பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

செப்டம்பர் 29தான் “குஷ்பூ டே” அல்லது “பிரபஞ்ச பேரழகு தினம்”.

தலைவி தன் பிறந்தநாள் செப்டம்பர் 29 என அறிவித்துவிட்டார், இணையத்தில் மோடியின் சாதனைகளை போல அவரின் பிறந்த நாள் தவறாக இன்று என பதிவிடபட்டிருக்கின்றது. இன்று பிறந்தநாளாக இருந்திருந்தால் சங்கம் சும்மா இருக்குமா? நள்ளிரவு 12 மணிக்கே கொண்டாட்டம் தொடங்கி பெரும் ஆரவாரமாக கொண்டாடி கொண்டிருக்காதா? ஆக ரசிக கண்மணிகள் தங்கள் பிரார்த்தனைகளை, வாழ்த்துக்களை செப்டம்பர் 29 அன்று தெரிவிக்குமாறு சங்கத்தின் சார்பாக கேட்டுகொள்கின்றோம் செப்டம்பர் 29தான் “குஷ்பூ டே” அல்லது “பிரபஞ்ச பேரழகு தினம்”. ஆச்சரியமாக […]

குஷ்புவே நமஹ ! : 10

பத்து பாகங்களாக தலைவியின் முதல் இன்னிங்க்ஸின் சுருக்கத்தை எழுதியாயிற்று, வாய்ப்பு கொடுத்த Anthanan Shanmugam அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக நன்றிகள். ஒருவேளை தலைவியின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அவரின் நேரடி திருத்துதல்களோடு இன்னும் பல விஷயங்களோடு, தலைவியின் சுயசரிதை புத்தமாக வெளியிடலாம். அந்த அசாத்திய பெண்மணிக்கு வாழ்த்துக்கள், அவரின் கோடான கோடி ரசிகர்களின் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி. காங்கிரசில் இருந்தாலும் தன் மனதில் பட்டதை பேசிகொண்டிருந்தார் குஷ்பூ. கட்சி நிலைப்பாட்டையும் தாண்டி அவரின் குரல் ஓங்கி ஒலித்தது. டெல்லி பல்கலைகழக […]

சென்னை மும்பை நட்புறவின் அடையாளம் இந்த படம்

என்ன இருந்தாலும் மராட்டியர்கள் நன்றிமிகுந்தவர்கள், ஹேம மாலினியினை அங்கே வரவேற்று கொண்டாடி ஏற்றுகொண்டு மறக்காமல் குஷ்பூவினை தமிழகத்திற்கு அனுப்பிவிட்டனர். சென்னை மும்பை நட்புறவின் அடையாளம் இந்த படம்.           தமிழக அரசியலில் வைஜெயந்தி மாலாவிற்கு பிரகாசமான எதிர்காலம் இருந்தது, ஆனால் தவறவிட்டார். தான் தவறவிட்ட வாய்ப்புகளை எல்லாம் குஷ்பூவும் விட்டுவிட கூடாது, அவர் அரசியலில் ஜொலிக்கட்டும் என வாழ்த்துகின்றார் வைஜெயந்திமாலா. வைஜெயந்திமாலா விரும்பினால் குஷ்பூ ரசிகர் மன்றத்தின் சீனியர் பதவி அவருக்கு […]

குஷ்புவே நமஹ! : 9

சதிகார கேள்விகள்! தப்பிக்கும் குஷ்பு!   திமுகவில் குஷ்பூவினை குறிவைத்து எதிர்ப்புகள் வலுத்தன, சர்ச்சைகள் அதிகமாகின. திமுக எனும் பெரும் இயக்கத்தில் இப்படியான நிகழ்வுகள் உண்டு, பெரும் தலைவர்கள் எல்லாம் நீக்கபட்டிருக்கின்றார்கள், சிலர் தாமாக விலகியிருக்கின்றார்கள். குஷ்பூ திமுகவிலிருந்த நிலை, 1960களில் ஈவிகே.சம்பத் இருந்தது போல் இருந்தது, அவர் திமுகவின் ஆரம்ப கால தலைவர். திமுகவின் தூண்களில் ஒருவர். அண்ணாவும் அவரும் ஒன்றாக பெரியார் பாசறையில் வளர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் புரிதலும் பற்றும் அதிகம். ஆனால் கட்சி […]

குஷ்புவே நமஹ ! : 8

குஷ்புவை சூழ்ந்த கருமேகங்கள்!    எங்கள் வாழ்வும், எங்கள் மகிழ்வும் மங்கா குஷ்பூ என சங்கே முழங்கு.. தனக்கு திமுக மிக சரியான கட்சி என எண்ணி அதில் 2010ல் ஒரு மே மாதத்தில் இணைந்தார் குஷ்பூ, சூரிய கட்சியில் அந்த அழகு சூரியன் இணைந்தது. குஷ்பூ போன்ற வசீகர முகத்தின் தேவை திமுகவிற்கும் இருந்தது. திமுகவில் அவருக்கு பொறுப்புகள் கொடுக்கபட்டன. திமுக மேடை என்பது வெறும் முகத்தை காட்டிவிட்டு வரும் இடமல்ல, அங்கு நிறைய பேசவேண்டும், […]

தலைவி குஷ்பூ விரைவில் நலம் பெற்று திரும்பட்டும்.

நமது தலைவி குஷ்பூ பாதத்தில் காயம் ஏற்பட்டிருக்கின்றது, இது தமிழக அமைதியினை குலைக்கும் தீவிரவாத செயலா? சிலரின் திட்டமிட்ட சதியா? என்பது குறித்து விசாரணை நடக்கின்றது. சிறிய காயம் என்பதால் மாநில சட்டம் ஒழுங்கிற்கு சிக்கல் இல்லை எனினும் சம்பவம் நடந்த இடம் மெல்போர்ன் என்பதால் பழனிச்சாமி அரசு தப்பியது, மாறாக‌ ஆஸ்திரேலிய அரசினை மிக வன்மையாக கண்டிக்கின்றோம். கோடான கோடி தொண்டர்கள் இதனால் தாங்கமுடியாத துயர் அடைந்துள்ளனர், நம் தலைவி மீண்டுவர எல்லா ஆலயங்களிலும் சிறப்பு […]

குஷ்புவே நமஹ ! : 7

குஷ்பு ஏன் திமுக வில் இணைந்தார்? சிக்கலான வழக்குகளை சந்தித்து மீண்ட ஒரே தமிழ்திரை நட்சத்திரம் இன்றுவரை குஷ்பூ ஒருவர்தான்.. தமிழகத்தை பல கண்கள் கவனித்துகொண்டே இருக்கும், யாராவது சீர்த்திருத்த கருத்தோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லா கருத்தையோ பேசிகொண்டு மக்கள் அபிமானத்தை பெற்றும் இருந்தால் அக்கண்கள் குறிவைக்கும். அவர்களை ஏதாவது ஒரு விதத்தில் சிக்கவைத்து கதறவைத்து அவர்களை பொதுவாழ்க்கையிலிருந்தே அப்புறபடுத்தி அடையாளமில்லால் ஆக்கும் கொடூர கண்கள் அவை. அவர்கள் யார்? என்ன செய்கின்றார்கள் என தெரியாது. […]

குஷ்புவே நமஹ! :  6

  குஷ்பு ஒரு பெரியாரிஸ்ட்!   எடப்பாடியும் பன்னீரும் என்ன ஆனால் என்ன? சீனா போர் முரசு கொட்டினால்தான் என்ன? வடகொரியா என்ன ஏவுகனை சோதனை செய்தால் நமக்கென்ன? நம் கடன் குஷ்பூ புகழ் பாடிகொண்டிருப்பதே, அதுவே நம் சுதர்மம். மணவாழ்வில் புகுந்த குஷ்பூவும் இல்லறத்தை நல்லறமாக நடத்தினார். கொங்குநாட்டு மருமகள் ஆகியிருந்தார். அவ்வகையில் ஜோதிகாவுக்கு குஷ்பூதான் சீனியர். முதல் குழந்தை பிறந்தபின் அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார் “திருமணமான பெண்ணிடம் யாரும் சொத்து எவ்வளவு? வருமானம் எவ்வளவு? […]

குஷ்புவே நமஹ ! : 5

 குஷ்பு இதயக்கனி ஆனது இப்படிதான் !   இந்த உலககில் எது நடந்தாலும், ஏன் அது அழிந்தால் கூட, நம் கடமையினை நாம் செய்து கொண்டே இருக்கவேண்டும்.. இந்த காலகட்டத்தில் தமிழில் குஷ்பூ நம்பர் 1 நடிகையாக இருந்தபொழுதிலும் மற்ற தென்னக மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நடித்துகொண்டே இருந்தார். சுருக்கமாக சொன்னால் தென்னிந்திய சினிமா உலகின் ராணியாக அவர் முடிசூட்டபட்ட நேரம் அது. அந்த கிரீடம் இன்னும் அப்படியேத்தான் இருக்கின்றது. அவர் நடிக்க வந்த […]