பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உனக்காய் காத்திருக்கின்றது தமிழகம்

தான் பெற்ற முதல் பிள்ளை வாழ்ந்தோங்கி நிற்பதை காண வந்த தந்தையாக, தான் நீர் ஊற்றி வளர்த்தமரம் வியாபித்து நிற்பதை கண்ட விவசாயியாக கிட்டதட்ட 1 வருடம் கழித்து முரசொலி அலுவலகம் வந்திருக்கின்றார் கலைஞர் அதனை கண்டாலே ஒரு புது உற்சாகம் பிறக்கத்தான் செய்கின்றது. நிச்சயம் முரசொலியில் கலைஞர் எழுதியது உலக சாதனை கிட்டதட்ட 75 ஆண்டுகள் ஒருமனிதன் எழுதிகொண்டே இருக்க முடியுமா? அவரால் முடிந்தது. அந்த மாபெரும் சாதனையினை செய்தவர், அந்த சாதனை கூடத்திற்கு வந்த […]

சூரபத்மனை எந்த சாதி கைபற்ற போகின்றது ?

சூரபத்மனை எந்த சாதி கைபற்ற போகின்றது என்பதுதான் இப்போது மிகபெரும் கேள்வி சூரவதம் திருச்செந்தூரில் நடந்ததது என்பதால் நாடார்களுக்கு முன்னுரிமை கிடைக்கலாம். பகுத்தறிவின் உச்சியில் தேவர் அசுரர் சண்டை இனி சாதிய சண்டைகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது

யார் மேலிடம்?

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அதிமுக மேலிடம் முடிவு செய்யும்: பன்னீர் சரி யார் மேலிடம்? சசிகலா அணி அதிமுகவில் இல்லை என இவர்கள் சொல்லிவிட்டார்கள், இவர்கள் அணியில் இவரும் பழனிச்சாமியும்தான் மேலிடம் இவர்களே மேலிடம் முடிவு செய்யும் என்றால் ஆக இன்னொரு மேலிடம் இருக்கின்றது ராமசந்திரனுக்கே நூற்றாண்டுவிழா கொண்டாடுவார்களாம், ஜெயா பிறந்த நாள் கொண்டாடுவார்களாம், அவர் சமாதியில் உருளுவார்களாம் ஆனால் தீபாவளி கொண்டாட பகுத்தறிவு தடுக்குதாம் நல்ல பகுத்தறிவாதிகள் என்றால் ராமசந்திரனுக்கு ஏன் […]

கமல் காமெடிகள்

இன்று: பணமதிப்பு நீக்கம் கறுப்பு பணத்தை ஒழிக்கும் என்பதால் மோடியின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால் திட்டம் தோல்வி என்பதால் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன் : கமலஹாசன் நாளை: பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களின் திறமையும் , அறிவும் தெரியாமல் பேசிவிட்டேன், இனி அவர்களை எதிர்க்க மாட்டேன். மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் : கமலஹாசன் கமல் கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை: தமிழிசை அதாவது இவரின் கருத்துக்களான விரைவில் தாமரை மலரும், கோட்டையில் காவி கொடி பறக்கும் […]

வீரப்பனால் யாருக்கு லாபம்?

அன்று பெங்களூர் மிக மிக பரபரப்பாக இருந்தது, காரணம் மாநில சட்ட ஒழுங்கு பிரச்சினையை காக்கும் பொறுப்பு கூடுதலாக மத்திய அரசின் படைகளும் குவிக்கபட்டிருந்தன, காரணம் 1986ம் ஆண்டின் சார்க மாநாடு பெங்களூரில் நடைபெற்றது, சிங்களர்களின் “ராஜகுரு ஜெயவர்த்தனே” வருகிறார், புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் இருக்கிறார், எப்படி இருக்கும் நிலமை? காவல்துறையில் அந்த தீவிரபரபரப்பில் ஒரு கைதி கர்நாடக சிறையில் இருந்து தப்புகிறார், அவரைபற்றி அன்று அதிகம் யாருக்கும் தெரியாது, கன்னட எல்லையில் ஒரு கொலைகுற்றவாளி […]

அதிமுக 46ம் ஆண்டுவிழா கொண்டாட்டம்

அதிமுக 46ம் ஆண்டுவிழா கொண்டாட்டம் இனி ஜென்மத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்துகொண்ட அதிமுகவினர் இப்பொழுதெல்லாம் கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டனர் மரத்தின் உச்சிக்கு சென்ற குரங்கு , இறங்கும் முன் கிளையினை ஆட்டுவது போல் ஆட்டிகொண்டிருக்கின்றனர் ஜெயா செத்து இரு மாதம் கூட நிறைவடையா நிலையில் ராமசந்திரன் நூற்றாண்டு விழா என ஒரே அழிச்சாட்டியம், இப்பொழுது 46ம் ஆண்டு விழாவாம் கவனியுங்கள் கட்சி தொடங்கி 46 வருடம் ஆயிற்று, அது தொடங்கபட்ட 5 வருடத்தில் ஆட்சிக்கு வந்தது […]

எதற்கு விடுதலை? விஜயினை இன‌ முதல்வராக்கவா?

உலகின் அறிவான இனம் என 3J என ஒரு காலத்தில் சொல்வார்கள், Jews, Japanese , Jaffna (யாழ்பாணம்) அதில் நாங்களும் ஒன்று என மார்தட்டிகொண்டிருந்தது யாழ்பாணம் அதில் கொஞ்சம் உண்மையும் அன்று இருந்தது, கல்வியில் அவர்கள் சிறந்து விளங்கினார்கள், உலகெல்லாம் பெரும் பதவியில் அமர்ந்தார்கள், இன்றும் உலக பெரும் கோடீஸ்வரர்களில் ஈழதமிழர் உண்டு நினைத்தால் பணம் கொடுத்தே இஸ்ரேலிய லேண்ட் பேங்க் பாணியில் அவர்கள் ஈழம் வாங்கியிருக்கலாம், சாத்தியம் இருந்தது. ஆனால் ஏனோ செய்யவில்லை அப்படிபட்ட பெரும் […]

துரோகிகளால் கட்டப்பட்டதா தாஜ்மகால்?

துரோகிகளால் கட்டப்பட்டதா தாஜ்மகால், பாஜக எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை இந்த ஈழபுலிகள் தொடங்கி வைத்த துரோகி எனும் வார்த்தை, சீமானிடம் வந்து இப்பொழுது வட இந்தியாவிற்கும் சென்றுவிட்டது யாருக்கு யார் துரோகம் செய்தார் என பாஜக எம்.எல்.ஏ சொல்லவில்லை ஒருவேளை இவரின் முப்பாட்டி யாரையேனும் ஷாஜகான் தாஜ்மகால் ஆசைகாட்டி மோசம் செய்திருப்பாரோ.. சே சே இந்த தமிழ் பத்திரிகைகளை படித்து புத்தி அப்படியே சிந்திக்கின்றது. அப்படி எல்லாம் இருக்க முடியாது. எனினும் தாஜ்மஹாலுக்கு உரிய காவலை பலபடுத்துவது […]

ஏண்டா உன்னை டெங்கு கொசு கட்டிக்கல‌?

அடிக்கடி நம்மை கண்காணித்து கொண்டும் அடிக்கடி கேள்விகள் கேட்டும் கொண்டிருந்த அந்த தும்பிகளில் ஒன்று சீறியது “அண்ணே, கட்டபொம்மன் வழிப்பறி வந்தேறி கொள்ளைக்காரன், அவன பத்தி எழுதினது தப்புண்ணே அப்படியா? அவர் எங்கே கொள்ளையடித்தான் அண்ணே திருவைகுண்டம் நெல்குடோனை எல்லாம் கொள்ளையடித்தான், கொள்ளக்கார பய அதான் வெள்ளையன் தூக்குல போட்டான் ஏண்டா திருவைகுண்டம் லண்டனிலா இருக்கு? இல்லண்ணே நம்ம நெல்லை பக்கம் அத கொள்ளையடிச்சி யாருக்கு கொடுத்தான் நம்ம பாஞ்சாலகுறிச்சி மக்களுக்குண்ணே கட்டபொம்மன் அடிச்சது கொள்ளைண்ணா ஈழத்துல […]

முதல்வர் பழனிச்சாமிக்கு கருப்பு பூனை பாதுகாப்பு : செய்தி

முதல்வர் பழனிச்சாமிக்கு கருப்பு பூனை பாதுகாப்பு : செய்தி பொதுவாக பெரும் தீவிரவாத இயககத்தின் இலக்கில் இருப்பவர்களுக்குத்தான் கருப்பு பூனை பாதுகாப்பு கொடுப்பார்கள், பழனிச்சாமிக்கு என்ன மிரட்டல்? சொந்த கட்சியினரை தவிர யாரும் அவரை திட்டியதாக தெரியவில்லை, ஆக உலகிலே சொந்த கட்சியினருக்கு அஞ்சி கருப்பு பூனை பாதுகாப்பு கொடுக்கபட்ட ஒரே முதல்வர் பழனிச்சாமிதான் இதுதான் சாக்கு என எவனாவது அஜீத்தின் ஆமை குஞ்சுகளில் ஒன்று, இது விஜய் ரசிகர்களுக்கு அஞ்சி செய்யபட்டிருக்கும் ஏற்பாடு என கொளுத்திபோட்டால் […]