பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தங்க தலைவி குஷ்புதான் மக்களை கவர்ந்த முதல் பிரபலம்

மக்களை கவர்ந்த பிரபலங்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி , பில்கேட்ஸ், பிரியங்கா சோப்ரா இடம்பெற்றனர் : செய்தி இது மோசடி சர்வே, இதனை வெளியிட்ட யுகோவ் நிறுவணத்தை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது இந்த சர்வே உண்மையாக இருக்கும் பட்சத்தில் தங்க தலைவி குஷ்புதான் மக்களை கவர்ந்த முதல் பிரபலம் ஆகியிருப்பார், அதுதான் மகா உண்மையும் கூட‌ அதனால் இந்த யுகோவ் நிறுவணத்தின் சர்வேயினை சங்கம் புறக்கணிக்கின்றது, மக்களும் அதனை புறக்கணிக்குமாறு கேட்டு கொள்கின்றது  

கம்பன் கண்ட சீதை

கம்பன் விழா பற்றி சொல்லும்பொழுது ஒரு தகவல் உறுதிபடுத்த முடிந்தது, கம்பன் விருது என ஒன்று தமிழக அரசால் உருவாக்கபட்டு தமிழ் அறிஞர்களுக்கு வழங்கபட்டு வருகின்றது கம்பனை தமிழக அரசு மறக்கவில்லை என்பது மகிழ்ச்சி கம்பன் விருதை தமிழறிஞரில் சிறந்தோருக்கு வழங்கலாம், ஆனால் “கம்பன் கண்ட சீதை” விருதை தலைவியினை தவிர யாருக்கு வழங்க முடியும் கம்பன் கண்ட சீதை தங்க தலைவி குஷ்பு சங்கத்தின் சார்பாக, இன்று கொண்டாடியே தீருவோம் என அடம்பிடிக்கும் தமிழருக்க்கு புத்தாண்டு […]

வாழ்த்துக்கள் அவந்திகா குஷ்பு சுந்தர் !!!

எங்கள் தலைவியின் மகள் பட்டம் வாங்கி இருக்கின்றார், மகிழ்ச்சியான இத்தருணத்தில் தாயினை போலவே தைரியத்திலும் அறிவிலும் சிறந்து விழங்கி அவர் வாழ்வில் வெற்றி பெற சங்கம் வாழ்த்துகின்றது உலகின் எல்லா தெய்வங்களிடமும் வேண்டிகொள்கின்றது வாழ்த்துக்கள் அவந்திகா. கலைமான் கன்றே, சங்கமும் அதில் இருக்கும் அகில உலகின் கோடான கோடி உறுப்பினர்களும் தெய்வங்கள் சூழ உன்னை வாழ்த்துகின்றார்கள்.  

குஷ்பு திட்டியது யாரை?

தலைவி குஷ்புவிடம் எவனோ டிவிட்டரில் வம்பிழுத்தானாம், தலைவி பொங்கி எழுந்து போடா பன்றி மூஞ்சி என வசமாக திட்டி அனுப்பிவிட்டார் அவனை தேடி கண்டுபிடித்து 4 போடு போட்டு தலைவி செருப்பு முன்னால் மன்னிப்பு கேட்க வைக்க சங்கம் தீவிரமாக இறங்கிவிட்டது தலைவியினை சீண்டிய அவனை சும்மா விட கூடாது, தைரியமாக கொலை அல்ல கொலைமுயற்சி செய்யலாம் ஆம் இப்பொழுதெல்லாம் கொலைமுயற்சி வழக்கு பாய்ந்தாலும் கைது செய்ய மாட்டேன் என்கின்றது காவல்துறை ஆக இந்த லும்பனை அடித்து […]

நாம் முதலில் குஷ்பு சங்கத்து தொண்டன்

நாம் முதலில் குஷ்பு சங்கத்து தொண்டன், அதன் பின்புதான் இந்தியன் அதற்கும் பின்னர் தான் தமிழன் தலைவி சொன்னால் மறுபேச்சில்லை, அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்பதால் சங்கம் தலைவியின் அறிக்கையினை அப்படியே ஏற்றுகொள்கின்றது மோடியினை எதிர்க்க மிகுந்த தைரியமும் , திறமையும் கொண்டவர் தலைவி ஒருவரே என்பதால் அவர்பின் தமிழகம் அணிவகுத்தால் எல்லா வெற்றிகளையும் பெறலாம், தமிழக நலன்களை எல்லாம் மீட்கலாம்  

சிம்புவின் தற்போதைய அழிச்சாட்டியம் ஓவர்

சிம்புவின் தற்போதைய அழிச்சாட்டியம் ஓவர், அன்பாக கேட்டால் கன்னடன் உடனே நீர் கொடுத்துவிடுவானாம், அன்பே எல்லாவற்றையும் சாதிக்குமாம் அன்னாருக்கு ஞானம் பொத்துகொண்டு ஊற்றுகின்றதாம் இதே அன்பை சிங்களவனிடம் சென்று சொல்லி ஈழசிக்கலை தீர்த்தால் என்ன? ஈழத்திற்கு ஒரு பேச்சு காவேரிக்கு ஒரு பேச்சா? இதில் டி.ராஜேந்தர் வேறு டம்ளர் நிறைய நீரோடு காவேரியில் சென்று என்னமோ புலம்பிகொண்டிருகின்றார், கீழ்பாக்கத்தார் பார்த்தால் தூக்கி செல்வார்கள் அப்படி ஒரு புலம்பல் இந்த இருவரையும் நினைக்கும்பொழுது ஒரு உண்மை விளங்குகின்றது. இந்த […]

மூன்று பெண்களை தேர்ந்தெடுத்து இறுதி சுற்றுக்கு வந்தார் ஆர்யா

3 பெண்களை தேர்ந்தெடுத்து இறுதி சுற்றுக்கு வந்தார் ஆர்யா ஏம்பா போராளிஸ், காவேரிக்கு பெரும் போராட்டம் நடக்க இங்கொருவன் சுயம்வரம் நடத்துகின்றான், இதெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியாதா ஏம்பா பாரதிராஜா இந்த சினிமாக்காரன் அழிச்சாட்டியம் பற்றி எல்லாம் பொங்கமாட்டீரா?

காவேரி பிரச்சினையில் குஷ்பு எங்கே

காவேரி பிரச்சினையில் குஷ்பு எங்கே என பலர் கேட்டுகொண்டிருக்கின்றான் காவேரி பிரச்சினையில் இவர்கள் சொல்வதென்ன? காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிபோட்டு துரோகம் இழைக்கின்றது மத்திய அரசு என்றால் யார்? சாட்சாத் மோடி ஆக இவர்கள் எதிப்பது அவரைத்தான் தலைவி என்ன செய்துகொண்டிருக்கின்றார்? அவரின் ஒவ்வொரு பேச்சிலும், டிவிட்டர் எழுத்திலும், பேட்டியிலும் மோடியினை சாடிகொண்டே இருக்கின்றார் இவர்களாவது காவேரியில் மட்டும் எதிர்க்கின்றார்கள், அவரோ எல்லா விஷயங்களிலும் மோடி காட்டும் பாரபட்சம் பற்றி விளாசி தள்ளுகின்றார் […]

குஷ்புவினை சிஎஸ்கே தூதராக நியமிக்க வேண்டும்

தலைவி குஷ்புவினை மட்டும் சிஎஸ்கேவின் விளம்பர தூதராக அமர்த்தி இருந்தால் இவ்வளவு சிக்கல் வந்திருக்கும்? தலைவியின் பாதுகாப்பு படை இவ்வளவு தூரம் பிரச்சினை பெரிதாக விட்டிருக்குமா? அந்த சீனிவாசன் என்பவர் இனியாவது தவறை உணர்ந்து தலைவியினை சிஎஸ்கே அணியின் தூதராக அமர்த்தட்டும் அதன் பின் ஒரு சிறு சத்தம் வரும்? ஒரு எதிர்ப்பு வரும் சங்கம் தலைவிக்காக முழு பாதுகாப்பினை வழங்கி பூரண அமைதியினை கொண்டுவரும் தலைவியினை தூதராக்கினால் அவரை எதிர்த்து குரல் கொடுக்க எவனும் வரமாட்டான், […]

தலைவியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது

தலைவி சமீபகாலமாக பெரும் புகழ்பெற்று வருவதாலும், மோடியினையும் பாஜகவினையும் கிழித்து எறிவதாலும் உலகெல்லாம் இருந்து பலர் நோக்க தொடங்கிவிட்டனர் இந்திராவிற்கு பின் உலகம் காணபோகும் இரும்புபெண் இவர் என பெரும் வல்லரசுகளுக்கு உளவுதகவல் சென்றிருப்பதால் அவை அச்சபட ஆரம்பித்துவிட்டன‌. அவர் இன்னொரு தாட்சர், இன்னொரு கோல்டா மேயராக வருவார் என உலகம் நம்புகின்றது, ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல் கூட யார் அந்த குஷ்பு என விசாரித்ததாக ஐரோப்பிய தகவல்கள் தெரிவிக்கின்றன‌ இதனால் அவரை கண்காணிக்க ஆரம்பித்துவிட்டார்கள், இதோ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications