பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்தியாவின் நாட்டுபற்று மிக்க பெருமகன் கேபிஎஸ் கில் மறைந்துவிட்டார்

இந்தியாவின் நாட்டுபற்று மிக்க, பிரிவினை வாதிகளை எல்லாம் ஒடுக்கவேண்டிய வழியில் ஒடுக்கிய அந்த பெருமகன் கேபிஎஸ் கில் மறைந்துவிட்டார் ஒரு இந்தியன் எப்படி இருக்கவேண்டும் என சொன்ன அந்த கன்வார் பால் சிங் இனி இல்லை, கடந்த 26ம் தேதி இறந்திருக்கின்றார் மிக உறுதியான இந்தியர் அவர், அசாமில் கலவரங்களை ஒடுக்கியது அவரின் காவல்துறை வாழ்வில் பொறுப்பான துவக்கம் அக்காலங்கள் கடுமையானவை, சும்மவே மனதில் பொறுமிகொண்டிருந்த சீக்கியர்களுக்கு அந்த இந்தி திணிப்பும் இன்னும் சில புறக்கணிப்பும் பெரும் […]

எழுத்தாளனுக்கு இறப்பில்லை

எழுத்தாளனுக்கு இறப்பில்லை, அவன் தன் எழுத்தில் எந்நாளும் எல்லா தலைமுறையோடும் பேசிகொண்டே இருப்பான் அப்படி ஜெயகாந்தன் தற்போது என்னுடன் பேசிகொண்டிருக்கின்றார், மிக மிக உறுதியான வரிகளோடும் , உறுதியோடும், பதைபதைக்க வைக்கும் தகவல்களோடும் பேசிகொண்டிருக்கின்றார் 1990கள் ராஜிவ் கொலைநடந்த காலங்களை மிக மிக உக்கிரமாக பேசிகொண்டிருக்கின்றார். சோ ராமசாமி, ஜெயலலிதா, வாழப்பாடி ராமமூர்த்தி, மபோசி எல்லோரும் எப்படி எல்லாம் புலிகளை கண்டித்தார்கள், கலைஞரிடம் கெஞ்சினார்கள் என்ற செய்திகள் அவை கலைஞர் ஏன் 2009ல் அமைதியானார் என்பதற்கான காரணங்களை […]

ராஜிவ் காந்தி நினைவு நாள்

ஒரு மனிதனின் தலைவிதிபடியே வாழ்வு அமையும், அந்த விதியின் முடிவை நோக்கியே சூழ்நிலைகள் ஒருவனை கொண்டு செல்லும், மானிட வாழ்வின் பெரும் விசித்திரமிது, மதியினால் தப்பவேமுடியாது, பெரும் ஞானி சாணக்கியனும், பல ஞான நூல்களும், ஞானிகளும், பைபிளின் சில ஆகமங்களும் சொன்ன உண்மை இது. இந்த உண்மைக்கு பெரும் உதாரணமாக அமைந்தது ராஜிவ்காந்தியின் வாழ்க்கை, பெரும் சொத்துக்களும்,பாரம்பரியமும், அரசியலின் உச்சமும், கல்வியும், செல்வமும்,பேரழகும் ஒருங்கே அமைந்த அந்த காஷ்மீரிய பண்டிட் குடும்பத்தின் வாரிசாக பிறந்தவர் அவர். 16 […]

வாஸ்கோடகாமா கேரளாவின் கோழிகோட்டை அடைந்த நாள் இன்று…

ஐரோப்பியர்கள் குளிர்தேசத்தினர், ஆசிய தொடர்போ அல்லது இன்னொரு நாட்டிலிருந்து ஏதும் கிடைக்காமலோ அவர்கள் வாழமுடியாது, சீனாவிலிருந்து பட்டும் இந்தியாவிலிருந்து மிளமும் இன்னும் பலவும் இரு வழியாக ஐரோப்பா சென்றுகொண்டிருந்தது ஒன்று பட்டுசாலை என துருக்கி வழியாக செல்லும் சாலை, இன்னொன்று கேரளாவிலிருந்து அரேபியாவுக்கு கப்பலில் சென்று அங்கிருந்து பட்டுசாலை மூலமாக ஐரோப்பா நுழைவது இரண்டாவது வழிதான் சாலமோன் அரசரும், ரோமானியரும் தமிழகத்தோடு தொடர்பு கொண்ட வழி, கிறிஸ்தவமும் இஸ்லாமும் கேரளாவில் தொன்றுதொட்டு வளர காரணமான வழி நமக்கும் […]

வ உ சிதம்பரனார்

வ உ சிதம்பரனார் பற்றி சில விஷயங்களை வாசித்துகொண்டிருந்தேன், மனிதர் மிகபெரும் சுதந்திர போராட்ட வீரராகவும், பெரும் தமிழறிஞராகவும் இருந்திருக்கின்றார் காந்திக்கு முன்பு சுதந்திர வெறியினை பற்றவைத்ததில் தனித்து நிற்கின்றார், வடக்கே திலகரும் தேற்கே சிதம்பரனாரும் தனிபெரும் அடையாளங்களாக நிற்கின்றனர், தேற்கே சிதம்பரனார், பாண்டித்துரை தேவர் என பெரும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாக வலம் வருகின்றனர் கப்பல் விட்ட சிதம்பரனாரை வெள்ளையன் குறிவைத்துவிடுகின்றான், இவரை விட்டால் பெரும் ஆபத்து என இல்லாத வழக்குகளில் சிக்க வைத்து சிறையில் […]

ஏப்ரல் 26, கதிரியக்க அழிவு சரித்திரம்.

ஏப்ரல் 26, கதிரியக்க அழிவு சரித்திரம். இன்று ஜென்மவிரோதிகளாக‌ அடித்துகொள்ளும் ரஷ்யாவும் உக்ரைனும், அன்று சோவியத் யூனியன் , பழைய ரங்கராவின் படங்களின் குடும்பம் போல‌ மகா ஒற்றுமை, பொதுவுடமை அல்லது பண்ணைமுறை ஏதோ ஒன்றில் இணைந்திருந்தது. அன்று அவர்கள் பெரும் வல்லரசு, வல்லரசு என்றால் நிச்சயம் அணுகுண்டு வேண்டும். அணுகுண்டு வேண்டுமென்றால் அணுவுலை வேண்டும். 1955 களிலே ஏகபட்ட அணுவுலைகளை அமைத்திருந்தது ரஷ்யா, 1958ல் அவர்களின் முதல் அணுவுலை விபத்து நிகழ்ந்தது, 1974ல் ஷென்ஸ்கோவ், 1983ல் […]

இரண்டாம் புத்தன் அம்பேத்கார்

இரண்டாம் புத்தன். இந்தியாவின் ஜாதிய கொடுமைகள் தெரியவேண்டுமானால் அம்பேத்கரின் வாழ்க்கையினை ஒருமுறை படியுங்கள், காந்திக்கு சற்றும் குறையாத மாமனிதன் அவர் என்றான் ஒரு மேல்நாட்டு அறிஞர், முக்கால உண்மை ஒன்று உண்டென்றால் அந்த மனிதனின் வார்த்தைகள்தான். தலைவலியும்,காய்ச்சலும் மட்டுமல்ல ஜாதி ஒடுக்குமுறையும் அதில் பாதிக்கபட்டவனுக்குத்தான் தெரியும், அவர் அப்படித்தான் பாதிக்கபட்டார், அதனால்தான் அந்த சிக்கல்களை அவரால் பேசமுடிந்தது,போராடமுடிந்தது, முடிவில் சாதி இல்லா புத்தமதத்தில் இணையவும் வைத்தது. அவர் வாழ்ந்த காலம் அப்படி, மகா கொடுமையானது. அந்த கொடுமையான […]

பிறவி கவிஞன் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்

  தோற்றம் : 13-04-1930  ::  மறைவு : 08-10-1959 எல்லா துறையிலும் பிறவியிலே திறமையானவர்கள் உண்டு, அப்படி அல்லாமல் கஷ்டபட்டு தன்னை உருவாக்கியவர்கள் உண்டு , தமிழக கவிஞர்களில் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் முதல் வகை, பிறவி கவிஞன் மிக சிறுவயதிலே உலகத்தை கவனித்தவன் அப்பொழுதே கம்யூனிச பொதுவுடமை கருத்துக்கள் அவனை பாதித்தது, தமிழோடும் பொதுவுடைமை தத்துவத்தோடும் வளர்ந்தார் 19 வயதிற்குள் 16 தொழில்களை செய்திருந்தார் விவசாயம் முதல் நடனம் வரை அதில் உண்டு, மீன்பிடியும் […]

வீர சிவாஜி : நினைவு நாள்

8ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே இத்தேசம் அந்நியருக்கு எதிர்ப்பினை தெரிவித்துகொண்டே இருந்தது, இங்கே ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் எல்லோரும் பெரும் எதிர்ப்பினை சந்தித்துகொண்டே இருந்தனர் கோரி, கஜினி முதலான மன்னர்கள் கொள்ளையடித்துவிட்டு ஆப்கனுக்கே ஓடினர், இங்கிருந்து ஆளும் எண்ணமெல்லாம் இல்லை, எதிர்ப்பு அப்படி இருந்தது பின்னாளைய பாபர் வந்து முகல் வம்சத்தை ஸ்தாபித்தாலும் அவருக்கும் ஆப்கன் ஏக்கம் இருந்திருக்கின்றது, அவர் கல்லறை அங்குதான் இருக்கின்றது. இந்தியாவில் தங்கள் வம்சம் ஆளும் என அவர் நினைத்திருக்க வாய்பில்லை பாபரின் வம்சாவளி […]

ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று..

முதலில் எம்ஜிஆரும், பின் சசிகலா குடும்பமும் அதன் பின் அதிமுகவினர் அனைவரும் வணங்குவதற்காகவே அவதரித்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று எம்ஜிஆர் தான் சினிமாவில் திரட்டிய மக்கள் சக்தியினை அவரிடமே விட்டுசென்றார். ஜெயா கட்சியினை சிரமபட்டு வளர்த்தவரோ அதற்காக போராடியவரோ அல்ல‌ உருப்படியான ஒரு மக்கள் நல போராட்டத்தை தன் வாழ்நாளில் ஒருமுறை கூட அவர் நடத்தியதில்லை.. எங்கிருந்தோ வந்த அவருக்கு கட்சி சிக்கிகொண்டது, இந்திராவும், ராஜிவும் அவருக்கு கைதூக்கி விடும் அளவிற்கு அவர் ஜாதகத்தில் கட்டம் இருந்தது. […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications