பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திருமுருகன் காந்தியின் கைது பற்றி இலங்கை அமைச்சர் தொண்டைமான் கண்டனம்

திருமுருகன் காந்தியின் கைது பற்றி இலங்கை அமைச்சர் தொண்டைமான் கண்டனம் தெரிவித்திருக்கின்றாராம் என்ன அநியாயம் இது? தமிழக அரசோ, இந்திய அரசோ ஈழ உணர்வாளர்களை கைது செய்யும் பொழுது இவர்களின் ஆலோசனையோ அல்லது அனுமதியோ வேண்டுமா? அப்படி என்ன அதிகாரம் ஒன்றுமில்லாமல் இருக்கும்பொழுதே இப்படி பேசுபவர்கள், ஒருவேளை 9ம் அதிசயமாக ஈழம் அமைந்திருந்தால், தமிழகத்து முடிவுகளை எல்லாம் அவர்கள்தான் எடுத்திருப்பார்களோ?? தமிழக அரசு என்ன செய்யவேண்டும், செய்ய கூடாது என யாழ்பாணத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கலாம், நல்ல […]

மதுரையில் பாலில் சோப் ஆயில் கலந்திருப்பதாக செய்திகள் ….

மதுரையில் பாலில் சோப் ஆயில் கலந்திருப்பதாக செய்திகள் வருகின்றன‌ நூறுநாள் கெடாத பால், கொழுப்பு நீக்கபட்ட, மிக திக்கான பால் என செய்திகள் வரும்பொழுல்லாம் வராத பரபரப்பு இப்பொழுது வருகின்றதாம், சோப் ஆயில் 100 நாள் என்ன? ஆயிரம் நாள் ஆனாலும் கெடாது இப்பொழுதும் அதற்கு அரசு இன்னும் தடை விதிக்கவில்லை, இன்னும் ஆய்வுகள் தொடர்கின்றதாம், மக்களாக இனி தடை விதித்தால்தான் உண்டு. பாலின் கொழுப்பினை பிரித்து பலவாறு பயன்படுத்துவார்கள், அதில் சில சோப் போன்றவை தயாரிக்க […]

கேரளம் உருப்படுமா? தமிழகம் உருப்படுமா?

மாட்டுகறி தடையினை எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் கம்யூ,காங்கிரஸ் சேர்ந்து தீர்மானம், கேரளம் முழுக்க மாட்டுகறி விருந்து உண்டு எதிர்ப்பு தமிழகத்தில் இப்படி எதிர்கட்சிகள் சேருமா? இவ்வளவிற்கு திராவிட கட்சிகள் தான் பெரிய கட்சிகள். ஆரிய சட்டத்திற்கு எதிராக 60 ஆண்டுகாலம் ஆண்டதாக சொல்லும் திராவிட கட்சிகள் நிலை என்ன? பெரும் எதிர்ப்பு என ஒன்றுமில்லை, திமுக ஒரு மாதிரி முணங்குகின்றது, அதிமுக கிட்டதட்ட மயான நிலை பெரும் எதிர்கட்சிகள் இணைந்து அமர்களமான எதிர்ப்பினை தெரிவிக்கும் காட்சி கேரளத்தில் […]

தமிழிசைக்கு போனிலும், கடிதத்திலும் மிரட்டல் : செய்தி

தமிழிசைக்கு போனிலும், கடிதத்திலும் மிரட்டல் : செய்தி இது வன்மையாக கண்டிக்கதக்கது, அவர் ஒரு அரசியல்வாதி அவர் கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்றால் கண்டிக்கலாம், விமர்சிக்கலாம் மிரட்டல் என்பதை எல்லாம் ஏற்றுகொள்ள முடியாது. மாட்டுகறி தடை என சொன்னது தமிழிசை அல்ல, அப்படி எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மத்திய அரசின் அலுவலகம், மத்திய அரசு சம்பந்தமான அணுவுலை அடுப்பு என சென்று எதிர்ப்பு தெரிவிக்கலாம் தமிழிசையினை மிரட்டுவது என்பது கோழைகளின் வேலை, வீணர்களின் மூளை கெட்ட சதி தமிழிசை […]

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மகளிர் அணி கூட்டத்தி கலவரம்

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மகளிர் அணி கூட்டத்தி கலவரம், அடி உதை நடந்திருக்கின்றது, இதில் ஆச்சரியபட என்ன இருக்கின்றது அவர்கள் கலாச்சாரம் அது, சின்னம் என்ன என்பதை அருகிலிருப்பவர் கன்னத்திலும், முதுகிலும் பதித்து கட்சி விசுவாசம் காட்டுவார்கள், முன்பு வேட்டி கிழிந்து, செருப்புகள் பறந்ததில் அதன் வாசலில் ஒரு வேட்டிகடையும், செருப்பு கடையுமே திறக்கபோன அளவிற்கு வீர வரலாறுகள் உண்டு இப்பொழுது மகளிர் முறை, அதுவே நடந்திருக்கின்றது, இதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை, மகளிர் மட்டும் சளைத்தவர்களா? “ஆணுக்கு […]

அரசுக்கு எங்களால் பாதிப்பு ஏற்படாது: ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எங்களால் பாதிப்பு ஏற்படாது: ஓ.பன்னீர்செல்வம் வேறு என்ன ம….க்கு முன்பு தியானம், ஆளுநர் சந்திப்பு, நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றேல்லாம் ஓப்பாரி வைத்தீர் அய்யா? ஆட்சி வேண்டாம் என்றுதான் சட்டபேரவையில் கலவரம் நிகழ்த்த முயன்றார், இப்பொழுது அதே ஆட்சி வேண்டுமாம், ஆதரிப்பாராம்… உங்களையும் நம்பி அந்த ரிசாட்டை என்னபாடு படுத்தினார்கள்?, எவ்வளவு கஷ்டம் அவர்களுக்கு இதனை அன்றே சொல்லியிருக்கலாமே? அன்று ஒரு நிலைப்பாடு, இன்றொரு நிலைப்பாடா? இதன் பெயரா தர்மயுத்தம்? ஜெயா இறந்த […]

நம்ம ஊரு அரசியல்…

அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்ற உத்தரவு வரலாம் : செய்தி இந்த முதலமைச்சர், அமைச்சர் குடும்பங்களுக்கு இது பொருந்துமா? தமிழக அரசே அவர்கள்தான்.? ஆக அவர்கள் பிள்ளைகள், பேரன் பேத்திகளும் அரசு பள்ளியில் படித்தாக வேண்டும்.. அப்படியே அதிமுகவினர் அக்கட்சி பிரமுகர்கள் நடத்தும் பள்ளியிலும், திமுகவினர் அந்த கட்சி பிரபலங்கள் நடத்தும் பள்ளியிலும்தான் படிக்க வேண்டும் என சட்டம் வாய்மொழியாக வரும்.. தமிழிசை, எச்.ராசாவின் குடும்ப குழந்தைகளுக்கு சிக்கல் இல்லை, காவி […]

என்ன ஒரு வேகம்? என்ன ஒரு ஓட்டம்? என்ன ஒரு பல்டி?

உசேன் போல்ட் அசந்து போய் இருக்கின்றார், அவமானத்தால் நொறுங்கிபோய் இருக்கின்றார் ஓட்டபந்தயத்தில் தான் மட்டுமே மிக வேகமானவன் என்ற அவரின் பெருமிதத்தை தமிழக அதிமுக எம்.எல்.ஏக்கள் நொறுக்கி கொண்டிருக்கின்றனர் என்ன ஒரு வேகம்? முதலில் ஜெயா கார் ஹெலிகாப்டர் என ஓட்டம், , பின் பன்னீர், பின் கூவத்தூரில் சசிகலா, பின் பழனிச்சாமி, இப்பொழுது தினகரன் பின்னால் என அப்படி ஒரு வேகம் ஓடுவது கூட பெரிய விஷயம் இல்லை, இப்படி குறுக்கே வெட்டி, பல்டி அடித்து, […]

இந்த குமரி அனந்தன் எங்கிருக்கின்றார் என தெரியாது…

இந்த குமரி அனந்தன் எங்கிருக்கின்றார் என தெரியாது, ஆனால் அவரை தேடி கண்டுபிடித்து தமிழிசையிடம் பல பழைய வரலாறுகளை கற்பிக்க சொல்ல வேண்டும் காரணம் ஒரு வரலாறும் தெரியாமல் தமிழிசை இஷ்டத்திற்கு ஏய் காங்கிரசே, ஏய் திமுகவே என கத்திகொண்டே இருக்கின்றார் எச்,ராசா கத்தினால் அவருக்கு ஒன்றும் தெரியாது என விட்டுவிடலாம், ஆனால் தமிழிசை எப்படிபட்ட காங்கிரஸ்காரரின் வாரிசு? விட முடியுமா? முடியாது. நிச்சயம் குமரி அனந்தன் அருகில் இருந்தால் தமிழிசை இப்படி எல்லாம் அர்த்தமின்றி உளற […]

ராகுல் காந்தி என்ன சொன்னார்?

ராகுல் காந்தி என்ன சொன்னார்?, பகவத் கீதையினை, உபநிஷங்களை கவனமாக படிக்கின்றேன், அப்பொழுதுதான் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு பதிலளிக்க முடியும் என சொல்லியிருந்தார் அவ்வளவுதான், தமிழிசை குதிக்க ஆரம்பித்துவிட்டார் ராகுல் “இலங்கையில் தமிழர் கொல்லபட்டபோது எங்கே போனார் ஏய்..” என முப்பந்தல் இசக்கி போல ஆட ஆரம்பித்துவிட்டார் அம்மா தமிழிசை, ராகுலுக்காவது ஒரு காரணம் இருந்தது, அக்குடும்பம் ஒரு தலைவனை பறிகொடுத்திருந்தது, இன்னும் களமிறங்கி மொத்த குடும்பத்தை தொலைக்க அவர்கள் தயாரில்லை ஆனால் நீங்களோ உங்கள் கட்சியோ ஒரு […]