பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆளாளுக்கு நீட் என புலம்புகின்றார்கள்…

ஆளாளுக்கு நீட் என புலம்புகின்றார்கள், கூட்டம் நடத்துகின்றார்களே தவிர, உருப்படியாய் போராட ஒருவரிடமும் திட்டமில்லை. முதலில் தூக்கி எறியபடவேண்டியது மாநில அரசு, அந்த இடத்தில் சரியான திராவிட பார்வை உள்ள அரசு அமைந்தால் ஒழிய நீட்டிற்கு தீர்வு இல்லை நிச்சயம் பாஜக இறங்கிவராது. தமிழக எதிர்ப்பால் அவர்களுக்கு ஒரு நஷ்டமுமில்லை. காரணம் இங்கு கட்சியே இல்லை, மக்கள் எப்படி எதிர்த்தால் அவர்களுக்கு என்ன? நிச்சயம் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு லாபமோ, நஷ்டமோ இல்லா சிக்கல் இது. நிலமை எல்லை […]

“ஆதி” என்பது என்ன வார்த்தை? தமிழ் வார்த்தை

ஆதித்தன் என்பது தமிழ்பெயரல்ல, அதனால் சி.பா ஆதித்தனார் தமிழர் அல்ல என மறுபடியும் ஒப்பாரி ஆதி என்றால் என்னவென்று கூட தெரியாமல்தான் தமிழகத்தில், தமிழ், தமிழர் என சொல்லிகொண்டிருக்கின்றார்கள் போல‌ “ஆதி” என்பது என்ன வார்த்தை? தமிழ் வார்த்தை. திருகுறளில் கூட வள்ளுவன் அதனைத்தான் சொல்கின்றார். ஆதி என்றால் தொடக்கம் , மூலம் என்று பொருள். இதனால்தான் வடமொழியில் சூரியன் ஆதித்யன் எனபட்டது, உலகின் மூலம் என்று அதன் பொருள். ஆதி எனும் தமிழ்வார்த்தையே சமஸ்கிருதத்தில் கலந்தது. […]

நவோதயா பள்ளி வந்தாவது தாய்மொழியினை காக்கட்டும்

 நவோதயா பள்ளிகளில் இந்திக்கு முக்கியத்துவம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு இவர் நடத்தும் பள்ளியில் முழுக்க முழுக்க ஆங்கிலம், இதனை எல்லாம் குற்றம்சாட்டுவது யார்? கேரளா, கன்னடம், தெலுங்கானா எல்லாம் இந்தி திணிப்பு ஆபத்தை புரிந்துகொண்டன, கட்டாய தாய்மொழி விஷயத்தில் இறங்கிவிட்டன. தாய்மொழி கற்பிக்காக கல்வி நிலையங்கள் இயங்கமுடியாது என்பது முதல் பெரும் நடவடிக்கையில் அவை இறங்குகின்றன. அவர்களின் மொழிபற்று வாழ்த்துகுரியது இவ்வளவிற்கும் தெலுங்கானா தவிர (அதுவும் காங்கிரஸ் அடிமைதான்) மற்ற இரண்டும் தேசிய கட்சி ஆளும் மாநிலங்களே, ஆனாலும் […]

கர்நாடகாவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

நான் சொன்னபடி கேட்டிருந்தால் சசிகலாவிற்கு இந்த வீழ்ச்சி வந்திருக்காது :டி.ஆர் ஆக டி.ஆர் சொற்படி கேளாமல் நாசமாய் போய்விட்டாராம் சசிகலா, இனி இருக்கும் அதிமுகவினராவது டி.ஆர் சொற்படி கேட்டு நடப்பது நல்லது. மிஸ்டர் டி.ஆர், இந்த சிம்புவிற்கு ஏதும் சொல்ல கூடாதா? கர்நாடகாவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கபட்டிருக்கின்றனர், அவர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறைக்கும் அந்த கோஷ்டிக்கும் தகறாறு நடக்கின்றது. அதில் ஒரு எம்.எல்.ஏ ஒரு ஒப்பந்தக்காரரை மிரட்டிய வழக்கில் காவல்துறையால் தேடபடுகின்றாராம், அவரும் […]

குஜராத்தில் ஜப்பான் பிரதமர்

கட்சிக்காரனுடன், ஆர்.எஸ்.எஸ் கும்பலுடன் நிற்கும்பொழுது கோட்சே வாழ்க, அவன் நாட்டுபற்றாளன் என எல்லோரும் பேசுவதை கேட்டு கைதட்ட வேண்டியிருக்கின்றது. இந்த வெளிநாட்டு இம்சைகள் வந்தால், அவர்களோடு காந்தியினை வணங்கவும் வேண்டியிருக்கின்றது என்ன பொழப்பு இது, ச்ச்சே.. என்னை மன்னியுங்கள் காந்திஜி, வெளிநாட்டுக்காரனுக்கு தெரியும் உங்கள் அருமை, உள்நாட்டுகாரனுக்கு தெரியவில்லை.   இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் , மோடியுடன் காந்தியின் சபர்மதி ஆசிரமம் சென்றார் (யோவ் நான் உங்க ஊருக்கு வரும்பொழுது எப்படி டிரம்ஸ் வாசித்துவிட்டு ஒழுங்கா […]

தமிழக அரசியல்வாதிகளின் அட்டகாச “”ஜிமிக்கி கம்மல்”நடனம்

https://www.facebook.com/225334524661553/videos/226556867872652/ தமிழக அரசியல்வாதிகளின் அட்டகாச “”ஜிமிக்கி கம்மல்”நடனம், அதிலும் சின்னம்மாவின் அபிமானங்கள் தனி கெத்து. மிக அட்டகாசமான நடனம் அங்கிள் சைமனுடையது. பார்த்துவிட்டால் குறைந்தது அரைமணிநேரமாவது தொடர்ந்து சிரிக்கலாம். நான் ஒருமாதம் சிரிப்பேன் போல… கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், வயிற்று பிரச்சினை உள்ளவர்கள் டாக்டரின் அனுமதியினை பெற்றுவிட்டு இந்த வீடியோவினை பார்ப்பது நல்லது.  

தமிழிசை : “லூசாப்பா நீ”

நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் அனிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் குமரி அனந்தன். இதனை பார்த்த தமிழிசை என்ன கேட்பார்? “லூசாப்பா நீ” (பிதாமகன் படத்தில் லைலாவின் தந்தை சொல்லும் வசனமான “லூசுதாம்மா..உன்னை மகளை பெத்த நான் லூசுதாம்மா” எனும் காட்சி உங்கள் நினைவுக்கு வரவே கூடாது.) வருகைப்பதிவேடு அழைப்பிற்கு மாணர்வர்கள் ‘ஜெய்ஹிந்த்’ சொல்லவேண்டும் : மபி மாநிலத்தில் சட்டம் வகுப்பிற்கு வராத மாணவர்கள் ஜெய்ஹிந்த் சொல்ல முடியாது, அதனால் அவர்கள் தேசவிரோதிகள் என அறிவிக்கப்ட்டாலும் ஆச்சரியமில்லை. போகிற […]

இம்மானுவேல் சேகரன் என்பவர் யார்?

சில விஷயங்களை சொல்வதற்கு மனசாட்சியினை கழற்றி எறிந்துவிட்டிருக்க வேண்டும், அல்லது சொந்த மூளையினை அடகுவைத்துவிட்ட தற்குறியாக இருக்கவேண்டும் அப்படிபட்டவர்கள்தான் இம்மானுவேல் சேகரன் நினைவுநாளில் காமராஜரை தூற்றிகொண்டிருக்கின்றனர். 1957ல், அந்த‌ தேர்தலில் முத்துராமலிங்க தேவரின் ஆதரவு பெற்ற சசிவர்ணதேவர் வெற்றிபெற்றிருந்தார். இதனை தொடர்ந்து இராமநாதபுரம் பக்கம் கலவரம் பரவியது, ஏன் பரவியது என்பதுதான் மர்மம். அதற்கு முன்பாக இம்மானுவேல் சேகரன் என்பவர் யார்? என்றால், அவரும் அப்பகுதிக்காரர் அன்றே ராணுவத்தில் இருந்தவர், படித்தவர். 7 மொழிகள் அவருக்கு தெரிந்திருந்தன. […]

காவேரியில் வெள்ளம், தமிழக‌ கரையோர மக்களுக்கு எச்சரிக்கை & மோர்…

போலி சாமியார்கள் பெயர் பட்டியலில் பாபா ராம் தேவ் பெயர் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது : காங்., மூத்த தலைவர் திக் விஜய் சிங் மிஸ்டர் திக் விஜய் சிங், நாங்களும் அந்த அதிர்ச்சியில்தான் உள்ளோம் நித்தி, ஜக்கி, பால் தினகரன், ஏஞ்சல் டிவி சாமியார், எஸ்ரா சற்குணம், ஜகீர் நாயக் போன்ற பல சாமியார்கள் பெயர் மிஸ்ஸிங். காவேரியில் வெள்ளம், தமிழக‌ கரையோர மக்களுக்கு எச்சரிக்கை “டெல்லி எசமான்களே, காவேரியில் வெள்ளம் வந்தாயிற்று. அங்கு […]

தினதந்தி அதிபர் பெயர் பா.ஆதித்தன்

கலைஞர் வந்தேறி, அண்ணா வந்தேறி இன்னும் ஏராளமானோர் உள்ள வந்தேறி வரிசையில் தினதந்தி ஆதித்தனாரையும் சிலர் சேர்த்துவிட்டனர் வழக்கமாக ஒருவருக்கு வந்தேறி பட்டம் கொடுப்பது சீமான் கோஷ்டிகள்தான், ஆனால் “தமிழர் தந்தை” என சிலர் சொல்லும் ஆதித்தனாரையே வந்தேறி என சொல்லி சீமானுக்கே கடுக்காய் கொடுக்க தொடங்கிவிட்டனர் சிலர். அதாவது ஆதித்தனார் குடும்பம் கேரளாவின் காயங்குளம் எனும் ஊரில் இருந்து இந்த தேரிகாட்டு காயாமொழிக்கு வந்தது என்பது அவர்கள் ஆராய்ச்சி முடிவாம். எப்படிபட்ட அபத்தம் இது? கொஞ்சமும் […]