பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிறு குறுச் செய்திகள்..

ராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்: முதல்வர் பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுவை முன்மொழிந்தனர் அதாவது பாஜகவின் தமிழக கிளைச்செயலாளர்கள் இருவர் முன்மொழிந்திருக்கின்றனர், இதிலென்ன அதிசயம் இவர்கள் ஆட்சியினை காப்பாற்றிகொள்ள தமிழிசையினை கூட முதல்வராக முன்மொழிய தயாராக இருப்பவர்கள், இதில் ராம்நாத் கோவிந்தனை முன்மொழிந்ததா ஆச்சரியம்? இனி தமிழக பாஜக வரிசை பொன்னார், தமிழிசை என்பதை தாண்டி பன்னீர், பழனிச்சாமி, தம்பிதுரை தினகரன் என நீளும்.. மிஸ்டர் பன்னீர் செல்வம், அம்மா மரணத்திற்கு நீதிவிசாரணை கோரும் உங்கள் தர்மயுத்தம் என்னாயிற்று? […]

விஜய் இனி “தளபதி” என அழைக்கபடுவாராம்

விஜய் இனி “தளபதி” என அழைக்கபடுவாராம் இதுதான் ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிப்பது என்பது, படம் சிக்கலில்லாமல் வர விழுந்து கிடப்பது அரசியல் மீது பெரும் கனவுள்ளவர் சந்திரசேகர், ஒரு காலத்தில் மகனை முதல்வராக அமர்த்தியே தீரவேண்டும் என்ற முடிவு அவருக்கு அன்றே இருந்தது, அந்த தீ அவர் மனதில் என்றும் உண்டு தன் மகன்/ மகள் முதல்வரானது தெரியாமல் செத்த‌ காஞ்சி நடராஜன், கோபால மேனன், திருக்குவளை முத்துவேலர், மைசூர் ஜெயராம் வரசையில் நாம் சேர […]

கருணா, சசிகலா, கருணைக்கொலை, கிரிக்கெட்…

சசிகலா கூறும் நபருக்குத்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பேன்: கருணாஸ் பேட்டி அதாவது சிறையில் இருக்கும் குற்றவாளி இந்திய குடியரசு தலைவர் தேர்தலை நிர்ணயிப்பாராம். அது என்ன ஜெயில் கைதிகளுக்கான சங்க தேர்தலா? அல்லது குற்றவாளிகளுக்கான அமைப்பு தேர்தலா? சசிகலா எனும் குற்றவாளி சொல்லி இவர் வாக்களித்து ஒரு குடியரசு தலைவர் அமர்ந்தால் அது இத்தேசத்தின் எவ்வளவு பெரும் அவமானம்? சிறைகைதி சொல்லி இவர் செலுத்தும் வோட்டு செல்லாது என இந்திய ஆணையம் அதிரடியாக அறிவிக்க வேண்டும்.. […]

உதயகுமார் அந்த கும்பலோடு கைகோர்த்தது தெரிகின்றது

ரஜினியை எதிர்த்துப் பேசியதால் தன்னை தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தியதாகக் கூறியிருக்கிறார் சுப உதயகுமாரன். எல்லா மனிதனும் கோபத்தின் உச்சியில் தவறாக கொந்தளிப்பார், உதயகுமாரும் அதற்கு விதிவிலக்கு அல்ல‌ ரஜினிக்கு என்றுமே எதிர்ப்பு உண்டு, எம்ஜிஆர், ஜெயா,ராமதாஸ், சீமான், பாரதிராஜா என அந்த வரிசை பெரிது அப்படி ரஜினியினை எதிர்த்தது காரணமானால் இவர்கள் எல்லோரையும் எதிர்த்துவிட்டுத்தான் உதயகுமார் பக்கம் வந்திருப்பார்கள் சீமானையும், பாரதிராஜாவினையும், ராமதாசையும் விட்டுவிட்டு இவரை ஏன் சீண்ட போகின்றார்கள் இவரால் ரஜினிக்கு எந்த பாதிப்பும் இல்லை, இவர் […]

ராஜிவ் பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகள்…

ராஜிவ் பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என இந்த பழ.நெடுமாறன் அவிழ்த்துவிடுகின்றார் நடந்தது என்ன? இந்திய அமைதி ஒப்பந்ததை எல்லா குழுக்களும் ஏற்றன, பிரபாகரன் ஏற்கவில்லை, இந்திய ராணுவ‌ ஹெலிகாப்டரில் திருச்சி வந்து பின் சென்னை வந்து ராமசந்திரனை சந்த்தித்து ஒப்பந்ததை எதிர்க்க சொன்னார் பிரபாகரன், ராமசந்திரன் கைவிரித்தார் டெல்லிக்கு சென்றார் பிரபாகரன், ராஜிவினை சந்தித்தார். அங்கு நடந்த விஷயம் பல இழுபறி, பெரும் இழுப்பு, சுருக்கமாக இப்படி சொல்லிவிடலாம் தனி ஈழம் எனும் கோரிக்கையிலிருந்து இறங்கிவர […]

ஆளுநர் கடிதத்தை படிக்க சபாநாயகர் மறுப்பு…

ஆளுநர் அனுப்பிய கடிதத்தைச் சட்டமன்றத்தில் படிக்க சபாநாயகர் மறுப்பு. சிறையிலிருந்து வந்த கடிதம் என்றால் படித்திருப்பார், ஆளுநர் மாளிகை கடிதத்தினை எல்லாம் படிப்பாரா? வாசிக்க முடியாதபடி, அப்படி என்ன ஆளுநர் எழுதியிருப்பார், ஆட்சியினை கலைத்துவிடுவேன் என மிரட்டியிருப்பாரோ??  

கூடங்குளம் உதயகுமார் மீது பல சர்ச்சைகள் வருகின்றன

கூடங்குளம் உதயகுமார் மீது பல சர்ச்சைகள் வருகின்றன, அணுவுலை ஆபத்தானது என்பதால் அது வேண்டாம் என்பதை அதன் ஆபத்தை அறிந்த அனைவரும் சொல்வார்கள், அப்படி நாமும் அவரை முன்பு ஆதரித்தோம். அவர் புலிகளின் புகழ்பாடும் பொழுதே கொஞ்சம் சந்தேகம் வந்தது, வை.கோவினையும், சீமானையும் அழைத்து விருந்து வைத்த பொழுது ஆத்திரம் தான் வந்தது, ஆனாலும் அவர் பாராளுமன்ற எம்பியாகவோ அல்லது ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏவாகவோ ஆகிவிட்டால் அணுவுலை பிரச்சினையினை பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவர் பழ.நெடுமாறனை […]

இன்று சர்வதேச யோகா தினம் !

இன்று சர்வதேச யோகா தினம் , லக்னோவில் நடைபெறும் பிரமாண்ட யோகா நிகழ்வில் பங்கெடுக்கின்றார் மோடி யோகாவினை பிரபலபடுத்திய பிரதமர் மோடி அதில் பங்கெடுக்கின்றார், நல்லது. மோடி வித்தியாசமனாவர் இங்கு யோகா என்றாலும் பங்கெடுப்பார், ஜப்பானில் ஜாலியாக‌ டிரம் அடிப்பார், மலைவாழ் மக்களோடு அவர்கள் கலாச்சார ஆடையில் போஸ் கொடுப்பார். ஒரு பிரதமருக்கான பணி இதுதான் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை ஒருவேளை விரைவில பரதநாட்டியத்தை இத்தேசம் பிரபலபடுத்தி, பாபா ராம்தேவ் போல இன்னொருவர் பரத […]

தனியரசு, கருணாஸ், அன்சாரி ஆகியோர் வெளிநடப்பு …

எடப்பாடி பழனிச்சாமியின் பதிலில் திருப்தி இல்லாததால் தனியரசு, கருணாஸ், அன்சாரி ஆகியோர் வெளிநடப்பு சட்டபேரவையில் பழனிச்சாமி பதில் சொன்னதில் இவர்களுக்கு திருப்தி இல்லையாம் இதனையெல்லாம் யாராவது நம்புவார்களா? ஆனால் எதில் “திருப்தி” இல்லை என்பதை சொல்லி புரிந்துகொள்ளும் அளவுக்கா தமிழகம் இருக்கின்றது, அதுவும் இந்த 3 பேரை பற்றியுமா தெரியாது? ஜூன் 30 நள்ளிரவில் ஜி.எஸ்.டி. தொடக்க விழா – மன்மோகன் சிங், தேவ கௌடா பங்கேற்பு: அருண் ஜெட்லி தகவல் வரி போடுவதற்கும் ஒரு விழாவா? […]

சட்டசபையில் மின்விவாதம் நடந்திருக்கின்றது

சட்டசபையில் மின்விவாதம் நடந்திருக்கின்றது, ஆளும் கட்சி வழக்கம் போல செய்வோம் என்றிருக்கின்றது திமுக உறுப்பினர் ஆஸ்டின் என்பவர், இட்லி அவிப்பது போல் எளிதானது அல்ல‌ மின்சார திட்டம் என சொல்லியிருக்கின்றார் உடனே தனபால் திமுகவினருக்கு சமைக்கவும் தெரியுமா என கலயாய்த்தாராம், திமுகவினரும் சிரித்து சமாளித்தார்களாம் இதுவே கலைஞர் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் தெரியுமா? “ஏன் அதிமுகவினருக்கு சமைக்க தெரியாதா? சிறையிலிருக்கும் உங்கள் பொதுசெயலாளரே முன்னாள் முதல்வருக்கு சமைத்து கொடுத்தேன் என அவரே சொல்லியிருந்தார். இட்லி அவிக்க மாவு […]