பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

செப்டம்பர் 22, 2016

காமராஜர் இறந்தார், அய்யா மதியம் சிறுகீரை குழம்பு வச்சி சாப்ட்டாக, அதற்கப்புறம் படுக்க போனாக, நெஞ்சி வலிக்குது, டாக்டர் சவரிய கூப்பிடுனாக , அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சி போச்சி என அழுதார் சமையல்காரன் வைரவன். இரவு இட்லி சாப்பிட்டுவிட்டு பால் குடித்துவிட்டு படுத்தார் எம்ஜியார், 3 மணியளவில் பார்க்கும்பொழுது இறந்திருந்தார் என அன்று அழுதுகொண்டிருந்தார் ஜானகி இப்படியெல்லாம் தலைவர்கள் சாகும்பொழுது முதலில் அழுவது அவர்களின் சமையல்காரர்கள் அடுத்துதான் எல்லோரும் ஆனால் ஜெயாவிற்கு என்ன நடந்தது என இறுதிவரை […]

பன்னீர் செல்வம் என்பவர் சுத்த மோசம்…

இந்த பன்னீர் செல்வம் என்பவர் சுத்த மோசம். வழக்கம் போல தர்மயுத்தம் தொடர்பாக ஏதோ பேசியிருப்பார் என அவர் செய்தியினை படித்துவிட்டு மகா சிக்கலில் இருக்கின்றேன். அவர் சொன்னதை கேட்டு கத்தி, ஓஓ என சிரித்து அதுவும் தாளாமல், உருண்டு புரண்டு சிரித்ததில் இருக்கையும் மேஜையும் அல்லோல பட்டுவிட்டது. எல்லாம் அடுக்கி வைத்துகொண்டிருக்கின்றேன் எல்லோரும் ஒரு மாதிரி பார்த்துவிட்டார்கள், இனி எப்படியெல்லாம் விசாரணை வருமோ தெரியாது. ஒரு சிலர் இன்றே தர்காவிற்கு அழைத்து செல்வது போல பரிதாபமாக […]

“பேரறிவாளனின் வாழ்க்கை ஓர் இனத்தின் வரலாறு” : இயக்குநர் வெற்றிமாறன்

“பேரறிவாளனின் வாழ்க்கை ஓர் இனத்தின் வரலாறு” : இயக்குநர் வெற்றிமாறன் ஓஹோ, அந்நிய நாட்டு தீவிரவாதி, தன் தேசத்து தலைவனை கொலை செய்ய துணை போனதெல்லாம் வரலாறா? அது வரலாறென்றால், இந்த‌ வெற்றிமாறன் ஒரு அசிங்கமான துரோகத்தின் வரலாறு. இச்செய்திகளை வெளியிடும் விகடன் ஒரு தேசவிரோத வரலாறு. மிஸ்டர் வெற்றிமாறன், இந்த மலையூர் மம்பெட்டியான், ஆட்டோ சங்கர், வீரப்பர் எல்லாம் உங்கள் வரலாற்றில் வரமாட்டார்களா?

இனி மாதா கோவிலில் மெழுகுவர்த்தி பிடிப்பவனும் தியாகி ஆகலாம்…

அந்த திருமுருகன் காந்தி என்ன நாட்டிற்காக பல ஆண்டு சிறையில் இருந்துவிட்டா வருகின்றான்? ஏதோ சீனாவுடன் யுத்தம் புரிந்து அதில் அகபட்ட கைதி 14 வருடம் சிறையிருந்து வருவது போலவும், பெரும் தேசபக்தன் ஒருவன் சிறைமீள்வது போலவும் ஏகபட்ட பில்டப்புகள், என்ன கிழித்துவிட்டான் என்று இவருக்கு இவ்வளவு பில்டப்? சிறை சென்றுவிட்டாராம். ஆட்டோ சங்கர் கூட சிறையில்தான் இருந்தான், வீரப்பன் கூட்டாளிகள் இன்னும் சிறையில் இருக்கின்றனர். தேசத்திற்கு எதிரான வழக்கில் உள்ளே சென்றுவிட்டு வருபவருக்கு ஏன் ஆர்பாட்டம்? […]

ரஜினியினை எப்பொழுது பாராட்ட போகின்றீர் மிஸ்டர் சைமன்?

விஜயகாந்தும் நானும்தான் மக்களுக்காக கட்சி தொடங்கினோம், நான் அவரை மிக மதிக்கின்றேன் : சீமான் இப்படி ஒரு பல்டியினை யாராவது அடிக்க முடியுமா? ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீரர்களால் கூட முடியாது. அந்த விஜயகாந்தினை தெலுங்கன், வந்தேறி என்றெல்லாம் எப்படி எல்லாம் தூற்றினார் சீமான். அதுவும் விஜயகாந்த் கட்சியின் மைக்கேல் ராயப்பனை அதிமுக கவ்விகொண்டு போக, அப்பொழுது விஜயகாந்திற்கு பதில் கொடுத்தது எல்லாம் சீமான் தான். அதிமுக அப்பொழுது அமைதியாக இருந்தது, அதன் பிரதிநிதியாக கத்திகொண்டிருந்தார் சைமன். வைகுண்டராஜனை […]

காவேரியினை மீட்டதா? : தமிழிசை

காவேரி பிரச்சினைக்கு 18 ஆண்டுகள் மத்தியில் கூட்டணியிலும், பல ஆண்டுகள் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்தது? காவேரியினை மீட்டதா? : தமிழிசை அப்படி கேளுங்கள் அக்கா, அவர்கள்தான் துரோகிகள், சுயநலவாதிகள், தமிழகத்தை சீரழித்தவர்கள் அந்த 18 ஆண்டில் வாஜ்பாய் காலமும் உண்டு மேடம், அப்படியானால் பாஜகவும் காவேரியில் துரோகம் செய்தது என சொல்வீர்களா? சரி 3 ஆண்டுகளாக உங்கள் மோடி என்ன செய்கின்றார்? நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? கன்னடத்திலும் பாஜக ஆட்சி நடந்தது, காவேரியினை […]

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

இந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உட்பட பல வழக்குகளில் சென்னைக்கு புகழ்மிக்க வழக்கறிஞர்கள் எல்லாம் வருகின்றார்கள். கபில் சிபல் வருகின்றார், இன்னும் இந்தியாவின் முண்ணணி வழக்கறிஞர்கள் எல்லாம் வந்து ஆஜராகின்றார்கள். அழைத்துவருவது யார்? இங்குள்ள கட்சிகள். ஆனால் காவேரி வழக்கிற்கோ, அனிதா வழக்கிற்கோ இவர்களை அமர்த்தினார்களா என்றால் இல்லை. அங்கெல்லாம் தேங்காய் மூடி வக்கீல்களை வைத்து வாதாடிவிட்டு இங்கு குதிப்பார்கள். ஆனால் இவர்கள் வழக்கு என்றால் என்ன பணம் செலவழித்தும் பெரும் வக்கீல்களை அழைத்து […]

“ஏ வெள்ளையடிக்கபட்ட கல்லறைகளே…”

இயேசுநாதர் காலத்தில் இஸ்ரேல் நாடு ரோமர் ஆளுகையில் இருந்தது, அதனை எதிர்த்து பல கலகம் நடந்தது அதாவது கடவுளின் நேரடி மக்களான யூதர்களுக்கு கடவுளே அரசன், அவர் ஒருவருக்குத்தான் அவர்கள் வரி செலுத்தி வணங்கவேண்டும், அதனால் பலர் ரோமரை ஏற்க தயங்கினார்கள், பல கலவரம் நடந்தது. அப்பொழுது இயேசு போதித்துகொண்டிருக்க அவரிடம் கேட்டார்கள், “நாம் ரோமருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?” அது அவரை சிக்கவைக்கும் கேள்வி, வரி செலுத்துங்கள் என்றால் அவர் கடவுளை அவமதித்ததாகும், இயேசு […]

அய்யோ மிஸ்டர் ராகுல் காந்தி

வேலையில்லா திண்டாட்டத்தால் தான் மோடியும், டிரம்பும் பதவிக்கு வந்தனர்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு அய்யோ மிஸ்டர் ராகுல் காந்தி அமெரிக்காவினை விடுங்கள், ஆனால் இந்தியாவில் இதற்கு முன்பு ஆண்டது யார்? மம்மி வழிகாட்டலில் மன்மோகன் சிங் அல்லவா 10 ஆண்டுகள் ஆண்டார் அப்படியானால் மன்மோகன் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது என ஒப்புகொண்டுவிட்டீர்கள் என்றாகிவிடாதா? இப்படியா சிக்குவீர்கள் ராகுல்காந்தி… இதற்குத்தான் “அவர்” உடல்நலத்தோடு இருக்கும்பொழுதே கோபாலபுரத்தில் கோச்சிங் கிளாஸ் செல்லவேண்டும் என்பது.

எடப்பாடி புனித நீராடல்… சன்னிலியோன் மழை நீராடல்

“எந்த நதியில் மூழ்கினாலும் பாவம் போகாது” : முதல்வருக்கு எதிராகச் சீறுகின்றார் தினகரன் நாம் சற்றுமுன் சொன்னதை தினகரனும் சொல்லியிருக்கின்றார், அதாவது முதல்வர் பழனிச்சாமி புனித நீராடியதை அப்படி சொல்லியிருக்கின்றார். ஆனால் முன்பு கும்பகோணம் மகாமகத்தில் ஜெயா,சசிகலா குளிக்கபோய் ஏராளமானோர் செத்து, பலர் காயமடைந்து மருத்துவமனையில் இருக்க அவர்களை பார்க்க கூட செய்யாமல் திரும்ப வந்த அந்த பாவம் எந்த நதியில் மூழ்கினால் தீரும் என்பதை தினகரன் சொல்லவில்லை. பாவங்களை போக்கும் மகா புஷ்கரத்தில் எடப்பாடி பழனிசாமி, […]