பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

 Somas Kandhan அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பெரியவர் Somas Kandhan அவரின் மூச்சு ,பேச்சு, வாழ்வு எல்லாமே திமுக. அப்படி ஒரு மிக பெரும் திமுக தொண்டர். தொண்டர்களில் பல வகை உண்டல்லவா? இவர் உணர்வு பூர்வமான, அறிவு பூர்வமாக சிந்திக்கும் அபூர்வ வகை அவருக்கு இன்று பிறந்தநாள் எப்படி அய்யா சிறப்பித்தீர்கள் என கேட்டால் மனிதர் திகைக்க வைக்கின்றார், இவ்வளவிற்கும் இவர் வீட்டில் இவரின் வம்சாவழிகளுக்கு இப்பொழுதுதான் திருமணம் முடிந்தது, அப்படி புது சொந்தங்கள் எல்லாம் கிடைத்த நிலையில் அவர் பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடபட்டிருக்க வேண்டும் […]

எங்கிருந்து இத்தேசம் உருப்படும்?

சங்கரின் கொலையாளிகளை தூக்கிலிட்டே தீரவேண்டுமாம், ஆனால் ராஜிவ் கொலையாளிகளை தொட்டுவிட கூடாதாம், அப்படியே விடுவித்துவிட வேண்டுமாம். இவ்வளவிற்கும் சங்கர் தனியாக செத்தான், ராஜிவ் 17 பேரோடு செத்தார். கை கால் போனவர்கள் கணக்கு தனி ஆக நாட்டுபற்றை விட சாதிவெறி ஓங்கி நிற்கும் சமூகம் இது என்பது தெரிகின்றது பின் எங்கிருந்த்து இத்தேசம் உருப்படும்? சேது சமுத்திர ராமர் பாலம் மனிதரால் கட்டபட்டது : அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவிப்பு இவ்வளவு நாளும் இன்றி இப்பொழுது ஏன் அவசர […]

ஒக்கி புயலால், நான்கு மீனவர்கள் மட்டுமே இறந்து உள்ளனர்

ஒக்கி புயலால், நான்கு மீனவர்கள் மட்டுமே இறந்து உள்ளனர். 13 நாட்டு படகுகளில் இருந்த, 35 மீனவர்களையும், 43 விசை படகுகளில் இருந்த, 427 மீனவர்களையும், கண்டுபிடிக்க வேண்டியுள்ளது : அமைச்சர் ஜெயக்குமார் ஆக இறந்த 4 மீணவர்களுக்குத்தான் 20 லட்சம், மற்ற மீணவர்கள் உடல் கிடைத்தால்தான் அது இறந்தவர் கணக்கில் வருமாம். இல்லாவிட்டால் அவர்கள் அப்படியே அண்டார்டிக்கா சென்று வாழ்வார்கள் என நாமாக எண்ணிகொள்ள வேண்டும் எப்படிபட்ட பாதிப்பு அது? எவ்வளவு அழிவு? ஆனால் இவர் […]

பிரதமருக்கு பறக்காவிட்டால் பைத்தியம் பிடித்துவிடும் போல..

காந்தி எளிமையானவர்தான் ஆனால் அவர் எளிமையாக வாழ பெரும் பணம் செலவழிக்க வேண்டும் என்றொரு வரி முன்பு பிரபலம் இந்த மோடி என்பவரும் இப்பொழுது அதே சிக்கலுக்கு வருகின்றார், லட்சகணக்கு விலை உள்ள‌ கோட் போடுகின்றார், பேஷன் ஷோவிற்கு செல்வது போல டிசைன் டிசைனாக உடுத்துகின்றார் என்றெல்லாம் முன்பு சர்ச்சை வந்தது இப்பொழுது காளான் சர்ச்சை வேறு வந்துள்ளது, தைவானில் இருந்து விலை உயர்ந்த காளானை வரவழைத்து உண்கின்றார் மோடி என சர்ச்சை வெடிக்கின்றது அவரிடம் கேட்டால் […]

குமரி மக்களுக்கும் வாழ்த்தா சொல்லமுடியும்

உலக அழகிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி குமரி மக்களுக்கு ஒன்றுமே சொல்லவில்லை : சீமான் சீற்றம் என்னது? குமரி மக்களுக்கும் வாழ்த்தா சொல்லமுடியும் பாதுகாப்பு துறை அமைச்சரும், ஆளுநரும் வந்தது இவருக்கு தெரியவில்லையா? மத்திய அரசு தேடுதல் நடவடிக்கையில் இறங்கியிருப்பதையும் அன்னார் சொல்லமாட்டாரா? ஏன் பழனிச்சாமியே இப்பொழுதானே வந்திருக்கின்றார் அதனை பற்றி அன்னார் ஏதும் சொன்னாரா? சொல்ல மாட்டார் அவர் அப்படித்தான் அன்புசெழியனிடம் ஏன் வட்டிக்கு வாங்குகின்றார்கள்? என கேட்டவர் சீமான், ஏன் மீணவர்கள் கடலுக்கு […]

அது என்ன மூன்றாம் கருப்பு தமிழன்?

ரஜினியினை அவர் ரசிகர்கள் எப்படி தூக்கிவிட்டார்களோ, அப்படியே அவரை அதல பாதாளத்திலும் இழுக்க துணிந்துவிட்டார்கள் இல்லாவிட்டால் இப்படி எல்லாம் கட் அவுட் வைப்பார்களா? முன்பு காந்திக்கும் காமராஜருக்கும் இடையில் சிவாஜி படத்தை வைத்து அதற்கு உரையாற்ற ஜெயகாந்தனை அழைத்தார்கள், தனக்கே உரித்தான ஸ்டைலில் சீறினார் அவர் “இப்பக்கம் காலா காந்தி அப்பக்கம் காந்தி இடையில் ஏன் ஒரு சனியனை வைத்திருக்கின்றீர்கள்? இப்படித்தான் திமுகவில் ஒரு சாத்தானை வளர்த்தார்கள் அது தமிழ்நாட்டை சீரழித்துகொண்டிருக்கின்றது” இப்பொழுது நல்ல வேளையாக ஜெயகாந்தன் […]

லேட்டாக கன்னியாகுமரி வந்தாலும் , ஆறுதலோடு வந்திருக்கின்றார் பழனிச்சாமி

லேட்டாக கன்னியாகுமரி வந்தாலும் , ஆறுதலோடு வந்திருக்கின்றார் பழனிச்சாமி இறந்தவர் குடும்பத்திற்கு 20 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கபடும், படகு போன்றவைகளுக்கு இழப்பீடும் வழங்கபடும் என சொல்லியிருக்கின்றார் பாதிக்கபட்டு போராட்டத்தில் இறங்கியோர் மீது பதியபட்ட வழக்குகளில் சில சலுகைகள் காட்டபடும் என சொல்லியிருப்பதும் நல்ல செய்தி வெறும் அறிவிப்போடு இல்லாமல், உடனே இந்த அறிவிப்புகள் செயல்வடிவம் பெற்றால் நிச்சயம் பழனிச்சாமியினை வாழ்த்தலாம் மாநில அரசு தன் உதவியினை அறிவித்துவிட்டடு, மத்திய அரசு என்ன செய்கின்றது […]

ஸ்டாலின் முதல்வர் ஆவார் : வைகோ

ஸ்டாலின் முதல்வர் ஆவார், பெரியார் அண்ணா வாழ்ந்த பூமியில் திராவிடம் தோற்காது : வைகோ சீற்றம் ஏதும் எழுத்துபிழையா, தவறான செய்தியா என பல முறை பல இடங்களில் படித்து படித்து பார்த்தால், உண்மையிலே வைகோதான் சொல்லியிருக்கின்றார் ஸ்டாலின் முதல்வராகட்டும் என கலைஞர் சொன்னதைகேட்காமல் தனிகட்சி எல்லாம் கண்டு,ஊரெல்லாம் சுற்றிவிட்டு வந்து ஆம், ஸ்டாலின் முதல்வராகட்டும் என்கின்றார் வைகோ இதனை ஆரம்பத்திலே ஏற்றிருக்கலாமே ஆக இந்த சாதாரண விஷயத்தை புரிந்துகொள்ள 27 வருடம் ஆகும் …. லைட்டா […]

திருமா ஒரு புத்தமதத்தவரா?

திருமா இந்து ஆலயங்களை இடித்து அதற்கு முன்பிருந்த புத்த மத ஆலயங்களை கட்ட சொன்னது சரி என சொல்லிகொண்டிருக்கின்றான் இதை சொல்லும் திருமா ஒரு புத்தமதத்தவரா? முதலில் சாதி ஒழிய நாங்கள் புத்தமதம் தழுவுகின்றோம் என அவர் சொல்லட்டும், அவரின் அடிப்பொடிகள் எல்லாம் நாங்கள் அசைவம் உண்ண மாட்டோம், புத்தரின் வழி மொட்டை அடித்து துறவியாவோம் என மாறட்டும் அதனை செய்துவிட்டு அவர்கள் புத்தமத ஆலயங்களை கேட்கட்டும் திருமா புத்த மதத்திற்கு மாறமாட்டார் ஏன்? மாறினால் கொழும்பு […]

அழுகை அரசியல் ஆரம்பித்துவிட்டது

குஜராத் தேர்தலை வைத்து உங்கள் அரசியல் சண்டைக்கு எங்கள் நாட்டை ஏன் இழுக்குறீர்கள் என பாஜகவிற்கு பாக். கண்டனம் அட அவர்கள் சும்மாவே அழுவார்கள், இனி விடுவார்களா? உலகெல்லாம் சென்று அழுவார்கள். மோடியின் அழுகையினை விட பாகிஸ்தானின் அழுகை மகா கொடூரமாக இருக்கும் பொறுத்து பாருங்கள் ஆக அழுகை அரசியல் ஆரம்பித்துவிட்டது