போலீஸ் அனுமதி கிடைக்குமா?
சபரிமலை தரிசனத்துக்கு தமிழக பெண்கள் 139 பேர் பதிவு – போலீஸ் அனுமதி கிடைக்குமா? போலிஸ் அனுமதி கிடைக்குமா என்பது தெரியாது, ஆனால் சிதம்பரம் கோவிலில் நடந்தது போல் நடக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது
சுத்தமான இந்து இந்தியன்….
சபரிமலை தரிசனத்துக்கு தமிழக பெண்கள் 139 பேர் பதிவு – போலீஸ் அனுமதி கிடைக்குமா? போலிஸ் அனுமதி கிடைக்குமா என்பது தெரியாது, ஆனால் சிதம்பரம் கோவிலில் நடந்தது போல் நடக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது
சோனியா, ராகுலுக்கு பாதுகாப்பு குறைக்கபட்டதை கண்டித்து பாராளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு தமிழ்நாட்டை காக்க வோட்டு வாங்கினார்களா? சோனியாகாந்தியினை காக்க வோட்டு வாங்கினார்களா என்பது தெரியவில்லை முன்பு ராஜிவ் கொலையில் வசமாக சிக்கிய திமுக இப்பொழுது அதற்கு பரிகாரம் தேடுகின்றது போல, ஆக சர்வாதிகாரி பாவமன்னிப்பு பெற்றுகொண்டிருக்கின்றார்
உள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல் ஆக தமிழ்நாட்டில் நடக்க போகும் ரகசிய கலவரம் மற்றும் பூகம்பத்துகான நாள் டிசம்பர் 2ல் அறிவிக்கபடும் எப்படியோ உள்ளாட்சி தேர்தல் நடத்தபடுவது உறுதியாகிவிட்டது, இனி பரபரப்பு மற்றும் காமெடியான காட்சிகள் பல அரங்கேறும், தமிழர் எல்லோரும் இனி மகா பிசி..
அது என்ன அண்ணாமலை பல்கலைகழக சம்பவம் என ஆளாளுக்கு கேட்கின்றார்கள் விஷயம் இதுதான் அது 1971ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க அண்ணாமலை பல்கலைகழகம் முடிவு செய்தது, ஏன் செய்தது என்றால் அதற்கும் அரசியல் கணக்கு இருந்தது அப்பொழுது மாணவ காங்கிரஸார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், 6ம் வகுப்பினை தாண்டாத கலைஞருக்கு ஏன் டாக்டர் பட்டம் என்பதும், ஆட்சிக்கு வந்து 2 வருடம் கூட ஆகவில்லை அதற்குள் என்ன சாதித்தார் […]
“இந்த கேடுகெட்ட ஜென்மங்களால் நான் படும் அவலத்தை நினைச்சி பார்க்குறப்போ, அதை வேதனையோடு பதிவு செய்கிறேன், அதை மறக்க முடியாது. ஆனால் நான் கவலை படவில்லை..” ஏதாவது புரிகின்றதா? கவலைபடாவிட்டால் ஏன் காலகாலத்துக்கு மறக்கமுடியாமல் அவலத்தை வேதனையோடு பதிவு செய்ய வேண்டும்? அன்னார் வேதனைபடுவாராம் ஆனால் கவலை படவே மாட்டாராம்..இதெல்லாம் திராவிட தனிமொழி நமக்கெல்லாம் புரியாது https://m.facebook.com/story.php?story_fbid=3502234563127896&id=100000241608911
அதாவது மதியில்லா மாறா விஷயம் என்னவென்றால், அவர்கள் ஒழுங்காக கஷ்டபட்டு படித்து எல்லோரும் 50 மார்க் வாங்குமிடத்தில் அவர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றார்கள் இட ஒதுக்கீட்டின் கொடுமை அப்படி ஆனால் அவர்களை அதுதான் புடம் போடுகின்றது அவர்களுக்கு உங்கள் கோஷ்டி கொடுமை என நினைத்து செய்த நல்ல விஷயம் அதுதான். இதனால் அவர்களுக்கு எதுவும் கடினமே அல்ல, தாண்டி செல்கின்றார்கள், இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் குழம்பி தற்கொலை செய்கின்றார்கள் அதாவது மதிகெட்ட […]
அந்த மனிதர் எளிய இலங்கை கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்துக்காரர், அக்குடும்பம் சிங்கள பூர்வீகமும் அல்ல, இந்தோனேஷியாவில் இருந்து பன்னெடுங்காலத்துக்கு முன்பு இலங்கைக்கு வந்து ராஜாவுக்கு விசுவாசமான இனமாக இருந்தது, அதனால் ராஜ விசுவாசிகள் என பொருள்படும் ராஜபக்சே எனும் பெயர் வந்தது அந்த குடும்பத்தின் வழி வந்தவர்கள் அனைவருமே கருணாநிதி குடும்பம் நிதியினை சுமப்பது போல, நேரு குடும்பம் காந்தியினை சுமப்பது போல ராஜபக்சே எனும் பட்டத்தை சுமப்பார்கள் அந்த வம்சாவழிகளில் ஒருவர் இலங்கை அமைச்சராக இருந்தார் […]
நெல்லை பாராளுமன்ற எம்பி ஞானதிரவியம் தன் ஊர் பகுதி மக்களுக்கு தன் சொந்த நிலத்தில் இருந்து ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதன் மேற்பகுதியினை கவனமாக மூடி குடிநீர் வழங்க தொடங்கியிருகின்றார் இவ்வளவு காலமும் அந்த ஊர் இருந்தது, அவர்களுக்கு தாகமும் இருந்தது,ம் அவரும் இருந்தார், அவரிடம் நிலமும் இருந்ததும், நிலத்தடியில் நீரும் இருந்தது ஆனால் அவரிடம் பதவி இல்லாததால் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை இதோ பதவி வந்ததும் செய்துவிட்டார் இனி பதவி போனதும் ஓ. பன்னீர் செல்வம் […]
இலங்கை அனுராதாபுரத்தில் இலங்கை ஜனாதிபதியாக முடிசூட்டிகொள்கின்றார் கோத்தபாய ஆம் அனுராதபுரம் புராதானமிக்கது, புத்தமதத்தின் விகாரைகள் அங்குதான் நிரம்பி இருந்தன ஒரு காலத்தில் மட்டுமல்ல இன்றும் இலங்கை பவுத்தத்தின் தலமை பீடம் அதுவே அந்த அனுராதாபுரத்தைத்தான் ராஜராஜ சோழன் நொறுக்கினான், நொறுக்கி எரித்து போட்டு வந்தான், அது மீண்டெழ நெடுங்காலமாயிற்று இலங்கை சரித்திரமான அந்த எல்லாளன் எனும் தமிழனை சிங்கள துட்ட காமினி தோற்கடித்த இடமும் அதுதான், பிரபாகரன் கருவான இடமும் அதுதான் ஆக புலிகொடி ஏந்தி சோழன் […]
தற்கொலை செய்த அனிதாவுக்கு திமுக சார்பில் சிலை திறப்பு அண்ணாமலை பல்கலைகழகத்தில் கொல்லபட்ட உதயகுமாரும் மாணவரே, இந்தி எதிர்ப்பு போர் என திமுகவால் களத்துக்கு கொண்டுவந்து கொல்லபட்ட பலர் மாணவர்களே பத்மநாபாவோடு செத்ததிலும் சில மாணவர்கள் உண்டு ஒன்றா இரண்டா திமுக காலத்து மாணவர் சாவுகள்? திமுகவுக்காக ஓடி ஓடி உழைத்த தா.கிருட்டினன் முதல் எத்தனையோ பேருக்கு ஒரு செங்கல் உண்டா? இல்லை இவர்களுக்கு அனுகூலம் என்றால் தற்கொலைகளை தேடிபிடித்து அரவணைப்பதும் , இவர்களுக்கு ஆகாது என்றால் […]