பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாரதிராஜா பல பைத்தியங்களை உருவாக்கியிருக்கின்றார், அதில் அமீரும் ஒன்று..

பாஜக ஆட்சியினை எதிர்ப்பவர்களை எல்லாம் கைது செய்கின்றார்கள், முன்பு தமிழக அரசு அனுமதித்ததை எல்லாம் இப்பொழுது தடுக்கின்றார்கள் அப்படித்தான் மெரீனா மெழுகுவர்த்திக்காக திருமுருகனை கைது செய்தார்கள் : டைரக்டர் அமீர் இங்கு ராகுல் காந்தியினையும் இன்னும் பலரையும் கைது செய்தார்களா? ஆட்சியினை விமர்சித்த யாரை கைது செய்தார்கள்? முன்பெல்லாம் காங்கிரசும் , தமிழக அரசுகளும் இவர்களை விட்டுகொண்டிருந்தன, இப்பொழுது பாஜக அரசு மிக தைரியமாக இவர்களை தேசபாதுகாப்பு என கைது செய்கின்றன‌. இதுதான் உண்மை காங்கிரஸும் வேண்டாம், […]

ரஜினி இலங்கை சென்றால் தடுக்கமாட்டீர்களா?

அம்பேத்கர் மராட்டியர், பெரியார் நாயக்கர் இவர்கள் எல்லாம் தமிழக தாழ்த்தபட்ட இனத்திற்கு செய்த சேவை கொஞ்சம் அல்ல கார்ல் மார்க்ஸின் தத்துவம் உலகிற்கே வழிகாட்டியது. அதனால் அந்நியர் என்று யாரையும் விரட்ட முடியாது, ரஜினி அரசியலுக்கு வருவதற்கு தடை சொல்லும் உரிமை யாருக்குமில்லை, முடிவு செய்ய வேண்டியது மக்களே : திருமாவளவன் திருமாவிற்கு இப்பொழுது உண்மை விளங்கியிருக்கின்றது, வாழ்த்துக்கள் இப்பொழுது இப்படி திருந்திவிட்ட திருமா சொல்வது நன்றாகத்தான் இருக்கின்றது மிஸ்டர் திருமா, இனி ரஜினி இலங்கை சென்றால் […]

விகடன் திருமுருகன் காந்திக்கு வக்கலாத்து வாங்கி எழுதுகின்றது

விகடன் ஏடு திருமுருகன் காந்திக்கு வக்கலாத்து வாங்கி எழுதுகின்றது, அவர் என்னமோ உண்மை காந்தி என்பது போல வடிக்கின்றது மே 17ல் கொல்லபட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்க கூடாது என மக்கள் இதனிடம் சொல்கின்றார்களாம், திருமுருகன் தேசவிரோதி இல்லையாம், அரசியல்வாதிகளுக்கு எதிரியாம் ,, இப்படி மக்கள் விகடனிடம் அழுகின்றார்களாம் பழனிச்சாமிக்கும் திருமுருகனுக்கும் சம்பந்தி விரோதமா? இல்லை கருவாட்டு வியாபார பிரச்சினை அல்லது வாய்க்கால் தகறாறா? இந்தியாவில் தடை செய்யபட்ட இயக்கத்தை மறைமுகமாக ஆதரிப்பதை தவிர திருமுருகன் […]

அங்கிள் சைமன் என்பவரின் சத்தம் இரு நாட்களாக இல்லை,

இந்த அங்கிள் சைமன் என்பவரின் சத்தம் இரு நாட்களாக இல்லை, திருமுருகனின் கைதுக்கு பின் அன்னார் கடும் மவுன விரதம் அவர் இங்குதான் இருக்கின்றாரா? இல்லை படகு ஏறி ஈழம் சென்றுவிட்டாரா என்பதும் தெரியவில்லை படகு மூலம் செல்வது சிரமம், அவர் பெங்களூர் நோக்கி செல்ல வாய்ப்பு இருக்கின்றது, அவர் அங்கிருந்துதான் கொழும்பு சென்று முன்பு பல சாகச பயணம் நிகழ்த்தியதாக சொல்லிகொள்வார். வீரலட்சுமி என்பவரையும் காணவில்லை, அந்த சோபன்பாபு சிலையினை இடிப்பேன் என பலமுறை ஊர்வலம் […]

ஜெர்மனியில் சுற்றல் பயணத்தை முடித்த மோடி, ஸ்பெயினுக்கு சென்றார்

ஜெர்மனியில் சுற்றல் பயணத்தை முடித்த மோடி, ஸ்பெயினுக்கு சென்றிருக்கின்றார் ஜெர்மன் நிச்சயம் பொருளாதார வல்லரசு, இன்றைய நிலையில் சக்திவாய்ந்த நாடு, என்ன ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது பற்றி தெரியவில்லை, இந்தியாவில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தாராம் ஜெர்மனியின் எந்திரங்கள் உலகெங்கும் போல இந்தியாவிலும் ஓடுகின்றது, பின் ஏன் அழைப்பு? ஸ்பெயின் இன்று போர்ச்சுகல், கிரீஸ் போல கொஞ்சம் தடுமாறும் நாடு, அங்கும் மோடி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கின்றார் மாடுகளை வதைக்காதீர்கள் என கூடுதலாக ஆலோசனையும் சொல்லியிருக்கலாம் அடுத்ததாக பிரான்ஸ் […]

ஜெயா சசி சொத்துக்களை தமிழக அரசு எடுத்து கொள்ளும் : செய்தி

ஜெயா சசி சொத்துக்களை கையகபடுத்தபடுத்த நீதிமன்றம் உத்தரவு, தமிழக அரசு அந்த சொத்துகளை எடுத்துகொள்ளும் : செய்தி தமிழக அரசின் சொத்துக்களை மீட்ட அரசு இது என அவர்களில் ஒரு பிரிவினரே அவர்களுக்கு வாழ்த்து நோட்டீஸ் ஒட்டுவார்கள் ஆனாலும் தன் கட்சியின் தலைவியின் ஊழல் சொத்தினை, தானே பெற்றுகொள்ளும் விசித்திரம் தமிழகத்தில் முதல்முறையாக நடக்கின்றது இந்த ஜெயலலிதாவிற்குத்தான் சட்டசபையில் படம் திறக்க வேண்டுமாம் ஏதும் சொன்னால்.. தமிழக மக்களே, அம்மையார் தன் சொத்துக்களை எல்லாம் தமிழகத்திற்கே கொடுத்துவிட்டார், […]

செய்தி சிதறல்கள்

திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு பாரதிராஜா சார்.. We want more Emotion சிவில் போர் மூளும் : மத்திய அரசுக்கு திருமா எச்சரிக்கை சீமான் அடிக்கடி போர் நடத்துகின்றேன் என்கின்றார், ரஜினி வேறு போர் வந்தால் சந்திப்போம் என்கின்றார், இது பசுமீட்பு போர் என்கின்றார் எச்.ராசா இதில் திருமா வேறு சிவில் போர் நடத்தபோகின்றாராம் எங்கு திரும்பினாலும் போர்..ஆமாம் போர் எனும் வடிவேலு வசனமே தமிழகத்தில் எதிரொலிக்கின்றது பாவம் தமிழர்கள், சரியான […]

மாட்டுகறி அரசியலின் உள் அர்த்தம் ஒன்றுமே அல்ல‌

மாட்டுகறி அரசியலின் உள் அர்த்தம் ஒன்றுமே அல்ல‌ பூரண இஸ்லாமிய‌ நாடுகளில் எப்படி சில விலங்குகளை விலக்கவேண்டுமோ, அப்படி இந்த இந்துநாட்டில் மாடுகளை வணங்கியே தீரவேண்டும் இதுதான் இவர்கள் சொல்லவரும் தத்துவம் உலகில் அப்படியான கடுமையான சட்டதிட்ட இஸ்லாமிய நாடுகளை உலக நாடுகள் ஒருமாதிரியாகத்தான் பார்க்கின்றன, எண்ணெய் எனும் ஒரே ஒரு வளம் இல்லாவிட்டால் அவர்களை திரும்பி கூட பார்க்கமாட்டார்கள் இப்படியான விஷயங்கள் 1000 காலத்திற்கு முன்பு அந்நாட்டை இழுத்து சென்றுவிடும், உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தானை சொல்லலாம் இன்னும் […]

இவர்களின் வீர, மான, இனவுணர்வு ….

இலங்கையில் பெரும் வெள்ளம், தென்னிலங்கையில் வெள்ள அழிவு என்றால், இங்கும் சிலர் கூச்சலிடுகின்றனர் 2009ல் என் இனம் அழியும் பொழுது சிங்களன் அமைதி காத்தான், 2017ல் இறைவனின் தண்டனையில் சிங்களம் அழியும் பொழுது நாங்கள் அமைதி காப்போம்” என வீரமுழக்கம் இடுகின்றனர் இங்கு குடிக்க நீர் இல்லை என்றாலும் வீரமுழக்கம் எப்படி பார்த்தீர்களா? தென்னிலங்கையில் தமிழர்கள் இல்லை என சொன்னது யார்? அங்கும் தமிழர்கள் உண்டு, இந்த வெள்ளத்தில் தமிழர்களும் பாதிக்கபட்டிருக்கின்றார்கள் அவர்களை சாவுங்கள் என விட்டுவிடலாமா? […]

இந்திய மாட்டுகறி விவகாரம் உலக விவாதமாயிற்று

இந்திய மாட்டுகறி விவகாரம் உலக விவாதமாயிற்று, அதுவும் மதுரை நீதிமன்ற அறிவிப்பு ஒருவித பரபரப்பினை ஏற்படுத்துகின்றது ஒரு நீதிமன்றம் சில காரியங்களை சொல்லுமாயின் அதில் ஓரளவேனும் நியாயம் இருக்கலாம் என்பது தியரி, அப்படி மதுரை தீர்ப்பு உலகில் விவாதிக்கபடுகின்றது கண்ணகியும், நக்கீரனும் உலவிய மண் அல்லவா? நியாயத்தினை சொல்கின்றது அது இருக்கட்டும் நேற்று கடும் காமெடி செய்தவர் இருவர், ஒருவர் நாஞ்சில் சம்பத் வழக்கமான காமெடி, கூடவே ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்திற்கு பேராபத்து என கொளுத்திபோட்டிருக்கின்றார் […]