பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சாதிக் பாட்ஷாவின் சாவுக்காக அழுகின்றோம் : தமிழ் உணவாளர்கள்

நீங்கள் ஸ்பெக்ட்ரம் வழக்கின் விடுதலையினை பார்க்கின்றீர்கள், நாங்கள் சாதிக் பாட்ஷாவின் சாவுக்காக அழுகின்றோம் : தமிழ் உணவாளர்கள் சாதிக் பாஷா சாவில் மட்டும்தான் நீதி வேண்டுமா? இந்த ஜெயா என்றொரு முன்னாள் முதல்வர் சாவிலே மர்மம் இருக்கின்றதே அது பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டால் ஒரு பயலையும் காணவில்லை இப்படி அழுகின்றவன் என என பார்த்தால் பெரும்பாலும் தும்பிகள்தான் சென்னையில் பத்ம்பநாபாவோடு செத்தது 14 பேர், கொன்றது புலிகள். தப்பி செல்லும் பொழுது காவலரை […]

இன்றைய ஜெயா டிவி செய்தி எப்படி இருக்கும்?

இன்றைய முதல் வேலை ஜெயாடிவி நியூஸ் பார்க்க வேண்டும். முன்பு காற்றில் ஊழல், அலைகற்றை ஊழல் என அடிக்கடி சொல்லிகொண்டு இருந்ததே அவர்கள்தான் ஜெயா சிறைக்கு போனபொழுது கூட ஸ்பெக்ட்ரம் ஊழல் திமுக என்றுதான் வாசித்துகொண்டிருந்தார்கள் இன்று நிச்சயம் ஸ்பெக்டரம் தீர்ப்பு வந்திருப்பதை கண்டுகொள்ளவே மாட்டார்கள் என தெரிந்தாலும், அதை பார்த்து ரசிப்பதில் நமக்கொரு திருப்தி அப்படியே இன்று தினகரனும் வழக்கிற்காக டெல்லி செல்ல வேண்டும் அதனை சொல்வார்களா இல்லையா என தெரியவில்லை இன்றைய ஜெயா டிவி […]

வயித்தெரிச்சலா வருது ஓறவே…

“பாஜகவும் காங்கிரசும் சேர்ந்து எங்கள் கட்சியினை ஒழிக்க, நாம் தமிழர் வளர்ச்சியினை தடுக்க, தமிழனை அடிமையாக்க கனிமொழியினை விடுதலை செய்துள்ளது..” என சொல்லிருவோமா??? வயித்தெரிச்சலா வருது ஓறவே… ஊழல் நடந்தது உண்மை: குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என்பது தான் தீர்ப்பில் பொருள்: ராமதாஸ் அப்படியா? மருத்துவ கல்லூரிகளுக்கு உங்கள் மகன் அமைச்சராக இருந்தபொழுது அனுமதி கொடுத்த வழக்கு ஒன்று ஓடிகொண்டிருக்கின்றது அல்லவா? அதில் தீர்ப்பு வரும்பொழுது எது உண்மை, எது நிரூபிக்கபடவில்லை என நன்றாக பார்த்துவிடலாம் சரியா? […]

அண்ணே ரொம்ப சந்தோசபடாதீங்க, எங்க பிளானே வேற‌

அண்ணே ரொம்ப சந்தோசபடாதீங்க, எங்க பிளானே வேற‌ இதுல என்னடா பிளான், குற்றம் நிரூபிக்கபடலை அதனால் எல்லோரும் விடுதலைனு ஜட்ஜ் சொல்லிருக்காரு அதெல்லாம் தெரியும்ணே, ஆனா இதுல இருக்குற விஷயம் உங்களுக்கெல்லாம் புரியாது, ரொம்ப தந்திரம்ணே அட அப்படி என்னடா தந்திரம் அண்ணே சசிகலா இருந்தா அதிமுக பலமாயிரும் அதுனால சரியா அந்தம்மா முதல்வர் ஆகுமுன்னால பிடிச்சி உள்ளே போட்டாங்க‌ டேய் அது குன்ஹா எழுதின தீர்ப்புடா, கன்பார்ம் பண்ணாங்க அவ்வளவுதான் அது உலகத்துகுண்ணே உண்மையில பிளான் […]

நீதிமன்றமாக அலைந்த சு.சாமி இனி கீழ்பாக்கம் , ஏர்வாடி பக்கமாக அலைவார் போல‌

2ஜி தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் , ஜெயா வழக்கில் முதலில் விடுவிக்கபட்டு பின் குற்றவாளி ஆனது போல் நிலமை வரவேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை மேல்முறையீடா தாராளமாக செய்யும் சுவாமி, இங்கு என்ன? சர்வதேச நீதிமன்றத்திலும் செய்யும் ஏன் கைலாயம் சென்று சிவனிடமே முறையிடுங்கள். நியாயம் எங்கு சென்றாலும் வெல்லும் ஆனால் குன்ஹாவினை மறந்துவிட்டு குமாரசாமிக்கும், ஷைனிக்கும் ஒப்பீடு செய்தீர் அல்லவா? அப்பொழுதே தெரிகின்றது உமக்கு அதிர்ச்சியில் சிந்தை கலங்கிவிட்டது என்று […]

கொளுத்துடா வெடிய‌.. தலைவி வாழ்க..

ஸ்பெக்டரம் தீர்ப்பினை எத்தனை பேர் வரவேற்று பேசட்டும், அவர் சொன்னது போல் வராது “இனி எந்த முகத்தை வைத்துகொண்டு காங்கிரஸ் திமுக ஊழல் கூட்டணி என சொல்வீர்கள் அதிமுக & பக்தாஸ்..” என கேட்டார் பாருங்கள் கேள்வி, அங்கு நிற்கின்றார் தலைவி குஷ்பு கொளுத்துடா வெடிய‌.. தலைவி வாழ்க..  

ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை

பெரும் பரபரப்பினை எற்படுத்திய வழக்கும், திமுகவிற்கு பெரும் நெருக்கடி என கருதபட்டதுமான ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை செய்யபட்டுவிட்டனர், நியாயம் வென்றிருக்கின்றது. திமுக எனும் யானையினை காயபடுத்தி கட்டுபடுத்தி பயமுறுத்திய சங்கிலி உடைத்தெறியபட்டிருகின்றது கலைஞர் டிவியும் முடக்கத்தில் இருந்து தப்பிவிட்டது நீதிக்கும் , நேர்மைக்கும், கண்டிப்பிற்கும் பெயர் போன நீதிபதி ஷைனி தன் சுத்தமான தீர்ப்பில் தன் பெருமையினை தக்க வைத்துகொண்டார் எவ்வளவு பெரும் பூகம்பாக அது வெடித்தது? 2 லட்சம் கோடி ஊழல் என்றார்கள், […]

இந்திராவினை போல் பல மாநிலங்களை ஆள்கின்றோம், பாஜக பெருமிதம்

இந்திராவினை போல் பல மாநிலங்களை ஆள்கின்றோம், பாஜக பெருமிதம் பல மாநிலங்களை ஆண்டுவிட்டால் இந்திரா போல் ஆகிவிடுவீர்களா? அந்த அம்மணி இருந்தவரை பாகிஸ்தான் அரண்டு இருந்தது, இலங்கை அவரின் காலடிக்குள் இருந்தது, நேப்பாளம் அஞ்சி இருந்தது, சீனாவே தன் வாலை சுருட்டி இருந்தது. ஆசியாவின் சக்திமிக்க நாடு என்பதை மிக ஆணித்தரமாக காட்டி நின்றார் இந்திரா. அப்படி ஆளமுடியமா? அவர் சாதனையில் எதனை நீங்கள் தொட்டுவிடுவீர்கள் சொல்லுங்கள்? அட இந்த‌ இலங்கையினை அடக்கிவிட முடிகின்றதா? திரிகோணமலையில் அமெரிக்கா […]

இன்று ஆர்.கே நகரில் மட்டும் அல்ல, ஐ.நா சபையிலும் தேர்தல் நடக்கின்றது

இன்று ஆர்.கே நகரில் மட்டும் தேர்தல் அல்ல, ஐ.நா சபையிலும் தேர்தல் நடக்கின்றது அதாவது ஜெருசலேம் தொடர்பாக டிரம்ப் அறிவித்த அறிவிப்பினை திரும்பபெற கோரி சில நாடுகள் ஐ.நா பொதுசபையில் இன்று தீர்மானம் வருகின்றது முன்னதாக பாதுகாப்பு சபையில் வந்த தீர்மானத்தை அமெரிக்கா தன் வீட்டோ பவர் மூலம் முறியடித்தது இப்பொழுது பொதுசபைக்கு விஷயம் வந்திருக்கின்றது, அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் கூட எதிர்த்து வாக்களிக்கலாம் எனும் நிலை இருப்பதால் அமெரிக்கா இப்படி எச்சரிக்கின்றது “எதிர்த்தா வாக்களிப்பீர்கள்? அளியுங்கள். […]