பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழக முதல்வரை யாரும் ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? : கமலஹாசன்

இவ்வளவு நடந்தும் தமிழக முதல்வரை யாரும் ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? : கமலஹாசன் கேள்வி மனிதர் கொஞ்சம் அறிவாளி என நினைத்தால், இப்படி கொஞ்சம் கூட விவரமில்லாமல் கேள்வி கேட்கின்றார்?. தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் இருந்தால்தான், எவனும் தடுக்கிவிழுந்து செத்தால் கூட, பறவைக்கு காய்ச்சல் வந்தால் கூட ஏன் அண்டை நாட்டில் எது நடந்தால் கூட, அண்டார்டிக்காவில் பென்குயின் செத்தால் கூட, கருணாநிதியே ராஜினாமா செய் என கூச்சலிடுவார்கள் அவரை தவிர யார் இருந்தாலும், அவர்கள் […]

தமிழக பத்திரிகைகளை என்ன சொல்வதென்றே தெரியவில்லை

இந்த தமிழக பத்திரிகைகளை என்ன சொல்வதென்றே தெரியவில்லை, சொல்பவன் சொல்லட்டும் பதிவிடுபவர்கள் கொஞ்சம் யோசித்து பத்திரிகையில் பதிவிட கூடாதா? ஒரு பொறுப்பு வேண்டாமா இந்த வாட்சப் வதந்திதான் காமராஜர் அப்துல் கலாமினை மிதித்தார், தன்னை சந்திக்க தமிழகம் வந்த ஹிட்லரை அவமானபடுத்தினார் என அள்ளிவிடுகின்றன. இன்னும் பல விஷயங்கள் பகீர் ரகம். வாட்சப் வாந்திகள் அந்த ரகம், விட்டுவிடலாம் ஆனால் பெரும் பொறுப்பு கொண்ட ஊடகங்கள் அப்படி செய்யலாமா? இதோ வாஞ்சிநாதனின் பேரன் பேட்டிகொடுத்திருகின்றான், அதாவது வாஞ்சிநாதன் […]

தினகரனை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கின்றது

முதலில் ராஜாஜி சொன்னார், அதன் பின் நேரு, அதன் பின் இந்திரா, கொஞ்சநாளில் கோடாரி காம்பு ராமசந்திரன், இடையில் குமாரமங்கலம், அடுத்து ராஜிவ், ராஜிவின் தமிழக அடிப்பொடிகள், அதற்கடுத்து வைகோ , பெரும்பலத்துடன் இருந்த ஜெயலலிதா என எத்தனையோ பேர் சொன்னதுதான் “திமுகவினை அழிப்பேன்..” இப்படி சொன்ன பெரும் ஜாம்பவான்கள் எல்லாம் மண்ணை கவ்வி மண்ணாகிவிட்டபின் இப்பொழுது தினகரனும் சொல்கின்றாராம். திமுகவினை அழிக்க கிளம்பியவர்கள்தான் அழிந்தார்களே தவிர திமுக அப்படியே இருக்கின்றது பெரும் புயலும், பெரும் படையும், […]

சுதந்திர நாளை மகிழ்ச்சிக்குரிய நாளாக கொண்டாட முடிகிறதா? கி.வீரமணி ++

சுதந்திர நாளை மகிழ்ச்சிக்குரிய நாளாக கொண்டாட முடிகிறதா? கி.வீரமணி இந்தியர்களால் முடியும், பெரியார் சொத்துக்களுக்கு காவலர்களாய் இருப்பவர்களால் நிச்சயம் முடியாது. எங்கே? இந்த சொத்துக்களை எல்லாம் அரசு எடுத்துவிட்டால் என்னாவது எனும் கவலை இருக்கும் வரை இவரால் எப்படி சுதந்திர தினத்தை கொண்டாட முடியும்? மிஸ்டர் வீரமணி, இதுவரை பெரியாரின் சொத்துக்களை நீங்கள் சுதந்திரமாய் ஆண்டுகொண்டுதானே இந்த சுதந்திரநாட்டில் இருக்கின்றீர்கள்? வேறு என்னதான் உங்கள் பிரச்சினை? இந்த sarahah.com தளத்தில் நுழைந்துவிட்டோம் என சொன்னாலும் சொன்னோம், நிறைய மொட்டை கடிதங்கள் […]

வீடு திரும்பினார் கலைஞர் .. மற்றும் சில …

வீடு திரும்பினார் கலைஞர் அவர் வீட்டிற்கு திரும்பியதில் பலருக்கு உயிரே போயிருக்கும் நாங்கள் கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்: முதல்வர் பழனிசாமி பேச்சு ஆமாம், கொல்லைபுறமாக எல்லாம் வரவில்லை மாறாக சுரங்கம் தோண்டி திடீரென பொத்துகொண்டு வந்தவர்கள் சென்னை கிண்டியில் 10 கோடி வாடகை பாக்கியால் ரஜினி மனைவி லதா நடத்திய பள்ளிக்கு பூட்டு : செய்தி ரஜினி அரசியலுக்கு வந்தால் எவ்வளவு பெரும் ஆபத்து என இப்பொழுதுதான் புரிகின்றது, கணவன் கோடிகளில் புரண்டும் […]

தினகரன் ஆவேசம், பரபரப்பு பேச்சு

பன்னீர் செல்வம், முதல்வர் பழனிச்சாமி மீது தினகரன் ஆவேசம், பரபரப்பு பேச்சு. குட்டியினை பிரிந்த தாய் யானை போல ஒரு மாதிரியாகிவிட்டார் தினகரன். என்னவெல்லாமோ அரற்றுகின்றார், முதல் மரியாதை படத்தில் ஒரு காட்சி உண்டு. பேரன் தன்னிடம் வருவதை மகள் தடுக்கும்பொழுது சிவாஜி உருக்கமாக சொல்வார். “என்னமோ ஒரு புள்ளைய பெத்துட்டாளாம் ஆட்டம் போடுறா.. எல்லாம் இப்போதான் கொஞ்ச நாளாத்தான்… அதுக்கு முன்னாடி நாந்தான்.. இங்கதான் (நெஞ்சினை தட்டிகொள்வார்), இந்த நெஞ்சிலதான் போட்டு வளத்தேன்….” சிவாஜியின் அந்த […]

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜாஜி, காமராஜர், அண்ணா காலம் வரை தமிழக முதல்வர் கொடியேற்ற அனுமதி இல்லை கலைஞர் வந்தபின் இதுசம்பந்தமாக‌ சில கேள்விகளை கேட்டார். பதில் இல்லை. ஒரு மாநில முதல்வர் இந்நாட்டின் கொடியினை சுதந்திர நாளில் ஏற்றமுடியவில்லை என்றால் அந்த பதவிக்கு என்ன மரியாதை என கேட்ட அவரின் கேள்விக்கு செவிடாக இருந்தது டெல்லி. தேசிய கொடியினை நீங்கள் ஏற்றுங்கள், மாநில கொடியினை நாங்கள் ஏற்றுகின்றோம் என சொல்லிவிட்டு ஒரு கொடியும் […]

தன் நகைகளை கழற்றி கொடுத்தவர் ஜெயலலிதா : முதல்வர் பழனிச்சாமி

பாகிஸ்தான் போரின்பொழுது தன் நகைகளை கழற்றி கொடுத்தவர் ஜெயலலிதா : முதல்வர் பழனிச்சாமி ஏதுங்க? வளர்ப்பு மகன் திருமணத்தோடு இடுப்பில் போட்டிருந்தாரே அந்த ஒட்டியாணத்தையா? பெங்களூரில் நீதிபதி இந்த நகைகளுக்கு கணக்கு என்ன என்றபொழுது, இது மைசூரில் திவானாக இருந்த எங்கள் தாத்தா நகை என சொன்னாரே? அந்த நகைகளா? அது இன்றும் பெங்களூர் நீதிமன்றத்தில் அல்லவா இருக்கின்றது? சசிகலா இருப்பதாலோ என்னவோ பழனிச்சாமிக்கு பெங்களூர் பாகிஸ்தானாகவே தெரிகின்றது.    

மோடியின் எச்சரிக்கை

அதாவது இந்தியர் எல்லோரும் ஆதார் அட்டையினை எடுத்து கொண்டு சுடுகாட்டுக்கு 2018 ஜனவரிக்கு முன்பாகவே சென்றுவிடுங்கள் என எச்சரிக்கின்றாராம்.

எங்களை பகைத்துக்கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது: திவாகரன்

” ’எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது ஒரு விபத்து. எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. அவரை 420 எனக் கூற எனக்கு பயமில்லை. இன்றுமாலை பழனிச்சாமி யார் என காட்டுவேன். பதவி இருக்கின்ற காரணத்தால் ஆடுகிறார்கள். ’அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் – அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்’ என்று சொல்லுவார்கள். அப்படித்தான் இருக்கிறது இவர்களின் செய்கைகள்.” : தினகரன் அதாவது அன்னார் சொல்லவரும் கருத்து இதுதான் * பழனிச்சாமி முதல்வரானது விபத்து, ஆனால் இவர் துணை பொதுசெயளாரனது […]