பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அதிமுக அழிந்துவிட கூடாதாம் : திமுக

இப்பொழுதெல்லாம் சில திமுகவினருக்கு அதிமுக மீது பாசம் பொத்துகொண்டு வருகின்றது, அதிமுக அழிந்துவிட கூடாதாம். அது அழிந்தால் பாஜக வளருமாம் திமுக தீயாய் தன் பகுத்தறிவு கொள்கைகளை பரப்பினால் பாஜக‌ எப்படி வளரும்? ஏன் பயம்? பகுத்தறிவினை பரப்ப உழைக்க வேண்டும் எனும் பயமா? இவ்வளவுதானா உங்கள் நம்பிக்கை? பாஜகவினை எதிர்க்க முடியாத அளவிற்கா திமுக பலம் கெட்டு போயிற்று? அப்படியா அஞ்சுகின்றீர்கள்? அப்படியானால் இது வீழ்ச்சி அல்லவா? கலைஞர் அதிமுக அழியவேண்டும் என விருப்படவே இல்லையாம், […]

அதிமுகவினர் நூதன போராட்டம்

தினகரன் படத்தினை பார்த்து சிரிக்கும் போரட்டம் : காட்டுமன்னார் கோவில் அதிமுகவினர் நூதன போராட்டம் அதாவது இப்படி சிரித்து அவரை அவமானபடுத்துகின்றார்களாம் ராமசந்திரனின் படங்களை பார்த்தால், அவரின் நடனத்தையும், உதடு சுழிப்பினையும் பார்த்தால் வராத சிரிப்பா? ஜெயலலிதா நடிப்பு என கொல்வாரே, அதனை கண்டால் வராத சிரிப்பா? ராமசந்திரனின் அண்ணாயிச விளக்கத்தை பார்த்து வராத சிரிப்பா? ஜெயாவும் சசிகலாவும் ஆண்ட ஆட்சிபார்த்து வராத சிரிப்பா? அல்லது இப்பொழுது பன்னீர், பழனிச்சாமி, தீபா, மாதவன் எல்லாம் அடிக்கும் கூத்துக்களை […]

எடப்பாடி ‍பழனிச்சாமி டெல்லி பயணம்

எடப்பாடி ‍பழனிச்சாமி டெல்லி பயணம் புகழ்பெற்ற காமெடியர்கள் எல்லாம் இரட்டையர்களாகவே இருப்பது ஒன்றும் புதிதல்ல, பல தமிழக சினிமாக்களிலே பார்த்ததுதான் இருவரும் டெல்லி சென்று என்ன சொல்வார்கள்?? “அய்யா, எசமான் வணக்கமுங்க, நீங்க சொல்றபடியெல்லாம் செஞ்சா 4 வருசம் கடத்தலாமுண்ணு நெனச்சோமுங்க, ஆனா அந்த கோஷ்டி விடாது போலிருக்குங்க‌ எங்க கிட்ட எத்தனை பேர் இருக்காங்கண்ணு எங்களுக்கே தெரியலங்க, சபாநாயாகர கூட நம்ப முடியலங்க‌ உங்கள நம்பித்தானுங்க இருக்கோம், ஏதாச்சும் பண்ணுங்க எசமான், தூங்க முடியல. இன்னொரு […]

ஜெயலலிதா ஆவி பெரும் கோபத்தில் உள்ளது

ஜெயலலிதா ஆவி பெரும் கோபத்தில் உள்ளது, 30 பேரை பழி வாங்கும் : கேரள ஜோதிடர் ஏன் ஜெயலலிதா ஆவியினையே தேடுகின்றார் இவர், அந்த ராமசந்திரன் ஆவி இப்பொழுது தன் கட்சி அழிவதை கண்டு ஆக்ரோஷபட்டு சுமார் 100 பேரை கொல்ல தேடாதா? அந்த ஆவியினையும் அழைத்தால்தான் என்ன? ஆவி இருப்பது உண்மை என்றால், இப்பொழுது ராமசந்திரனின் ஆவி ஜெயாவின் ஆவியினை தலைகீழாக தொங்கவிட்டு அடித்துகொண்டிருக்கும்… “ஏண்டி, கட்சியினைத்தான் பிடுங்கினாய், என் கல்லறையினையினுமா பிடுங்க வந்தாய், .” […]

சசிகலாவுக்கு ஈபிஎஸ் நன்றியுடன் இருக்க வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி

சசிகலாவுக்கு ஈபிஎஸ் நன்றியுடன் இருக்க வேண்டும்: சுப்பிரமணியன் . சசிகலாவினை ஜெயலலிதாவிற்கு அறிமுகபடுத்திய சந்திரலேகாவிற்கு, ஜெயாவோடு அவர் தங்கி இருந்து உதவ வாய்ப்பளித்த சந்திரலேகாவிற்கு சசிகலா நன்றியோடு இருந்தாரா சுவாமி? அவர் முகத்திலே ஆசிட் அடித்தது என்ன நன்றி கடனா? இதனை போல எத்தனைபேருக்கு நன்றிகடன் காட்டியவர் சசிகலா என்பது உங்களுக்கு தெரியாததா? அந்த சசிகலா கும்பலுக்கு நன்றி இருக்க கூடாது, ஆனால் அவரோடு இருந்தவர்களுக்கு மட்டும் நன்றி இருக்க வேண்டுமா? மிஸ்டர் சுவாமி, சரி பழனிச்சாமிக்கு […]

கட்சி அடையாளங்களா? தனியார் சொத்தா?

நமது எம்.ஜி.ஆர். நாளிதழ், ஜெயா டி.வி. தனியார் சொத்து, யாரும் கைப்பற்ற இயலாது – விவேக் ஜெயராமன் நிதானம் இழப்பு என்பது இதுதான், அதிமுகவின் அடையாளமாக கருதபடுவது ஜெயா டிவியும், அந்த நாளிதழும், அது வெறும் காகித குப்பை என்றாலும் அவர்கள் கட்சிக்கு அது அடையாளம் இப்பொழுது இது இரணடுமே தனியார் சொத்து என பகிரங்கமாக அறிவித்தால் அடிமட்ட தொண்டனிடம் இருக்கும் சசிகலா வெறுப்பு இன்னும் அதிகபடாதா? சசிகலா குடும்பத்தார் பெரும் பதற்றத்தில் இருக்கின்றனர் என்பதற்கு இதுவே […]

பெண் பத்திரிகையாளர் மீது சமூக வலைத்தள தாக்குதல் குறித்து: மு.க.ஸ்டாலின் கண்டனம்

பெண் பத்திரிகையாளர் மீது சமூக வலைத்தள தாக்குதல் குறித்து: மு.க.ஸ்டாலின் கண்டனம் கலைஞரும் ஒரு பத்திரிகையாளர்தான், மூத்த பத்திரிகையாளர் அவர். அவரை எப்படி எல்லாம் தாக்குகினார்கள் இன்னும் தாக்குகின்றார்கள். அதனை பற்றி எல்லாம் கண்டனம் தெரிவிப்பது யார்? பெண் பத்திரிகையாளருக்கு ஒரு நீதி, மூத்த பத்திரிகையாளர் கலைஞருக்கு ஒரு நீதியா? பெண்கள் மீது தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் ஆம், அதெல்லாம் அன்னார் படத்தில் அவரே சொல்லிகொள்வார், அதனால் ரசிகர்கள் அந்த வேலையினை […]

அக்கரை இக்கரை செய்திகள்

டோக்லாம் எல்லைப் பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெற இந்தியா-சீனா ஒப்புதல் இதனைத்தான் அன்றே சொன்னோம் இரண்டு பயலுமே சண்டைக்கு தயார் இல்லை, சும்மா வீம்புக்கு நிற்கின்றார்கள் தானாக விலகிவிடுவார்கள் என சொல்லியிருந்தோம் அப்படியே விலகிவிட்டார்கள், ஆனாலும் பாருங்கள் அடிக்கடி உரசுவார்கள். ஏன் என்றால் சவுண்டு விடாமல் அரசியல் இல்லை.. இந்த தினகரனுக்கும், எடப்பாடி கும்பலுக்கும் ஒரு பொறுப்பே இல்லை பின் என்ன? மணி 9 ஆகின்றது, இன்னும் இருவரும் இன்று யார் யார் நீக்கம் என்றும், […]

2 நாட்களில் முடிவை அறிவிப்பேன்:கருணாஸ்

மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையினை பொறுக்க முடியாது : மோடி மதத்தின் பெயரால் நடந்த காந்தி கொலை முதல் பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், மாட்டுகறி சர்ச்சை, ஜாதி கொலை வரை அன்னார் பொறுத்துகொள்வார், காரணம் அது நாட்டுபற்று. ஆனால் மற்றவர்கள் யாராவது மத கலவரம் செய்தால் மோடி பொறுக்க மாட்டார் அது தேசதுரோகம் அதாவது பாஜக , ஆர்.எஸ்.எஸ் இந்துமதத்திற்காக எது செய்தாலும் அது நாட்டுபற்று, மற்றவர்கள் எது செய்தாலும் அது பொறுக்க முடியா […]

இன்றைய தமிழகம்…

நான் நினைத்திருந்தால் சசிகலா என்னை முதல்வராக்கியிருப்பார், ஆனால் நான் தான் ஆகவில்லை : தினகரன் அதாவது திண்ணையில் கிழவர்கள் அமர்ந்து கொண்டு, அந்த காலத்திலே நான் கட்ட வேண்டிய பெண் அது என எங்கோ இருக்கும் கிழவினையினை பார்த்து சொல்வது போல அன்னார் சொல்லிகொண்டிருக்கின்றார். சசிகலாவே முதல்வராக ஆசைபட்டு, விழா பந்தல் எல்லாம் போடபட்டு, பன்னீரை கழுத்தைபிடித்து விரட்டி, கூவத்தூரில் பாசறை அமைத்து என்னவெல்லாம் செய்தார், பின் வழக்கு வாள் வீசபட்டு அம்மையார் சிறைக்கு சென்றார் பின் […]