பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திருச்சி பள்ளியில் கஞ்சா புழக்கமா?

திருச்சி பள்ளியில் கஞ்சா புழக்கமா? : நக்கீரன் பரபரப்பு செய்தி இந்த நக்கீரன் கோபாலை மட்டும் விபச்சாரம் மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின் தலமை ஐ,ஜியாக நியமித்தால் தமிழகத்தில் ஒரு குற்றமும் நடைபெறாது. அந்த அளவு கொலை , கொள்ளை, ஊழல், விபச்சாரம், போதைபொருள் புழக்கம் என தமிழகத்தின் எல்லா குற்றத்தின் பட்டியலும் அவரிடமே உள்ளது எடப்பாடிக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை, இப்படி ஒரு துப்பறியும் புலியினை இன்னுமா வெளியில் விட்டுவைப்பார்கள்?

தனிநாடு அடைவது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல

தனிநாடு அடைவது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல, அது சாத்தியமென்றால் உலகின் ஒவ்வொரு பணக்காரனும் ஒரு தேசத்தை நிர்மானித்து ஆண்டுகொண்டிருப்பான் பின்லேடன் என்றோ பூரண இஸ்லாமிய தீவு அமைத்திருப்பார், ஈழமக்கள் தற்காலிக தமீழீழம் அமைத்திருப்பர், தலாய்லாமா திபெத் தீவு அமைத்திருப்பார் பணமும் வசதியும் இருக்கும் எல்லோரும் நாடு அடைந்திருப்பான் இந்தோனேஷியாவின் தீவுகள் மட்டும் 15 ஆயிரத்துக்கு மேல் உண்டு, அங்கெல்லாம் 15 ஆயிரம் நாடுகள் உருவாகியிருக்கும் உலகெல்லாம் கூடி ஒரு நாட்டை அங்கீகரித்து அது உலகில் நாடாக […]

எவ்வளவு தில்லு பார்த்தியா?

அடேய் பிரபாகரா நீ எல்லாம் சுத்த வேஸ்டுடா.. ஏம்பா ஐ.நா அன்டோனியோ கோர்டர்ஸ், உனக்கே தெரியாம எங்க தல உலகத்துல நாடு உருவாக்கிருக்கு, எவ்வளவு தில்லு பார்த்தியா?

பூரா பயலும் முழிச்சிட்டான்

இனி இந்த ஆமைகறி, பன்றிகறி காமெடியெல்லாம் எடுபடாது போல, பூரா பயலும் முழிச்சிட்டான் காச கொட்டுங்கடா, ஒரு தீவு வாங்கி தமிழீழம்னு பேர் வச்சி தனிநாடு அடைஞ்சி அதுல இருந்து படை திரட்டி சிங்களனை அடிப்போம்னு அடுத்த வசூல் போட்ரலாம் நித்தி தனிநாடுன்னு கிளம்புறானுக, பிரபாகரனுக்கே கிடைக்காத தனிநாடு நித்திக்கு கிடைக்கும்னு நம்புறவன் சிலர் இல்லாமலா போயிருவான்? அட நம்ம தும்பிபடை வேற எதுக்கு இருக்கு? நாம சொல்றதெல்லாம் நம்புறதுக்குதானே

நித்திக்கு ஞானம் கொடுத்தது இத்தேசமும் அதன் மதமும்

நித்திக்கு ஞானம் கொடுத்தது இத்தேசமும் அதன் மதமும் அவருக்கு இடமளித்து வரமளித்து ஞானம் அளித்ததும் இந்நாடும் இந்நாட்டு சனாதன தர்மமும் அவரின் கல்விபணியும் , ஞான பணியும் , ஆன்மீகபணியும் இந்நாட்டு மக்களுக்கு தேவையா? இல்லை எங்கோ இருக்கும் மிலேச்ச ஐரோப்பியருக்கு தேவையா? உண்மையான துறவி என்றால் இந்நாட்டில் ஏற்றவேண்டிய விளக்கினை இந்நாட்டில் ஏற்றவேண்டிய ஜோதியினை பல கடல்கடந்து மலைகடந்து இன்னொரு நாட்டின் இனத்தின் நடுவில் நித்தி ஏற்ற முனைப்பாரா? இந்நாட்டிலே நல்ல இந்து துறவியாக அவர் […]

கடவுளின் கணக்குகள் மிக மிக ஆழமாக கவனித்தால் ஞானத்தால் கவனித்தாலன்றி புரியாது

ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவினை ஊடுருவும் வழியினை கிரேக்கர் தொடங்கி வைத்தனர், குப்த பேரரசு அலெக்ஸாண்டரின் செலூகஸை கட்டுபடித்தி வைத்தது அவனாலும் உள்ளே வரமுடியவில்லை தொடர்ந்து வந்த கனிஷ்கர் உட்பட பல அரசர்கள் ஆப்கானியர்களை அடக்கியே வைத்தனர், இன்று சுத்தமான ஆப்கன் இனம் என அது இல்லை அங்கு கிரேக்க கலப்பு மங்கோலிய கலப்பு என எல்லாம் கலந்து இருக்கின்றது, யுத்தமும் கொள்ளையும் அவர்கள் ரத்தத்திலே ஊறியது எனினும் ஆயிரம் வருடம் முன்புவரை சிக்கல் இல்லை, அன்று மகா […]

கள வியூக படம்

இது வங்கபோரில் இந்தியா படை நகர்த்திய விதம், ராணுவ பரிபாஷையில் “கள வியூக படம் ” என்பார்கள் இம்மாதிரி படங்கள் எல்லா யுத்த களத்திலும் உண்டு அலெக்ஸாண்டரில் தொடங்கி சிரிய யுத்தம் வரை உண்டு இந்த படத்தில் இந்திய நிலைகள் காவி நிறத்திலும் பாகிஸ்தானிய நிலைகள் பச்சை நிறத்திலும் குறிக்கபட்டிருப்பதை கவனிக்கலாம் இது 1970 இந்திய நிலவரம் அன்றே இத்தேசம் காவி நிறத்தில்தான் தன்னை நிறுத்தியிருக்கின்றது இந்திரா செய்தால் சரி , ஆனால் இனி மோடி செய்தால் […]

இருவர் நிலத்திடையே ஒரு சுவர் வந்தால் அது பொதுசுவர்

இருவர் நிலத்திடையே ஒரு சுவர் வந்தால் அது பொதுசுவர் என்ற வகையில்தான் வரும், ஆக அந்த சுவரில் இருதரப்புக்குமே பங்கு உண்டு இப்பக்கம் பட்டா நிலமும் அப்பக்கமும் பட்டா நிலமும் இருந்தால் இந்த சாவில் இருவருக்குமே பங்கு உண்டு இப்பக்கம் பட்டா நிலமும் அப்பக்கம் பட்டா இல்லா நிலமாக இருந்தால், அவர்கள் நிலமற்று அதில் வசித்து வந்திருந்து பட்டா கொடுப்பதில் காலதாமதமாகியிருந்தால் இதற்கு அரசு அதிகாரிகளே பொறுப்பு ஒரு பக்கத்துக்காரனை மட்டும் பிடித்து உள்ளே போடுவது சரியல்ல, […]

நம்மை பற்றி அவர்களுக்கு தெரியவில்லை என்பதை தவிர ஒன்றும் சொல்லமுடியாது

நாம் ஒரு கிறிஸ்தவன் என்பதால் நித்திசாமியினை பழிக்க தொடங்கியிருப்பதாக சிலர் கடுமையாக விமர்சித்துகொண்டிருக்கின்றார்கள் நம்மை பற்றி அவர்களுக்கு தெரியவில்லை என்பதை தவிர ஒன்றும் சொல்லமுடியாது இந்து மதத்தை மிக அணுக்கமாக பார்ப்பவன் எனும் முறையிலும் பண்டைய இந்து ரிஷிகள், அவதாரங்கள் வரிசையினை கவனித்தவன் என்ற முறையிலுமே சொல்கின்றோம் துறவு வரிசை வேறு, அவதார வரிசை வேறு ராமனையும் கண்ணனையும் தவிர எந்த அவதாரமும் அரசாண்டது இல்லை,, அய்யப்பனே அரசு வேண்டாம் என சொன்னவர் ராமனும் கண்ணனும் கூட […]

இந்திய கடற்படை தினம்

இன்று இந்திய கடற்படை தினம் இந்திய கடற்படை எத்தனையோ வெற்றிகளை பெற்றது, குறிப்பாக 1971 வங்கபோரில் உண்மையில் ஆடியதே இந்திய கடற்படைதான். ஏன் டிசம்பர் 4ம் தேதி இந்திய கடற்படை தினம் ஆனது என்றால் விஷயமிருக்கின்றது மகா திரில்லான விஷயம் அது கிழக்கு பாகிஸ்தானில் கடும் மனித உரிமை மீறலில் பாகிஸ்தான் இறங்க , கற்பழிப்பும் படுகொலைகளும் எல்லை மீறி செல்ல, அகதிகள் இங்கு குவிய, இனி பொறுப்பதில்லை என‌ இந்தியா களமிறங்கியது. கிழக்கு பாகிஸ்தானுக்கு செல்ல […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications