, அவரும் அந்த துறைக்கு பல உதவிகளை செய்தார் திரை துறையினருக்கு கொஞ்சமேனும் நன்றி இருப்பது வாழ்த்துகுரியது, அஞ்சலி செய்துவிட்டார்கள் இதில் ரஜினி வழக்கம் போல் உளறி இருக்கின்றார் என்ன இருந்தாலும் கலைஞர் இறுதி நிகழ்வில் முதல்வர் வந்திருக்க வேண்டும் என […]

திருவள்ளுவர் பிராமணரா இல்லையா?

வள்ளுவர் பிராமணரா இல்லையா என்ற சர்ச்சை இந்த கட்ஜூ என்பவரால் கிளறபட்டு அவர்மீது பல சர்ச்சை வந்து மனிதர் இனி தமிழர் கதையினை எடுக்கவே மாட்டேன் என ஓடிவிட்டார் குறள் என்பது தமிழ் இலக்கிய வகை, குறள் வடிவில் ஏகபட்ட இலக்கியம் இருந்தாலும் வள்ளுவனின் குறள் தனி இடம் பிடித்து திருகுறள் என்றானது வள்ளுவர் பிராமணர் என்பது அவர் மயிலாப்பூரில் பிறந்தார் எனும் கதையிலிருந்து வந்ததே தவிர வேறு ஒன்றுமில்லை உண்மையில் வள்ளுவனின் வரலாறு முழுதாக கிடைக்கவே […]

ஆட்டத்தை ஆரம்பிக்கின்றார் அழகிரி

ஆட்டத்தை ஆரம்பிக்கின்றார் அழகிரி கலைஞரின் உண்மையான உடன்பிறப்புக்கள் கலைஞரின் அக்கா சன்முகசுந்தரம்பாளும், பெரிய நாயகி அம்மாளும் அவர்கள் இருவருமே இப்போது இல்லை ஒருவேளை சன்முகசுந்தரம்பாளின் வாரிசுகளான மாறன் குடும்பத்தை பற்றி சொல்வாரோ என்றால்? அந்த தினகரன் பத்திரிகை எரிப்பு எல்லாம் அவர்கள் மறக்கமாட்டார்கள் நாளை கலைஞர் இல்லாத முதல் பொதுகுழு கூட்டம் நடக்க இருக்கும் பொழுது, கட்சியில் முதல் அஞ்சலி முன்னாள் திமுக தலைவருக்கு செலுத்தபட இருக்கும்பொழுது அழகிரியின் பேச்சு கவனம் பெறுகின்றது பிரிவு ஒன்றும் திமுகவிற்கு […]