நெடுநாளைக்கு பின் ஒரு கடையில் கொள்ளு பார்க்க முடிந்தது
நெடுநாளைக்கு பின் ஒரு கடையில் கொள்ளு பார்க்க முடிந்தது, எங்கள் கிராமங்களில் அதனை காணம் என்பார்கள். குதிரைகளுக்கு அது பிராதான உணவு, இன்றைய மோட்டார்களாக அன்று குதிரைகள் இருந்தவரை அதற்கான விளைச்சல் தேவை இருந்தது அதாவது இன்றைய இஞ்சின் ஆயில்களாக அன்று கொள்ளு இருந்தது, அந்த இடத்தினைத்தான் இன்று எந்திர ஆயில்கள் பிடித்துகொண்டன அக்காலத்தில் அது கிராமங்கள் தோறும் விளையும், ஒரு மழை பெய்துவிட்டால் புஞ்சை நிலத்தில் உழுது விதைத்துவிடுவார்கள், அவ்வப்போது பெய்யும் மழையினிலே அது விளைந்துவிடும் […]