பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை விட்டு சென்றுள்ளார் ஜெயலலிதா: சீமான் ஆவேசம்

ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை விட்டு சென்றுள்ளார் ஜெயலலிதா: சீமான் ஆவேசம் 2016ல் ஜெயலலிதா வென்றாலும், அவர் ஆளவில்லை வெறும் 3 மாதமே முதல்வராக இருந்தார், அதற்குள் 5 லட்சம் கோடி கடன் வந்திருக்க முடியாது, இவை எல்லாம் 2011ம் ஆண்டு தொடர்ச்சிகள் 2011ல் ஜெயலலிதா முதல்வராக துடித்தது யார்? இதே அங்கிள் சைமன். இவர்தான் 2011ல் ஜெயலலிதாவினை ஆதரித்து தெரு தெருவாக வாக்கு கேட்டவர் என்பதும், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என ரைமிங்காக […]

மிஸ்டர் டிரம்ப்-க்கு ஒரு யோசனை

“என்னுடைய முந்தைய வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதில் பல விஷயங்களை சாதிக்க முடிந்தது. இப்பொழுது முந்தைய பிஸினெஸைக் காட்டிலும் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. இந்த ஜனாதிபதி வாழ்வு கொஞ்சம் சுளுவாக இருக்கும் என்று நினைத்தேன். ஏதோவொரு கூண்டில், பட்டுப்பூச்சியின் கூட்டினுள் அடைபட்ட மாதிரி உணர்வு கிடைக்கிறது. வெறுப்பாயிருக்கின்றது” இப்படி அரசியலுல் அலுத்துகொண்டவர் யார் தெரியுமா? நம்ம டிரம்ப் தான் அன்னாருக்கு அனுபவமில்லை, ரகசிய தகவல்களை உளறி கொட்டியதில் சந்தி சிரிக்கின்றது, அவரால் ஒரு முடிவும் […]

ஒரு மாதத்தில் ஜிஎஸ்டி …

இன்னும் ஒரு மாதத்தில் ஜிஎஸ்டி வரும் என அறிவித்தாகிவிட்டது சாமான்ய கடைக்காரனுக்கும், சிறிய தொழில்களுக்கும், கம்பெனிகளுக்கும் இன்னும் பணம் புழங்கும் இடத்தில் எல்லாம் இருப்பவர்களுக்கு இதெல்லாம் எப்படி புரியும்? அரசு அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கபட்டிருக்கலாம், சாமானியருக்கு என்ன புரியும்? மளிகை முதல் இன்னும் பல கடை நடத்துவபர்கள் எல்லாம் கற்றறிந்தவர்களா? இல்லை அதில் பாமரரும் உண்டு இந்த ஜிஎஸ்டி நாட்டுக்கு தேவையா என்றால் நிச்சயம் தேவை, பெரும் வரிகுழப்பங்களை அது தீர்க்கும் ஆனால் அதற்கான தயாரிப்புகளை செய்துவிட்டோமா? […]

எடப்பாடி அணி, தினகரன் அணி… அதிமுக கிரிகெட்…

கிரிக்கெட்டில் ஆட்டம் தொடங்கும் முன்பு இரு அணிகளும் தனி தனியே வட்டமாய் கூடி நின்று, தோளில் கைபோட்டு ஆலோசனை செய்வார்கள் அப்படி எடப்பாடி அணி ஒரு பக்கமும், தினகரன் அணி ஒரு பக்கமும் வட்டமாய் நின்று ஆலோசிக்கின்றார்கள் பெட் கட்டிய பந்தயக்காரர் போல பன்னீர் கோஷ்டி விரல் கடித்து பார்த்துகொண்டிருக்கின்றது, மேட்ஜ் பிக்சிங்க் செய்தார்களா என்பதெல்லாம் தெரியாது.. விரைவில் ஆட்டம் தொடங்கும் போலிருக்கின்றது, அநேகமாக டாஸ் போட்டு தொடங்கி வைப்பது பாஜகவாக இருக்கலாம்..

பொன்னார் செயலும் பேச்சும் மகா காமெடியாகவே இருக்கின்றன..

“வயதானவர்களைக் கொண்டு வைரவிழாவினை கொண்டாடியிருக்கின்றார்கள்” : பொன்னார் முதிர்ந்த வயதான கலைஞரை வாழ்த்த அவரோடு பயணித்த முதிர்ந்தவர்கள் தான் வருவார்கள், சிறுவர்களா சென்று வாழ்த்த முடியும்? வாஜ்பாயினை வாழ்த்தியது எல்லாம் பாஜக இளைஞர்களா? முதிர்ந்த அத்வாணிதானே முன்னின்று வாழ்த்தினார்.. 56 வயது யுவதி தமிழிசை கூட வாஜ்பாயினை வாழ்த்தவில்லையே அய்யா? ஏன்? வாஜ்பாயினை அந்த முதிர்ந்த பார்பண கூட்டம் வாழ்த்தும்பொழுது நீங்கள் இந்தியாவில்தானே இருந்தீர்கள், அதெல்லாம் மறந்துவிட்டதா மிஸ்டர் பொன்னார். கலைஞரை வாழ்த்த தகுதி இருக்கும் முதியோர் […]

விரைவில் பழனிச்சாமிக்கு ஊஊஊஊஊஊஊ…

சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திப்பதற்காக, டி.டி.வி.தினகரன் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். மனிதருக்கு சிறை ராசி, சிறை பறவையாக ஒவ்வொரு சிறைக்கும் பறந்துகொண்டே இருக்கின்றார் சசிகலாவினை பார்த்து பெங்களூர் சிறைக்கும், திகார் சிறைக்குமான வேறுபாடு பற்றியா பேசபோகின்றார்? விரைவில் பழனிச்சாமிக்கு ஊஊஊஊஊஊஊ… தமிழக சட்டசபை 14-ந்தேதி கூடுகிறது: ஜி.எஸ்.டி. மசோதா தாக்கலாகும் மத்திய அரசுக்கு “ஆமாம் சாமி” “உள்ளோம் அய்யா” என சொல்ல ஒரு சட்டசபை கூட்டம் என்பதை தவிர என்ன சொல்ல முடியும்? தி.மு.க.வுடன் இணைந்து செயல்படத் […]

பாஜக தமிழகத்தை புறவாசல் வழியாக ஆள்கின்றது : ராகுல் காட்டம்

பாஜக தமிழகத்தை புறவாசல் வழியாக ஆள்கின்றது : ராகுல் காட்டம் மிஸ்டர் ராகுல், அன்று உங்கள் பாட்டி ராமசந்திரன் வழியாக ஆளாத ஆட்சியா? உங்கள் தந்தை ஜெயா மூலம் ஆள நினைக்காத காட்சியா? இதற்குத்தான் உங்களை எல்லோரும் அடிக்கடி தாக்குகின்றார்கள், பின் விளைவுகள் தெரியாமல் பேசிவிடுகின்றீர், அப்படி தெரியவில்லை என்றால் அருகில் இருக்கு திருநாவுக்கரசரை கேளுங்கள், அவர்தான் பெரும் வாழும் சாட்சி ராகுலை அல்ல, அவருக்கு பேச எவனோ தமிழக காங்கிரசில் எழுதி கொடுத்திருக்கின்றான் அல்லவா? அவனை […]

ஒரு கட்சி விழா என்றால் சில அரசியல்வாதிகள் வரத்தான் செய்வார்கள்….

இதென்ன பிரமாதம், ஒரு கட்சி விழா என்றால் சில அரசியல்வாதிகள் வரத்தான் செய்வார்கள், ஸ்டாலினை சந்திக்க பல பெரும் தலைவர்கள் வந்ததில் என்ன ஆச்சரியம்? என சிலர் சொல்லி தமக்கு தாமே ஆறுதல் சொல்கின்றார்கள் இதெல்லாம் ஆற்றமையிலும் ஒரு வித தாங்கமுடியா வலியாலும் சொல்லிகொள்ளும் விஷயங்கள் இப்படி சொல்பவர்களுக்கு நாம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், எங்கே, சசிகலாவும், தினகரனும் இப்படி ஒரு பல தலைவர்களை அழைத்து ஒரு பெரும் கூட்டம் நடத்திவிடட்டும் பார்க்கலாம், இவ்வளவிற்கும் அவர்கள் […]

தமிழருவி மணியன் , வைகோ, தினகரன்….

தமிழருவி மணியன் என்பவர் மீது பெரும் அபிமானம் இல்லை, வைகோவுடன் சேர்ந்து அவர் செய்த காமெடிகள் எல்லாம் எரிச்சல் ரகம் ஆனால் அவரின் புத்தகம் ஒன்று வாசிக்க முடிந்தது “மறக்க முடியாத மனிதர்கள்” என்ற அவரின் புத்தகம் அது. மனிதர் அற்புதமான எழுத்தாளர், பல அரசியல் சரித்திரங்களை மனதெல்லாம் நிரப்பி வைத்திருக்க்கின்றார் அரசியல் அவர்க்கு எதற்கு? அற்புதமான புத்தகங்களை எழுதி குவித்துகொண்டே இருக்கலாம் இந்த புத்தகம் கூட 12 புத்தகமாக வந்திருக்க வேண்டியது, மனிதரிடம் அவ்வளவு விஷயம் […]