பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஜினியும் கமலும் பாஜகவுக்கு பாதை போடுகிறார்களா? : கி.வீரமணி

ரஜினியும் கமலும் பாஜகவுக்கு பாதை போடுகிறார்களா? கி.வீரமணி அறிக்கை நாளையே பெரியார் சொத்துக்கள் அரசுடமை என்றால் அதனை தடுக்க‌ இவர் ஐ.எஸ் இயக்கத்தையும் ஆதரிக்க தயார். ஆனால் இவர்தான் ரஜினியினை கமலை விமர்சிக்கின்றாராம். பெரியார் நூல்களை கூட அரசுடமை ஆக்க மனமில்லாத இவர் பெரியாரின் வாரிசான கொடுமைதான் ரஜினி கமல் எல்லாம் பாதை போடுவது அதனை மறைத்துவிட்டு என்னவெல்லாமோ பேசுகின்றார்.

ஜெயாவிற்கான நியாயத்தினை திமுகத்தான் பெற்றுகொடுக்க போகின்றது

“ஒரு சபதம் செய்கின்றேன், என் வாழ்நாளில் திமுகவினை பூண்டோடு அழிப்பேன்..” என அருகிருந்த சசிகலா மீது சத்தியம் செய்யாத குறையாக முழங்கினார் ஜெயலலிதா இன்று அவர் இல்லை, அதனை விட பரிதாபம் அவர் மரணம் மீதான ரகசியம் அவர் கட்சிகாரர்களாலே மறைக்கபடுகின்றது அந்த பரிதாபத்திற்குரிய ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை திமுகவின் மு.க ஸ்டாலின் பட்டியல் இட்டு கேள்விகள் கேட்கின்றார். சாதரணமாக கடந்துபோக கூடிய கேள்விகள் இல்லை அவை, எந்த நீதிபதியும் தயக்கமின்றி ஏற்றுகொள்ள கூடிய கேள்விகள். […]

திருமுருகன் காந்தியினை மறுபடியும் அள்ளிகொண்டு சென்றிருக்கின்றார்கள்

திருமுருகன் காந்தியினை மறுபடியும் அள்ளிகொண்டு சென்றிருக்கின்றார்கள் அதாவது வைகோவிற்கு ஐநா சபையில் சிங்களர் கொடுத்த நெருக்கடி காரணமாக இங்கொரு கும்பல் சென்னை இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டது இங்கு திருமுருகன் காந்தியும் சென்றிருக்கின்றார், சென்று சத்தம் போட்டுவிட்டு அருகில் டீகடையில் டீ குடித்துகொண்டிருந்தபொழுது போலிஸ் அமுக்கிவிட்டது அதற்குள் இங்கு டீ குடித்தது குற்றமா? என சில குரல்கள், டீ என்ன அங்கு நின்றுகொண்டு பஞ்சாமிர்தம் உண்டாலும் தூக்கத்தான் செய்வார்கள். ஒரு விஷயம் கவனிக்கதக்கது இந்த திடீர் போராளிகள் எல்லாம் […]

கானா பாடலை சாடிய சீமான்

கானா பாடலை சாடிய சீமான் மீது, சென்னைவாசிகள் கடும் கோபம், பலத்த கண்டனம் : செய்தி அதாகபட்டது சினிமா கானா பாடல்கள் தமிழை கெடுக்கின்றன, நரிகுறவ பாஷை போலாக்கிவிட்டது என அங்கிள் சீறினாராம். கானா என்பது சென்னையின் அடையாளம். பல மொழிகள் பேசபடும் நகரம் என்பதால் அதில் மொழிகலப்பு இருக்கலாம். ஆனால் இது சென்னை மண்ணின் தன்மை. கானா பாடல் சென்னை சொத்து என சீறுகின்றார்கள். அதோடு நிறுத்தினாலும் பரவாயில்லை, அடுத்து சொல்வதுதான் அங்கிள் சைமன் சயனைடு […]

ஆயுத பூஜை மோசடி என பொங்கும் பெரியாரிஸ்ட்டுகள்..

இந்த பெரியாரிஸ்டுகள் , சில பகுத்தறிவு வாதிகள் எல்லாம் ஆயுத பூஜை மோசடி என பொங்க ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது தமிழ்நாட்டில் பூஜை விழா என்று ஒன்று கிடையவே கிடையாதாம், எல்லாம் மோசடியாக புகுத்தபட்டதாம். சங்க காலத்திலே இந்திர விழா என்று ஒருவிழா, அதுவும் புத்தமதம் கோலோச்சிய காலத்திலே தமிழகத்தில் கொண்டாடபட்டது சிலப்பதிகாரத்திலே உண்டு, பூந்தொடை விழா என குழந்தைகளை குருகுலத்தில் சேர்க்கும் விழா அது. அதுதான் இன்றைய விஜயதசமி. ஆக அன்றே இம்மாதிரியான விழாக்கள் இத்தேசம் முழுக்க […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 5

நாட்டில் குழப்பம் நடக்கும்பொழுது அந்நிய நாடுகள் அதனை பயன்படுத்தி படையெடுக்கும், நெப்போலியன் காலத்திலும் அதுதான் நடந்தது. பிரிட்டன் டூலன் நகரை பிரிட்டனிடமிருந்து மீட்டாலும், ஐரோப்பிய நாடுகள் பிரான்சின் மீது எப்பொழுது பாயலாம் என குறித்துகொண்டிருந்தன, நெப்போலியன் அப்பொழுது வெறும் கமாண்டர், பத்தோடு ஒன்று என்பதால் அவனை ஐரோப்பாவில் யாருக்கும் தெரியாது. குழப்பமான நிலையில் இருந்த‌ பிடித்துவிடலாம் என அவர்கள் திட்டமிட்டுகொண்டே இருந்தார்கள். நெப்போலியனுக்கோ ஜோசப்பின் கிறுக்கு உச்சத்தில் இருந்தது, கவிதை எழுதினான் அவளோடு சேர்ந்த் ரோஜா செடி […]

பெங்களூரு மேயராக தமிழர் தேர்வு

பெங்களூரு மேயராக தமிழர் தேர்வு இந்திய ஒருமைபாட்டிற்கு இது நல்ல எடுத்துகாட்டு, வாழ்த்துக்கள். தமிழனை இந்தியாவெங்கும் அடிக்கின்றான் என ஒப்பாரியிடும் கூட்டம் இப்பொழுதெல்லாம் பேசாது ஏம்பா சீமான், தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும், பெங்களூரை பெங்களூர்காரன் ஆளவேண்டும் அதனால் இவர் ராஜினாமா செய்யவேண்டும் என இப்பொழுது சொல்லுங்கள் பார்க்கலாம். சூன்யம் வைத்தல், மண் சோறு உண்ணுதல், இலையில் புரளுதல், தீ மிதித்தல் இன்னபிற மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கர்நாடகாவில் புதிய சட்டம் கர்நாடகாவில் இப்பொழுதெல்லாம் ஒரு மவுன புரட்சி […]

அரசு பொது மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு முரசொலிமாறனுக்கு சிகிச்சை என்றால் அமெரிக்காவிலும், தனக்கு சிகிச்சை என்றால் லண்டனிலும், தன் தந்தைக்கு சிகிச்சை என்றால் காவேரியிலும் என சென்று கொண்டிருந்த ஸ்டாலின், டெங்கு புண்ணியத்தில் அரசு மருத்துவ மனைக்கு வந்துவிட்டார் டெங்கு விவகாரம் தொடர்பாக அரசின் சிகிச்சை நடவடிக்கைகளை கண்டறிய தானே நேரில் ஆய்வு செய்துவிட்டார் மு.க ஸ்டாலின் இது இனி ஒவ்வொரு துறையாக நடக்கலாம். ரேஷன் கடைகள் முதல் பல இடங்களின் இனி ஸ்டாலின் […]

ஜெயா சாவு தொடர்பாக விசாரணை நடக்கின்றது

ஜெயா சாவு தொடர்பாக விசாரணை நடக்கின்றது. ஒரு விசாரணை நடக்கும்பொழுது தகவல்கள் கண்டிப்பாக அந்த கமிஷனிடம் மட்டுமே கொடுக்கபட வேண்டும், அப்படி செய்யாமல் தனியாக தகவல்களை வெளியிடுவது தண்டனைகுரிய குற்றம். அந்த மிக பெரும் குழப்பத்திற்குரிய , கண்டிக்க கூடிய காரியத்தினை புதிய தலைமுறை டிவி செய்கின்றது. இது நிச்சயம் கண்டிக்கதக்கது. தன்னிடம் இருக்கும் தகவலை கமிஷன் முன் சொல்லலாம், அல்லது நீதிபதிகள் முன் சொல்லலாம் மாறாக மகா முக்கிய விசாரணையில் இப்படி செய்தி வாசிப்பது திசை […]

குறவர்களை பற்றி அங்கிள் சைமன்

குறவர்களை பற்றி ஏதோ அங்கிள் சைமன் சொல்லியிருக்கின்றார் என சர்ச்சைகள் வருகின்றன. தமிழை கேவலம் குறவர் தமிழாக மாற்றிவிட்டார்கள் என அங்கிள் குறைபட்டுகொண்டாராம். குறவர்கள் என்பவர்கள் யார்? குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த தமிழர்கள் குறவர்கள் என அழைக்கபட்டனர். அவர்கள் பேசியதும் தமிழே. இன்று அவர்கள் பேசுவதும் தமிழின் திரிபே, ஆதிகால தமிழ் அந்த சாயலில்தான் இருந்தது.. அவர்களும் நிச்சயமாக தமிழர்களே. குற்றால குறவஞ்சி எனும் காவியமே தமிழில் உண்டு. அவ்வளவு ஏன் முப்பாட்டன் முருகனே வள்ளி எனும் […]