பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்றைய செய்திகளில் இரு செய்திகள் மனதை பாதித்த ரகம்

இன்றைய செய்திகளில் இரு செய்திகள் மனதை பாதித்த ரகம், முதலாவது சத்யபாமா பல்கலைகழக மாணவி தற்கொலை செய்தி. ஏதோ ஆசிரியரால் அவமானமாம் அதனால் செத்துவிட்டாராம் இன்றுள்ள தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் இது, ஏதோ ஒரு அவமானம் நடந்துவிட்டால் உடனே வாழ்வினை முடித்துவிடுகின்றார்கள் யார் அவமானபடவில்லை, நாமெல்லாம் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி முடிந்து பணிக்கு வந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் நடகும் சம்பவத்திற்கு ஆயிரம் முறை தொங்கவேண்டும் இன்றுள்ள தலைமுறைக்கு வழிகாட்ட ஆளில்லை அல்லது அவமானங்களை தாண்டி […]

மஹா லக்‌ஷ்மி என்பவர் என்ன சொல்லிவிட்டார்?

அந்த Maha Laxmi என்பவர் என்ன சொல்லிவிட்டார்? சர்ச்சை ஓடுகின்றதே தவிர என்ன செய்தி என தெரியவில்லை. அவர் பக்கமும் எனக்கு தடை செய்யபட்டிருக்கின்றது, அந்த பக்கம் என்றல்ல யாரெல்லாம் அவரவர் கட்சியில் , மதத்தில், இயக்கத்தில் அதிதீவிரமாக இருக்கின்றார்களோ பக்கம் எல்லாம் நான் வர கூடாது என விரட்டிவிடுவார்கள். என்ன நடந்தது? தெரிந்தவர்கள் சொல்லலாம்

செய்திகள் சில ….

தவறாக பொருள் சேர்க்கும் யாரும் தப்ப முடியாது: விவேக் ஜெயராமன் பேட்டி இவர் சசிகலாவிற்கு சொல்கின்றாரா? இல்லை சிறையில் இருக்கும் தாய்க்கா? இல்லை தினகரனுக்கா? மனிதர் தன் குடும்பத்தில் யாரையோ மறைமுகமாக எச்சரிக்கின்றார், அது யார் என்பதுதான் இப்பொழுது பெரும் கேள்வி. லட்சுமி குறும்பட நடிகை லட்சுமிபிரியா தீவிர கமல் ரசிகை : செய்தி ஒஹோ.. பின் லட்சுமி படம் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கும். அதில் ஆச்சரியமில்லை. கூடங்குளம் அணுவுலையில் பொருத்தபட்டுள்ள‌ 50% பொருட்கள் உள்நாட்டு […]

இரு விஷயங்களுக்கு இன்னும் தமிழில் நல்ல புத்தகங்கள் இல்லை

இரு விஷயங்களுக்கு இன்னும் தமிழில் நல்ல புத்தகங்கள் இல்லை முதலாவது ஓட்டோமன் பேரரசு பற்றியது, இதுபற்றி Pa Raghavan போன்றோர் பத்தோடு பதினொன்றாக சொல்லியிருக்கின்றார்களே அன்றி அதன் முழு வரலாறு சொல்லபடவில்லை உலகின் போக்கினை மாற்றி நின்ற மிகபெரும் சக்தி அது. அந்த பேரரசுதான் இன்றைய பல மாற்றங்களுக்கு காரணம் அடுத்த விஷயம் இஸ்ரேலிய ராணுவ மேதை மோசே தயான் நிச்சயம் அலெக்ஸாண்டர், நெப்போலியன் வரிசையில் மிக பெரும் ராணுவ மேதை அவர் இஸ்ரேல் என்பது இன்றுவரை நீடிக்கவும், ஆரம்ப […]

மன்மதன் ரதி கும்பலுக்கு வலுத்த‌ கண்டனங்கள்

யானைக்கு கொஞ்சம் சிந்தனை உண்டு என்பார்கள், ஆனால் அந்த யானை மிகபெரும் அறிவாளியாக இருந்திருகின்றது ஏய் பாரதி , உன் பாடல் பிற்காலத்தில் எப்படி எல்லாம் அவமானபடும் தெரியுமா? கள்ளகாதலுக்கு எல்லாம் உன் பாடலை பிண்ணணியாக போடுவார்கள் “தாங்க முடியுமா? இந்த தமிழருக்கா பாடல் எழுதினாய், சாவு” என பாரதியாரை மிதித்து கொன்றிருக்கின்றது யானையாவது ஒரு முறை அவரை மிதித்தது, இந்த லட்சுமி எனும் சன்னிலியோன் வகையறாவில் அவரை முகத்தில் துப்பி துப்பி மிதிக்கின்றார்கள் இது வன்மையாக […]

தினகரன் பல்கலை கழகம் மீது அப்படி என்ன கடுப்பு?

தினகரன் பல்கலை கழகம் மீது என்ன கடுப்பு என பலர் கேட்கின்றார்கள் கிறிஸ்தவம் என்றால் என்னவென்று தெரியுமா? தெரியாவிட்டால் படியுங்கள் என்னிடம் கேட்கமாட்டீர்கள் அந்தரத்தில் ஆடையின்றி உயிரிவிட்டு மதத்தை தொடக்கினார் இயேசு, அவரின் சீடர்கள் கால்நடையாக நடந்து மதத்தை வளர்த்தனர் இந்நாட்டிற்கு அன்று முறையான கப்பல் இல்லை, வந்தால் திரும்புவோமா என தெரியாது, ஆனால் உடுத்த உடையுடன் வந்து பணியாற்றினர் அந்நாளைய போதகர்கள் அதுவும் இங்கு வந்து தமிழ்படித்து தமிழராய் வேட்டி , தமிழரில் ஒருவராக வாழ்ந்து […]

சென்னை சிறந்த கலாச்சார நகரமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கபட்டது

இசைதுறையில் மிக பெரும் பங்களிப்பினை கொடுப்பதால் சென்னை சிறந்த கலாச்சார நகரமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கபட்டது எத்தனை பெரும் இசை சக்கரவர்த்திகள் வாழ்ந்த பூமி இது, அக்காலம் முதல் எம்.எஸ் சுப்புலட்சுமி காலம், இளையராஜா காலம், ரகுமான் காலம் என அது மிகபெரும் அடையாளத்தை கொடுத்துகொண்டிருக்கின்றது. சென்னை நகரின் பெருமையினை புரிந்துகொண்ட யுனெஸ்கோவிற்கு வாழ்த்துக்கள் ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும் இன்னொரு புறம் அச்சம் வருகின்றது என்ன அச்சம்? மோடியின் ஆட்சியில் சென்னை உலகபுகழ் பெற்றது என தமிழிசையும் ( […]

எமது பக்கம் சிரிக்க மட்டுமே (குஷ்பு பதிவுகள் தவிர)

கொஞ்சமேனும் நகைசுவை உணர்ச்சியே இல்லாமல், ஏதோ வடகொரிய அணு ஏவுகனையினை எதிர்கொள்ளும் ராணு வீரர்கள் போல இருக்கும் நபர்கள் தயவு செய்து வெளியேறவும் இது வெறும் பொழுது போக்குதளம். இங்கு புரட்சி எல்லாம் சாத்தியமில்லை ஒவ்வொரு விஷயத்திற்கும் பல கோணங்கள், ஒன்றிற்கும் மேற்பட்ட உண்மைகள் இருக்கும் நாம் அதனைத்தான் விளையாட்டாக சொல்லிகொண்டிருக்கின்றோமே அன்றி நாம் மிக சீரியசான பத்திரிகையாளரோ அல்லது விமர்சகரோ அல்ல‌ மதவெறியும், கட்சி சார்பும் அறவே இல்லை ஆனால் நாட்டுபற்று உண்டு. சில உண்மைகளை […]

பெண்ணுரிமை …

கே.பாலசந்தர் எத்தனையோ பெண்ணுரிமை படங்களை எடுத்திருந்தார், அதில் பல அற்புதமானவை ஆனாலும் அந்த பாலசந்தர் Devi Somasundaram என்பவரை பார்க்காமலே சென்றுவிட்டார், அவ்வகையில் அவர் துரதிருஷ்டசாலி சொல்லமுடியாது, “யோவ் அது என்ன நீங்க‌ சொல்லி நாங்க‌ நடிக்கிறது? என்கிட்டேயும் கதை இருக்கு, , நான் சொல்றேன் நீ போய் நடி..” என அந்த பிசாசு அவர் கழுத்தை பிடித்து கேமரா முன் தள்ளியிருக்கும் அவ்வகையில் அவர் அதிர்ஷ்டசாலி மனைவி தரும் தட்டை எனும் பலகாரத்தையும் பூரி என சொல்லி மகிழ்வோடு […]

மதுரை விமான நிலையத்தில் 10 கிலோ யுரேனியத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்…

மதுரை விமான நிலையத்தில் ரூ.25.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ யுரேனியத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் இது மிக மிக சீரியசான பிரச்சினை அந்த நபர் பெயர் முசோபர் கனி, இலங்கையிலிருந்து வந்திருக்கின்றார். அது இஸ்லாமிய பெயர் என்பதற்காக சொல்லவில்லை , இலங்கையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடமாடுவது ஒன்றும் ரகசியமல்ல‌ இது எவ்வகை யுரேனியம், செறிவூட்டபட்டதா இல்லையா? இவர் கடத்தியதன் நோக்கம் என்ன? யாருக்கு கொடுக்க இருந்தார் என்பதெல்லாம் விடை கண்டே ஆகவேண்டிய கேள்விகள் யுரேனியம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications