பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கருணை இல்லம் கருணை மிக்க தன் பணிகளை தொடங்குகின்றது

பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட முதியோர்கள் அனைவரையும் மீண்டும் அங்கே விட, காஞ்சிபுர வருவாய் அலுவலருக்கு நீதிமன்றம் உத்தரவு ஆக அங்கு 1500 கொலை, எலும்பு கடத்தல் எல்லாம் நடக்கவில்லை என்பது உறுதியாயிற்று மறுபடியும் அந்த கருணை இல்லம் கருணை மிக்க தன் பணிகளை தொடங்குகின்றது. இந்த ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார்கள் உண்மையிலே தேசபக்தர்கள், இதோ ஒரு கருணை இல்லம் உண்மையான நோக்குடன் செயல்படுகின்றது என உலகிற்கு காட்டிவிட்டார்கள் இப்படி இன்னும் ஏராளமான கருணை இல்லங்களுக்கு நீதிமன்றத்தில் […]

வட கொரியா அதிபர் சீனா விஜயம்…

அமெரிக்க உளவுதுறைக்கு சவால் விடும் விஷயம் ஒன்றை வடகொரிய அதிபர் செய்திருக்கின்றார் இதுவரை பெரும் உளவு தகவல்களை அமெரிக்காவால் வடகொரியாவில் இருந்து பெறமுடியவில்லை, காரணம் வடகொரியாவின் இரும்புதிரை அப்படி இப்பொழுது சீனாவிற்கு வடகொரிய அதிபர் செல்லலாம் என செய்திகள் வருகின்றன‌ பொருளாதார தடை இன்னபிற விஷயங்களால் சீனாவால் அவரை பகிரங்கமாக அழைக்க முடியாது என்பதால் ரகசியமாக அழைக்கின்றது என்கின்றார்கள் பொதுவாக வடகொரிய அதிபர் ஈழத்து பிரபாகரன் போன்றவர் , எங்கும் செல்லமாட்டார் இப்பொழுது சென்றாக வேண்டிய காரணம் […]

தாமரை மலர்ந்தே தீரும்

அவனவன் மசூதி இடித்து, கலவரம் செய்து இந்துத்வா பேசி கட்சி வளர்க்கின்றான், இவருக்கு லிங்காயத் என்பது தனிமதமாம் இந்து என இவர் சொல்வதில் என்ன சிக்கல்? ஆளாளுக்கு இப்படி கிளம்பினால் நாங்கள் எப்படி இந்துத்வா அரசியல் செய்வது? விடுவோமா? இனி எப்படி லிங்காயத் எடியூரப்பா ஜெயிக்கிறார் பாப்போம்?   “பேசினது நான் இல்லங்கிறேன்.. என்ன மாதிரி இன்னொருத்தனை சித்தராமையா பேச வச்சாருங்கிறேன்னு என் பாணியில சொல்லிட்டு போவிங்களா அமித்ஷா இதுக்கெல்லாமா வருத்தபடுவீங்க? இல்ல தெனாலி கமலஹாசன் மாதிரி […]

தமிழகத்தை உலுக்கிய விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் படுகொலை

கடந்த மாதம் தமிழகத்தை உலுக்கியது விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் படுகொலை ஆராயி எனும் பெண்ணும் அவர் கொல்லபட்டதும், அவரின் மகள் கொடூர பாலியல் சித்திரவதை செய்யபட்டதும் உலகை உலுக்கிய செய்திகள் அந்த கொடூர குற்றவாளியினை கைது செய்ததில் காவல் துறைக்கு பெரும் கவுவரமும் நிம்மதியும் வந்ததாக நினைத்தால் அதன் பின்புதான் காவல்துறைக்கு கத்தி வந்திருக்கின்றது இந்த கொடூரன் செய்திருக்கும் கொலைகளையும் அவற்றின் தன்மையினையும் பார்த்தால் நிச்சயம் என்கவுண்டரில்தான் போடவேண்டும் அதுவே குறைந்தபட்ச தண்டனை. அந்த கொடூர கொலையாளி […]

முள்ளும் மலரும்

முள்ளும் மலரும் படம் ஓடிகொண்டிருக்கின்றது மிக மிக அற்புதமான படம், படத்தில் ரஜினி அட்டகாசமாக நடித்திருந்தார, நல்ல வேளையாக அவர் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முன்பு வந்த படம் அது இந்த படம் 1990க்கு பின்பு வந்திருந்தால் ரஜினி பட முடிவில் அந்த ஊருக்கே ஜமீன் வாரிசாக இருந்த உண்மை புரியும் அல்லது அந்த மலையினையே விலைக்கு வாங்கும் அளவு உழைத்து பணக்காரர் ஆகியிருப்பார், அந்த வின்சையும் ஊரையும் மொத்தமாக சரத்பாபுவிற்கு கொடுத்துவிட்டு இமயமலை நோக்கி நடந்திருப்பார் […]

இயேசு உயிர்த்தெழுந்தார் என நம்புவது கிறிஸ்தவர் மட்டுமே

இயேசு உயிர்த்தெழுந்தார் என நம்புவது கிறிஸ்தவர் மட்டுமே உண்மையில் கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சியினை கண்டவர் யாருமில்லை, பகிரங்கமாக மக்கள் முன் வரவுமில்லை, ஆனால் தன் சீடர்களுக்கு அதன் பின் காட்சி கொடுப்பதும் மறைவதுமாக மாய வாழ்க்கைத்தான் நடத்தினார் ஆனால் இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதுதான் கிறிஸ்தவ நம்பிக்கை, அடிப்படை விசுவாசம் கூட . அதை நம்பினால் அவன் தான் கிறிஸ்தவன் நான் கூட அதனை நம்பும் கிறிஸ்தவன், கிறிஸ்து உயிரோடு எழும்பினார் என நம்புகின்றேன், இல்லாவிட்டால் சிலுவையில் கொல்லபட்ட […]

வாழ்த்துக்கள் கேப்டன், உங்களுக்கு இன்னும் வாய்ப்பும் காலமும் இருக்கின்றது

தமிழக நடிகர்களில் ஓரளவு பொதுநலனும் தைரியமும் கொண்ட நடிகர் அவர், தமிழை தவிர எந்த மொழிபடத்திலும் அவர் நடித்ததில்லை கருப்பு நிறம், பெரும் திறமையாளர் என சொல்லமுடியாவிட்டலும் அவர் நடிப்பில் ஒரு உணர்ச்சி இருந்தது. அந்த வேகமும் உணர்ச்சியும்தான் அவரை உச்சிக்கும் கொண்டு சென்றது உச்ச நடிகராகவும் இல்லாமல் அதே நேரம் காணாமலும் போகாமல் கங்கை ஓடும் நாட்டில் காவேரி போல அவரும் ஓடிகொண்டிருந்தார் அந்த விஜயகாந்த் சினிமாவிற்கு வந்து 40 வருடம் ஆகிவிட்டதாம் பெரும் சர்ச்சையிலோ […]

அர்ப்பண தலைவி

தன் தேனிலவு காலத்திலும் தூத்துகுடி மக்களுக்காக பாராளுமன்றம் முன் போராடும் “அர்ப்பண தலைவி” எந்த அரசியல்வாதியாவது முதலிரவு முடிந்து களத்திற்கு வருவாரா? இதோ உலக சரித்திரத்தில் ஒருவர் முதல் முறையாக வந்திருக்கின்றார்  

உலகின் பாதுக்காக்க வேண்டிய பகுதி

உலகெல்லாம் சில நாடுகளில் யுத்த சத்தம் கேட்க தொடங்கிவிட்டன‌ இதில் சில நாடுகளில் யுத்தம் வந்தால் தாக்க கூடாத பகுதி என சில இடங்களை, கிடைத்தற்கரிய கலை கூடங்களை உலகத்தார் வைத்திருப்பார்கள். பிரமிடு போன்ற புராதான சின்னங்கள், உலக அதிசய கட்டங்கள், கலை கூடங்கள், அழகு சிலை மாடங்கள் எல்லாம் அதில் வரும் இந்தியாவின் தாஜ்மகாலும் ஒன்று. இரண்டாம் உலகப்போர் காலத்திலும், இந்தியா நடத்திய போர்களிலும் உலகத்தார் கவனம் தாஜ்மகால் மீதே இருந்தது இப்பொழுது தாஜ்மகால் தவிர […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications