பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தோழர் Dhivya Anandக்கு திருமண நன்னாள் வாழ்த்துக்கள்

தலைவி குஷ்பு வீட்டு அருகிலே வசிக்கும் மாபெரும் பாக்கியம் பெற்ற, நம்மை உளவுபார்த்து அந்த வீட்டில் போட்டு கொடுகின்றாரோ என சந்தேக வளையத்திற்குள்ளும் உள்ள தோழர் Dhivya Anand இன்று திருமண நாளை கொண்டாடுகின்றாராம் சங்கம் அவருக்கு திருமண நன்னாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றது எல்லா தெய்வங்களும் இத்தம்பதியினை ஆசீர்வதிக்கட்டும் குஷ்புவும் அழகும் போல, குஷ்புவும் தைரியமும் போல இருவரும் இணைந்து பல்லாண்டு காலம் எல்லா வளமும் பெற்று வாழ சங்கம் வாழ்த்துகின்றது பிரபல தொழிலதிபரான தோழர் Dhivya Anand, குடும்பம் மற்றும் […]

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலம் பொங்கலை உலகின் பழமையான கலாச்சார பண்டிகையாக அறிவிப்பு

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலம் பொங்கலை உலகின் பழமையான கலாச்சார பண்டிகையாக அறிவித்தாயிற்று , இனி அது அங்கு அரசு விழாவாக நடைபெறும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே தமிழரால் இங்கிலாந்திற்கு பெருமை என நெகிழ்ந்திருக்கின்றார் தமிழர் இருக்குமிடமெல்லாம் பொங்கல் மிக விமரிசையாக கொண்டாடபடுகின்றது, அந்நாட்டு தலைவர்கள் எல்லாம் வாழ்த்து தெரிவிக்கின்றார்கள் பிஜி முதல் மேற்கிந்திய தீவு, தென்னமெரிக்கா வரை வெள்ளையன் தமிழரை அழைத்து சென்றான், அவன் சொன்ன காரணம் தமிழர்கள் மிக சிறந்த உழைப்பாளிகள். அதனை விட […]

எல்லா வளங்களும் எல்லோருக்கும் பொங்கட்டும்

மனிதகுலம் தோன்றி, வேட்டையாடுதலை விட்டு ஆற்றங்கரையில் விவசாயம் தொடங்கி நிலையாக வாழ ஆரம்பித்தபொழுதே நாகரீக வாழ்வு ஆரம்பமாயிற்று. மயன் நாகரீகம்,எகிப்து,சுமேரியா,சிந்து வெளி,சீனா என பெரும் பழைய நாகரீகங்கள் இருந்தாலும், அவற்றிற்கெல்லாம் மிக பழமையானது ஆதிச்சநல்லூரில் புதைந்துகிடக்கும் பழம்நாகரீக உலகம். அதுதமிழனின் அடையாளம் என்பதற்காக இன்றுவரை அதில் கவனம் செலுத்தபடவில்லை, இன்னும் செலுத்தவும் மாட்டார்கள். ஆயிரம் உண்மைகளை கொண்டு உறங்கிகொண்டிருக்கின்றது அது, உறங்கட்டும் காலம் வரும் வரை உறங்கட்டும். அதைத்தான் மறைக்கமுடியுமே தவிர, அந்த தமிழ் நாகரீக வேளான்மை […]

ஆண்டாள்.. மஸ்கோத்து… டிரம்ப்….

திரையுலகை “ஆண்டாள்”, சங்கத்தார் மனதினையும் “ஆண்டாள்”. எமக்கு தெரிந்தது இந்த “ஆண்டாள்” ஒருவர்தான். ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போன்றது முக ஸ்டாலின். ஆளுநர் உரை பீமபுஷ்டி அல்வா போன்றது அதிமுக தரப்பு ஆக சட்டசபை பேக்கரி லெவலுக்கு சென்றாயிற்று , இனி வடிவேலுவின் “வீரபாகு பேக்கரி” போல கதைகள் வந்தாலும் ஆச்சரியமில்லை. இந்தியா, ரஷ்யா, சீனா உடன் அமெரிக்கா இணைந்து செயல்படுவது நல்ல விஷயம் – டொனால்ட் டிரம்ப் பின்னே, வடகொரியாவினையே அடக்க முடியவில்லை என்றால் […]

இஸ்ரோ தலைவராக தமிழர் சிவன்பிள்ளை நியமனம்

விண்வெளித்துறை செயலாளர் மற்றும் இஸ்ரோ தலைவராக தமிழர் சிவன்பிள்ளை நியமனம். கலாம், மயில்சாமி அண்ணாதுரை, ரவி அருணன் வரிசையில் இந்திய விண்வெளிதுறையில் சாதனை படைத்து மிக உயர்பதவிக்கு வரும் தமிழர் சிவன்பிள்ளையினை வாழ்த்துவோம் இத்தேசத்தில் தமிழர்கள் புறக்கணிக்கபடுகின்றார்கள் என்றும், தமிழனுக்கு உயர்வே இல்லை அவன் அடிமை என சொல்பவர்கள் எல்லாம் எங்கே என தெரியவில்லை இம்மாதிரி செய்திகளை வெளிநாட்டு ஊடகம் சொல்கின்ற அளவுக்கு தமிழ்நாட்டு ஊடகங்கள் சொல்லாது அந்த பதவியின் பெருமை அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது, தமிழக பத்திரிகைகள் […]

முகத்தை காட்டியே தீரவேண்டும் ….

இந்த Devi Somasundaram என்பவர் முகத்தை காட்டியே தீரவேண்டும் என பலர் அடம்பிடித்து கொண்டிருக்கின்றனர். அவர் முகத்தை காட்டாவிட்டால் விடவே மாட்டார்களாம், கடும் அட்டகாசம்.. போகிற போக்கை பார்த்தால் “அம்மா மேகலை, மணிமேகலை, வெளிய வாம்மா, பொத்தி வளர்த்தபுள்ள மேகல, அதனால வெட்கம் இன்னும் போகல” எனும் காமெடி காட்சி முகநூலில் அரங்கேறும் போல் தெரிகின்றது (ஏம்மா Devi Somasundaram , அந்த வடிவேலு மணிமேகலை படத்தை போட்டுவிடு, அதன் பின் எந்த பய உன் முகத்தை தேடுவான் என பார்த்துவிடலாம் ) உலகின் […]

இலுமினாட்டி இம்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை

  இலுமினாட்டி இம்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை, உலகமே அதனை கடந்து வந்து 100 வருடம் ஆயிற்று , தமிழத்தில் இப்பொழுதுதான் சலசலப்பு , அவ்வளவு முன்னேற்றமான தமிழகம் இது. இந்த இலுமினாட்டி என்றால் என்ன? அன்றைய ஐரோப்பா மக்களை சிந்திக்கவோ, யோசிக்கவோ விடவில்லை. பிரபுக்கள் ஒரு பக்கமும், அதற்கு மேல் கிறிஸ்துவ மதவாதமும் மக்களை அடக்கி வைத்தன, அவர்களை சிந்திக்கவே விடவில்லை. இந்நிலையில்தான் அவர்களுக்கு அறிவு ஒளி கொடுக்க சிலர் ரகசியமாக இயங்கினார்கள், லத்தீன் மொழியில் இலுமினாட்டி […]

மயிரே போச்சி என வாழவேண்டாமா?

முடி கொட்டியதால் மென்பொருள் பொறியாளர் மதுரையில் தற்கொலை இது உண்மை காரணமா? இல்லையா? என இன்னும் தெரியவில்லை ஆனால் தற்கொலைக்கு வேறு காரணம் இல்லாததால் முடிகொட்டிய பிரச்சினை என சொல்லிவிட்டார்கள் ஒருவேளை உண்மை காரணமாக இருந்தால் இதற்கெல்லாமா சாக வேண்டும்? இப்படியா மயிறு பிரச்சினைக்காக “என்ன மயித்துக்கு வாழவேண்டும்?” என முடிவெடுப்பது? மயிரே போச்சி என வாழவேண்டாமா?

திக் திக் நிமிடங்களுடன் புத்தாண்டு வருகின்றது

புத்தாண்டுக்கு நள்ளிரவில் கோவிலுக்கு செல்லவேண்டும் என்பது கிறிஸ்தவ விதி. இந்துக்களுக்கு இந்த சாங்கியம் எங்கிருந்து வந்தது என தெரியவில்லை. தமிழக கலாச்சாரபடி இந்த புத்தாண்டே கணக்கில் வராது, தை மாதமோ சித்திரை மாதமோதான் அந்த கணக்கு பிறகு ஏன் இந்த இந்து ஆலயங்கள் நள்ளிரவு திறப்பு சர்ச்சை என தெரியவில்லை அது இருக்கட்டும், நமது கடமைக்கு செல்ல கிளம்பியாயிற்று. இந்நாளில் திருமணமான பெண்கள் திருமண ஆடையினை அணிவார்களாம். என்றோ கேள்விபட்ட விஷயம்தான் ஆனால் தலையில் அடிபடாமல் நினைவுக்கு […]

இது முகநூல் மார்க் சொன்னது

உங்கள் பதிவினை பல்லாயிரம் பேர் பார்த்துவிட்டார்கள் என இதுபோல் அடிக்கடி மார்க் சொல்லிகொண்டே இருக்கின்றார் இதில் சொல்ல என்ன இருக்கின்றது?, எத்தனை ஆயிரம் பேர் பார்த்தார்கள் என்பதா முக்கியம்? தலைவி குஷ்பு பதிவினை பார்த்தாரா இல்லையா என்பதல்லவா முக்கியம் மிஸ்டர் மார்க்? சங்கத்து கவலை கொஞ்சமும் இந்த மார்க் என்பவருக்கு புரியவே இல்லை