பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அந்த ஆன்ம வலியிலும் அமைதிகாத்து நின்றது இத்தேசம்…

புலிகளுக்கு எப்பொழுதுமே ஒரு தந்திரம் உண்டு, சிங்களரை தாக்கிவிட்டு ஊருக்குள் ஓளிவது. புலிகளை தேடுகின்றோம் என வரும் ராணுவம் ஊரையே கொளுத்தும் இதனால் பலர் பாதிக்கபட உடனே ராணுவத்தை எதிர்க்க எங்களோடு கிளம்புங்கள் என ஆள்சேர்ப்பர் புலிகள் அவர்களின் எக்கால தந்திரமும் இதுவேதான் இப்படித்தான் 1983ல் சிங்கள வீரர்களை கொன்று பெரும் கலவரத்தை ஏற்படுத்தி ஆள்பிடித்து இயக்கம் வளர்த்தனர் இதற்கு அவர்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா? “அம்மை நோய்க்கு மருந்து செலுத்தும்பொழுது முதலில் காய்ச்சல் வரும், […]

மிஸ்டர் செயல்தலைவர்@அறிவாலயம்

மிஸ்டர் செயல்தலைவர்@அறிவாலயம் மாற்று அரசியல், நீதி, நேர்மை, நியாயம், பெருந்தன்மை என நாட்டாமை விஜயகுமார் போல முழங்கிகொண்டிருக்கும் தாங்கள், ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தபோகும் முதல் திராவிட கட்சி தலைவர் எனும் பெயரினை பெற தயாரா? இல்லாவிட்டால் இந்த நீதி, நியாயம், நேர்மை, மாற்று அரசியல் பற்றி எல்லாம் தயவு செய்து பேசாதீர்கள் ஆனால் உங்களை வெறுப்பேற்ற‌ மய்யமோ, ஆன்மீகமோ செல்ல‌ வாய்ப்பு அதிகம் உள்ளது தினகரனே சென்றாலும் ஆச்சரியமில்லை கர்நாடகாவில் ஜனநாயகம் நிலைநாட்டபட்டுள்ளது : தினகரன் […]

ராஜிவ் நிச்சயம் தமிழகத்து ரட்சகர்

தமிழ்நாட்டில் 27 ஆண்டுகளாக ஒரு பெரும் கொடுமை நடக்கின்றது, மாபெரும் நன்றிகெட்டதனம் நடக்கின்றது இதில் திமுக அதிமுக என இரண்டிற்குமே தந்திரம் உண்டு, சில அரசியல் கணக்கும் உண்டு. மிக சிரமபட்டு தந்திரமாய் அதை மறைப்பார்கள் அல்லது நகர்வார்கள் புலிகளும் இந்திய எதிரிகளும் , காங்கிரஸ் எதிர்களும் இங்குள்ள தமிழுணர்வாளர்களை தூண்டிவிட்டு அந்த இடம் மக்கள் மனதில் வராதவாறு பார்த்துகொள்வார்கள் ஆம், நேருவின் பேரனும் இந்திராவின் மகனும் இத்தேசத்தின் கென்னடியாக துணிச்சலாக இருந்த ராஜிவ் தமிழகத்தில்தான் கொல்லபட்டார், […]

இதற்கா அவ்வளவு கஷ்டபட்டு காங்கிரசை விரட்டினோம்?

“அடேய்… கன்னடத்துல காங்கிரஸ் ஜெயிச்சா இங்க உள்ள திமுக எல்லாம் ஏன் இப்படி கத்துறீங்க‌ இது ஆபத்துடா, நாளைக்கு நம்மகிட்டயே காங்கிரஸ் வந்து ஜெயிக்க போறோம் 100 சீட் கொடு, ஆட்சியில் பங்குகொடுன்னு வந்துரும்டா குமாரசாமி மாடல்ல காங்கிரஸ் இருக்கட்டும் திமுக ஆதரவு கொடுக்கட்டும்னு மிரட்டுவானுக . நீதி நேர்மை மதவாத ஆபத்துண்ணு நீங்களும் அப்படியே செஞ்சு தொலைச்சா காங்கிரஸ் வளந்துரும்டா… இதற்கா அவ்வளவு கஷ்டபட்டு காங்கிரசை விரட்டி விட்டோம் பூரா திமுக பயலும் இப்போ காங்கிரச […]

என்னது இரண்டாம் பிரபாகரனா?

என்னது இரண்டாம் பிரபாகரனா? யாழ்பாணத்துகாரியினை கட்டியவன் எல்லாம் இரண்டாம் பிரபாகரனா? ஆக இந்த விஜய் பயலால் இங்கும் இரண்டாம் முள்ளிவாய்க்கால் நடக்கும் என தெளிவாக சொல்கின்றார்கள் மிஸ்டர் சந்திரசேகர், தம்பி விஜய் மண்டையில் கொத்துபட்டு சாக போகின்றானாம், பிரபாகரனின் குடும்பமும் அவர் அன்னையும் பட்டபாடு தெரியுமா தெரியாதா? ஷோபா சந்திரசேகர் அப்படியா ஆம்புலன்ஸ் விமானத்தில் அலைக்கழிக்கபட வேண்டும், நீரும் ராணுவ முகாமிலா அடைக்கபட வேண்டும்?? இதை கவனிக்காமல் அங்கு என்னய்யா செய்துகொண்டிருகின்றீர்??? என்ன சொல்லவருகின்றான் இந்த ரசிகன்? […]

கன்னட மக்களுக்கு வாழ்த்துக்கள்

அமித்ஷா அழுதுகொண்டிருக்கின்றார், மோடி முணுமுணுத்து கொண்டிருக்கின்றார், இன்னும் பலர் அறையினை பூட்டி அழுதுகொண்டிருக்கின்றார்கள் நிச்சயம் இது அவர்களுக்கு மாபெரும் அவமானம் தேர்தலில் பெரும்பான்மை இல்லை எனினும் ஓடோடி சென்று நின்றார்கள், பெரும் சர்ச்சைகிடையே பெரும்பான்மைதானே நாங்கள் காட்டிவிடுவோம் என்று வந்தார்கள் நிச்சயம் முடிவு தெரிந்திருக்கும், ஆனால் ஏன் வந்து நின்று கன்னத்தில் அறை வாங்கினார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி சாம, பேத, தான, தண்டம் எல்லாம் செய்து பார்த்துவிட்டு இப்பொழுது முடியாமல் நடையினை கட்டுகின்றார்கள் சில […]

பண்ருட்டி ராமசந்திரன் வாய்திறக்காமல் இருக்க காரணம் என்ன?

ஈழபிம்பம் உடைய வேண்டுமானால் இங்கு செய்ய வேண்டியது பண்ருட்டி ராமசந்திரன் போன்றோர் பகிரங்க பேட்டிகளை வழங்க வேண்டும் ஆனால் வழங்கமாட்டார், அடித்து சொல்லலாம் அவர் வாயே திறக்கமாட்டார் ஈழத்தின் எதிரி கலைஞர் என்ற கருத்து இங்கு நிலைநிறுத்தபடுவதில் பண்ருட்டியாருக்கு ஏக சந்தோஷம் காரணம் திமுகவில் இருந்தபொழுதே பண்ருட்டிக்கும் கலைஞருக்கும் ஆகாது பண்ருட்டியார் அப்பொழுதே பொறியியல் படித்தவர், சிறந்த ராஜ தந்திரி ஆனால் கட்சியின் உள்ளடி வேலைகளால் அவரை நம்பதகாதவர் பட்டியலில் வைத்தார் கருணாநிதி பின்னாளில் ராமசந்திரனோடு பண்ருட்டி […]

விட்டால் அழுதுவிடுவார்கள் போலிருக்கின்றது

காவேரி விவகாரம் முடிந்துவிட்ட நிலையில் வாரியம் அமையாது, ஒருநாளும் தமிழருக்கு நீதி கிடைக்காது என சொல்லிகொண்டிருந்த அல்லது நம்பிகொண்டிருந்த சைமன் கோஷ்டி, திருமா கோஷ்டி, திருமுருகன் கோஷ்டி எல்லாம் மிகுந்த வேதனைக்கு ஆளாகிவிட்டன‌ விட்டால் அழுதுவிடுவார்கள் போலிருக்கின்றது இப்பொழுது வாரியம் தானே அமைந்தது, அரசிதழில் அச்சிட மட்டும்தானே போகின்றார்கள். தண்ணீர் வரவா போகின்றது என ஆறுதல் அடைகின்றார்கள் நாளை தண்ணீர் வந்தால் என்ன சொல்வார்கள் தெரியுமா? தண்ணீர் வந்தால் மட்டும் விவசாயி வாழவா போகின்றான்? எவன் விவசாயம் […]

முள்ளிவாய்க்கால் நினைவாக பிரபாகரன் நினைவலைகள் என ஆளாளுக்கு வந்தாயிற்று

முள்ளிவாய்க்கால் நினைவாக பிரபாகரன் நினைவலைகள் என ஆளாளுக்கு வந்தாயிற்று அதில் திருமா என்பவர் சொன்ன கோழிகறி கதையும் வருகின்றது உண்மையில் சைமனின் ஆமைகறி கடைசி காமெடி , அதற்கு முன்பு திருமாவின் கோழிகறி, ஜெகஸ்கஸ்பரின் இறால் கறி போன்றவை பிரசித்திபெற்றவை ஆளாளுக்கு ஆமை கறி சைமன் என்கின்றார்களே தவிர, எனக்கு சிங்கவால் இறால் கறி கொடுத்தார் பிரபாகரன் என்ற ஜெகத் கஸ்பர் சாமியாரின் கட்டு கதையினையோ “எனக்கு கோழிகறி கொடுத்தார் பிரபாகரன் நான் சைவம் என்றேன், இது […]

ஒரு வழியாக காவேரி வழக்கு முடித்து வைக்கபட்டிருக்கின்றது

ஒரு வழியாக காவேரி வழக்கு முடித்து வைக்கபட்டிருக்கின்றது, இதுதான் தீர்ப்பு இதனை அரசு இதழில் உடனடியாக அச்சிட்டு ஆகவேண்டியதை பாருங்கள் என சொல்லிவிட்டது உச்சநீதிமன்றம் இனி மேலாண்மை குழு அமைக்கும் விஷயம் நடைபெற வேண்டும், ஒழுங்காக நீர் பகிரபட வேண்டும் இதில் இரு விஷயங்கள் சர்ச்சையாகும், முதலாவது நல்ல மழைபெய்யும் நேரத்தில் வெள்ள கணக்கை எல்லாம் நாங்கள் திறந்துவிட்ட நீர் என கன்னடம் கணக்கு காட்டும் இன்னொன்று வறண்ட காலத்தில் எப்படி பங்கிடபோகின்றார்கள் என்பது இதெல்லாம் நிபுணர்கள் […]