பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கோவையில் மற்றொரு நிர்மலா தேவி…

நிர்மலா தேவி மாணவிகளுக்கு தவறான வழிகாட்டினார் என ஆளாளுக்கு பொங்கினார்கள், யாரை எல்லாமோ இழுத்து கட்டினார்கள் விவகாரம் எங்கெல்லாமோ போய் ஆளுநர் கூட்டம் போடும் அளவிற்கும், அங்கேயும் கன்னத்தை கிள்ளினார் என மறுபடியும் எரியும் அளவிற்கு சென்றது இன்னும் நிர்மலா விவகாரம் பரபரப்பு தீரவில்லை ஆனால் கோவையில் பெண்கள் விடுதி ஒன்றில் இதே நிகழ்வு நடந்திருகின்றது, விடுதி சொந்தக்காரர் செத்தே போய்விட்டார். அது கொலையா தற்கொலையா என கேட்க கூட யாருமில்லை அந்த விடுதியின் பெண் காப்பாளர் […]

தமிழகத்தை காப்பதே கலைஞருக்கு காட்டும் நன்றிகடன்

திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைமுன் குவிந்து கிடப்பதும், காவல்துறை கட்டுபடுத்த திணறுவதும், திமுக தலமை தொண்டர்களை கலைந்து போக சொல்வதும் நேற்றிரவு முழுக்க நடக்கும் விஷயங்கள் இதில் ஆங்காங்கே தமிழகம் முழுக்க கலைஞரை எண்ணி சிலர் மாரடைப்பில் சாவதாகவும் தகவல்கள் இந்த தொண்டர்களுகு எல்லாம் நாம் சொல்லிகொள்வது ஒன்றுதான் கலைஞர் ஒன்றும் சாகாவரம் பெற்றவர் அல்ல, பெரியார் போல அண்ணா போல அவருக்கும் எல்லை கோடு உண்டு அவர் சிறையில் இருந்தால் நாமெல்லாம் உடைத்து மீட்கலாம், ஆனால் […]

பிரபாகரன் உயிரை காத்ததே கலைஞர்தான்

தன் வாழ்வில் எல்லாவற்றையுமே திறந்த புத்தகமாக வைத்திருந்த கலைஞர், தன் இறுதி நாட்களையும் யாருக்கும் மறைக்கவில்லை ஆளுநரும், குடியரசு தலைவரும் அவரை பார்க்க முடிகின்றது இனி மோடி வந்தாலோ, ராகுல் வந்தாலோ அவரை பார்க்கலாம் படமெடுக்கலாம் இறுதிவரை தன் வாழ்க்கையின் எந்த பக்கத்தையும் அவர் மறைக்கவே இல்லை ராமசந்திரன் போல மேக் அப் சிக்கலோ, ஜெயா போல மர்மமோ அந்த மக்கள் தலைவனின் வாழ்வில் இறுதிவரை இல்லை என்பதே அவருக்கு பெருமை திறந்த நதிபோலவே ஓடிகொண்டிருக்கின்றார் கலைஞர் […]

நான் மட்டுமென்ன நிம்மதியாகவா இருக்கிறேன்? : முதல்வர் பழனிச்சாமி

நான் மட்டுமென்ன நிம்மதியாகவா இருக்கிறேன்? முதல்வர் பதவியை விட்டு விலக தயார் : முதல்வர் பழனிச்சாமி திருப்பதியில் வணங்கி கவேரியினை கொண்டுவந்தது போல மனிதர் இனி நிம்மதி வேண்டி சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லவோ இல்லை பழனிக்கு காவடி தூக்கி அலகு குத்தவோ தயாரின்றார் என்பது புரிகின்றது முதல்வர் பதவி என்பது முள்கிரீடம், ராமசந்திரனின் உடல்நிலையும், ஜெயாவின் உடல்நிலையும் அதன் அழுத்தம் தாங்காமலே கெட்டது கலைஞர் என்பவர் மகா அசாத்திய மனிதர் என்பதால் அவர்போக்கில் சுமந்தார் இவ்வளவிற்கும் […]

1987ல் ராஜிவ் காந்தி இதே நாளில் கொழும்பில் …

1987ல் ராஜிவ் காந்தி இதே நாளில் கொழும்பு சென்றிருந்தார், ஈழவிவகாரத்தில் இந்தியா ஒரு தீர்வினை கொடுத்துவிட வேண்டும் என்ற வேகம் அவரிடம் இருந்தது அதற்கு காரணம் அதற்கு முன்பு நடந்த நிகழ்வுகள். புலிகளை நம்புவதற்கில்லை, வடமராட்சியில் சிங்களன் சுற்றி அடித்துகொண்டிருந்தான் , தமிழர்கள் உணவு மருந்து இன்றி சிக்கிகொண்டனர், பெரும் தொகை மக்கள் சாகும் நேரம், புலிகளின் முடிவு நெருங்கிகொண்டிருந்தது, இனி புலிகளால் சிங்களனை வெல்லமுடியாது என்ற உண்மை தெரிந்துகொண்டிருந்தது, ஏராளமான மக்கள் உணவின்றி தவித்தபொழுது, முதலில் […]

தமிழகத்திற்கு மோடி காட்டுவது மாபெரும் பெருந்தன்மை

தமிழ்நாட்டிற்கு மோடி வந்தால் “Go Back ” மோடி என கத்தினார்கள், கருப்புகொடி காட்டினார்கள். படுபயங்கர காட்சிகளை எல்லாம் நடத்தி விரட்டினார்கள், கருப்பு பலூன் வேறு ஹெலிகாப்டர் வரை அனுப்பினார்கள். திமுகவின் எதிரி அதிமுகவா பாஜகவா என தடுமாறினார்கள், நிச்சயம் பாஜக அல்ல என்பதை புரிந்து கொள்ள மறுத்தார்கள் ஆனால் கலைஞருக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் எல்லா உதவிகளையும் செய்ய தயார் என்கின்றார் மோடி குடியரசு தலைவர் அவசரமாக விசாரிக்கின்றார் திமுகவினரின் முகங்கள் இப்போது எங்கு திரும்புமோ […]

திரு திரு சீமான்

அத்தான், சென்னை நிலமை சரியில்லை. நீங்க‌ திமுககாரன் கையில கிடைச்சா மயிர் கூட மிஞ்ச்சாது பேசாம பெங்களூர் வழியா இலங்கை போய் கன்னத்துல மரு வச்சிட்டு மாறுவேஷத்துல சுத்துங்க அத்தான்…. அங்க அண்ணன் வேற இல்லியம்மா, யார் ஆமைகறி தருவா? எந்த அரிசி கப்பலை கடத்த? அண்ணன் இருந்தா உங்கள போக சொல்வேனா? அவர் உங்கள கொல்லாம விடுவாரா?, தைரியமா போங்க அத்தான் போங்க, திமுககாரன் இனி உங்கள சும்மா விடமாட்டான் எங்கே? இந்த எரிச்சல் கவிஞனை […]

தமிழனுக்கு எதிராக தமிழக கட்சிகள் ஆடிய ஆட்டம்

காமராஜர் எனும் மகானை முதல்வராக்கியதும் தேசிய கட்சி, அப்துல்கலாம் எனும் மாமனிதனை ஜனாதிபதியாக்கியதும் தேசிய கட்சி காமராஜரை வீழ்த்தியதும் மாநில கட்சிகள், கலாம் மறுபடி ஜனாதிபதியாக முடியாமல் தடுத்ததும் மாநில கட்சிகள் ஒரு தமிழன் பிரதமராக முடியாமல் குழப்பியதும் இதே மாநில கட்சிகள். தமிழனுக்கு எதிராக தமிழக கட்சிகள் ஆடிய ஆட்டமும் கொஞ்சமல்ல.. ஏதும் கேட்டால் இந்தியா தமிழரை வெறுக்கின்றது, நசுக்குகின்றது , இந்திய தேசியம் தமிழருக்கு எதிரானது என ஆயிரம் விளக்கம் என்னதான் விளக்கினாலும் , […]

இன்று கலாமிற்கு நினைவு நாள்

நாம் காந்தியினை கண்டதில்லை, காமராஜரை கண்டதில்லை, சாஸ்திரியினை கண்டதில்லை அப்படி விஞ்ஞானி ஜஹாங்கீர் பாபாவினையும் கண்டதில்லை, ஆனால் கலாமினை கண்டிருக்கின்றோம், அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதற்காக பெருமைபடுகின்றோம் இன்று கலாமிற்கு நினைவு நாள். ஆரியபட்டரின் மறுபிறப்பாக நம்மிடம் அவதரித்த கலாமின் நினைவு நாள். அய்யா கலாம் அவர்களே, அக்னி நாயகனே , பிரித்வி கொடுத்த பிதாமகனே உங்களுக்கு அஞ்சலில் செலுத்துமுன் இங்கு சில சில்வண்டுகள் கலாம் தமிழகத்திற்கு என்ன செய்தார் என புலம்பிகொண்டிருக்கின்றன. உங்கள் சார்பாக சில […]

ஆப்பிரிக்காவில் மோடி ….

ஆப்ரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்த மோடி உறுதி : செய்தி இந்தியாவினைத்தான் அவரால் வளர்க்க முடியவில்லை பாவம் ஆப்ரிக்காவினையாவது வளர்த்து காட்டட்டும் ஆப்ரிக்காவினை எப்படி வளர்ப்பது? மோடிக்கு தெரியாத வித்தையா? இந்தியாவினை இன்னும் நாசமாக்கி ஆப்ரிக்கா அளவிற்கு கொண்டு சென்றுவிட்டால் தீர்ந்தது விஷயம். இந்தியா அளவிற்கு ஆப்ரிக்காவினை கொண்டுவந்துவிட்டார் இந்த ஏழைத்தாயின் மகன் என கண்ணீர்விட்டு உருக்கமாக சொல்லிகொள்ளலாம் எங்கு சென்றாலும் பசுமாடு மேய்க்க வேண்டும், இதற்கு இந்திய பிரதமர் என்ற பதவி எதற்கு? நடிகர் ராமராஜன் […]