பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அரே ரஜ்னிபாய் என்ன படம் அது : மோடி

“அரே ரஜ்னிபாய் என்ன படம் அது, நம்பிள்ளே கலாய்ச்சியாம் நிற்ய கம்பிளைன்ட்ஸ் வருதூ அய்யோ மோடிஜி அப்படில்லாம் இல்லஜி, இது சினிமாஜி அர்ரே பய்யா நானே பெர்ய நடிகன், நம்பிள் நானா படேகர்க்கே ஆக்ட் சொல்லி கொடுப்பான், என்கிட்டயே நடிக்கிற்யா? மோடிஜி பாபாஜி சத்தியமா இல்ல எங்கயோ தப்பு நடந்துட்டு இதெல்லாம் ஜெயாஜி கலைஞர்ஜிட்ட வச்சுக்கோ, நம்பிள்ட்டே வச்சிட்டா தொலைச்சுபுடுவான் ஜாக்கிரதே அய்யோ ஜி நான் என்ன செய்யணும்? இன்னும் 6 மாசத்திலே தேர்தல் வருது, ராமர் கோவில் […]

தமிழிசை அக்கா காலா படம் பார்த்த்தார்

தமிழிசை அக்காவும் காலா படம் பார்த்துவிட்டாராம், பார்த்துவிட்டு “கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு” என மனதில் உற்சாகமாக பாடிகொண்டு பேட்டி கொடுக்க வந்துவிட்டார். படத்தை படமாக பார்க்க வேண்டுமாம், அக்கா பொன்மொழிகளை அள்ளி தெளித்திருகின்றார். ஆனால் “மெர்சல்” படத்தை ஏன் அக்கா படமாக பார்க்கவில்லை என நாம் கேட்க கூடாது. அக்காவும் பக்கா அரசியல்வாதி ஆகிவிட்டார், ரஜினி என்றால் அக்காவிற்கு ஒரு தனி பாசம் வந்துவிடுகின்றது பிஜேபியினை ரஜினி கிழித்து எறிந்தாலும் , அக்காவிற்கு பாஷா ரஜினி […]

ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி பங்கேற்றால் சர்ச்சை வரத்தான் செய்யும்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு சில காங்., தலைவர்கள் எதிர்ப்பு , இப்படி ஒரு சர்ச்சை ஓடிகொண்டிருக்கின்றது ஆர்.எஸ்.எஸ் மேடையில் காந்தியே இருந்தார், இவர்களுக்கென்ன? என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றனர் ராஜிவ்காந்தியும் முன்பொரு காலத்தில் பிரபாகரனோடு போஸ் கொடுத்தார், அதற்காக ராஜிவ் பிரபாகரனை ஆதரித்தார் என சொல்ல முடியுமா? விஷயம் அது அல்ல‌ ஆர்.எஸ்.எஸ் என்பது பாகிஸ்தான் போர் காலங்களிலும் , சீனப்போர் காலங்களிலும் தளபதி கரியப்பா, நேரு போன்றவர்களால் பாராட்டபட்டது என்பது வேறு […]

ரஜினி நம்பிக்கைகுரிய மனிதரே அல்ல

பார்க்கும் இடமெல்லாம் கலைஞரை வணங்குவார் ரஜினி, 1996ல் கலைஞருடன் அவர் காட்டிய நெருக்கம் உலகறிந்தது பின் சட்டென மாறினார், என் வோட்டு இரட்டை இலைக்கு என்றார், வாக்களித்ததை கூட உலகெல்லாம் வீடியோவில் காட்டினார் கலைஞர் அமைதியாக சொன்னார்., “வாக்களிப்பது இவர் சொந்த விஷயம், ஆனால் இப்படி பகிரங்கமாக காட்ட வேண்டுமா? இந்த மனிதர் நம்பிக்கைகுரியவர் அல்ல” ஜெயா இதனால்தான் ரஜினியினை ஓரமாக‌ நிறுத்தியே வைத்திருந்தார், என்னதான் ரஜினி அம்மா ஜெயாஜி என்றாலும் ஜெயா அசரவில்லை ரஜினி நம்பிக்கைகுரிய […]

1986ல் காணாமல் போன ரஷ்ய விமானி சோர்ஜி மீண்டு திரும்பினார்

ஒவ்வொருவர் வாழ்வும் ஒவ்வொருவர் வகையில் விசித்திரமானது, அதில் இந்த ரஷ்யருக்கு ஏற்பட்டிருக்கும் நிலை மகா விசித்திரமானது அது 1986ம் ஆண்டு சோவியத் ரஷ்யா ஆப்கனில் நிலை கொண்ட நேரம் அந்த 30 வயது சோர்ஜி பேட்டலிக் எனும் பைலட் விமானத்தை ஓட்டி சென்றார், விமானத்தையும் அவரையும் காணவில்லை சோவியத் ஆப்கனிலிருந்து வாபஸ் ஆனபின்பு அவரை காணாமல் போனவர் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள், அவர் குடும்பத்தாரும் அவர் படத்திற்கு மாலை போட்டுவிட்டு ஊதிபத்தி கொளுத்திவிட்டனர் கர்பமாக இருந்த மனைவியும் மகளை […]

காலாவுக்கு தடையில்லை : உச்ச நீதிமன்றம் உத்தரவு

“காலா’வுக்கு தடையில்லை; திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது : உச்ச நீதிமன்றம் உத்தரவு அது எம்.ஆர் ராதா சுடபட்ட நேரம், காமராஜர் ஆட்சியில் உங்கள் அபிமான ராமசந்திரன் சுடபட்டார் என திமுக அழிச்சாட்டியத்தை தொடங்கியது தமிழகத்தில் அசாதாரண நிலை தென்பட்டது, போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கபட்டது “ராமசந்திரன் தனிபட்ட விவகாரத்தில் சுடபட்டார்ண்ணே, நா என்ன செய்யட்டும்ணே?” என்ற காமராஜரின் குரலும் எடுபடவில்லை திமுக இதுதான் வாய்ப்பு என ஒப்பாரி வைத்தது, ராமசந்திரனின் கண்மணிகளோ வன்முறையில் ஈடுபட்டன‌ ஒரே ஒரு குரல் […]

ஏழுமலையானே நீர் எம்மை கைவிடவே இல்லையப்பா….

“சட்டமன்றம் நடக்கின்றது, எதிர்கட்சி ஒரு நெருக்கடியும் கொடுக்கவில்லை. வகுப்பினை கட் அடித்து சென்றுவிட்டு திரும்பும் கல்லூரிமாணவன் போலவே இருக்கின்றது. அதுதான் எவ்வளவு நிம்மதி அட இப்பொழுதாவது தமிழகம் நம்மை கவனித்துவிடுமோ என அஞ்சினால் அது காலா படம், ரஜினி அது இது என நம்மை மறந்தே விட்டது ஏழுமலையானே நீர் எம்மை கைவிடவே இல்லையப்பா..” இப்படி என்னையும் என் ஆட்சியினையும் மறந்து மக்கள் எங்காவது சுற்றிகொண்டே இருக்கட்டும், வேறு யாரையாவது திட்டிகொண்டே இருக்கட்டும் அது தொடர்ந்தால் அமைச்சர்கள் […]

தவறின் மேல் தவறு செய்கின்றார் ரஜினி…..

அந்த ஜெயலலிதா அப்பொழுது நடிகை, தான் தமிழச்சி என பத்திரிகைக்கு சொல்லிவிட்டு பெங்களூர் படபிடிப்பிற்கு சென்றார் இதே வாட்டாள் நாகராஜ் “கன்னட துரோகியே மன்னிப்பு கேள்” என அவர் தங்கிய வீட்டை முற்றுகையிட்டு பயமுறுத்தினான் படகுழுவும் இன்னபிற சக்திகளும் எவ்வளவோ கெஞ்சியும் “நான் தமிழச்சி, ஒருகாலமும் இவர்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என தமிழிலே பேசி தைரியமாக நின்றார் ஜெயா. அதன் பின் சட்ட நடவடிக்கை மூலம் விரட்டபட்டான் நாகராஜ் தன்னை மலையாளி என்றவர்களுக்கு பதிலடியாக கேரளா […]

பாவம் அந்த‌ நீதிபதி ஆறுமுகசாமி

அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு பாதாம் அல்வா வழங்கப்பட்டதா மருத்துவர்களிடம் விசாரணை – செய்தி ஏதோ ஒரு படத்தில் இனிப்பு நீர் தாக்கிய‌ கிழவனுக்கு ஜாங்கிரி கொடுத்து கொன்று கவுண்டமணியும் செந்திலும் சொத்துக்களை பறிக்க திட்டமிடுவார்கள் அந்த காமெடி காட்சி அப்பல்லோவிலும் அரங்கேறிற்றோ என்னமோ? பாவம் அந்த‌ நீதிபதி ஆறுமுகசாமி, “உன்ன எவண்டா ஜாங்கிரி கொடுக்க சொன்னது?” என கொதிக்கும் கவுண்டமணியின் நிலை போல் ஆகிவிட்டது அவர் நிலை.  

காவேரி வேறு , காலா வேறு

கன்னட தேர்தலுக்காக காவேரியில் காலம் தாழ்த்தியவர்கள், இப்பொழுது காலா சினிமாவிற்காக காலம் தாழ்த்த முயற்சிக்கின்றார்கள் அரசியலில் கொள்கையாளர்கள் இருக்க வேண்டுமே அன்றி, சினிமாக்காரர்கள் இருந்தால் என்னாகும் என்பதற்கு நடக்கும் சம்பவங்களே சாட்சி காலா என்பது எவனோ ஒரு சினிமாக்காரன் முதலீடு செய்திருக்கும் படம், இது கன்னடத்தில் ஓடினால் என்ன? ஓடாவிட்டால் என்ன? சினிமாவினை சினிமாவால் எதிர்க்க இங்கிருக்கும் மற்ற கன்னட நடிகர்களை வாட்டாள் நாகராஜ் வீட்டுக்கு அனுப்புங்கள் மாறாக கமலஹாசன் சென்று குமாரசாமியிடம் கெஞ்சுவதும், தனுஷ் நீதிமன்றம் […]