பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கல்பனா இந்தியாவின் கண்ணீர் கனா …

இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, சோவியத் யூனியனின் விண்வெளிகலத்தில் பயணித்து விண்வெளியில் சுற்றிய முதல் இந்தியர் அவர்தான் இந்திய பெண்களில் அந்த இடத்தை பெறபோவது யார் என்ற எதிர்பார்ப்பு வெகுநாள் இருந்தது, அந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றி விண்வெளி புகுந்தவர்தான் கல்பனா சாவ்லா பஞ்சாபிய பெண் அவர். படிப்பில் சுட்டி அதனைவிட பஞ்சாபியருக்குரிய தைரியமும் மிகுந்திருந்தது அதோடு விமான கனவும் கலந்திருந்தது 20 வயதிலே அமெரிக்கா சென்று படித்தார், 26 வயதில் பிஎச்டிமுடித்தார் அப்பொழுதே நாசாவிலும் […]

அமெரிக்க காந்தி மார்ட்டின் லுத்தர் பிறந்த நாள் இன்று

வெள்ளையன் அமெரிக்காவினை அடைந்த காலத்தில் இருந்தே அது வெள்ளையருக்கு மட்டும் சொந்தமான நாடு என்ற எண்ணம் அவர்களிடை வந்தது செவ்விந்தியர் மூர்க்கமாக அழிக்கபட்டனர், ஆப்ரிக்காவில் இருந்து கருப்பர்கள் அடிமைகளாக கொண்டுசெல்லபட்டு சொல்லணா துயருற்றனர், அமெரிக்க விடுதலைக்கு பின்னும் அது 100 ஆண்டு தொடர்ந்தது மாமனிதன் ஆபிரஹாம் லிங்கன் அவர்கள் அடிமை இல்லை என அறிவித்தார், அதனால் கொல்லவும் பட்டார் அன்றே உள்நாட்டு போரால் அமெரிக்க உடைந்திருக்க வேண்டியநிலையில் இருந்தது, அதனை எல்லாம் காத்து இன்று ஒரே அமெரிக்காவாக […]

ஞாநி சங்கரன் காலமானார் : ஆழ்ந்த அஞ்சலிகள்

தமிழக பத்திரிகையாளர்களின் முக்கியமானவரான ஞாநி சங்கரன் காலமானார் என்பது பெரும் வருத்தமளிக்கும் செய்தி அவரின் எழுத்துக்களும், அவர் எழுப்பிய கேள்விகளும் தனித்துவம் வாய்ந்தவை, அதனால் பல எதிர்ப்புகளையும் சம்பாதித்தார். உண்மையினை எழுதியதால் பல பத்திரிகைகள் அவரை விரட்டின, அவரோ அஞ்சாமல் தனியே எழுதிகொண்டிருந்தார் நாடக உலகிலும் அவரின் பங்களிப்பு உண்டு நிச்சயமாக சொல்லலாம், ஒரு நல்ல பத்திரிகைகாரன் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருந்தார், எதற்கும் அவர் அஞ்சவில்லை. பெரும் பொய்களும் இன்னும் பல அழிச்சாட்டியங்களும் வரும் பத்திரிகை […]

வேலுநாச்சியார், ஜான்சிராணி வழிவந்த அந்த வீரமங்கை

நேதாஜியுடன் இத்தேசத்திற்காக போராடிய அந்த வீரப்பெண் இனி இல்லை, நேதாஜியோடு போராடியவர்களில் எஞ்சி இருந்த மிக சிலரில் ஒருவரான ராஜாமணி இனி இல்லை வேலுநாச்சியார், ஜான்சிராணி வழிவந்த அந்த வீரமங்கை இனி இல்லை இத்தேசத்தின் மிகபெரும் தியாகி அவர், எந்த போராளிக்கும் குறையாத தியாகம் அவர் செய்தது. வரலாற்றில் வாழும்பொழுது மறைக்கபட்ட பெரும் தியாகி, இத்தேசம் இன்னும் அவரை அங்கீகரிக்கவில்லை அவர் பர்மாவின் மிக செழிப்பான குடும்பத்தில் பிறந்தார் அப்பொழுது அவருக்கு 15 வயதுதான் ஆகியிருந்தது. பர்மாவில் […]

இந்தியாவின் ஞான ஒளி சுவாமி விவேகானந்தர்

 இந்தியாவில் வங்கம் ஏராளமான சிந்தனையாளர்களை கொடுத்திருக்கின்றது, விஞ்ஞானிகள், கவிஞர்கள், நாட்டுபற்றாளார்கள் என அந்த கொடை பெரிது அவ்வாறே அம்மண்ணில் உதித்த ஞான சூரியன்களில் மிக மிக முக்கியமானவர் விவேகானந்தர். சிறுவயதிலே ஏராளமான கேள்விகளை எழுப்பியவர், ஆன்மீகத்தையும் பகுத்தறிவினால் உணரமுற்பட்டவர், அக்கால பெரும் பீடமான பிரம்ம சமாஜம் அவரை எதிர்கொள்ளமுடியவில்லை, இறுதியில் ராமகிருஷ்ண பரம்மஹம்சரிடம் தான் தேடிய ஆத்மஞானத்தினை அடைய அடைக்கலமானார். தெளிவான முகம், குழப்பமில்லாத பதில்கள், தெளிந்த நீரோடை போன்ற பேச்சு, எதிர்கேள்வி கேட்கமுடியாத அற்புதமான உவமைகள், […]

“கொடிகாத்த குமரனை ” போற்றுவோம்

அது வெள்ளையன் சைமன் கமிஷன் எனும் கமிஷனை அமைத்திருந்த 1928ம் ஆண்டு காலம், வெள்ளையன் கமிஷன் என்பது இன்று தமிழக அரசு அமைக்கும் கமிஷனை போன்றதுதான் அன்று இருந்த கொந்தளிப்பை அடக்க இம்மாதிரி கமிஷன்களை வெள்ளையன் அமைப்பான், அப்படி அன்று வந்தது சைமன் கமிஷன் , அதாவது அந்த கமிஷனின் தலைவர் பெயர் ஜாண் சைமன் (நாம் தமிழரின் கமிஷன் சைமன் வேறு) இதனை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடந்தது, ஒருங்கிணைந்த இந்தியாவில் பஞ்சாப் சிங்கம் லாலா […]

தெய்வீக குரலோனுக்கு இன்று பிறந்தநாள் 

எத்தனை பாடகர்களும் வரலாம் பாடலாம் ஆனால் தெய்வீக குரல் என்பது சிலருக்கே வாய்க்கும், வெண்கல குரலை வெண்ணையில் வடிகட்டியது போன்ற அக்குரல் அமைவது அபூர்வம் அவ்வகையில் ஜேசுதாஸ் மகா அற்புதமான பாடகர், கிட்டதட்ட 40 வருடங்களுக்கு மேலாக பாடிகொண்டிருப்பவர் மலையாள உலகில் இருந்துவந்து இசையால் எல்லா இந்தியரையும் கவர்ந்த பாடகர் அவர் சினிமாவில் அழியாத பல பாடல்களை பாடியிருக்கின்றார், கண்ணதாசன், வாலி போன்றோரின் வரிகள் அவரின் குரலால் கல்வெட்டாக பதிந்து நிற்கின்றன‌ பாடல் அவர் குரலில் வரும்பொழுது […]

வேங்கை மங்கை ஜான்சிராணி பிறந்த நாள்

சுதந்திர போராட்டத்தில் அந்த பெண்மணி அபூர்வமானவர்ள், தமிழச்சிகளுக்குரிய வீரம் அவளிடம் குவிந்திருந்தது அவள் வெள்ளையனை எதிர்த்து வெற்றிமேல் வெற்றிபெற்ற பொழுது இந்த ஜான்சிராணி எல்லாம் பிறந்திருக்கவேயில்லை ஜோன் ஆப் ஆர்க், ராணி மங்கம்மா போன்ற தீரபெண்மணி வரிசையில் வந்தவர் அந்த வேலுநாச்சியார். அவளுக்கு 10 மொழிகள் பேச தெரிந்திருந்தது, நிர்வாகத்திலும் வீரத்திலும் பெரும் நுணுக்கம் கொண்டிருந்தார். வாள்வீச்சு முதல் எல்லா கலைகளும் அவளுக்கு அத்துபடி. இந்திய சுதந்திரபோராட்டத்தில் முதல் பெண் போராளி அவளே. அவளின் போராட்ட வாழ்வு […]

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று

எங்கிருந்தோ வந்த வெள்ளையனுக்கு எம் தாமிரபரணி கரையில் விளையும் நெல் மீது என்ன உரிமை என கேட்டவன் கட்டபொம்மன் அதற்காகவே தூக்கிலும் இடபட்டான், இன்று அவனின் பிறந்தநாள் அவனை பற்றி ஏராளம் எழுதியாயிற்று. கட்டபொம்மனும் அவனின் வீரமான போராட்டமும், புதுகோட்டை மன்னனின் துரோகம் வரலாற்றில் நிலைத்தவை நாட்டுபுறபாடலாக இருந்த கட்டபொம்மன் வாழ்க்கையினை புத்தகமாக எழுதிய மாபொசி, கட்டபொம்மனுக்கு வேடம் கொடுத்த சிவாஜி கணேசன், பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை எழுப்பிய கலைஞர் எல்லாம் அவனை கொண்டாடியவர்களில் குறிப்பிடதக்கோர் ஒருவிஷயத்தில் வரலாறு […]

பெரும் தொண்டு செய்தவள் ராணி மங்கம்மா

தென் தமிழ்நாட்டுக்கு பெரும் தொண்டு செய்தவள் ராணி மங்கம்மா, புதிது புதிதான சாலைகள், குளங்கள் என உருவாக்கி தென் தமிழகத்தை மாற்றியவர் அந்த சாலைகளின் வழிதான் சாத்தூர், சிவகாசி, விருதுநகர் எல்லாம் வியாபார தொழில் மையங்களாக மாறின, ஆனால் அவளுக்கொர் நினைவு இல்லம் இல்லை திருச்சியில் இருந்த அவள் மாளிகை அரசு அலுவலகமாயிற்று, மதுரையில் இருந்த அவள் மாளிகை காந்தி மியூசியம் ஆயிற்று இப்படி தமிழ்நாட்டுக்கு உழைத்த எத்தனையோ அரசர்கள், அரசிகள் அடையாளம் அற்று போயினர் ஆங்கிலேயர்களிலும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications