பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஜினி பாஜகவிற்கு வராத கோபம் ……

ரஜினி பாஜகவிற்கு வராத கோபம் அக்கட்சியினரிடையே நன்றாக தெரிகின்றது, உச்சமாக சு.சாமி ரஜினிக்கு படிப்பறிவில்லை என கொந்தளித்திருக்கின்றார் மிஸ்டர் சு.சாமி மோடி என்ன அமெரிக்க பல்கலைகழகத்தில் கோல்டு மெடல் வாங்கியவரா? மோடியினை விடுங்கள், தமிழக முன்னாள் முதலமைச்சர்களில் பலர் பள்ளியினையே தாண்டாதவர்கள் கலைஞர், எம்ஜிஆர், ஜெயா, பன்னீர் எல்லோரும் பள்ளியினை தாண்டி கல்லூரியில் கால் வைக்காதவர்கள் படிப்பு என்று தமிழக அரசியலுக்கு தகுதியாயிருந்தது? விரைவில் வெறுப்பில், ரஜினி கருப்பாக இருக்கின்றார் அதனால் அரசியலுக்கு தகுதி இல்லை, ரஜினி […]

மூன்றுநாடுகளுக்கு சுற்றுபயணமாக சென்றார் மோடி

மூன்றுநாடுகளுக்கு சுற்றுபயணமாக புறப்பட்டு சென்றார் மோடி : செய்தி மிக சரியாக இஸ்லாமியரின் விழாகாலங்களில் மட்டும் டெல்லியில் இருக்காமல் இவர் ஓடிவிடும் மர்மம் என்ன? அவருக்கு இஸ்லாமியர் மீது அபிமானம் இல்லாமல் இருக்கலாம், தனிபட்ட முறையிலும் கட்சி நிலையிலும் இஸ்லாமியர்களை அவர் தவிர்க்கலாம் ஆனால் பொறுப்பான பிரதமர் என்ற நிலையில், இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உச்சமான தலைவர் எனும் நிலையில் மோடி இப்படி செய்வது சரியே அல்ல, இது பொறுப்பற்ற தனம் அவர் இந்துக்களின் பிரதமர் அல்ல, […]

அ. அ. அ பெட்டிக்குள் முடங்கிவிட்டது

சிம்புவின் “அன்பானவன், அடங்காதவன், அசராதவன்” என வந்த படம் இனி “இவன் திருந்தாதவன்” என சொல்லி பெட்டிக்குள் முடங்கிவிட்டது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு பெரும் நஷ்டம் இருக்கலாம் என்கின்றது செய்திகள். சிம்பு வாழ்க, ஆதிக் ரவிசந்திரன் வாழ்க என துள்ளி சொல்லும் ஒரே நபர் விஜயகாந்த்தாக இருக்க முடியும். நீண்ட நாளைக்கு பின்னார் விஜயகாந்த் வாய்விட்டு சிரிக்கலாம், அவர் மனதிற்கு இது பெரும் ஆறுதலாக அமையலாம். “கடவுள் இருக்கான் புள்ள” என கண்ணீரை அவர் துடைத்துகொள்ளலாம். மைக்கேல் […]

அப்படி என்ன சொல்லிவிட்டார் அந்த ஜோ டி குரூஸ்??,

அப்படி என்ன சொல்லிவிட்டார் அந்த ஜோ டி குரூஸ்??, முழுமையாக படிக்கவில்லை, மாறாக மோடியினை ஆதரித்ததற்காக வருத்தபடுகின்றேன் என அவர் சொன்னது மட்டும் பார்வைக்கு வந்தது. அவரின் சொந்த மக்கள் கடந்துவந்த பாதையினை அறியாமல் அல்லது சொல்ல விரும்பாமல் மோடி வாழ்க, ஆர்.எஸ்.எஸ் வாழ்க என சொன்னவர் அவர்தான். தன் இனம் பெற்ற பல காரியங்களுக்கானவர்க்ளை மறந்து, அந்த நன்றி கடனை மறந்து, அல்லது மறைத்து அவர் அந்த கும்பலுக்கு ஆதரவாக பேசிய பல கருத்துக்கள் கண்டனத்திற்குரியவை, […]

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன: வைகோ

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன: வைகோ அப்படி என்ன முடிவு?? ஒரு வேளை வைகோவினை உயிரோடு மருத்துவ மாணவர்களின் பரிசோதனைக்கு முயல் எலி போல‌ உட்படுத்தலாம் என அறிவித்துவிட்டார்களோ? அவருக்கு ஐந்தறிவு என்பது மத்திய அரசுக்கும் தெரிந்துவிட்டதோ? தேர்தல் முடிவுகளும், நீதிமன்றமும், பல செருப்புகளும், சில‌ விமான நிலையங்களும் கொடுக்காத அதிர்ச்சியினையா நீட் தேர்வு கொடுத்துவிட்டது?  

ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய் என ஒப்பாரி வைப்பது ஏன்?

தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு சோதனை கொடுக்கும் விஷயங்கள் பல உண்டு, அதில் ஒன்று ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய் என ஒப்பாரி வைப்பது இதில் ஒளிந்திருக்கும் அரசியல் வேறுமாதிரியானது அதாவது ராஜிவ் கொலை தேசிய குற்றம், இந்நாடு அதன் வீரியத்தை அப்படித்தான் பார்க்கின்றது, இவர்களை வெளியே விட்டால் வடக்கே பெரும் சிக்கல் வரும் கோட்சே முதல் அப்சல் குரு வரை எல்லோர் தண்டனையும் கேள்விகுறியாகும், பெரும் பிரளயம் வரும்,  இதனால்தான் இதனை வைத்து மத்திய அரசோடு […]

அத்தப்பூ கோலம் போட்டு, ஊஞ்சலாட தமிழிசை ரெடி

பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எடப்பாடி, பன்னீரை தொடர்ந்து தினகரனும் ஆதரவு இதுதான் நவீன வாமண அவதாரம், இரண்டு இலைக்காக இந்த அதிமுக 3 அடி நிலம் கொடுப்பதாக வாக்களித்தது, உடனே விஸ்வரூபமெடுத்த பாஜக ஒரு காலால் பன்னீர் தலையினையும், இன்னொரு காலால் எடப்பாடியினையும் அழுத்தியது மூன்றாம் அடியினை எங்கே வைப்பது என பாஜக கேட்டபொழுது ஓடிவந்து தலைகொடுத்திருக்கின்றார் தினகரன். இனி என்ன? அப்படியே அதிமுகவினை பாதாளத்திற்கு அனுப்பிவிட்டு வோணம் கொண்டாட ஆரம்பிப்பார்கள் அத்தப்பூ கோலம் போட்டு, ஊஞ்சலாட […]

கலைஞர் பங்களிக்காத ஜனாதிபதி தேர்தல்

60 ஆண்டுகாலத்திற்கு பின்பு கலைஞர் பங்களிக்காத ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கின்றது விவி கிரி போல எத்தனை ஜனாதிபதிகள் அவரை வாழ்த்தியிருக்கின்றனர், எத்தனை ஜனாதிபதிகள் அவர் அரசை காரணமின்றி டிஸ்மிஸ் செய்திருக்கின்றனர் இரண்டையும் ஒன்றாகவே எடுத்துகொண்டு அரசியல் நடைபோட்டவர் கலைஞர்.. காலம் எவ்வளவு வேகமாக ஓடியிருக்கின்றது என்பதை நினைத்துபார்க்க முடிகின்றது எவ்வளவு பெரும் சகாப்தம் ஒய்ந்திருக்கின்றது என்பதை நினைக்கும் பொழுதே மனதில் ஒரு சிலிர்ப்பு வந்துவிட்டுத்தான் போகின்றது அவரிடம் “ராம்நாத் கோவிந்த்” பற்றி சொல்ல சொன்னால் எப்படி […]

சஞ்சய் காந்தி மறைந்த தினம்….

கட்சியின் எந்த பதவியிலும், அரசின் எந்த பதவியிலும் இல்லாத ஒருவன் தன் குடும்ப அரசியல் பலத்தால் பெரும் நாட்டையே ஆட்டி வைக்கலாம் என இந்தியாவிற்கு புது இலக்கணம் எழுதியவர் சஞ்சய் காந்தி இந்திராவின் அரசியல் வாரிசாக உருவாகிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி, 1971 முதல் 1980 வரையான காலகட்டங்களில் இந்தியாவினை ஆட்டிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி. வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, கட்டாய கருக்கலைப்பு திட்டம், சில துப்பாக்கி சூடுகளுக்கு காரணம், டெல்லியினை ஆட்டிவைத்த சில சம்பவங்கள் என ஏராளமான திகில் […]

குடியரசுத் தலைவர் தேர்தல் : மீரா குமார் நல்ல தேர்வு

ஒரு வழியாக மீரா குமாரை எதிர்வேட்பாளராக எதிர்கட்சிகள் அறிவித்திருக்கின்றன, முக ஸ்டாலினும் ஆதரிப்பதாக சொல்லியிருக்கின்றார் குடியரசு தலைவர் தேர்தல் முறை கொஞ்சம் குழப்பமான விஷயம், பாஜக பக்கம் காற்று சுழன்றடிக்கின்றது ஆயினும் எதிர்கட்சிகளும் மல்லுகட்டுகின்றன‌ மீரா குமார் நல்ல தேர்வு, கலைஞருக்கு அவர் மீது நல்ல அபிமானம் இருந்ததும் நினைவுக்கு வருகின்றது. குடியரசு தேர்தல் விவகாரம் அதிமுகவின் முகதிரையினை கிழித்திருப்பதுதான் காமெடி. மொத்தமாக எல்லா அணியும் பாஜக் காலில் விழுந்து கிடக்கின்றது, அடித்து கொண்டவர்கள் எல்லாம் ஒன்றாக […]