பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவனுகளும் அவனுக தத்துவமும்..

வள்ளுவன் சில சீர்திருத்த கருத்தை சொன்னானாம் அதனால் ஆத்திகன் இல்லையாம் இந்த ராமானுஜர் சொல்லா சீர் திருத்தமா? அய்யா வைகுண்டர் சொல்லா சீர்திருத்தமா? அதற்காக அவர்கள் இந்து இல்லை என்றாகிவிடுமா? முத்துராமலிங்க தேவர் மதுரை அய்யருடன் சேர்ந்து ஆலயத்தில் தாழ்த்தபட்ட மக்களை அனுமதிக்க போராடி வென்றார், அதற்காக தேவரும் அய்யரும் இந்துமத எதிர்ப்பாளர் ஆகிவிடுவார்களா? அவனுகளும் அவனுக தத்துவமும்..

ஆட்டு கடா பகை, கிடாரி உறவு

படத்தில் இருப்பது கனிமொழிக்கு அடுத்து இருப்பது மாபா பாண்டியராஜனின் மனைவிஅதாவது மாபா பாண்டியராஜனின் மனைவியும் திமுகவினரும் சேர்ந்து பல தொழில்கள் செய்வர் அதில் ஒன்று அரசியல்,ஜெகத் கஸ்பர் என்பவர் பாதிரி உடையில் அலையும் இன்னொரு தொழிலதிபர்ஆக முக ஸ்டாலினும் பாண்டியராஜனும் முட்டுவார்கள், இன்னொரு பக்கம் கனிமொழியும் லதா பாண்டியராஜனும் கொஞ்சுவார்கள்ஆட்டு கடா பகை, கிடாரி உறவு என்பது இதுதான் போல..

அதை செய்துவிட்டு திருவள்ளுவர் பக்கம் திருமா வரட்டும்

வள்ளுவர் சிலைக்கு சாணி அடித்தவனை விட்டுவிட்டு அதை சுத்தம் செய்து மாலையும் ருத்ராட்சமும் அணிவித்ததை கண்டித்து ஆர்பாட்டம் செய்ய போகின்றாராம் திருமா அதாவது சாணி அடித்தது சிக்கல் இல்லையாம் ஆனால் ருத்ராட்சம் அணிவித்தது தவறாம் சரி அம்பேத்கருக்கு ஏன் நீல நிற கோட்? அவர்தான் புத்தமதம் சென்றுவிட்டாரே? புத்தமதத்தில் காவியும் வெள்ளுடையும் அணிவார்கள் மொட்டை அடிப்பார்கள், அந்த கோலத்தில் அம்பேத்கரை நிறுத்த திருமா தயாரா? அதை செய்துவிட்டு திருவள்ளுவர் பக்கம் திருமா வரட்டும்

அமைச்சர் மா.பா பாண்டியராஜனுக்கும் தங்கம் தென்னரசுக்குமான மோதல் தொடங்கியிருக்கின்றது

சரி வள்ளுவரை அப்படியே விடாயிற்று இனி அவர் 1331ம் குறள் சொன்னாலும் கண்டுகொள்வார் யாருமில்லை இப்பொழுது அமைச்சர் மா.பா பாண்டியராஜனுக்கும் தங்கம் தென்னரசுக்குமான மோதல் தொடங்கியிருக்கின்றது, இருவரும் முதல் பந்தை வீசிவிட்டு ஆழம் பார்க்கின்றார்கள் இது கட்சி மோதலாக வெடிக்குமா இல்லை ஜாதி மோதலாக வெடிக்குமா என்பது தெரியவில்லை இருபக்கமும் வரிந்து கட்டுவதால் நாமும் இம்சை அரசன் வடிவேலு போல “ம்ம்ம் ஆரம்பியுங்கள்” என சொல்லிவிட்டு அமர்ந்து விட்டோம், ஆட்டம் களை கட்டுவது போல் தெரிகின்றது இப்பக்கம் […]

அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன்

முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன் : ஸ்டாலின் பின் எதற்கு அன்றைக்கு பட்டாவினை மட்டும் அவ்வளவு அவசரமாக வெளியிட்டார்? மூல பத்திரம் கேட்டால் அதைமட்டும் ஆணையத்திடம் மட்டும்தான் கொடுப்பேன் என்பதெல்லாம் என்ன வகை? பட்டா வெளியிட்டது போல் மூலபத்திரத்தையும் வெளியிட்டால் என்ன? நாம் இதை அன்றே சொன்னோம் , பட்டாவினை காட்டி சிக்கலில் மாட்டுகின்றார் அன்னார் என்றோம், இதோ இன்று […]

இதுதான் நீதியா?

அர்ஜூன் சம்பத்தை கைது செய்தது சரி, வள்ளுவன் சிலைக்கு விபூதி பூசியெதெல்லாம் மாபெரும் குற்றம், எவ்வளவு பெரும் குற்றம். ஆனால் ராஜிவ் கொலையாளி சைமனையும், இந்து மதங்களை மிரட்டும் பலரையும் வெளியில் விட்டு வைத்திருப்பது என்ன வகை? இந்து மதத்தை ஒழிப்போம் என சொல்லி திரிபவன் மாநாடு நடத்துபவன் ஜெபிப்பவனெல்லாம் வெளியேதான் இருக்க வேண்டுமா? இதுதான் நீதியா?

திமுக எனும் தமிழ் கட்சி தலமைக்கான தமிழ்

கவனியுங்கள், அவ்வளவு ஆங்கிலம் கலந்த தமிழ், திமுக எனும் தமிழ் கட்சி தலமைக்கான தமிழ் இது அல்ல, பார்ப்போர் நகைப்பர். திமுகவின் முந்தைய இரு தலைவர்களும் தமிழில் மிக சரியாக இருந்தார்கள், ஒவ்வொரு வார்த்தையிலும். முழு தமிழிலும் தவிர்க்கமுடியா இடத்தில் ஆங்கிலத்தில் சொல்லி தமிழிலும் சொல்லும் நுட்பம் அவர்களிடம் இருந்தது அவ்வளவு கவனமாக இருந்தது அந்த இரு தலமையும், ஏனென்றால் தமிழ் தமிழ் என சொல்லி வளர்ந்த இயக்கம் அது.. பொதுவாக திமுக தலமைகளின் ஸ்பெஷாலிட்டியே சுவாரஸ்ய […]

ஒரு இந்துநூல் என மதுரை பொற்றாமரை குளத்தில் நிரூபிக்கபட்டது

ஆளாளுக்கு திருகுறள் பற்றி பேசுகின்றார்களே தவிர, அது அன்றே ஒரு இந்துநூல் என மதுரை பொற்றாமரை குளத்தில் நிரூபிக்கபட்டது என சொல்வார் யாருமில்லை ஒரு மோதலில் மதுரை பொற்றாமரை குளத்தில் திருகுறள் காட்டிய அதிசயங்கள் சில உண்டு என்கின்றன தமிழ் பண்டைய செய்திகள் அன்று ஒரு தமிழ்படைப்பு அங்கீகாரம் பெற மதுரை தமிழ்சங்கத்தில் அது மேடை ஏற்றபட வேண்டும், அந்த சங்கம் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்தது குறளை இலக்கிய வகையில் ஏற்கமுடியாது என சங்கம் வாதிட்டு […]

தமிழகத்தில் திமுக அதிமுக தயவில் ஏதோ வாழ்கின்றது

உலக வரலாற்றில் மானுடம் கண்ட திருப்பங்களில் மகத்தானது ரஷ்ய புரட்சி. எத்தனை புரட்சிகள் உலகில் நடந்திருந்தாலும் ரஷ்ய புரட்சியின் மகத்துவமே உலகிற்கு பெரும் மாற்றங்களை கொடுத்தது ரஷ்ய புரட்சியினை பாரதி வரவேற்று பாடிய காலமும், ஈரோட்டு ராம்சாமி அதனை வரவேற்று பின் தன் போக்கினையே மாற்றிய அந்த காலமும் நினைவுக்கு வருகின்றது. மக்களாட்சி என்பது ரோமர் காலத்தில் இருந்தது பின் ஆங்காங்கு முயற்சிக்கபட்டு தோற்றது பிரெஞ்ச் புரட்சியும், போலந்து வழியும் கொஞ்ச நாளில் முடியாட்சிக்கு மாறின‌ ஆனால் […]

யார் சொன்னா?

“என்னய்யா ரஜினிய தூக்கிட்டு வாங்கண்ணு சொன்னா ஜி.கே வாசனை பிடிச்சிட்டு வந்திருக்காங்க.. பங்காளி, ஜிகே வாசன் அப்பாவும் ரஜினியும் கூட்டாளிங்களாம், அதுனால இவர வச்சி அவர பிடிச்சிரலாமாம் யார் சொன்னா? தமிழ்நாடு பாஜக‌ அவங்க சொன்னா முழு தப்பா மட்டும்தான் இருக்கும், வேற ஏதாவது செய்ங்க..”

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications