பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்திய வெளியுறவு கொள்கைகள் மறுபடியும் சறுக்குகின்றன

இந்திய வெளியுறவு கொள்கைகள் மறுபடியும் சறுக்குகின்றன, ஓமானிற்கு மோடி சென்றுவந்த பின்பு ஈரானின் நகர்வில் கோபம் தெரிகின்றது ஈரானின் சபாஹரில் பாகிஸ்தான் சீனாவிற்கு செக் வைக்க இந்தியா துறைமுகம் அமைத்தது, மிக அருமையான திட்டம் அது ஆனால் ஓமானில் இந்தியா கால்பதித்ததும் இன்னபிற விஷயங்களும் ஈரானை சீண்டியிருக்கின்றன, பதிலுக்கு பாகிஸ்தானும், சீனாவும் இங்கு வரலாம் என அழைப்பு விடுக்கின்றது ஈரான் ஈரானில் இந்திய பிடி நழுவுவது தெரிகின்றது இலங்கையில் சீனா அளவுக்கு மீறி நுழைகின்றது என்கின்றது இந்தியா, […]

திராவிட நாடு அமையும் : ஸ்டாலின் நம்பிகை

திராவிட நாடு அமையும் : ஸ்டாலின் நம்பிகை பெரியார் திராவிட நாடு கேட்டார் , கிடைக்கவில்லை. “திண்ணையில் படுத்தாவது திராவிட நாடு அடைவோம்” என அண்ணா கிளம்பினார் திண்ணைதான் கிடைத்தது திராவிட நாடு கிடைக்கவில்லை, காரணம் தமிழகம் என்றுமே பிரிவினைக்கு ஆதரவான மாநிலம் அல்ல‌ இதனை நிரம்ப யோசித்த அண்ணா , காலம்பார்த்தார் சீனப்போர் முடிந்த நிலையில் நேரு இனி பிரிவினைவாதம் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்க, திமுக தடைசெய்யும் அளவிற்கு நிலமை […]

நீதிபதி ஆறுமுகசாமி சசிகலாவினை விசாரணை செய்வதில் தாமதம்

நீதிபதி ஆறுமுகசாமி சசிகலாவினை விசாரணை செய்வதில் தாமதம் : செய்தி கிட்டதட்ட 3 மாதமாக கங்கைக்கு காத்திருந்த பகீரதன் போல கடும் தவம் செய்கின்றார் நீதிபதி ஆறுமுகச்சாமி , ஆனால் சசிகலா வாக்குமூலத்தை வாங்க முடியவில்லை ஆனால் சிறையில் இருக்கும் இந்திராணி ஒரே இரவில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து அவரை உள்ளே தள்ள முடிகின்றது என்ன சட்டமோ? என்ன விசாரணையோ? சிறையில் இருக்கும் சசிகலாவிடமே பேசமுடியா நீதிபதிதான் ஜெயா சாவின் மர்மத்தை உடைப்பாராம், நம்பிகொள்ளுங்கள்

எங்க 36 எம்.பியும் அவருக்கு தம்பி , தங்கச்சி மாதிரி ஹிஹிஹி

ஹிஹிஹி மோடி மேல இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கோம் அவர் மேல நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் எப்படி? ஹிஹிஹி எங்க 36 எம்.பியும் அவருக்கு தம்பி , தங்கச்சி மாதிரி ஹிஹிஹிஹிஹிஹிஹி இருக்கும் பணத்தை வைத்து கலாட்டா காண்பிப்பார் டி.டி.வி. தினகரன் : தமிழிசை சவுந்தரராஜன் எல்லாம் 2000 பேர் வைத்து ரைடு நடத்தியும் கண்டுபிடிக்க முடியாத பணம் என்பதில் அம்மணிக்கு கொஞ்சம் கோபம் அதிகம், வேறு ஒன்றுமில்லை  விரைவில் டெல்லி அதிரும் மாபெரும் போராட்டம் : […]

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரபடும் : சந்திரபாபு நாயுடு

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரபடும் : சந்திரபாபு நாயுடு தன் மாநில நலன் பாதிக்கபடுவதை உணர்ந்தவுடன் எப்படி சீறி கிளம்புகின்றார் நாயுடு, ஏற்கனவே சிவசேனை பாஜக உறவு கசந்த நிலையில் , கூட்டணிகள் எல்லாம் விலகும் நிலையில் சந்திரபாபு நாயுடுவின் நகர்வு வாழ்த்துகுரியது இப்பொழுது நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தால் என்னாகும்? பாராளுமன்றத்தின் இரண்டாம் பெரிய கட்சி அதிமுக அதனிடம் 36 எம்பிக்கள் உண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவே துருப்பு சீட்டு, அது […]

சசிகலா புஷ்பா தினகரன் கோஷ்டியில்

சசிகலா புஷ்பா அதிமுகவில் நிகழ்த்திய சலசலப்புகள் கொஞ்சமல்ல, ஜெயலலிதா என்னை அடித்தார் என அவர் கண்ணீர்விட்ட இரு நாட்களில் மருத்துவமனைக்கு சென்ற ஜெயலலிதா அதன் பின் வரவே இல்லை கட்சிக்காரர்கள் ஜெயாவின் செருப்பை தாண்டி காலை கூட பார்க்க பயபட்ட நேரத்தில் , மிக தைரியமாக ஜெயலலிதாவினை எதிர்த்தவர் புஷ்பா ராஜ்யசபாவிலே எனக்கு பாதுகாப்பில்லை, என் கட்சி தலைவி என்னை ஏதும் செய்துவிடுவார் என அழுத எம்பி அவர். அகில உலகமே அதை கண்டது. இந்தியா அதிர்ந்தது […]

கமலஹாசன் தமிழிசை இணைய சர்ச்சை

இப்பொழுதெல்லாம் இணையத்தில் ஒருவர் கணக்கில் இன்னொருவர் ஊடுருவது சாதாரணம் அப்படி தமிழிசையின் விக்கிபீடியா கூட மாற்றபட்டது, இணையம் வருவதே தமிழிசையினை கலாய்க என பலர் இருப்பது அவருக்கும் தெரியும் என்பதால் சிரித்துகொண்டு நகர்ந்துவிட்டார் இப்பொழுது கமலஹாசன் தமிழிசை இணைய சர்ச்சையும் அப்படியே இதில் இப்பொழுது புதிய விஷயம் வந்தாயிற்று இதுவரை இணையத்தில் பிரபாகரனை தேடினால் விக்கிபீடியா வரை அவரை தீவிரவாதி என காட்டும், இப்பொழுது அவர் ராணுவ வீரர் என மாறிவிட்டது ஆனால் எந்த அங்கீகரிக்கபட்ட நாட்டின் […]

தென்னகத்தில் ஒலிக்கிறது மாநில சுயாட்சி குரல்..

ஆந்திர அரசும் பாஜகவிற்கு எதிராக பொங்க ஆரம்பித்தாயிற்று, சந்திரபாபு நாயுடு சீற ஆரம்பித்துவிட்டார் ஆக தென்னகத்தில் கேரளத்தை அடுத்து ஆந்திராவிலும் பாஜக அரசுக்கு எதிர்ப்பு வலுகின்றது என்ன நடந்தது? ஆந்திராவினை இரண்டாக பிரிக்கவேண்டும் என்பது 1957ல் இருந்து வந்த சிக்கல், ஆனால் ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் என்ற கொள்கையில் இருந்த மத்திய அரசு பெரிதாக கண்டுகொள்ளவில்லை இந்த ஒரேமொழி ஒரே நாடு, மாநிலம் என்பதெல்லாம் சுத்தமாக சரிவராது. ஒரே மொழியாயினும் பிரச்சினைகள் வெடிக்கும், அது இங்கிலாந்து […]

தாமிரபரணி நம்பியாறு இணைப்பு திட்டம்

தாமிர பரணியினையும் நம்பியாற்றையும் 100 கோடி செலவழித்து இணைக்க போகின்றார்களாம் எங்கே? எப்படி இணைக்க போகின்றார்கள் என தெரியாது தாமிரபரணி வற்றா நதி, மழை இல்லை என்றால் மேலப்பாளையம் சாக்கடையாவது ஓடிகொண்டிருக்கும். நல்ல நதிதான் சந்தேகமில்லை ஆனால் அது திருவைகுண்டத்தை தாண்டாது, மழைகாலம் மட்டுமே தாண்டும் மற்றபடி அம்பை முதல் திருவைகுண்டம் வரை அதன் பாசன பரப்பு ஏராளம், நஞ்சையும், வாழையும் அதனால் அப்படி விளைகின்றன‌ இதில் இவர்கள் தாமிரபரணியினை நம்பியாரோடு இணைப்பார்களாம், தாமிரபரணி விவசாயிகள் எல்லாம் […]

யாரை எதிர்த்து அணியபட்ட கருப்பு சட்டை?

அன்று பெரியார் பின்னால் கருப்பு சட்டை அணிந்தவர்களின் வாரிசுகள்தான் இவர்கள் இன்று ஏதோ எதிர்ப்பை காட்ட மறுபடியும் கருப்பு சட்டை அணிந்துவிட்டார்களாம். இந்த சமூகம் திராவிடரை இழிவுபடுத்துகின்றது, அந்த இழிவு நீங்குமட்டும் எதிர்ப்பை தெரிவிக்க கருப்புசட்டை அணிவோம் என்றுதான் அணிந்தார்கள் பின் திமுக தொடங்கும்பொழுது அரசியலுக்காக வெள்ளையாடைக்கு மாறினார்கள், வைகோ கருப்புதுண்டு அப்படி வந்ததுதான் ஒருகாலத்தில் இவர்களின் அடையாளமாக இருந்த கருப்பு சட்டை , பிராமணரை எதிர்ப்போம் , ஆரியரை எதிர்ப்போம் என்ற அடையாளமாக கருதபட்ட கருப்பு […]