பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாஜக ஆட்சியில் யானை கூட ஒருமாதிரி அலைகின்றது

பாஜக ஆட்சியில் பாலியல் பலாத்காரம் அதிகரித்தது என்ற சர்ச்சை இன்னும் ஓயவில்லை அதற்குள் சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்து கொடூர கொலை செய்திருக்கின்றது, யானைக்கு மதம் எப்பொழுது பிடிக்கும் என்பது எல்லோரும் அறிந்தது ஆக பாஜக ஆட்சியில் யானை கூட ஒருமாதிரி அலைகின்றது     ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார் : செய்தி எதற்கு? சரியாக சுட்டார்களா? இல்லை சொதப்பினார்களா என பார்த்து மத்திய அரசுக்கு அறிக்கை தெரிவிக்கவா? ஆனாலும் ஆளுநருக்கு […]

அதே வழி..

தூத்துகுடிக்கு சென்று ஆறுதல் சொல்ல வேண்டியவர், எங்கு என்ன செய்துகொண்டிருக்கின்றார் பார்தீர்களா? முன்பு எம்ஜிஆர் வழியில் நான் என சொன்னது இதுதான் 1964ல் இந்தி எதிர்ப்பில் 64 பேர் பலியாகி இருக்க, ராமசந்திரன் கோவாவில் ஜெயலலிதாவோடு ஆடிகொண்டிருந்தார் அதே வழி..

“நரேந்திரமோடி ஒரு நாளைக்கு 10 முறை வெளிநாட்டுகு பறப்பவர்

“நரேந்திரமோடி என்பவர் ஒரு நாளைக்கு 10 முறை வெளிநாட்டுகு பறப்பவர், பெட்ரோல் செலவு எவ்வளவு என இந்திய மக்கள் கேட்ட்டால் அவர் ஒரு ரசாயாணம் கலந்த பெட்ரோல் வைத்திருன்றார் ஒருமுறை அதை கலந்தால் அடுத்த 5 வருடம் பெட்ரோல் டேங்க் காலியாகாது என அவரின் தொண்டர்கள் கதை கட்டி வருகின்றனர் இதனை யாரும் நம்பி இந்தியாவிடம் ரசாயாணம் வாங்க செல்ல வேண்டாம், அப்படி ஒன்று இல்லவே இல்லை வேண்டுமானால் 5 வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவிற்கு பெட்ரோல் விற்கின்றோம், […]

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் – ஓபிஎஸ் நம்பிக்கை

“ஸ்டெர்லைட் தூத்துகுடி மக்களை கொன்றதோ இல்லையோ , அண்ணன சாய்ச்சுபுட்டுடா என்ன செய்திருக்கணும் நம் இனமான பிள்ளைகள்? பிளேடால கைய கீறிட்டு, தோட்டாவினை பிடிக்கும் பொழுது ஏற்பட்ட காயம், அண்ணன் புலிகள் கிட்ட பெற்ற பயிற்சினை இப்படி எங்களுக்கும் சொல்லி தந்தார் என சொல்லிவிட்டு கட்டோடு திரிய வேண்டாமா? அதெல்ல்லாம் இல்லாம எப்படி தம்பி நம்ம கொள்கையினை எடுத்து செல்வது? இனியாவது தோட்டாவினை பிடித்த காயம், தோட்டா உரசிய காயம் , துப்பாக்கி குண்டு மேல பல்டி […]

மோடி ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கின்றார் : அமித்ஷா

பிரதமர் மோடியின் நான்காண்டு சாதனைகளை எடுத்துக் கூற ஓராண்டு போதாது: தமிழிசை பேட்டி. ஓஹோ இந்த சாதனைகளை சொல்ல அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சி வேண்டுமோ?? என்னா வில்லத்தனம் மோடி ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கின்றார் : அமித்ஷா ஹிட்லர் ஒரு நாளைக்கு 2 மணி நேரம்தான் உறங்கினான் என்கின்றது வரலாறு, விளைவு என்ன? டெங்கி கொசு கூட 21 மணிநேரம் வேலை செய்யுமாம் சிறுத்தை புலியினை தனியாக விரட்டி மகளை காப்பாற்றினார் நெல்லை […]

காடுவெட்டி குருவிற்காக பல பேருந்துகளை உடைத்திருகின்றார்கள்

காடுவெட்டி குருவிற்காக பல பேருந்துகளை உடைத்திருகின்றார்கள், பல அசம்பாவிதங்களை நிகழ்த்தி இருக்கின்றார்கள் இதற்கு என்ன செய்யலாம் என்றால், எந்த ஊரில் உடைக்கபட்டதோ அந்த ஊருக்கு மின்சாரம் முதல் பஸ் வரை நிறுத்த வேண்டும், உடைத்தவன் சொத்துக்களை அரசுடமை ஆக்கிகொண்டோ இல்லை வேறு நஷ்ட ஈடுகளை பெற்றுகொண்ட பின்னோ வசதிகளை திரும்ப கொடுக்கலாம் நிச்சயம் ஊர் கூடி செய்திருக்காது, எவனாவது சல்லிபயல் செய்திருப்பான். மின்சாரம் போக்குவரத்து என தடை செய்தால் ஊர் மக்களே அந்த சனியனை பிடித்து ஒப்படைப்பார்கள் […]

தன் புதிய படபிடப்பிற்காக இமயமலை செல்கின்றாராம் ரஜினி

தன் புதிய படபிடப்பிற்காக இமயமலை செல்கின்றாராம் ரஜினி, பல இடங்களை ஹெலிகாப்டரில் சுற்றுவாராம் தூத்துகுடிக்கு வரும் எண்ணமெல்லாம் சுத்தமாக இல்லை இனி துப்பாக்கி சூடு நடத்தவேண்டியது, இன்னும் எவனாவது ரஜினி அரசியலுக்கு வருவார் என சொல்லிகொண்டிருந்தால் அவன் மீதுதான் இமயமலை என்ன? ஆல்ப்ஸ் மலைக்கும் செல்லுங்கள் ரஜினி ஆனால் காலா , எந்திரன் படங்கள் எல்லாம் இங்குதான் ரிலீசாகும், இமயமலையிலா ரிலிசாகும் ஆகட்டும் பார்த்துகொள்ளலாம் தனக்கும் மனசாட்சி உண்டு என்பதை நீருபிக்க தூத்துகுடியில் செத்தவர்களுக்கு 20 லட்சமாக […]

ஸ்டெர்லைட் மூடபடட்டும்

ஸ்டெர்லைட் ஒன்றும் இத்தனை ஆண்டு காலம் அரசின் ஒத்துழைப்பின்றி இயங்கவில்லை ஆனால் மக்கள் எதிர்ப்பு 25 வருடமாக இருந்துகொண்டிருந்தான் இருந்தது எந்த கட்சி கண்டுகொண்டது ஒரு கட்சியுமில்லை? காரணம் எல்லா கட்சியும் ஸ்டெர்லைட்டின் கடைக்கண் பார்வையில் இருந்தன. இரு தலமைகள் தமிழ்நாட்டில் வலுவாக இருந்தவரை இருவரையும் “சமாளித்து” ஸ்டெர்லைட் நின்றது அடிக்கடி உதிரி கட்சிகளையும் கவனித்தது இப்பொழுது நேரடியாக மத்திய அரசின் மாநிலம் தமிழகம். இங்குள்ள கட்சிகளையோ, இல்லை உதிரி கட்சிகளையோ கவனிக்கும் அவசியம் அவர்களுக்கு இல்லை, […]

தமிழகம் மிக மோசமான இருண்ட காலத்தில் சிக்கி இருக்கின்றது

நிர்மலா தேவி விவகாரம் என்றவுடன் ஓடி வந்து தானே விசாரணை கமிஷன் அமைத்து அதன் அறிக்கையினை தானே வாங்கி மறைத்த கவர்னர் தாத்தாவிற்கு தூத்துகுடி சம்பவம் பற்றி ஒன்றும் சொல்ல தெரியவில்லை கோவை ஜக்கி சாமியார் ஆசிரமத்திற்கு ஓடி வந்த மோடியினை தூத்துகுடி விவகாரத்தில் காணவே இல்லை முதல்வர் என்பவரை பற்றி சொல்லவே வேண்டாம், ஜீன்ஸ் படத்து கோழை நாசர் போல சமாளித்துகொண்டிருக்கின்றார் ஒரே நேரத்தில் கவர்னர், முதல்வர், பிரதமர் எல்லாம் மிக மோசமான நபர்களாக வாய்த்து […]

ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்று உலா வருகின்றது

ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்று உலா வருகின்றது நிச்சயம் தூத்துகுடி சம்பவத்தை திசைதிருப்ப வருகின்றது என்பது மட்டும் புரிகின்றது. தூத்துகுடியில் தினகரன் தரப்பு தீவிரம் காட்டும் நிலையில் ஏன் இது வெளிவந்தது என்பதுதான் தெரியவில்லை ஆனால் இது ஜெயலலிதா அப்பல்லோவில் பேசியதா? அவரே பேசியதா என்றால் சந்தேகத்திற்குரியது ஏன் என்றால் ஒரு இடத்தில் கூட “நான் செத்த பின்னாலும் கருணாநிதியினை விட கூடாது, நான் இப்படி ஆக அவர்தான் காரணம், என்னை கொல்ல சதி செய்தார் , […]