பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

டிசம்பர் 12ல்தான் டெல்லி இந்தியாவின் தலைநகர் ஆனது

இந்தியாவினை பிடித்த வெள்ளையருக்கு கல்கத்தாவே தலைநகரமாக இருந்தது, முதல் கோட்டையினை அங்குதான் கட்டினர் முதல் வெற்றியினை கிளைவ் அங்குதான் பெற்று ஆட்சியில் அமர்ந்தான், கிழக்கு பகுதி வாணிக மையம் உட்பட பல அனுகூலங்கள் இருந்ததால் கல்கத்தாவினை தலைநகரமானது 1911 வரை அது அப்படித்தான் நீடித்தது, பின் பரந்த இந்தியா ஆப்கனை கைபற்றும் முயற்சி என பல காரணங்களுக்காக அது டெல்லிக்கு மாற்றபட்டது அது இந்நாள்தான், இந்த டிசம்பர் 12ல்தான் டெல்லி இந்தியாவின் தலைநகர் ஆனது இன்றோடு 106 […]

மீன்களை போலவே மீணவரின் அழுகையும்

கன்னியாகுமரிக்கும் எங்கள் ஊருக்கும் வெறும் 30 கிமீட்டர்தான் தூரம், ஆனால் இன்னும் பல குளங்கள் அப்பகுதியில் நிரம்பவில்லை என்றால் அப்பகுதி எப்படி என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் அப்படியும் சில பகுதிகள் இருக்கின்றன, இயற்கை சதி, பராமரிப்பு இல்லா கால்வாய்கள், அணை கட்டுகின்றேன் என கிளம்பிய அரசுகள் என இதற்கு பல காரணங்கள் குளங்களை நிரப்பி விவசாயத்திற்கு எத்தனை பேர் தயார் என்றால் அது யோசிக்க வேண்டிய விஷயம், தெரிந்தே தற்கொலை செய்ய பலர் தயாராக இல்லை […]

அதற்கு அரசும், நாடும் இந்த தியாகத்தை செய்தே தீரவேண்டும்

தமிழகத்தில் பெரும் புள்ளிகள், பெரும் அந்தஸ்தில் உள்ளவர்களை அடையாளம் காண்பது எளிது, ஊரெல்லாம் படம் பத்திரிகையில் வந்திருக்கும், பத்திரிகைகள் எழுதியிருக்கும் அதற்கு மேல் அவர் வந்தால் பெரும் கூட்டமும், பேனர்களும் “அய்யா வாராக..” என்ற சத்தமும் “வாழ்க… வாழ்க ” என்ற கோஷங்களும் கேட்டுகொண்டே இருக்கும் இதெல்லாம் இல்லாமல் எந்த பிரபலமும் வெளிவருவதில்லை, நடிகை கடை திறக்க வந்தாலும் இதே இம்சைதான் இங்கெல்லாம் அப்படி அல்ல, எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் தங்க செயின் கூட இல்லை, […]

மும்பையில் ஒரு “ஆட்டோ சங்கரி”

கணவரைக் கொலை செய்து, 13 வருடங்கள் மறைத்து வைத்த மனைவி : மும்பையில் பரபரப்பு விபசார வழக்கு தொடர்பாக ஒரு பெண்ணை கைதுசெய்து விசாரித்தபொழுது அவள் சில கொலைகளை செய்ததாக தெரிந்து விசாரித்திருக்கின்றார்கள், அப்பொழுது செப்டிக் டேங்கில் மறைக்கபட்டிருந்த அவளது கணவனின் எலும்பு கூட்டையும் கண்டெடுத்திருக்கின்றார்கள் இன்னும் சில எலும்பு கூடுகள் வருகின்றதாம் , இதெல்லாம் எங்கோ பார்த்தது போல் இருக்கின்றதல்லவா? ஆக மும்பையிலும் ஒரு “ஆட்டோ சங்கரி” இருந்திருக்கின்றார்

இன்று கொடிநாள்

இந்திய தேசம் இன்று கொடிநாள் எனும் தேசிய விழாவினை சிறப்பிக்கின்றது இத்தேசம் வலுவாகவும், அமைதியாகவும் இருக்க முதல் காரணம் இந்த தேசத்தின் ராணுவம். அவர்களுக்காகவும் அவர்களுக்கு நிதிகொடுக்கும் நாளாகவும் இது சிறப்பிக்கபடுகின்றது நாமெல்லாம் அமைதியாக வாழ, சம்பாதிக்க, சண்டையிட இன்னும் என்னவெல்லாமோ செய்து உலாவிகொண்டிருக்க, நிம்மதியாக தூங்கி எழ அந்த வீரர்கள் செய்யும் தியாகம் கொஞ்சமல்ல‌ காஷ்மீரத்து பனியாகட்டும், ராஜஸ்தான் பாலையாகட்டும், அசாமின் கடும் காடுகளாகட்டும், பொங்கும் கடலாகட்டும் அதனை எல்லாம் சமாக கருதி இத்தேசத்தினை காத்து […]

வங்கி டெப்பாசிட் பற்றி பலவித சிக்கல்கள்

வங்கி டெப்பாசிட் பற்றி பலவித சிக்கல்கள் உருவாகுவதாக செய்திகள் சொல்கின்றன‌ அதாவது இனி வங்கிகளில் டெப்பாசிட் செய்யபடும் பணங்களுக்கு பாதுகாப்பு இல்லையாம், வங்கி கொடுத்தால் வாங்கிகொள்ளலாமாம் இல்லை என்றால் காத்து இருக்க வேண்டுமாம், வங்கிக்கு முழு உரிமை அளிக்க போகின்றார்களாம் இது தொடர்பான சட்டம் வரபோகின்றதாம் அதாவது இனி வங்கிகள் நாம் கேட்டவுடன் நமது பணத்தை தர அவசியமில்லையாம், எப்பொழுது முடியுமோ அப்பொழுது கொடுக்கலாமாம் வடிவேல் ஒரு படத்தில் சைக்கிள் நிறுத்தும்பொழுது வாடகை தருவேன் என சொல்லி […]

உடல்கள் கரை ஒதுங்குகின்றன.. அச்சம் மேலோங்குகின்ற நேரமிது…

கன்னியாகுமரி பக்கம் மீன்பிடிக்க சென்று திரும்பாத மீணவர்கள் பற்றி எந்த மீடியாவும் செய்தி வெளியிட்டதாக தெரியவில்லை மிகபெரும் இருட்டடிப்பினை செய்கின்றார்கள் , காரணம் வெகு எளிதானது அதாவது இந்த கொடூர புயல்பற்றி எச்சரித்திருக்க வேண்டும், மழை அவர்களுக்கு பழகிபோன விஷயம் எனப்தால் மழைக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல அவர்கள் ஆனால் கொடூர புயல் பற்றி முழு எச்சரிக்கை இல்லை , புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றபடவில்லை, இதெல்லாம் யார் தவறு என்றால் நிச்சயம் அரசு பக்கம்தான் தனுஷ்கோடி […]

இந்திய வரலாற்றில் மிக குறிப்பிடதக்க வெற்றி வங்கப்போர்

ஹாஜி நீர்மூழ்கி பதிவினை பலர் மீள்பதிவு சொல்லி கேட்டிருந்தார்கள், அவர்களுக்காக.. இந்திய வரலாற்றில் மிக குறிப்பிடதக்க வெற்றி வங்கப்போர் அதில் குறிப்பிடதக்கது பாகிஸ்தானின் காஜி நீர்மூழ்கி கப்பலை போட்டு தாக்கியது அந்த யுத்தத்தில் இந்தியாவின் பெரும் பலம் ஐ.என்.எஸ் விக்ராந்த். இங்கிலாந்திடமிருந்து வாங்கபட்ட‌ விமானம்தாங்கி கப்பல், அதன் பலம் அக்காலத்தில் பெரிது, கிழக்கு கடற்கரை முழுக்க அது கட்டுபடுத்தியது. இது இந்தியாவின் பலம் என்றால் பலவீனம் எது என்று பார்ப்பதுதானே அமெரிக்க பழக்கம், அது மிக சரியாக […]

இன்று இந்திய கடற்படை தினம்

இன்று இந்திய கடற்படை தினம் இந்திய கடற்படை எத்தனையோ வெற்றிகளை பெற்றது, குறிப்பாக 1971 வங்கபோரில் உண்மையில் ஆடியதே இந்திய கடற்படைதான். ஏன் டிசம்பர் 4ம் தேதி இந்திய கடற்படை தினம் ஆனது என்றால் விஷயமிருக்கின்றது மகா திரில்லான விஷயம் அது கிழக்கு பாகிஸ்தானில் கடும் மனித உரிமை மீறலில் பாகிஸ்தான் இறங்க , கற்பழிப்பும் படுகொலைகளும் எல்லை மீறி செல்ல, அகதிகள் இங்கு குவிய, இனி பொறுப்பதில்லை என‌ இந்தியா களமிறங்கியது. கிழக்கு பாகிஸ்தானுக்கு செல்ல […]

தமிழக டிவிக்கள் பெரும் துரோகம் செய்கின்றன‌

இந்த தமிழக டிவிக்கள் குழந்தைகளுக்கும், மாணவ சமூகத்திற்கு எதிராகவும் பெரும் துரோகம் செய்கின்றன‌ ஒரு சேனலில் சிறு குழந்தைகள் எல்லாம் காதை பொத்திகொண்டு ஒரு கையால் மைக் பிடித்தபடி பாடல் பாடிகொண்டே இருக்கின்றனர், அது என்னவோ உலக சாதனை முயற்சி என்பது போல் பெற்றோர்களும் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய பார்த்துகொண்டிருக்கின்றாகள் இதற்கு நல்ல சம்பளம் வாங்கிகொண்டு ரிட்டையர்டு பாடகர்கள் ஜட்ஜ்களாம் ஒரு டிவியில் பேய்பிடித்து ஆடும் நபர்கள் போல பிஞ்சுகள் ஆடிகொண்டிருக்கின்றன, இங்கும் பெற்றோர்கள் தங்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications