பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஞான பீட விருது சர்ச்சை பெரிதாகின்றது….

இந்த ஞான பீட விருது சர்ச்சை பெரிதாகின்றது, எதிலிருந்து ஆகின்றது என்றால் மோடியினை புகழ்ந்து வைரமுத்து ஏதோ சொல்லபோக, அதிலிருந்து அய்யோ இவன் ஞானபீட விருதுக்கு அடிபோடுகின்றான் என கிளம்பிவிட்டார்கள் இவர்களை நன்றாக கவனித்துபார்த்தால் ஒப்பாரி எப்படி வருகின்றது தெரியுமா? அசோக மித்திரன், ஜாணகிராமன், சுந்தர ராசமாசி, லாசரா போன்றோருக்கு கொடுக்காத ஞானபீடம் எப்படி வைரமுத்துவிற்கு செல்லலாம் என கிளம்புவார்கள் தமிழில் இதுவரை இருவர்தான் ஞானபீட விருது பெற்றிருக்கின்றார்கள் ஒருவர் அகிலாண்டம் எனும் அகிலன், இன்னொருவர் ஜெயகாந்தன் […]

ஜெயமோகன் ஒருவரே இலக்கியவாதி????

கம்பன் முதல் இந்த நூற்றாண்டில் செத்துபோன பாரதி, பாரதி தாசன், அகிலன் , மு.வரதராசனார், கல்கி, ஜெயகாந்தன் , அண்ணா, சுஜாதா, கண்ணதாசன் உட்பட பலரை எழுப்பி வைத்து ஒரு விஷயம் சொல்லவேண்டி இருக்கின்றது இந்த உலகில் கவிஞன் என்றால் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளன் என்றால் ஜெயமோகனும் அவர் குரு சுந்தர ராமசாமியும். நீங்கள் எல்லாம் அவர்கள் முன் அற்ப பதர்கள். புரிகின்றதா? ஒழுங்காக ஒருமுறை வந்து நாங்கள் எல்லாம் கவிஞனோ எழுத்தாளனோ இல்லை ஜெயமோகன் ஒருவரே இலக்கியவாதி […]

ஸ்டெல்லா புரூஸின் மறைவு

தமிழில் பல வகை எழுத்தாளர்கள் உண்டு, ஆரவாரமான சிலர் வெளியில் தெரிவார்கள், அமைதியான சிலர் தெரியமாட்டார்கள் ஆனால் இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை எழுதி சம்பாதித்திருக்கவே மாட்டார்கள், தமிழில் எழுதி ஒரு பைசா சம்பாதிக்கமுடியாது என்பது பெரும் எழுத்தாளார்கள் ஒப்புகொண்டது விவசாயினை விட மோசமான நிலையில் இருப்பவன் தமிழ் எழுத்தாளன் அப்படி அந்த எழுத்தாளரும் இருந்தார், அவர் பெயர் ராம் மோகன் ஆனால் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் எழுதினார் கவிதை எழுதுவார், கதை எழுதுவார் ஆனந்த […]

ஒவையாரின் சில வரிகள் குழப்பமாகின்றன‌

ஒவையாரின் சில வரிகள் குழப்பமாகின்றன‌ அவர் பெண்தான் என்றாலும், பெண்களை பற்றி உயர்வாக ஒன்றும் எழுதவில்லை,மாறாக சண்டாளி, சூர்ப்பநகை என்றெல்லாம் எழுதி நல்ல பெண் இல்லா வீடு புலியின் குகை என்றெல்லாம் எழுதிவிட்டார் இப்பொழுது ஒருத்தி அப்படி எழுதினால் உடனே பெண் பெயரில் இருக்கும் ஆண் என சீறிவிடுவார்கள். ஆக ஒவையார் என்பவர் அக்காலத்திலே பெண் பெயரில் இருந்த ஆணாக இருக்குமோ, அன்றே பேக் ஐடி கலாச்சாராம் இருந்திருகலாமோ என்ற சந்தேகம் எழுகின்றது அல்லது பெண் அடிமை […]

பா ராகவன் : இன்றைய தமிழ் எழுத்தாளரில் நம்பர் 1

இன்றைய தமிழ் எழுத்தாளரில் நம்பர் 1 அவர்தான். கிரீடம் நிரந்தரமாக சூட்டியாயிற்று. கண்ணுக்கு எட்டியவரையில் இன்னொருவன் அவர் இடத்தை நெருங்குவது இப்போதைக்கு சாத்தியமே இல்லை. ஆழ்வாரும் , அடியார்களும் , கண்ணதாசனும், கொஞ்சம் ஸ்டீப் ஜாப்ஸும், அதிகம் நளனும் கலந்த அற்புத எழுத்தாளர் அவர் Pa Raghavan எம்பெருமானுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெய்வமே, பல்லாண்டு வாழ்க, இன்னும் பலநூல்கள் எழுத. எமக்கெல்லாம் உலகினை திறந்து காட்ட‌ உண்மையில் நல்ல இஸ்லாமிய தலைவனும், நல்ல கிறிஸ்தவனும் தமிழகத்தில் […]

கிறுக்கு ராஜாக்கள் தொடர்

விகடனில் நண்பர் Mugil Siva கிறுக்கு ராஜாக்கள் தொடர் எழுதிகொண்டிருக்கின்றார், உலகமெல்லாம் இருந்த கிறுக்கு ராஜாக்களின் கதையினை எழுதுகின்றார். மிக நன்றாக, ஆழமாக வாசித்து எழுதுகின்றார், சூப்பரோ சூப்பர். உலகம் முழுக்க கிறுக்கா ராஜாக்கள் இன்றும் அதிபர்கள், பிரதமர்கள் என்ற வகையில் ஆண்டுகொண்டுதான் இருக்கின்றார்கள் என்பது வேறுவிஷயம் இதுவரை Mugil Siva க்கு சிக்கல் இல்லை, இனி இந்திய கிறுக்கு ராஜாக்கள் என சொல்லபட்டவர்கள் மீது இவர் கை வைக்கும்பொழுதுதான் அவருக்கு சிக்கல் வரலாம் இந்தியாவில் ஏகபட்ட கிறுக்கு ராஜாக்கள் உண்டு எனினும், […]

மறுபடியும் சுஜாதாவினை சீண்டுகின்றார் ஜெயமோகன்

மறுபடியும் சுஜாதாவினை சீண்டுகின்றார் ஜெயமோகன், சுந்தர ராமசாமி என்பவர் சுஜாதா இலக்கியவாதி அல்ல, அவரிடம் சரக்கு இல்லை என என்னமோ சொல்லிவிட்டு செத்தாராம் சுஜாதா சுந்தர ராமசாமியிடம் மதிப்பு பெறவே இல்லையாம் , அதனால் செல்லாதாம் சுஜாதா சுந்தர ராமசாமி நடத்திய ஏதோ ஒரு அறிவான இதழில் எழுத முயன்றாராம், ஆனால் சு.ராமசாமி அவரை எழுத அனுமதிக்கவில்லையாம், ஆம் தரம் கெட்டுவிடுமாம் சிந்து சமவெளி படத்தில் ஜெயமோகனின் வசனத்தால் கெடாத தரம், சு.ராமசாமி பத்திரிகையில் சுஜாதா எழுதினால் […]

ஆசான் Pa Raghavan ருசியியலில் ரசம் வைப்பது எப்படி?

ஆசான் Pa Raghavan ருசியியலில் ரசம் வைப்பது எப்படி என இலக்கிய ரசம் சொட்ட சொட்ட விளக்கியிருந்தார், விடியற்காலமே கண்ணில் பட்டது. ஒரு மனுதன் ரசத்தை கூடவா இப்படி ரசித்து ரசித்து குடித்திருப்பான்? அவர் குடித்திருக்கின்றார். அவர் சொன்ன பதத்தில் அப்படியே ரசம் வைத்தால் வானலோக அமிர்தமாக தித்திக்கும் சுவையில் அப்படியே வருகின்றது. அவர் வெஜிடேரியன் ஆனது நிச்சயம் இந்த அசைவ‌ உணவு ரசனை உலகிற்கு பெரும் சாபம், தீரா சோகம் பனீர் எனும் வஸ்துவை பலருக்கு அறிமுகபடுத்தி பிரபலபடுத்திய […]

இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள்

இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள் 2004ல் இந்த நாளில்தான் தமிழ் செம்மொழி என தமிழன் அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருக்கும்பொழுது அறிவிக்கபட்டது உலகின் தொன்மையான 6 மொழிகளில் ஒன்றான தமிழுக்கு இந்தியாவில் செம்மொழி அந்தஸ்து தாமதமாக கொடுக்கபட்டது என்றாலும் , கிடைக்கபெற்றது இதற்காக கலைஞர் உழைத்த உழைப்பு மறக்க முடியாதது, தன் வாழ்விலே அதனை செய்வேன் என சொல்லி பெற்றும் கொடுத்தார், அவரின் அரசியல் வாழ்வில் பெரு வெற்றி அது. இதனை தொடர்ந்த செம்மொழி மாநாடும், “செம்மொழியான‌ […]

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார் அற்புதமான மானிட , மனித நேய சிந்தனைகளை கொடுத்த அந்த சிந்தனையாளன் காலமானார். புதுகவிதைக்கு இலக்கணம் செதுக்கிய அந்த உளி உடைந்தே விட்டது, பல கவிஞர்களுக்கு ஒளி கொடுத்த அந்த விளக்கு அணைந்தே விட்டது கலைஞரின் கவிவாழ்வில் அவருடன் வந்த ஒரு ஆஸ்தான கவிஞன், கலைஞரை பாதியில் விட்டுவிட்டு சென்றுவிட்டான் ஆனால் தமிழகத்தின் சிறந்த புதுக்கவிதை கவிஞர்கள் வரிசையில் எந்நாளும் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்    

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications