பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அதி தீவிர ஆயுத சண்டை அமெரிக்காவிற்கு ரஷ்யாவிற்கும் தொடங்கியது

இங்கே நடக்கும் பாஜக தமிழக கட்சிகள் சண்டையினை விடுங்கள், அதி தீவிர ஆயுத சண்டை அமெரிக்காவிற்கு ரஷ்யாவிற்கும் தொடங்கியாயிற்று மிக வேக ஏவுகனைகளை தாங்கள் தயாரித்ததாக ரஷ்யா சொல்ல, ஏவுகனையோ விமானமோ எவ்வளவு வேகம் என்றாலும் லேசர் கதிர்களால் தாக்கி அழிக்கும் நுட்பம் எங்களிடம் உண்டு என காட்டியது அமெரிக்காவின் பெண்டகன் இப்படி பெண்டகன் அறிவித்த இரு நாட்களில் தன் மாபெரும் ஆயுதமான சாத்தானை அறிமுகபடுத்திவிட்டது ரஷ்யா ஆம் சர்மாட் ரக ஏவுகனைகளை மேம்படுத்தி சாத்தான் வெர்சன் […]

துபாய் இளவரசி தப்பி திரிந்தது உண்மை

துபாய் அரசர் என்னதான் தன்னை முற்போக்களாராக காட்டி கொண்டாலும் இன்னும் கட்டுபெட்டிதனத்திலே இருக்கின்றார் என சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தாயிற்று ஆம் அந்நாட்டு இளவரசிக்கு பல கட்டுபாடுகளை விதித்திருகின்றார், இளவரசியோ சிட்டுகுருவி மனநிலையில் உள்ளவர் இது ஒரு கட்டத்தில் வீட்டு காவலாகியிருக்கின்றது அதாவது சின்ன தம்பி குஷ்பு போல இளவரசி சிறைபட்டிருக்கின்றார், அதிலிருந்து தப்பி இளவரசி செய்ததுதான் அதிரடி படகில் தன் நண்பர்களோடு தப்பி இந்தியா வந்திருக்கின்றார், கோவா அருகே அது பாகிஸ்தான் தீவிரவாத படகு என […]

நடராஜனுக்கு பட திறப்பு விழா

நடராஜனுக்கு பட திறப்பு விழா செய்து படத்தை திறந்து அவரிம் மாபெரும் தியாகங்களை எல்லாம் பேசியிருக்கின்றார்கள் வைரமுத்து, பாரதிராஜா முதல் நல்லகண்ணு வரை வந்து புலம்பிய எல்லோருக்கும் இருந்த ஒரே ஒற்றுமை தேவர் சாதி என்பதுதான், அங்கிள் சைமன் பாதி தேவர் என்பதால் கலந்துகொண்டிருக்கின்றார் இந்த தேவர் சாதி வெறிக்கு பெயர் தமிழுணர்வு என நம்பிகொள்ளுங்கள் நடராஜன் என்பவர் யார் யாரெக்கெல்லாம் படி அளந்திருக்கின்றார், எம்மாதிரி மாய அம்புகளை யார் மூலம் எல்லாம் ஏவி அரசியல் நடத்தினார் […]

மனிதனின் விண்கலம் பூமியினை மிரட்டுவது ஒன்றும் புதிதல்ல

உலக வல்லரசு ஆக வேண்டுமென்றால் தரையில் மட்டும் ஆக்கிரமிப்புகளை செய்தால் போதாது, விண்வெளியிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் இதனை முதலில் தொடங்கி வைத்தது சோவியத் ரஷ்யா, அவர்கள் விண்வெளி அறிவு பெற்றால் நிச்சயம் அமெரிக்காவினை நொறுக்குவர் என உணர்ந்த கென்னடி அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட முழு ஒத்துழைப்பு வழங்கினார் அன்று ரஷ்யாவின் வளர்ச்சி அமெரிக்காவினை நொறுக்கும் அளவில் இருந்தது, அன்றே ஸ்டார் வார் எனப்படும் விண்வெளி யுத்ததிற்கு ரஷ்யா தயாராக இருந்தது கென்னடி கொஞ்சமும் சளைக்காமல் […]

மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் திரண்டு போராட வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 2-ல் அ.தி.மு.க. உண்ணாவிரதம் : பன்னீர் செல்வம் இவரும் பழனிச்சாமியும் முன்பு மாதம் இருமுறை டெல்லிக்கு ஓடுவார்களாம், இப்பொழுது மட்டும் உண்ணாவிரதமாம் ஏப்ரல் 1ல் உண்ணாவிரதம் இருந்தால் என்ன? மிக பொருத்தமாக இருக்கும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் திரண்டு போராட வேண்டும் – வைகோ இவர் எப்பொழுதும் போர், போராட்டம் என சொல்லிகொண்டே இருப்பதால் முக்கியமான பிரச்சினைக்கு இவர் அழைத்தும் தமிழகம் திரும்பிபார்க்கவில்லை தமிழகம் வரும் பிரதமர் […]

உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்திற்கே சாதகமானது, ஆனால்….

நிச்சயம் காவேரியில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்திற்கே சாதகமானது, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மிக உகந்த நேரம் இது. ஆனால் இதற்காக போராட நல்ல தலமை இங்கு இருக்கின்றதா என்றால் இல்லை. ஆளாளுக்கு அவிழ்த்துவிட்ட மந்தை போல ஒவ்வொரு பக்கம் செல்கின்றார்களே தவிர ஒன்றும் உருப்படியில்லை ஆளும் கட்சி பாஜகவின் அடிமை என்பதால் பழனிச்சாமி அரசு ஏதோ சொல்கின்றது, கட்டி வைக்கபட்டிருப்பவன் உறுமி என்ன பயன்? ஒன்றும் ஆகபோவதில்லை டெல்லியில் அதிமுக எம்பிக்கள் போராட்டத்தை தலமை எற்று […]

ஆனந்த ரங்க பிள்ளை

17ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் பெரும் போர் ஐரோப்பியரால் நிகழ்த்தபட்டன, காரணம் அவர்களா என்றால் இல்லை இங்கிருந்த சிற்றரசர்கள் வாரிசு சண்டையில் அவர்கள் உதவியினை கேட்க ராபர்ட் கிளைவும் டுப்ளெவும் ஆளுக்கொரு பக்கம் குதித்தனர் முதலில் இருவரும் ஆற்காடு நவாபின் வாரிசுகளுக்கு ஆதரவாக மோதினாலும், ஒரு கட்டத்தில் நவாபினை தள்ளிவிட்டு இவர்கள் இருவரும் பகிரங்கமாக மோதினார்கள் இதில் சென்னை கோட்டையே சில நேரம் டூப்ளேவால் கைபற்றபபட்டது, இறுதியில் ராபர்ட் கிளைவின் அடி முன்னால் நிற்க முடியாது பிரான்ஸ் படை […]

மலேசிய இந்தோனிசிய இந்திய தமிழர் தனவனம்

மனிதர்களில் சுவாரஸ்யமானவர்கள் இருக்கின்றார்கள், காலம் வரும்பொழுதுதான் அவர்களை சந்திக்க முடிகின்றது. அப்படி ஒரு மனிதரை நேற்று சந்திக்க முடிந்தது, பொதுவாக மலேசிய தமிழரில் ஏகபட்ட தும்பிகள் உண்டு அதனால் இவர் அழைக்கும் பொழுதெல்லாம் போனை கூட தவிர்த்தது உண்டு. ஆயினும் இந்தோனேஷியாவில் இருந்து வந்திருப்பதால் நேற்று சந்தித்தாகிவிட்டது பெரிய வியாழன் வேறு, செல்லும் பொழுது “பேக்கரி தொடங்கினாலும் தொடங்கினோம், பன் பட்டர்ன்னு டார்ச்சர் பண்றாங்க” என்ற வடிவேலு டயாலாக்கோடுதான் சென்றோம் அவருடன் பேச தொடங்கினால் அதிர்ச்சி மேல் […]

திரு திரு சீமான்

“அத்தான் உங்க போக்குல காவேரி நீரை கொடுக்காத கன்னடத்தை காலி செய்து மானமுள்ள தமிழ்பிள்ளைகள் வெளிவரவேண்டும் என சொல்லிவிடாதீர்கள், வந்து பிய்த்துவிடுவார்கள் அடியே தமிழ்பொண்டாட்டி, சிங்களரின் கொழும்பை விட்டு மான தமிழர் வெளியேறவேண்டும் என என் அண்ணன் சொன்னானா? இல்லை ஈழதமிரருக்கு நீதிவழங்கா அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன், பிரான்ஸ், கனடா எல்லாவற்றையும் விட்டு தமிழர் கிளம்ப வேண்டும் என நான் தான் சொன்னேனா? சொன்னால் 4 காசு வந்திருக்குமா?” “அண்ணே, ஈழத்தில் எத்தனை மாவீரர்கள் தற்கொலை படையாக […]

பங்குனி உத்திர நாளுக்கு தமிழகத்திற்கு தனி சிறப்பு உண்டு

பங்குனி உத்திர நாளுக்கு தமிழகத்திற்கு தனி சிறப்பு உண்டு. பங்குனி என்றால் வடமொழியில் “உச்சம்” என்று பொருள், சமஸ்கிருத கலப்புள்ள மலாய் மொழியிலும் உச்சிற்கு பங்குனி என்றே பெயர். சூரியன் உச்சிக்கு வரும் மாதம் பங்குனி,பொதுவாக வெயில் அதிகம். இம்மாதம் அது தலையின் உச்சியில் இறங்குகின்றது என்கின்றார்கள் நிலா களங்கமுள்ளது என கம்பன் முதல்,வைரமுத்துவரை பாடினாலும், பங்குனி உத்திர பௌர்ணமி களங்கம் இல்லாதது என்பது ஐதீகம்,சூரியன் உச்சத்தில் இருப்பதாலும் உத்திர நட்சத்திர அமைவிடத்தாலும் அந்த நிலவு சற்று […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications