பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அண்ணே தமிழ்நாட்டு அரசியல் எங்கே போகுது?

அண்ணே தமிழ்நாட்டு அரசியல் எங்கே போகுது? 1960களில் இருந்து இந்திய தேசியத்தில் இருந்து விலகி ஒருமாதிரி சென்ற தமிழகம் இப்பொழுது தேசியத்திற்கு திரும்ப முடியாமலும் அதே நேரம் சரியான திராவிட தலமை இல்லாததாலும் மகா குழப்பத்தில் இருக்கின்றது அதனால் தேசிய பாதையில் இணையவும் முடியவில்லை, திராவிட தலைவர்களும் சரியில்லை, திராவிட வழியும் தெரியவில்லை தனிநாடு கோரவும் முடியாது இப்படி ஏக சிக்கலில் என்ன செய்வதென்றே தெரியாமல் மகா குழப்பத்தில் நிற்கின்றது வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ-சீமானை […]

சல்மான்கானை சொல்ல சதி : பரபரப்பு செய்தி

சல்மான்கானை சொல்ல சதி : பரபரப்பு செய்தி இரு நாட்களுக்கு முன்புதான் மோடியினை கொல்ல சதி என செய்திகள் வந்தன, இப்பொழுது சல்மான் கானுக்கு மிரட்டலாம் ஆக கொஞ்ச நாட்களாக இந்தியாவில் கலவரமில்லை, பெரும் வன்முறை இல்லை என்ற குறையினை களைய பெரும் திட்டத்தை யாரோ தீட்டிகொண்டிருக்கின்றார்கள் தேசம் சவாலான நேரத்தை கடந்துகொண்டிருக்கின்றது, எதற்கும் எல்லோரும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.  

சாதி வெறி பிடிச்சது நானா? இல்ல… இந்த பயலுகளா?

நாம் தலித்திற்கோ அல்லது அதன் இயக்கங்களுக்கோ இந்த ரஞ்சித் என்பவருக்கோ எதிரி அல்ல, அதற்கு அவசியமும் அல்ல‌ அவர் எடுத்த அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை பற்றி ஏதாவது சொன்னோமா? சொல்ல அவசியம் அல்ல‌ ஆனால் ரஜினி என்பவர் கோடம்பாக்க சாமி, கிட்டதட்ட 30 வருடங்களாக அவர் படம் வருகின்றது என்றால் அது திருவிழா, மறுக்க முடியுமா? அவரின் அரசியல் குட்டிகரணங்களும் , சர்ச்சையான கருத்துக்கள் மகா மோசம் என்றாலும் ஒரு நடிகனாக அவரையும் ஜனரஞ்சகமான படங்களை கொடுப்பவர் […]

மோடி மறுபடி பிரதமர் ஆவார் என இயேசு சொன்னதாக பால் தினகரன்

மோடி மறுபடி பிரதமர் ஆவார் என இயேசு சொன்னதாக பால் தினகரன் சொல்லிகொண்டிருக்கின்றாராம் இயேசு எங்களை பொறியியல் கல்லூரி கட்டி சம்பாதிக்க சொன்னார் என பகிரங்கமாக சொன்ன குடும்பம் அது, அவர்களிடம் இயேசு மோடி பிரதமர் ஆவார் என சொல்வதில் என்ன ஆச்சரியம் இயேசு என்னவோ அவர்கள் குடும்ப சொத்து என்பது போலவே பேசிகொண்டிருக்கின்றார்கள் சொத்துக்களை காப்பாற்ற இந்த வீரமணி என்ன நாடகம் ஆடுவாரோ அதனை தினகரன் குடும்பமும் செய்யும் இவரிடம் இயேசு வந்து பேசியிருக்க முடியாது, […]

எஸ்.வீ சேகரை கட்சியிலிருந்து விலக்கிவிட்டோம் : தமிழிசை

எஸ்.வீ சேகரை கட்சியிலிருந்து விலக்கிவிட்டோம் : தமிழிசை அக்கோவ், விஷயம் அவர் காணாமல் போனது பற்றியது. ஒரு ஹேவியஸ் மனுபோட்டு அவரை நேரில் கொண்டுவர கூடாதா? கட்சிக்காரன் காணாமல் போனால் இப்படித்தான் பதவி விட்டு விலக்கி கணக்கை முடிப்பீர்களா? பின் யார் கட்சிக்கு வருவார்? எப்படி தாமரை மலரும்?

மாபெரும் அவமான அறிக்கை இரண்டை மிக அபத்தமாக வாசித்திருக்கின்றது பழனிச்சாமி அரசு

இன்றைய சட்டசபை நிகழ்வில் மாபெரும் அவமான அறிக்கை இரண்டை மிக அபத்தமாக வாசித்திருக்கின்றது பழனிச்சாமி அரசு முதலவாது மேட்டூர் அணை திறப்பு இல்லை என சொல்லிவிட்டு நிலத்தடி நீரை பயன்படுத்துங்கள் விதை தருகிறோம், மின்சாரம் தருகின்றோம், அங்கே கொஞ்சிவிளையாடும் வஞ்சியருக்கு மஞ்சள் அரைத்து தருகின்றோம் என்ற அளவில் மகா அபத்தமாக பேசுகின்றார்கள் 6 ஆண்டுகளாக மேட்டூர் அணை திறக்கபடவில்லை, காவேரி மணலையும் அள்ளியாயிற்று என்றால் நிலத்தடி நீர் என்ன ஜெயா கல்லறைக்கு அடியிலா கிடைக்கும்? அப்பொழுதும் உச்சநீதிமன்ற […]

மனுஷ்யபுத்திரன் ஸ்டைல்

தனக்கு கொஞ்சமும் தெரியாத அல்லது புரியாத விஷயம் என்றாலும் தலையினை சிலுப்பிகொண்டு சென்று கருத்து சொல்வது மனுஷ்யபுத்திரன் ஸ்டைல் அப்படி இப்பொழுது காலா விவகாரத்தில் ராவணன் திராவிடன் என கிளம்பிவிட்டார் மனிதருக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை, இவரை டிவி விவாதத்திற்கு அழைத்தவனை பரிதாபமாக நோக்க வேண்டி இருக்கின்றது ராம கதையின் மூலம் வால்மிகி, அவனிடமிருந்தே எல்லோரும் காப்பி அடித்தார்கள், அதற்கு கலாச்சாரத்திற்கு தக்கபடி மாற்றிகொண்டார்கள், அதில் கம்பன் குறிப்பிட தக்கவன் வால்மிகி ராமயணபடி ராமன் சத்ரியன் கருப்பன், […]

பிரதமரை கொல்ல சதியா?

மோடிக்கு ஏதும் ஆகிவிட்டால் இன்னொருவர் வந்து இந்தியாவினை வளப்படுத்திவிட மாட்டாரா? அதன் பின் பலமான இந்தியா உருவாகி மாவோயிஸ்டுகளை அழித்துவிடாதா?, மாவோயிஸ்டுகளுக்கு பாதுகாப்பே இப்படி ஒரு பேச்சு பிரதமர் இருப்பதுதானே அதனால் மாவோயிஸ்டுகள் அவ்வளவு முட்டாள்தனமாக எல்லாம் திட்டமிட்டிருக்க மாட்டார்கள், அவர்களுக்கு கொஞ்சமேனும் அறிவிருக்கும் என நம்பபடுகின்றது மோடி ஆட்சியினை தொடரவிடுவதை விட இத்தேசத்திற்கு என்ன பெரும் கெடுதல் செய்துவிட முடியும்? இந்த தேசத்தை நம்மை விட மோடி நன்றாக கெடுத்து கொண்டிருக்கின்றார் என்பது அவர்களுக்கு தெரியாதா? முதலில் […]

மேட்டூர் அணையினை ஜூன் 12ல் திறக்க வாய்ப்பில்லை : செய்தி

  ஆளையும் காணோம், கையினையும் காணோம் , முழக்கத்தையும் காணோம்.. தமிழகத்தில் இவரை யாராவது கண்டீர்களா? ரகசியமாக ஆமைகறிக்கும், 5 வகை இறாலுக்கும் ஈழம் சென்றுவிட்டாரோ? மேட்டூர் அணையினை ஜூன் 12ல் திறக்க வாய்ப்பில்லை : செய்தி இதுபற்றி இதுவரை எந்த அரசியலாதியும் பேசவில்லை கன்னட அணைகள் கன மழையில் நிரம்பிகொண்டிருக்கின்றது, கோர்ட் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக இருக்கின்றது ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக சட்டமன்றம் துரைமுருகன் எப்படி இளமையாய் இருக்கின்றார் என பட்டிமன்றம் நடத்துகின்றதாம் […]

காந்திஜியை ரயிலில் இருந்து தள்ளிய நிகழ்வு

காந்தியின் வரலாற்றை மாற்றிய சம்பவம் தென்னாப்ரிக்காவில் நடந்த , ரயிலில் இருந்து அவரை வெள்ளையன் தென்னாப்ரிக்காவில் இறக்கிவிட்டது இல்லை மிதித்து தள்ளியது, ஆம் வெள்ளையர் இருக்கையில் அவர் அமர்ந்திருக்க அங்கு வந்த வெள்ளையன் அவரை அடித்து கீழே தள்ளினான் அதுவரை சமத்து வக்கீலாக ஒழுங்காக சம்பாதித்துகொண்டிருந்த காந்தி இந்த சம்பவத்திற்கு பின்பே போராட வந்தார், அது அங்கு வெற்றிபெற்றபின் அந்த தைரியத்தில் இந்தியாவிற்கும் போராட வந்தார் இச்சம்பவம் நடந்து 125 ஆண்டுகள் ஆகிவிட்டன, சம்பவம் நடந்த ரயில் […]