பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கந்துவட்டி சாவு சினிமா உலகில் …

நெல்லை கந்துவட்டி கொடுமை சில உயிர்களை பறித்த வலி ஆறா நிலையில் அடுத்த கந்துவட்டி சாவு சினிமா உலகில் நடந்திருக்கின்றது தயாரிப்பாளர் அசோக்குமார் என்பவர் வட்டி கொடுமையால் தற்கொலை செய்திருக்கின்றார் இது எதனை காட்டுகின்றது என்றால், நெல்லையில் நடந்த பரிதாப கொடுஞ்சாவு கொஞ்சமும் அரசின் மனசாட்சியினை உலுக்கவில்லை, எந்த கடும் நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்பதை காட்டுகின்றது. இப்பொழுது அசோக்குமாரின் வாக்குமூல கடிதம் சுட்டிகாட்டும் அன்புசெழியன் என்பவர் ஜி.வி தற்கொலையிலே கடுமையாக குற்றம்சாட்டபட்டார் ஆனால் அப்பொழுது சசிகலா ஜெயலலிதா […]

அ.தி.மு.க. அணி இணைப்பில் ஏமாந்து போனவர் ஓ.பி.எஸ். இன்னும் சில ….

கடை வாடகையை சென்னை மாநகராட்சி உயர்த்தியதை ரத்து செய்யக்கோரும் லதா ரஜினிகாந்தின் டிராவல் எக்சேஞ்ச் ஏஜென்சி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இந்த அம்மணிக்கு பிடிக்காத ஒரே வார்த்தை வாடகை போல, எங்கு சென்றாலும் வாடகை கொடுக்கமாட்டேன் என அடம் பிடிக்கின்றது இப்பொழுது கோர்ட்டுக்கே சென்று முகத்தில் கருப்பு மை வாங்கி இருக்கின்றது. ரஜினி மட்டும் சம்பளத்தை கூட்டி கொண்டே செல்லலாம், ஆனால் வாடகை மட்டும் கூடவே கூடாது என்பது அம்மணியின் கொள்கைகயில் ஒன்று ரஜினி ஏன் […]

இன்று உலக மீணவர் தினம்

இன்று உலக மீணவர் தினம், உலகெல்லாம் கொண்டாடுகின்றார்கள் தமிழகத்தில் தமிழிசை தலமையில் ஆரம்பித்துவிட்டார்கள். சமீப காலமாக அக்கா அமைதியாகிவிட்டார் என நினைத்தால் அக்கா மீணவர் நாளை எப்படி கொண்டாடுவது என்ற திட்டத்தில் இருந்திருக்கின்றார் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது அக்கா இன்று காலை தன் அடிப்பொடிகளுடன் மெரினா சென்றுவிட்டார், ஒரு திருக்கை மீனை அவர் எடுத்துகொள்ள அவரின் அடிப்பொடிகள் ஆளாளுக்கு ஒன்றை எடுத்து போஸ் கொடுத்தார்கள் தன் திரு கையில் திருக்கை மீனோடு நின்றார் தாமரை இருக்கை தலைவி. […]

என்னய்யா பத்மாவதி சிக்கல்?

என்னய்யா பத்மாவதி சிக்கல்? அதே கதையினை சித்தூர் ராணி பத்மினி என என்றோ படமாக எடுத்துவிட்ட தமிழகம் இது வட இந்தியரால் இப்பொழுது கூட‌ முடியவில்லை திராவிட பூமி என்றால் சாதாரணம் அல்ல. இங்கு ஏற்பட்டிருக்கும் புரட்சி அப்படி. கோவை என்றால் விஞ்ஞானி ஜி.டி நாயுடு போன்றவர்கள், பெரும் தொழிலதிபர்கள் எல்லாம் இனி நினைவுக்கு வர கூடாதாம் ஜக்கி சாமி என்பவர்தான் நினைவுக்கு வரவேண்டுமாம் இந்தியா பக்கம் வந்துவிட்டு திரும்பிய அலெக்ஸாண்டர் இது சாமியார் தேசம் என […]

புலிகள் கொடி அறிமுகபடுத்தியபொழுது சீமான் எங்கிருந்தார்?

அமைதிபடை வெளியேறிய பின் ஈழத்தின் ஏகபோக சக்தியான புலிகளின் கொடி எங்கும் பறந்தது யாழ்பாண அரசராக முடிசூடிகொண்டார் பிரபாகரன், அரசன் ஆனால் போதுமா கொடிவேண்டாமா? ஏற்கனவே இருந்த புலிகளின் கொடியில், விடுதலை புலிகள் என்ற பெயரை எடுத்துவிட்டு இதுதான் இனி ஈழத்திற்கே கொடி என அறிவித்தனர் இதே நவம்பர் 21ல் அறிவித்தனர் அங்கிளுக்கும் அவர் பின்னால் உள்ள மங்கிகளுக்கும் இது தெரியாது என்பதில் ஆச்சரியமில்லை, அவர்களுக்கு எதுதான் தெரிந்தது? (சொல்லிவிட்டோம் அல்லவா? இன்னும் கொஞ்ச நேரத்தில் குதிப்பார்கள், […]

ஜோதி நிர்மலா என்றொரு கலெக்டர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்பு ஜோதி நிர்மலா என்றொரு கலெக்டர் இருந்தார், 2003ம் ஆண்டுகள் வாக்கில் இருந்தார் வைகுண்டராஜனின் முறைகேடான மணல் கொள்ளையினை முடக்கி அவர் ஆலைக்கே சீல் வைத்த முதல் நபர் அவர்தான் கன்னியாகுமரியில் அவர் இருக்கும் வரை ஒரு ஸ்பூன் மண் அள்ளமுடியாமல் மணல் கும்பல் தவித்தது தென்னகை கடற்கரை எல்லாம் வைகுண்டராஜனின் அரசாங்கம், அவரின்றி அலையும் அடிக்காது என மிகுந்த இறுக்கமான காலங்களில் மிகதுணிச்சலான அதிரடிகாட்டியவர் அந்த ஜோதி நிர்மலா அதன் பின் சில […]

கச்சதீவினை கொடுத்தபொழுது கலைஞர்

இந்திரா கச்சதீவினை கொடுத்தபொழுது கலைஞர் எதிர்க்கவில்லை : அதிமுக அறிவாளி அமைச்சர்கள் கலைஞராவது சில தீர்மானங்களை நிறைவேற்றினார் ஆனால் அன்று எதிர்கட்சி என சொல்லிகொண்டிருந்த ராமசந்திரன் என்ன செய்தார்? தமிழக மீணவர் நலனுக்கு அவர் என்ன செய்தார்? “மீணவ நண்பன்” படத்தில் நடித்துகொண்டிருந்தார், அந்த பயங்கரமான மேக் அப்ப்பில் லதாவுடன் ஆடிகொண்டிருந்தார் அதுவும் நேரம் பவுர்ணமி நேரம் என அவர் லதாவுடன் ஆடிய ஆட்டம் எல்லாம் சும்மா அல்ல‌ அவர்கள் தலைவி ஜெயலலிதா அன்று என்ன செய்துகொண்டிருந்தார் […]

சன்டிவியில் பன்னீர் செல்வமும் ஜெயா டிவியில் துரைமுருகனும்

  சன்டிவியில் பன்னீர் செல்வமும், ஜெயா டிவியில் துரைமுருகனும் பேசுவதாக செய்திகள் வருகின்றன‌ சசிகலா மீதான ரெய்டுகள் இன்னும் அதிகமானால் சி.ஆர் சரஸ்வதி சன் டிவியிலும், அன்பழகன் போன்றோர் ஜெயா டிவியிலும் ஒப்பாரி வைப்பார்கள் ஏன் என்றால் அப்படித்தான் ஒரு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கே பல ரகசிய ஒப்பந்தகள் நடக்கும் தமிழகத்தில், மாநில முதல்வர் பதவிக்கு என்னென்ன எழுதபடா ஒப்பந்தங்கள் எல்லாம் நடந்திருக்கும்? விலகி இருந்து அடித்துகொள்வது போல சீறுவதும், டெல்லி களமிறங்கபார்த்தால் ஒன்றாக நின்று டெல்லியினை […]

அப்படி என்ன சொல்லி விட்டார் வைரமுத்து?

அப்படி என்ன சொல்லி விட்டார் வைரமுத்து? முற்றிய நெல் குனிந்து நிற்கும் என மோடியினை பற்றியும், நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தாற் போல் என நிர்மலா சீத்தாராமன் பற்றியும் சொல்லிவிட்டார். அவர் கலைஞர் அபிமானி என்பதால் மத்திய அரசைபற்றி கவி புனையகூடாதா என்ன? “கவிதைக்கு பொய் அழகு” என என்றோ சொல்லிவிட்டவர்தான் அவர், பின்னும் ஏன் அதனையே சீரியசாக பேசிகொண்டிருக்கின்றார்கள்? கவிஞர்கள் தொழிலே அக்காலத்திலிருந்து இப்படி பொய்யாக பாடுவதுதானே? இதில் என்ன குறை கண்டார்கள்? மிசாவில் […]

உணர்ச்சி போய்விட்ட இனமாயிற்று தமிழினம்

ஒரு வழியாக கிட்டதட்ட 37 ஆண்டுகாலம் ஜிம்பாப்வேயினை ஆட்சி எனும் பெயரில் நாசம் செய்த முகாபேயினை கழுத்தை பிடித்து தள்ளிவிட்டார்கள், புது அதிபர் விரைவில் நியமிக்கபடுவாராம் சரி இந்த முகாபே என்ன ஆவார் என்றால் அவரை நாடு கடத்திவிடுவார்களாம், அதாவது ஏற்கனவே அடுத்த நாட்டில் அவர் குவித்து வைத்திருக்கும் சொத்துக்களை அனுபவிக்க கிளம்பிவிடுவார் உள்நாட்டில் அவர் குவித்த சில சொத்துக்களை அரசு எடுத்துகொண்டு , மீட்டதாக அறிவித்துவிடும் தென்னாப்ரிக்கா, ஜிம்பாப்வே எல்லாம் வெள்ளையன் மிக வளமாக வைத்திருந்த […]