பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழிசைக்கு கொலை மிரட்டல் : செய்தி

தமிழிசைக்கு கொலை மிரட்டல் : செய்தி தமிழிசைக்கா மிரட்டல்? தமிழிசையின் காமெடியினை ரசிக்க முடியாத அளவிற்கா தமிழகத்தில் நகைச்சுவை உணர்வு கெட்டு போயிற்று. இவரின் காமெடியினை கூட ரசிக்க முடியாமல் கொலை மிரட்டல் விடுவித்தவர்கள் நிச்சயம் மனநிலை பாதிக்கபட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும். எனினும் அந்த மனநிலை பாதிக்கபட்ட சைக்கோக்களிடம் இருந்து தமிழிசையினை காக்க வேண்டியது அரசின் பொறுப்பு. செப்டம்பர் 7-ம் தேதி முதல் திட்டமிட்டபடி தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது ஜெயலலிதா […]

மூத்த எழுத்தாளர் கல்புர்கி கொல்லபட்டார்

முன்பு மூத்த எழுத்தாளர் கல்புர்கி கொல்லபட்டார், இப்பொழுது கவுரி லங்கேஷ் எனும் பெண் எழுத்தாளர் சுடபட்டிருக்கின்றார். இதில் கல்புர்க்கி கொலையில் அடிப்படைவாத இந்துத்வா சக்திகள் இருப்பதாக சொல்லபட்டது, இப்பொழுது இப்பெண் எழுத்தாளர் கொலையிலும் அதே பெயர் அடிபடுகின்றது. தேசிய கட்சிகள் ஆட்சியில் இம்மாதிரி சில விஷயங்கள் நடக்கும் அபாயம் இருக்கும் போலும், மக்கள் உரிமைக்கான பிரச்சினைகளை எழுதுவர்கள் மீது தாக்குதல் நடத்துவது காட்டுமிராண்டிதனம் ஐ.எஸ், தாலிபான் ஆளும் நாடுகளில் நடக்கும் கொடூரம் இந்தியாவிலும் எட்டிபார்ப்பது முளையிலே கிள்ளி […]

கமலஹாசனை சந்தித்தார் நக்மா

கமலஹாசனை சந்தித்தார் நக்மா இந்த காங்கிரசுக்கு என்ன ஆனது? முன்பு ரஜினியினை சந்திக்க அனுப்பினார்கள், இப்பொழுது கமலஹாசனை சந்திக்க அனுப்பியிருக்கின்றார்கள். இந்த நக்மாவினை தூதாக அனுப்பினால் எப்படி இவர்கள் காங்கிரசுக்கு வருவார்கள்? இவர்களை காங்கிரசுக்குள் கொண்டுவர ஒரே ஒரு வழிதான் உண்டு. தலைவி குஷ்பூவினை தமிழக காங்கிரஸ் தலைவராக்கினால், இருவரும் அடித்து பிடித்து ஓடிவந்து சத்யமூர்த்திபவனில் நிற்பார்கள் அதனை செய்யாமல் எதனையோ செய்து காலத்தை வீணாக்குகின்றது டெல்லி காங்கிரஸ். தலைவி காட்டும் இந்த கைதான் காங்கிரசின் ஒரே […]

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு தன் 45 வருட காலத்தில் அதிமுக இப்பொழுதுதான் உருப்படியான போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருக்கின்றது. இப்பொழுதும் டெல்லி பழனிசாமி எனும் பொம்மலாட்டம் நடத்தவில்லையென்றால் இதுவும் இல்லை, எப்படியோ அந்த புகழ் மோடியினையே சேரும் வரலாற்றில் முதல் முறையாக மத்திய அரசினை எதிர்த்து அதிமுக நடத்தபோகும் போராட்டம் இது. மேள தாளத்தோடு, குங்குமம் சந்தணம் எல்லாம் பூசி அமர்க்களமாக வருவார்கள் பாருங்கள், அட்டகாசமாக இருக்கும். ஆனாலும் தினகரன் மீதான பெரா […]

ஸ்டாலின் சொதப்பியது நன்றாக தெரிகின்றது

திமுக செயல் தலைவர் மிச்சர் தின்பதோ அல்லது அல்வா உண்பதோ அவர் விருப்பம், எதுவும் உண்ணட்டும் ஆனால் தமிழகத்தில் எழும் கேள்வி ஒன்றுதான். அனிதாவிற்கு நீட் விஷயத்தில் ஆதரவுகரம் அதிமுக நீட்டவில்லை, அது நீட்டவும் நீட்டாது. ஆனால் திமுக நீட்டியிருக்கின்றது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு என்ற அளவிற்கு சென்றிருக்கின்றார்கள் முன்பு கனிமொழிக்கும் ஆண்டிமுத்து ராசாவுக்கும் ராம்ஜெத்மலானியினை வாதாட வைத்தது திமுக, அதில்தான் ஜாமீன் பெற்றார் கனிமொழி. தயாநிதிமாறனுக்காக வழக்காடிய வக்கீலின் சம்பளம் என்ன என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை இப்பொழுது […]

தமிழருக்காக சீறும் இயக்குனர் வ.கௌதமன்

இவ்வளவு காலமும் எங்கிருந்தார் என தெரியாமல் இருந்துவிட்டு, இப்பொழுது தமிழருக்காக சீறும் வ.கௌதமன் எனும் இயக்குநரின் அழிச்சாட்டியம் அதிகரிக்கின்றது. பிரபாகரனின் கதையினை படமாக எடுப்பேன் என சொல்லி, பிரபாகரனை தமிழக குத்தகையாக எடுத்திருக்கும் அங்கிள் சைமனை வகையாக சீண்டுகின்றார். நிச்சயமாக கௌதமன் அங்கிள் சைமனின் ரோட்டில் கிராஸ் செய்துகொண்டே இருப்பது தெரிகின்றது. அங்கிள் சைமன் இவர் விஷயத்தில் மகா அமைதியாக இருந்தாலும், இப்பொழுது இந்த கவுதமன் யார்? அவன் தமிழனா? தெலுங்கனா? இல்லை ஏலியனா? எனும் ஆராய்ச்சியில் […]

அசுரர் திருவிழா: தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடரும்: கி.வீரமணி

அசுரர் திருவிழா: தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடரும்: கி.வீரமணி பெரியார் என்ன சொன்னார்? “மோட்சம், நரகம், பாவம் , புண்ணியம், பரிகாரம் எல்லாம் மோசடிங்க . தேவர் அசுரர் என எல்லாமும் மோசடிதானுங்க.. அப்படி ஒன்றுமே இல்லைங்கே. எல்லாம் நம்மை அடிமைபடுத்தி அதன் மூலம் பார்ப்பான் நம்மை சுரண்ட செய்யபட்ட ஏற்பாடு, அதனால் நாம் நம்பகூடாதுங்க.. இந்த தீபாவளியே மோசடிங்க, சிந்தியுங்க…பூமி உருண்டைன்னு விஞ்ஞானம் சொல்லுதுங்க.. ஆனா இந்த நரகாசுரனுங்கிற பயல் அத பாயா சுருட்டினானுன்னு வேதம் […]

தமிழக கல்வி முறை : 1

எப்பொழுதுமே தமிழக மாணவனுக்கு 10ம் வகுப்பு வரை ஒரு குழப்பமும் இல்லை, அதனை தாண்டிய பின்னர்தான் உலகம் அவனை குழப்போ குழப்பு என்று குழம்பும், பிஞ்சாகவும் இல்லாமல் முழு பழமாகவும் இல்லாமல் , உலகினை புரிந்தும் புரியாமல், மலர்ந்தும் மலராதா ஒரு பருவம் அது. அப்பொழுதுதான் பலபேரும் வந்து ஆலோசனை சொல்கிறோம், வழிகாட்டுகிறோம் என மாணவனின் தோள்மீது ஏறி கண்ணை பொத்துவார்கள், காதினை திருகுவார்கள், இன்னும் பல அழிச்சாட்டியம் நடக்கும், அவனை சுயமாக யோசிக்க விடவே மாட்டார்கள், உதாரணம் […]

கிருஷ்ணசாமி செய்த அழிச்சாட்டியம் ….

1996களில் இந்த கிருஷ்ணசாமி செய்த அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல, அம்பேத்கரின் மறுபிறவி போல ஆடிகொண்டிருந்தார். அந்த அப்பாவி சமூகமும் அவரை நம்பியது. அதனால் இவர் செய்த இம்சைகள் கொஞ்சமல்ல. சில தேர்தல் முடிவுகள் கூட இவரால் பாதிக்கபட்டு அதிமுகவிற்கு சாதகமாக மாறின தலைவர்கள், தியாகிகள் பெயரில் இருந்த மாவட்ட பெயர்களும், போக்குவரத்து கழகமும் இவர் செய்த அட்டகாசத்தால் பெயரையும் அடையாளத்தை இழந்து இன்று மொட்டையாய் நிற்கின்றன. பாரதிராஜாவினை ஏதும் கேட்காமல் கமலஹாசனை மட்டும் இவர் குறிவைத்து அடித்த பொழுதுதான் […]

எங்கள் சகிப்புதன்மையை சோதிக்காதீர்கள்: தமிழிசை

எங்கள் சகிப்புதன்மையை சோதிக்காதீர்கள்: தமிழிசை தமிழகம் பாஜகவினை பார்த்து சொல்லிகொண்டிருப்பதை , தமிழிசை தமிழகம் நோக்கி சொல்கின்றாராம். தமிழிசை பெரும் இலக்கியவாதியின் மகள், டாக்டர் கூட. அதனால் ஏதும் உள்குத்து இல்லாமல் பேசமாட்டார். அக்கா தமிழிசை, உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பதை நேரடியாக மோடியிடம் கேட்டால் என்ன? யாரையோ பார்த்து எங்கள் சகிப்பு தன்மையினை சோதிக்காதீர்கள் என ஏன் ஜாடையாக‌ கேட்க வேண்டும்? நதிகளை மீட்க பயணம் தொடங்கினார் ஜக்கி சுவாமிகள் அவரிடம் இருந்து மலையினை […]