பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாலியல் வழக்கில் சாமியாருக்கு தண்டனை

பாலியல் வழக்கில் சாமியாருக்கு தண்டனை, அதனை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் வன்முறை பலர் பலி, பெரும் பதற்றம் பக்தி முற்றிபோனால் இப்படித்தான் பகுத்தறிவு வெளியேறும். சிந்தனை வெளியேரிய மனம் கண்மூடித்தனமான ஆதரவிற்கு வழிவகுக்கும். சமூகம் இப்படி சாமியார் பிடிக்குள் செல்லும்.100 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகமும் இப்படித்தான் இருந்தது. இன்று வடக்கே நிலை இப்படி, தமிழக நிலை எப்படி? இங்கும் சில சாமியார்கள் கொலை வழக்கில் சங்கராச்சாரி உட்பட‌ கைதானார்கள், சிலர் கற்பழிப்பு வழக்கில் பிரேமானந்தா போல […]

தற்போது தேர்தல் வருவது நல்லதல்ல: தமிழிசை

ஆளுநர் நடவடிக்கை எடுக்க தவறினால்ஜனாதிபதியை சந்திப்போம்: தங்கதமிழ்செல்வன் ஆளுநரே இப்படி என்றால் ஜனாதிபதி அதுவும் புதிதாக பாஜகவினால் கொண்டுவரபட்டிருக்கும் ஜனாதிபதி எப்படி இருப்பார்? ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்க தவறினால் ஐ.நாவிற்கு செல்வார்களோ?   தற்போது தேர்தல் வருவது நல்லதல்ல: தமிழிசை யாருக்கு நல்லதல்ல மேடம்? நிச்சயமாக தமிழக பாஜகவிற்கு. அதனை தெளிவாக சொன்னால் என்ன மேடம்? “ஆட்சி நிலைப்பு பற்றி கவலை இல்லை, எல்லாவற்றையும் டெல்லி பார்த்துகொள்ளும்” : எடப்பாடி அணி ஆமாம், தேயிலை செடியில் ஓரு […]

பேரரிவாளன் பரோலில் வருகின்றாராம்….

இன்றுவரை தான் யாழ்பாணம் சென்று புலிகளோடு பழகியது பற்றியோ, சிவராசனுக்கு வயர்லெஸ் பேட்டரி மற்றும் பைக் வாங்கி கொடுத்தது பற்றியோ பேரரிவாளனும் மூச் விடவில்லை அவன் தயார் அற்புதம்மாளும் சொல்லவில்லை. சொன்னது எல்லாம் நாங்கள் நிரபராதி என்ற ஒரு சொல் மட்டுமே. பேரரிவாளனின் நிலைக்கு முதல் காரணம் அவன் தந்தை, திராவிடம் என்பதை வெறியாக அவர் மகனுக்கு போதித்ததே மகன் இன்று வாழ்வு தொலைத்து நிற்பதற்கு காரணம். அந்த அதிதீவிர திராவிடரை சந்திக்கத்தான் பேரரிவாளன் பரோலில் வருகின்றாராம். […]

“சாலையோரத்தில் வேலையற்றதுகள்” என்பது இதுதான்.

ஒரு சிலர் கிளம்பியிருக்கின்றான், தமிழர் வரிபணத்தில் நடக்கும் தமிழக மருத்துவ கல்லூரியில் வடமாநிலத்துக்காரன் படிப்பதா என கடும் ஆர்ப்பாட்டம். பல்கலைகழக மானிய நிதி எல்லாம் தமிழக கல்லூரிகளுக்கு வருவதே இல்லையா? அப்படியானால் தமிழர்கள் வட இந்திய நிறுவணங்களில் படிக்கவிலையா, வேலை செய்யவில்லையா? வடக்கே ஐஏஸ் முதல் பொறியில் வரை, டெல்லி பல்கலைகழகம் வரை எத்தனை தமிழர்கள் படித்து கொண்டிருக்கின்றார்கள். அம்மாநில மக்கள் எல்லாம் இப்படி கிளம்பினால் என்னாகும்? வட இந்தியாவில் தமிழர்களே வாழவில்லையா? மும்பை டெல்லி எல்லாம் […]

மாநில கல்வி உரிமைகளை வைத்து நடந்த விஷயங்கள் என்ன?

மருத்துவ கல்வியில் மாநில உரிமை பறிக்கபட்டுவிட்டது, இது அநீதி , ஆரிய படையெடுப்பு என பல சத்தங்கள் மாநில கல்வி உரிமைகளை வைத்து இங்கு நடந்த விஷயங்கள் என்ன? சீனிவாச ராமானுஜம் பெயர் சூட்டபடவேண்டிய பல்கலைகழகம் விஞஞானம் தெரியாத அண்ணா பெயர் சூட்டபட்டு முதலில் மதிப்பிழந்தது. ராமசந்திர உடையார் எனும் சாராய வியாபாரி கல்வி தந்தையானார். சாதாரண கான்ஸ்டபிளான பனிமயராஜ், ஜேபிஆர் எனும் கல்வி தந்தையானார், பச்சைமுத்து இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியானார். அது சரி […]

பேரரிவாளனை பற்றி பேச தொடங்கினால்…

இந்த பேரரிவாளனை பற்றி பேச தொடங்கினால் அவரை ஏன் விசாரிக்கவில்லை, இவரை ஏன் விசாரிக்கவில்லை என தொடங்கி சோனியாவினை ஏன் விசாரிக்கவில்லை என கேட்கின்றார்கள். ராஜிவ் கொலையினை வகுத்தது நிச்சயம் வெளிநாட்டு மூளை, பிரபாகரனுக்கு கொல்ல தெரியுமே தவிர வழக்குகளை எப்படி சிக்கலில் விடவேண்டும் எனும் மூளை எல்லாம் சுத்தமாக கிடையாது காரணம் இலங்கையில் அவர் மீது அப்படிபட்ட விசாரணை எல்லாம் வரவே இல்லை, கொல்வது அவர் என தெரிவதால் எல்லோரும் அவன் அப்படித்தான் என சொல்லிவிட்டு […]

பேரரிவாளனுக்கு வரிந்து கட்டுகின்றார் ஸ்டாலின்

தேசவிரோத கட்சி என அறியபட்டு பின் பிரிவினைவாதத்தை கைவிட்ட பின்புதான் ஆட்சிக்கு வந்தது திமுக‌ அதன் பின் அது மாநில உரிமை பேசிற்றே தவிர, பிரிவினைபற்றி பேசவே இல்லை, மிசா காலத்தில் கூட அது மாநில சுயாட்சிதான் பேசிற்று பின் புலிகளை ஆதரித்து தடமாறி சென்று, 1991ல் அது தடை செய்யபடும் அளவிற்கு சென்றது. காந்தி கொலை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு கரும்புள்ளி என்றால் நிச்சயம் ராஜிவ் கொலை திமுகவிற்கு பெரும் கரும்புள்ளி அதனை எல்லாம் 2009ல் தாண்டித்தான் […]

தனுஷ் சிகரெட் பிடிப்பதுதான் பிரச்சினையாம்

இப்படி எதிர்ப்பு கிளம்புவது எங்கு தெரியுமா? ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் அல்ல, மாறாக யாழ்ப்பாணத்தில் வழக்கமாக அங்கிருந்து இந்திய எதிர்ப்பு குரல்கள் வரும், இந்திய மீணவர் எதிர்ப்பு வரும் இப்பொழுது தனுஷ் சிகரெட் பிடிப்பதுதான் அவர்கள் பிரச்சினையாம் ஆசியாவின் மிக மோசமான பாதுகாப்பற்ற நகரமாக யாழ்பாணம் மாறிகொண்டிருக்கின்றது என்கின்றன செய்திகள் போதைபொருள் தட்டுபாடின்றி கிடைக்கின்றது, வெத்து குத்து கொலை கொள்ளை வாடிக்கையாக நடக்கின்றது, போரினால் சீரழிந்த பகுதிகளில் நடக்கும் எல்லா அட்டூழியமும் அங்கு நடக்கின்றது சமீபத்தில் நீதிபதி சுடபட்ட […]

நீட் தேர்வின் நோக்கம் என்ன?

நீட் தேர்வின் நோக்கம் என்ன? டாக்டர் கிருஷ்ணசாமி, டாக்டர் தமிழிசை, டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி, டாக்டர் அதிமுக சிவகுமார் போன்ற விபரீத மருத்துவர்கள் உருவாகிவிட கூடாது என்றுதான் நீட் தேர்வு கொண்டுவரபட்டிருக்கின்றது. ஜெயலலிதாவிற்கு முதலில் சிகிச்சை அளித்தது சிவகுமார் என்றுதான் செய்திகள் சொல்கின்றன. நீட் தேர்வு இல்லாத காரணத்தால் இப்படிபட்ட விபரீத மருத்துவர்கள் எல்லாம் உருவாகி பெரும் இம்சையாகிவிட்டனர் , அன்றே நீட் தேர்வு இருந்திருந்தால் இவர்கள் வந்திருக்கவே முடியாது     இம்மாதிரி எதிர்காலத்தில் […]

விடுதி மாறும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்…

ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்கலாம் : அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் அட அதிமுகவினர் கூட சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்களே, இந்த நூற்றாண்டின் சிறந்த ஆச்சரியம் இதுதான். செப்டம்பர் 20ல் ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கபடும் மிக சரியாக அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தொடக்கவிழா என முப்பெரும் விழா கொண்டாடும் அந்த வாரத்தில்தான் தேதியினை சொல்லி மிரட்ட போகின்றார்களாம், இனி தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை யூகிப்பது சிரமமில்லை விடுதி மாறும் […]