பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கமல் குறித்து ரஜினி பேசியதின் அர்த்தம் என்ன‌ தமிழருவி மணியனின் விளக்கம்

கமல் குறித்து ரஜினி பேசியதின் அர்த்தம் என்ன‌ தமிழருவி மணியனின் விளக்கம் அதாகபட்டது சிவாஜி மணிமண்டப விழாவில் ரஜினி கமலைபற்றி பேசினார், வழக்கம் போல தலையினை பிய்த்ததுகொள்ள வைக்கும் பேச்சு அது. சிவாஜி கணேசன் இருந்தால் “அட கொப்புரான. நீ ஏம்ப்பா தமிழ் படிச்சே” என அழுதிருப்பார் அப்படி வழக்கம் போல பேசினார் ரஜினி இதற்குத்தான் அர்த்தம் சொல்கின்றாராம் தமிழருவி ரஜினி ஏதோ கம்பராமயாணம், குறள் போன்ற அழியா செய்யுளை அவ்வையார் பாணியில் சொல்லிவிட்டதை போல இவர் […]

தமிழக மக்கள் நடிகர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்: சீமான்

தமிழக மக்கள் நடிகர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்: சீமான் ஏம்பா, நீர் கூடத்தான் பல படங்களில் நடித்தீர், அப்படியானால் நடிகர் என்பதர்காகத்தான் ஒரு பயலும் வோட்டு போடவில்லையா? நடிகனுக்கு விழாத வோட்டு இயக்குநருக்கு மட்டும் விழுமா அங்கிள்? (இந்த படம் என்ன? பிரபாகரன் ஆட்சியில் ஈழத்தில் போலிஸ் கமிஷனாராக இருந்தபொழுது எடுத்ததா?)  

காசி முதல் சுற்றுலா இடமாம், மதுரா இரண்டாவதாம் !!

அந்த மாநிலம் பின் தங்கி இருக்கின்றது, குழந்தைகள் சிகிச்சையின்றி சாகின்றன, பெரும் மக்கள் தொகை பெருக்கமும் , அடிப்படை வசதிகளே இல்லா நிலையிலும் தத்தளிக்கின்றது. தாஜ்மஹால் அந்த மாநிலத்தில்தான் இருக்கின்றது, ஆண்டுக்கு 40 லட்சம் மக்கள் அதனை காண வருகின்றார்கள் என்கின்றது கணக்கு அதனை நல்லபடியாக பயன்படுத்தினாலே உபியின் ஒரு பகுதி சுற்றுலா தொழிலால் ஜொலிக்கும். நல்ல அரசு என்றால் அதனைத்தான் செய்யும் காசி முதல் சுற்றுலா இடமாம், மதுரா இரண்டாவதாம் காசி, மதுரா எல்லாம் புண்ணிய […]

தாஜ்மஹால் இந்திய அடையாளம் இல்லையா?

தாஜ்மஹால் இந்திய அடையாளம் இல்லை என்பதால் அது சுற்றுலா பட்டியலில் இருந்து நீக்கபட்டது : உபி அரசு அறிவிப்பு இந்த டெல்லி செங்கோட்டை சமுத்திர குப்தன் கட்டி வைத்ததா? அசோகரின் சக்கரம் குறிப்பது என்ன? புத்தமதம் நேபாள இறக்குமதி அல்லவா? எடுத்துவிடலாமா? மும்பையில் இன்றும் பல்லாயிரம் பயணிகளை தாங்கும் இன்றைய சிவாஜி ரயில் நிலையத்தை அன்றே விக்டோரியா டெர்மினல் என கட்டியது யார்? நாடாளுமன்றத்தை கட்டியது யார்? அது என்ன இந்திய அடையாளமா? இன்னும் ஏராளமான விஷயங்கள் […]

யஷ்வந்த் சின்கா மர்ம காய்ச்சலால் நிரம்ப பாதிக்கபட்டுள்ளார் போலும்

இந்த யஷ்வந்த் சின்கா எனும் பாஜக தலைவர் மர்ம காய்ச்சலால் நிரம்ப பாதிக்கபட்டுள்ளார் போலும் ஒரு மாதிரியாக பேசிகொண்டிருக்கின்றார், இந்தியாவில் எல்லாம் மோடியால் போயிற்று என்றார், இப்பொழுது காஷ்மீரை நாம் இழக்கபோகின்றோம் என சொல்லாமல் சொல்லிகொண்டிருக்கின்றார் அதாவது காஷ்மீரிகள் தங்களை இந்தியராக எண்ணவில்லையாம், அந்த அளவிற்கு நிலமை கெட்டு போயிற்றாம் காஷ்மீருக்கு இருக்கும் 370 சட்டபிரிவினை ரத்து செய்வோம் என அத்வாணி சொன்னபொழுது கைதட்டியவர் இவர்தான் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க கூடாது, தனி கொடி கூடாது […]

மோடி என்னைவிட சிறந்த நடிகர் : பிரகாஷ் ராஜ்

மோடி என்னைவிட சிறந்த நடிகர் : பிரகாஷ் ராஜ் அன்னாருக்கு என்ன ஆயிற்றென்று தெரியவில்லை, இப்பொழுதெல்லாம் அரசியல் நிறைய பேசுகின்றார். யார்தான் அரசியல் பேசவில்லை எல்லோருமே பேசுகின்றார்கள். பேசட்டும் மோடி இந்நாட்டிற்கு ஏதோ செய்ய நினைக்கின்றார். அதன் விளைவுகள் பின்னர்தான் தெரியும் என்றாலும் சில விஷயங்களில் அவரது அணுகுமுறை நன்றாகத்தான் இருக்கின்றது. சீனாவுடன் போரை தவிர்த்தது, பாகிஸ்தானை அமெரிக்காவிடம் இருந்து தனிமை படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றது. அரபு நாடுகள் எண்ணெய் சந்தையில் நாங்கள் வைத்ததுதான் சட்டம் […]

ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் : சீமான்

அரசியலில் வெற்றி பெற சினிமா புகழ், பணம் மட்டும் போதாது என்ற ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் : சீமான் அதிமுக ஆட்டம் கண்டதில் இருந்து, பாஜக இரும்பு பிடி போட தொடங்கியதில் இருந்தே அங்கிள் சைமன் பல விஷயங்களை வரவேற்க தொடங்கிவிட்டார் “ஏய் முழியாங்கண்ணா, நீர் நேரத்திற்கு ஏற்றபடி எப்படி எல்லாம் டைப் டைப்பாக முழியினை மாற்றுவீர் என்பது தெரியாதா?”  · சிவாஜி நினைவக திறப்பு விழாவில் ஒ.பன்னீர் செல்வத்துடன் ரஜினி, கமலும் பங்கு பெற்றனர் ஆக […]

மேட்டூர் அணை விவசாயத்திற்காக திறப்பு

மேட்டூர் அணை விவசாயத்திற்காக திறப்பு காவேரி என சீறும் எவனையும் இப்பொழுது காணமுடியாது, சிலருக்கு கடும் வருத்தம் கூட இருக்கலாம். அது வராமல் இருந்தால் கன்னடன் ஒழிக, இந்தியா ஒழிக என குதிப்ப்பார்கள், வந்துவிட்டால் சத்தமே இருக்காது இதில் கவனிக்கவேண்டிய விஷயம் , கல்லணை தாண்டி எவ்வளவு நீர் இனி வீணாக கடலுக்கு செல்லும் என்பதைத்தான். ஒரு சொட்டு நீர் கடலுக்கு சென்றாலும் அது நிச்சயம் தலைகுனிவுதான். எப்படியோ, காவேரி பிரச்சினையினை தீர்த்து வைக்கும் சக்தி வருணபகவானை […]

ஜெயாவினை பற்றி மகளிர் பேசினால் அதன் சக்தியே தனி

அப்பொழுது திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி இருந்தது. தொகுதிதான் திருச்செந்தூர், நெல்லை,கன்னியாகுமரி என பிரிந்திருக்குமே தவிர மக்களின் இயல்பு ஒன்றுதான் வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் நடந்தது, ஜெயா அரசால் செய்யபட்ட படுகொலை என்றே செய்திகள் சொன்னது. சாத்தான்குளம் இடைதேர்தலில் ஜெயாவின் வலதுகரமாக சுழன்ற வெங்கடேச பண்ணணையார்தான், பின்பு கொல்லபட வேண்டிய ஆபத்தானவன் என அதே ஜெயா ஆட்சியில்  சுட்டும் கொல்லபட்டார். தென் மாவட்டங்கள் கொந்தளித்தபொழுது கலைஞரின் கணக்கு மிக கச்சிதமாய் இருந்தது. மனிதாபிமானம், இரக்கம், அரசியல் என எல்லாம் […]

தேசபிதா மகாத்மா காந்தி

அந்த மோகன்தாஸ் புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமான மனிதர், உணர்ச்சிவசபடாமல் அமைதியான மனதோடு சிந்தித்தால் அவர் ஒரு அற்புதமான பிறவி, அதனால்தான் உலகம் அந்த மனிதனை மனிதருள் சிறந்தவர் என கொண்டாடிகொண்டிருக்கின்றது. அவர்தான் தேசபிதா மகாத்மா காந்தி, உண்மையில் காந்தி என்பது அவரின் குடும்பபெயர், பின்னாளில் பாரத பெயராக நிலைத்துவிட்டது. கொஞ்சம் வளமான பிண்ணனி கொண்ட குஜராத்தி குடும்பம் அது, மாணவன் காந்தி ஒன்றும் படிப்பில் சூரர் அல்ல, சராசரிதான். பின்னாளில் 18ம் வயதில் லண்டனுக்கு வழக்கறிஞருக்கு படிக்க […]