பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன்

வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன். முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் பொருந்தும். மூன்று தமிழும் அவரிட‌ம் கொஞ்சியது கடவுள், காதல், இயற்கை, மதம், தத்துவம், அரசியல் பாசம், காதல், கடமை, நட்பு, தாய்மை , நன்றி, சோகம், பிரிவு, நேசம், மோசம், நம்பிக்கை என எல்லாவகை உணர்வுகளுக்கும் அற்புதமாக வரிகள் கொடுத்த அபூர்வ கவிஞன் குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் […]

பிராமணருக்கு எதிரான முதல் குரலை எழுப்பியவர் நடேச முதலியார்

தமிழகத்தில் திராவிட குரல்கள் முதலில் 1900களிலே கேட்க தொடங்கின, அது பிரமணர் அல்லாதோர் சங்கம் என்றே தொடங்கபட்டது, அதில் பல சிந்தனையாளர்கள் இருந்தனர், பின் அது நீதிகட்சி என பயணித்தது அந்த நீதிகட்சியினை அக்காலத்தில் தொடங்கியர்களில் ஒருவர்தான் தியாராய செட்டி அல்லது பிட்டி தியாகராயர், வழக்கறிஞர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர். பிராமணருக்கு எதிரான முதல் குரலை இவர்தான் எழுப்பினார் நடேச முதலியார், டி.எம் நாயர் ஆகியோருடன் சேர்ந்து 1916ல் நீதிகட்சியினை தொடங்கினார் மற்ற சாதி மக்களின் […]

இன்று கக்கனின் பிறந்தநாள்

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு காலத்தில் தூய்மையான தியாகிகளும், மக்களை தவிர ஏதும் சிந்தியா மகா உத்தமர்களும் இருந்தார்கள், அப்படியும் ஒரு பொற்காலம் இருந்தது அப்படி ஒரு குறையும் சொல்லமுடியாத தூய்மையான அரசியல்வாதிகளில் ஒருவர்தான் கக்கன் , காந்தி, சாஸ்திரி, காமராஜரை போலவே மகா தூயவாழ்வு வாழ்ந்த அரசியல் மகான் அவர் சுதந்திரபோராட்ட தியாகி, வெள்ளையனிடம் சிறையில் சித்திரவதை பட்டவர்களில் அவரும் உண்டு, கடுமையான அடிகள் அவை சுதந்திர இந்திய பொதுதேர்தலில் மதுரை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டவர். […]

சே குவேரா : மானிடம் உள்ளவரை அவன் பெயர் வாழும்

இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது, அதாவது கலைஞரின் வசனத்தில் சொல்வதென்றால் “அந்த பொதுநலத்திலே சுயநலமும் கலந்திருக்கின்றது” மறுக்க முடியாது. ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர் சே […]

இன்று நாட்டிய பேரோளி பத்மினிக்கு பிறந்த நாள்

அந்த கேரள‌ சகோதரிகள் மூவருமே பரதநாட்டியத்தை கசடற ஆட கற்றவர்கள், அன்றைய கேரளம் அன்று திருவிதாங்கூர் சமஸ்தானம், அந்த திருவனந்தபுரத்தில் மன்னரின் மாளிகை உட்பட பல முக்கிய இடங்களில் அவர்கள் நடனம் அரங்கேறியது அதில் மூத்தபெண் பத்மினி செல்லமாக பப்பி, அவரின் மாமா ஒருவர் அவரை தத்தெடுத்திருந்தார், அவர் பெரும் பணக்காரர் என்பதால் அன்றே மும்பை சென்னை என அவர்கள் சுற்றி கொண்டிருந்ததால் மும்பையில்  14 வயதில் இந்தி சினிமாவிலும் அந்த பெண் நடித்திருந்தாள் அவரின் நடன […]

அய்யதுல்லா கோமேனி

வரலாற்றில் பாரசீகம் என்று பெர்சியா என்றும் தனி இனமாக இருந்த நாடு அது, இஸ்லாமை பின்பற்றுவார்களே தவிர‌ அரபு வகையறாவில் அவர்கள் வரமாட்டார்கள். பாபிலோனின் நெபுகாத்நேச்சர், அலெக்ஸாண்டர், செங்கிஸ்கான் போன்றோரிடம் அடிமையாக இருந்தாலும் மீண்டு எழுந்தார்கள் பாரசீக பேரரசு ஆசியாவினை மிரட்டிய காலமும் உண்டு, இந்தியாவின் மேல் படையெடுத்து ஷாஜகானின் மயிலாசனம், கோஹினூர் வைரம் எல்லாம் எடுத்து சென்றார்கள் கலை, அறிவியியல், கல்வி, ,உணவு, வர்த்தகம், ராணுவம் என பல விஷயங்களில் தனித்துவம் கொண்ட இனம் அது, […]

இன்று என்.டி ராமராவின் பிறந்த நாள். அவரின் அரசியல் வேறுவகை

இந்த ராமசந்திரன் எனும் நடிகர் தமிழகத்தை கெடுத்தார், அவரை பார்த்து ஆந்திரமும் கெட்டது அந்த ராமராவ் என்வரின் ஒரே பலம் கண்ணன் வேடம். அந்த வேடம் மட்டும் போட்டுவிட்டால் சாட்சாத் கண்ணணாகவே கண்முன் நிற்பார். ஆந்திரம் அவரிடம் அப்படித்தான் மயங்கியது அப்படியே ஆட்சியினையும் பிடித்தார், தெற்கே ஆட்சியினை பிடித்த இரண்டாம் நடிகர் அவர்தான் ஆனால் காங்கிரசுக்கும் அவருக்கும் பெரும் போட்டி ஆயிற்று எனினும் மும்முறை அவரே முதல்வரானார். அவரை எப்படி வீழ்த்த என பல முயற்சிகள் நடந்தன‌ […]

அற்புத நடிகை மனோரமா ஆச்சி பிறந்த நாள்

ஆணாதிக்கம் மிக்க தமிழ் திரையுலகில் ஒரு சில பெண்களே அடையாளமிட்டார்கள், ஆனால் ஒரு கட்டத்தில் விலகிவிட்டார்கள் சுந்தராம்பாள், கணம்பாள், டி.ஆர் ராஜகுமாரி என ஒரு வரிசை உண்டு. சாவித்திரி சரோஜா தேவி, சவுகார் ஜாணகி என அடுத்த வரிசை உண்டு , ஜெயலலிதா அரசியலில் நடிக்க வந்தார் , அப்போல்லோ நடிப்பினை மட்டும் உலகம் பார்க்கவில்லை மற்றபடி எல்லா நடிகைகளும் ஒரு கட்டத்தில் இடைவெளி எடுத்தவர்கள் அல்லது ஓடியவர்கள் ஆனல் தமிழ் சினிமாவில் இறுதிவரை நிலைத்து நின்று […]

நேரு கண்ட நவீன இந்தியா அமைதியாக உருவாகி நலம்பெறட்டும்

அவர் பெரும் பணக்கார குடும்பத்தின் வாரிசு, உயர் கல்வியும், படோகரமான வாழ்வும் என அவர் வாழ்ந்த விதம் எந்த அரசனுக்கும் குறைவானதல்ல, ஆனால் ஜாலியன் வாலாபாக் படுகொலையும், காந்தியின் ஈர்ப்பும் அவரை போராட்ட களத்திற்கு இழுத்துவந்தன. அரசியலுக்கு வந்து சம்பாதித்தவர் அல்ல அவர், தன் கோடிகணக்கான சொத்துக்களை நாட்டிற்காய் அள்ளிகொடுத்து அரசியலுக்கு வந்தவர் 9 ஆண்டுகள் சிறைவாசம் ( காமாரஜர் நேரு போன்றவர்கள் எல்லாம் பல வருடம் சிறையில் இருந்தவர்கள், யாரேனும் “பாம்புகள் பல்லிகள் நடுவினிலே” என […]

விக்டோரியா மகாராணி பிறந்த நாள் இன்று

இந்த உலகம் பெரும் மன்னர்களை கண்டிருக்கின்றது, வெகு சில ராணிகளையும் கண்டிருக்கின்றது, அவர்களில் ஒருவர் விக்டோரியா மகாராணி மேற்கே கனடா முதல் கிழக்கே நியூசிலாந்து வரையிலான நாடுகளை ஆளும் ஜாதகம் அவருக்கே வாய்த்தது, அதுவும் 63 ஆண்டுகள் ஆண்டார். இந்த உலகை ஆண்ட அரசிகளில் அதிக வயதுடையவர் அவர்தான் இந்த மகாராணி ஆண்ட காலத்தில்தான் இந்தியா பிரிட்டன் அரசின் காலணியாக கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து எடுக்கபட்டது, அதன்பின்பே இந்தியாவின் சட்டங்கள் எழுதபட்டன பல சீர்திருத்தங்கள் செய்யபட்டன‌ அதன் விளைவாகவே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications